“இறைவா !!!!! நீயே அனைத்தும்” இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்.

"இறைவா !!!!! நீயே அனைத்தும்!!!!"
"இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்"

உலகின் ஆதி குரு, மாமுனிவர், குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளிய தினசரி அனைவரும் அதிகாலையில் எடுக்க வேண்டிய உறுதிமொழி. :-


1.தர்மம் செய்வேன்
2.அனைத்திடத்திலும் பின் அன்பாக அதாவது அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன்.
3.போட்டி, பொறாமைகள் நீக்குவேன்
4.அனைத்தும் எந்தனுக்கே சொந்தம் என்று பின் உயிர்ப் பலியும் இடமாட்டேன்
5.பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன்
6.அப்படிக் கொன்றாலும், நிச்சயமாய் அதை யான் தடுப்பேன்
7.அவை மட்டும் இல்லாமல், தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும்.
8.பிறருக்கு நன்மை செய்ய வேண்டும்
9.பிறருக்காக உழைக்க வேண்டும்
10.பிற ஜீவராசிகளும் ( உயிரினங்களும் ) பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில்அனைவரும் நினைக்க வேண்டும்.
11.அப்படி நினைத்தால் அகத்தியன் வந்து அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பான் என்று சொல்மகனே

( அடியவர்களே. இந்த மகிமை புகழ் அகத்திய மாமுனிவர் அருளிய உறுதிமொழி வாக்கினை சிரம்மேல் ஒவ்வொரு நொடியும் ஏந்தி, பிரம்மாவின் முன்பு தலை நிமிர்ந்து நமக்காக விதியை மாற்றஉத்தரவிடும் வண்ணம் அனைவருக்கும் உலகில் உள்ள 700 கோடி மக்களுக்குச்சென்று அடையும்வண்ணம் எடுத்துச் சொல்லுங்கள். )

மற்றவர்களைப்பற்றி எண்ணிப்பார் அப்பனே. மற்றவர்களை எண்ணி எண்ணி, தான் கெட்டுப்போனாலும் பரவாயில்லை என்று யார் ஒருவன் நினைக்கின்றானோ அவனிடத்தில் இறைவன் பிச்சை ஏந்துவான் அப்பா. பிச்சை ஏந்துவான் அப்பனே. என் பக்தர்களுக்கு இது தெரிய நிச்சயம் வேண்டும் அப்பனே.


அகத்திய பிரம்ம ரிஷி உரைத்த முதல் தரப் புண்ணியம் பெறும் ஒரே வழி:- (1) அன்னதானம் + (2) திருவாசகம் சிவபுராணம் + (3) மக்கள் வாழ , நல் வழிகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுதல். இப்படிச் செய்தால் மட்டுமே , முதல்தரப் புண்ணியம் உண்டாகும் என்று குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி உரைத்துள்ளார்கள். இதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள் என்றும் அனைவருக்கும் கூறி உள்ளார்கள். இதுபோல் அனைவரும் செய்து முதல் தரப் புண்ணியம் பெற்றுக் கொள்ளுங்கள். இறை அருளுடன் வளமாக வாழுங்கள். வாழ்க வளமுடன்!!!!!!!!!

siththarkalatchi - Moving text


அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு :- “அப்பனே, தானங்கள் செய்க, அப்பனே, உன்னால் இயன்றவரை தானங்கள் செய்க. அனுதினமும், என் பக்தர்கள், ஒரு உயிருக்காவது உணவளியுங்கள். அது போதும். அப்பனே, அதுவே கோடி புண்ணியமாகும்.”


Monday, January 1, 2024

சித்தர்கள் ஆட்சி - 276 : கந்த வடிவேலன் நாடி வாக்கு - “மகத்தான குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷிகள் பெருமை,கருணை”

“இறைவா!!! அனைத்தும் நீ”


உலகின் ஆதி குரு , மாமுனிவர் , குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷிகள் பெருமை குறித்து கந்த வடிவேலன் உரைத்த வாக்கு:- 


சில துன்பங்கள் இருந்தாலும் அதனையும் கூட அகத்தியன் பார்த்துக்கொண்டிருக்க…


ஏன் பார்த்துக்கொண்டிருக்க? அதை நீக்க முடியுமே என்று நீ எண்ணலாம். 


ஆனாலும் கர்மா வினையை ( அனுபவித்தே ஆக வேண்டும்) ஆனாலும் சிறிதளவாவது அனுபவிக்க வேண்டும். ஆனாலும் பெரிய அளவாக வந்திருக்கக் கூடியது ஆனால் சிறிய அளவாகவே (அனுபவிக்கச் செய்து கர்மா கழித்துவிட்டான்). இதுதான் அகத்தியனின் பெருமை. 


(விளக்கம்:-) 


அடியவர்களுக்குப் பெரிய அளவில் வரக்கூடிய ஆபத்துக்களை, அதாவது மரண கண்டம் போன்ற ஆபத்துக்களைத் தடுத்து நீக்கி அதே சமயம் ஒரு சிறிய அளவில் அவர்களை அனுபவிக்க வைத்து அதன் மூலம் விதியையும் இயங்க வைத்து,  அதன் பின் அவர்கள் விதியையும் மாற்றி நல் வாழ்வு பலருக்கும் அருளிக்கொண்டே இருக்கின்றார் குருநாதர். இது பலர் வாழ்கையில் அவர்கள் புண்ணிய பலத்தின் மூலம் நடக்கும். ஆனால் ஜீவ நாடியில் உரைத்தால் அன்றி மனிதர்கள் எவராலும் உணர இயலாது. 

அகத்தீசன் மூலம் , அகத்தீசர் அருளால் இவ் அதிசயங்கள் புண்ணிய பலங்கள் உள்ள பல அடியவர்களுக்கு நடந்து கொண்டே உள்ளது. இதனால்தான்  புண்ணியங்கள் செய்யுங்கள், புண்ணியங்கள் செய்யுங்கள் என்று சித்தர்கள் தொடர்ந்து புண்ணியத்தின் மகிமைகளை உரைத்து மனிதர்களுக்கு வழி காட்டி அருளுகின்றனர். 


உதாரணம்:- ஒரு அடியவர் குடும்பத்தில் விதியில் தாங்க இயலாத பெரிய ஆபத்து நெருங்கியது.  ( மரண கண்டம் - இதுவும் பல நாட்கள் கழித்தே அவ் குடும்பத்திற்குப் புரிந்தது). அகத்தீசர் இவ் பெரிய ஆபத்தைத் தடுக்க/நீக்க , அவ் குடும்பத்தில் ஒரு அடியவருக்குக் கண்களில் ஒரு சிறிய ஆபத்தை உண்டாக்கி அவ் குடும்பமே மனம் கலங்கித் தவித்து நின்று மருத்துவர்களால் அது நீங்கியது போன்ற எளிய தோற்றம் உண்டாக்கி, அவ் வலியை உணர வைத்து ,  விதியையும் இயக்குவதுபோல் இயக்கி அவ் அடியவருக்கு அனைத்தும் சரியானது போல மிக அழகாக மாற்றி அமைத்தார் குருநாதர். 


எனவே அடியவர்களே,


அனுதினமும் புண்ணியம் செய்யுங்கள்!

 அனுதினமும் புண்ணியம் செய்யுங்கள்!!

   அனுதினமும் புண்ணியம் செய்யுங்கள்!!!

     அனுதினமும் புண்ணியம் செய்யுங்கள்!!!!

       அனுதினமும் புண்ணியம் செய்யுங்கள்!!!!!


ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய பிரம்ம ரிஷி திருவடிகளில் சமர்ப்பணம்!!!

No comments:

Post a Comment