“இறைவா !!!!! நீயே அனைத்தும்” இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்.

"இறைவா !!!!! நீயே அனைத்தும்!!!!"
"இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்"

உலகின் ஆதி குரு, மாமுனிவர், குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளிய தினசரி அனைவரும் அதிகாலையில் எடுக்க வேண்டிய உறுதிமொழி. :-


1.தர்மம் செய்வேன்
2.அனைத்திடத்திலும் பின் அன்பாக அதாவது அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன்.
3.போட்டி, பொறாமைகள் நீக்குவேன்
4.அனைத்தும் எந்தனுக்கே சொந்தம் என்று பின் உயிர்ப் பலியும் இடமாட்டேன்
5.பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன்
6.அப்படிக் கொன்றாலும், நிச்சயமாய் அதை யான் தடுப்பேன்
7.அவை மட்டும் இல்லாமல், தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும்.
8.பிறருக்கு நன்மை செய்ய வேண்டும்
9.பிறருக்காக உழைக்க வேண்டும்
10.பிற ஜீவராசிகளும் ( உயிரினங்களும் ) பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில்அனைவரும் நினைக்க வேண்டும்.
11.அப்படி நினைத்தால் அகத்தியன் வந்து அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பான் என்று சொல்மகனே

( அடியவர்களே. இந்த மகிமை புகழ் அகத்திய மாமுனிவர் அருளிய உறுதிமொழி வாக்கினை சிரம்மேல் ஒவ்வொரு நொடியும் ஏந்தி, பிரம்மாவின் முன்பு தலை நிமிர்ந்து நமக்காக விதியை மாற்றஉத்தரவிடும் வண்ணம் அனைவருக்கும் உலகில் உள்ள 700 கோடி மக்களுக்குச்சென்று அடையும்வண்ணம் எடுத்துச் சொல்லுங்கள். )

மற்றவர்களைப்பற்றி எண்ணிப்பார் அப்பனே. மற்றவர்களை எண்ணி எண்ணி, தான் கெட்டுப்போனாலும் பரவாயில்லை என்று யார் ஒருவன் நினைக்கின்றானோ அவனிடத்தில் இறைவன் பிச்சை ஏந்துவான் அப்பா. பிச்சை ஏந்துவான் அப்பனே. என் பக்தர்களுக்கு இது தெரிய நிச்சயம் வேண்டும் அப்பனே.


அகத்திய பிரம்ம ரிஷி உரைத்த முதல் தரப் புண்ணியம் பெறும் ஒரே வழி:- (1) அன்னதானம் + (2) திருவாசகம் சிவபுராணம் + (3) மக்கள் வாழ , நல் வழிகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுதல். இப்படிச் செய்தால் மட்டுமே , முதல்தரப் புண்ணியம் உண்டாகும் என்று குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி உரைத்துள்ளார்கள். இதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள் என்றும் அனைவருக்கும் கூறி உள்ளார்கள். இதுபோல் அனைவரும் செய்து முதல் தரப் புண்ணியம் பெற்றுக் கொள்ளுங்கள். இறை அருளுடன் வளமாக வாழுங்கள். வாழ்க வளமுடன்!!!!!!!!!

siththarkalatchi - Moving text


அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு :- “அப்பனே, தானங்கள் செய்க, அப்பனே, உன்னால் இயன்றவரை தானங்கள் செய்க. அனுதினமும், என் பக்தர்கள், ஒரு உயிருக்காவது உணவளியுங்கள். அது போதும். அப்பனே, அதுவே கோடி புண்ணியமாகும்.”


Tuesday, July 23, 2024

சித்தர்கள் ஆட்சி - 386 :- அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு - “அகத்திய மாமுனிவரின் பக்தன் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?”

இறைவா!!!!! நீயே அனைத்தும்



அகத்திய மாமுனிவரின் பக்தன் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?

👇👇👇👇👇👇👇


சித்தன் அருள் - 1060 - அன்புடன் அகத்தியர் - குருநாதர் வாக்கு!

25/12/2021 அன்று குருநாதர் அகத்திய மாமுனிவர் உரைத்த பொது வாக்கு !


அப்பனே என் பக்தர்கள் ஒவ்வொருவரும் நன்மைகள் செய்ய வேண்டும் என்பேன்.


அப்பனே பல மனிதர்களை இவ்வாறுதான் வாழ வேண்டும் என்பதைக்கூட பின் கற்று பின்நல்முறையாக செப்பினால் அப் புண்ணியம் சாரும் என்பேன். அப்பனே.


இதனையும் நன்கு தெரிவித்திடுக. 


யான் புண்ணிய பாதைக்கு அழைத்துச் செல்வேன்.


புண்ணியப் பாதைக்கு அழைத்துச் செல்லும் பொழுது பின் அப் புண்ணியமே உங்களைப்பார்த்துக்கொள்ளும் என்பேன்.


அதற்கும் சில வழிமுறைகள் உண்டு உண்டு உண்டு வருங்காலங்களில் செப்புகிறேன் அப்பனே. 


அதனால் கோபம் கொள்ளாதே! அப்பனே. கோபம் கொள்ளாதே என்பேன்.


அப்பனே இதனையும் என்று பிறர்பொருளை அடையாதே! அடையாதே!


பொய் கூறாதே! அப்பனே நல்லோர்கள் வாழவேண்டும் தம் போல் பிறரை எண்ண வேண்டும். எந்தனது வாக்கை நிச்சயமாய் என்னை பின்பற்றுபவர்கள் நிச்சயம் கடைபிடிக்க வேண்டும். எப்பொழுதும். நிச்சயமாய் கோபம் வருதல் அவசியம் இல்லை .


அவசியமும்  இருக்கக்கூடாது என்பேன். 


அப்பனே எங்களிடத்தில் வருபவர்களை அப்பனே புண்ணியங்கள் செய்ய வைப்போம். அவ்புண்ணியத்தின் மூலம் அப்பனே வாழ்க்கையை கடந்து கடந்து மேன்மையான  நிலைகளைபெறுவீர்கள் என்பேன்.


ஒவ்வொருவருக்கும் அப்பனே புண்ணியங்கள் மிகுந்த காணப்பட்டால் அப்பனே யானேஅழைத்துஅவன் புண்ணியங்களை யானே செப்புவேன் அப்பனே. அதுதான் உண்மையப்பா.


அப்பனே ஒன்றை சொல்கின்றேன் அகத்தியனை அப்பனே அகத்தியனைவணங்குபவர்களும்புண்ணியம் செய்திருக்க வேண்டும் அப்பனே.


அப்பனே சித்தர்களை நீங்கள் தேட அவசியமில்லை.


அப்பனே யாங்களே தேடி வருவோம் நல்லோர்களை பார்த்து அனைத்தும் செய்வோம் அப்பனே.


இவைதன் இவ்வுலகத்தில் அப்பனே நல்லதைச் செய்ய யாங்கள் காத்துக் கொண்டிருக்கின்றோம்.


அதனால் அப்பனே நீங்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதை கூட நீங்கள் யோசித்துவிட்டால்அப்பனே ஓர் மடங்கு அப்பனே நீங்கள் எடுத்து வைத்தால்,  உண்மை நிலைக்கு யாங்கள்நூறுமடங்கு அப்பனே அழைத்துச் செல்வோம். புண்ணியத்தையும் தேடி தருவோம் அப்பனே.


அன்பாக வாழ்ந்திட்டு அப்பனே நல் முறையாக நல்லோர்க்கு இன்னும் இப்படித்தான்வாழவேண்டும்அப்பனே சில சில உயிர்களை பின் கொல்லக்கூடாது.


அப்பனே நெறியை பயன்படுத்த வேண்டும் ஒழுக்கங்களோடு வாழ வேண்டும் என்றெல்லாம்அப்பனேசொல்லித்தாருங்கள் அப்பனே ஒரு கூட்டமாகவே இருந்து.


இதனால் என்னுடைய,  சித்தர்களுடைய, ஆசிகளும் கிடைக்கப் பெற்று அதனாலும்புண்ணியங்கள்ஏற்படும் என்பேன் அப்பனே.


அன்பு  அகத்திய மாமுனிவரின் அடியவர்களே, நம் குருநாதர் உரைத்தபடி

  1. அடியவர்கள் ஒவ்வொருவரும் பலப் பல நன்மைகள் செய்ய வேண்டும். 
  2. பல மனிதர்களை இவ்வாறுதான் வாழ வேண்டும் என்பதைக்கூட பின் நீங்கள் கற்று பின்நல்முறையாக அவர்களுக்கு செப்பினால் அப் புண்ணியம் உங்களைச் சாரும். அதனால்பலரையும் தர்ம , பக்தி வழிக்கு திருப்புக. 
  3. கோபம் கொள்ளாதீர்கள். இது மிக, மிக, அதி மிக முக்கியம். உடனே இன்றே கோபம் தவிர்கஆரம்பிக்கவும்.
  4. பொய் கூறாதீர்கள்
  5. நல்லோர்கள் வாழவேண்டும். அவர்களை வாழ வையுங்கள். 
  6. உங்களைப் போல் பிறரையும் நீங்கள் எண்ண வேண்டும். 
  7. நம் குருநாதர் வாக்கை நிச்சயமாய் பின்பற்றுபவர்கள் நிச்சயம் இந்த உயர் வாக்குஅறிவுரைகளைக்  கடைபிடிக்க வேண்டும். 
  8. நீங்கள் அன்பாக வாழ்ந்திடல் வேண்டும் - அனைவரிடத்திலும், அனைத்து ஜீவராசிகளிடமும். 
  9. நல் முறையாக நல்லோர்க்கு இன்னும் இப்படித்தான் வாழவேண்டும், 
  10.  சில சில உயிர்களை கொல்லக்கூடாது,
  11. நீதி நெறியை பயன்படுத்த வேண்டும் மற்றும்
  12. ஒழுக்கங்களோடு வாழ வேண்டும் என்றெல்லாம் நீங்கள் அனைவருக்கும் சொல்லித்தாருங்கள்ஒரு கூட்டமாகவே இருந்து.
  13. தாய் தந்தையரை அனுதினமும் வணங்க வேண்டும். இது மிக மிக மிக முக்கியம். அப்போதுதான் இறைவன் ஆசி கிட்டும். 


இப்படி அகத்திய மாமுனிவர் அடியவர்கள் செய்வதனால் அகத்திய மாமுனிவர் மற்றும் அனைத்துசித்தர்களுடைய, ஆசிகளும் கிடைக்கப் பெற்று அதனாலும் புண்ணியங்கள்ஏற்படும்  உங்களுக்கு. 

வாழ்க புண்ணிய பலத்துடன். 



ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!


சர்வம் சிவார்ப்பணம்!!!!!

Monday, July 15, 2024

சித்தர்கள் ஆட்சி - 385 :- அன்புடன் அகத்திய மாமுனிவர் - கந்தவடிவேலன், முருகப்பெருமான் 9/7/2024 அன்று உரைத்த வாக்கில் உள்ள பொது வாக்கு:-

 















இறைவா!!!!! நீயே அனைத்தும்.


கந்தவடிவேலன், முருகப்பெருமான்  9/7/2024 அன்று உரைத்த வாக்கில் உள்ள பொது வாக்கு:- 

வணக்கம் அகத்தியர் அடியவர்களே, அகத்திய பக்தர் அடியவர் ஒருவருக்கு குருநாதர் உத்தரவின் பெயரில் வாக்குகள் தருவதற்கு உத்தரவு கிடைத்து. அந்த அடியவருக்கு ஜீவநாடி வாக்குகள் தரும் பொழுது முருகப்பெருமான் வந்து 9/7/2024 அன்று வாக்குகள் நல்கினார். அப்பொழுது பொதுவான வாக்குகளையும் வழங்கினார். அதன் தொகுப்பு :- 

பிரபஞ்சத்தை அழகாகக் காத்து அருளக்கூடிய தாயையும் , தந்தையும் பணிந்து ஈகின்றேன் மகனுக்கு குமரனவனே. 

அப்பப்பா !!!! அகத்தியன் அன்பு மிகப் பெரியது. அன்பின் உருவமாகவே இயங்கி, இயங்கி அறிந்தும் கூட.

இதனால் அப்பனே , அப்பனையும் ( ஆதி ஈசனாரையும் )  கூட மிஞ்சிய அறிந்தும் உண்டோ இவ்வுலகத்தில்? 

இதை அறியாத பலர் இன்னும் மூடர்களாகவே திரிந்து திரிந்து என்னவென்று கூற? 

பின் அறியும் நிலைக்குச் செல்லும் இவ் நிலை இன்னும் மாயத்தைப் போக்கிப் போக்கி , வருகின்ற காலம் தன்னில் கூட மனிதனுக்குத் தெரியாது. 

தெரியாது என்னவென்று எப்படி வாழ்வது என்று கூற. இதனால் தான் தான் பின் பக்தர்கள் என்பதை எல்லாம் பின் அறிந்தும் கூட யான் அவை செய்கின்றேன். இவைச் செய்தால் இப்படி என்றெல்லாம் நிச்சயம் அறிந்தும் அறிந்தும் செப்புவார்கள். ஆனாலும் அது கூட பொய்யாகப் போகும் இவ்வுலகத்தில். 


( அகத்திய மாமுனிவர் வாக்கு:- சித்தன் அருள் - 1489 - அந்தநாள்>>இந்த வருடம் 2023 >> கோடகநல்லூர் பூஜை அகத்தியர் வாக்கு!

அப்பனே தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே, இவ்வுலகம் அறிந்தும் கூட பொய்யை, உண்மையாக்கும். எவை என்று புரிய புரிய, இவ்வுலகம், உண்மையை பொய்யாக்கும்! இதுதான் உலகமப்பா! )


மனிதன் மனிதனாக வாழ்ந்தாலே போதுமானது. அப்படி வாழாமல் பின் அவை, இவை நிச்சயம் செய்து கொண்டிருந்தாலே ஏது இவ்வுலகத்தில் நிம்மதி? 

இதனால்தான் அவனவன் பின் மாற்றத்தை அவனவன் அறிந்தும் அறிந்தும் கூட , தந்தையும் தாயும் ( ஆதி ஈசனாரும், அன்னை பார்வதி அம்பாளும் பல வாக்குகள் உரைத்துள்ளனர் ) நிச்சயம் அறிந்தும் உண்மைதனைக்கூட  பல விளக்கங்கள் இன்னும் பின் விளக்கி உரைத்தாலும் அதன் பின்னும் கூட ஏன் மனிதன் திருந்திய பாடு இல்லையே? 

திரிந்து பின் அறிந்து பின் என்னவென்று கூறுவது ஞானி? 

( ஞானி என்பவர் எப்படி இருக்க வேண்டும்?) 

ஞானி என்பது அதாவது ஒழுங்கான பக்தன் தன்னைத்தான் வெளிக்காட்டியே, வெளிக்காட்டியே ஆனால் ( ஞானியோ ) நிச்சயம் வெளிக் காட்டுவதும் இல்லை. அறிந்தும் அதாவது தன்னை அறிந்தே தன்னை பக்திக்குள் நுழையும் வண்ணம், தன்னை அறிவதாலே நிச்சயம் அனைத்தும் செய்ய முடியும். 

( பல அடியவர்களை காத்து அருளும் கருணைக்கடல் அகத்திய மாமுனிவர்  , பிரம்ம தேவரிடம் நடந்த உரையாடலில் ) 

( அகத்திய மாமுனிவர் தன் பக்தர்களுக்குக் காட்டும் அன்பினால் ) பிரம்மாவும் தலை குனிந்து அகத்தியனே ஏன் இப்படி? கலியுகத்தில் அநியாயங்களும், அக்கிரமங்களும்தான் நடக்க வேண்டும். இப்படித்தானே அனைவருமே பேசிக்கொண்டது. ஏன் அறிந்தும் கூட இப்படி எல்லாம் பக்தர்களைக் காப்பாற்றுகின்றாய் என்று. 

அறிந்தும் இவை என்றும் புரியப்புரிய ஆனாலும் பின் அகத்தியனும் கூட அறிந்தும் பிரம்மாவே!!!!! நிச்சயம் நல்லோர்கள் இருக்க வேண்டும். நிச்சயம் சரிதான். இவ்கலியிகத்தில் பல தொந்தரவுகள் பல பிரச்சனைகள் நடக்க வேண்டியது பின் உண்மைதான். இவை ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டது தான். 

ஆனாலும் எனை நம்பினோர் நிச்சயம் அறிந்தும் கூட யானே சில அளவு நிச்சயம் அதாவது பின் செய்திட்டாலும் , சில தடைகள் வந்திட்டாலும்,  சில கண்டங்கள் ஏற்படுத்தினாலும் ஆனாலும் பின் அகத்தியன் பொய் என்று சொல்லிவிட மாட்டார்களா என்ன? என்றெல்லாம்.

அதனால்தான் இதனால் சில நன்மைகள் ஏற்படவேண்டும் மக்களுக்கு. அதனால்தான் நிச்சயம் அறிந்தும் கூட இதனால் சிறிதளவே (தண்டனை) கொடு என்று. ஆனாலும் பின் அறிந்தும் அறிந்தும் எவை என்றும் புரியப் புரிய பின் ( பிரம்ம தேவரும் ) “மாமுனிவரே!!!!!!!!! உன் கருணைக்கு எங்கு, ஏது என்று அறிய அறிய…”

இவ்வுலகத்தில் மக்கள் அறிந்தும் அறிந்தும் கூட அதாவது பின் , பின்னடா அறிந்தும் கூட ஏன் எதற்கு மனிதன் உண்மைதனை இக்கலியுகத்தில் ஏற்கமாட்டான் என்பதைக்கூட. இதனால்தான் பின் நிச்சயம் பின் அகத்தியனும் கூட பொறுத்துப் பொறுத்துப் பார்த்து தண்டனைகள் வருங்காலங்களில் அதிகப்படுத்துவான். அவ்வளவுதான் நிச்சயம். 


இதிலும் பின் பல மாற்றங்கள் உண்டு இவ்வுலகத்தில். இதைத்தன் எடுத்துரைக்க எடுத்துரைக்க இப்பொழுதில்லை. ஆனால் மனிதன் அழிவு நிலைக்குச் செல்லும் பொழுது ஏதாவது உண்மை கிடைக்குமா என்று. ஆனாலும் பக்தி இப்பொழுதெல்லாம் சிறிது சிறிதாகப் பொய்யாகி பொய்யாகி கடைசியில் ஒன்றும் நடக்காமல் எங்கு உண்மை? எங்கு உண்மை ? என்று தேடுவது நிச்சயம் உண்டு. 

( ஏன் சித்தர்கள் பல வாக்குகள் இப்போது செப்பிக்கொண்டுள்ளார்கள்?) 

இதனால்தான் சித்தர்கள் முன்கூட்டியே அறிந்து எவை எல்லாம் மனிதனுக்குப் பயன்படும் என்றென்று அறிந்தும் கூட இதனால் அவை எவை என்று அறிய சித்தனுக்கு மிஞ்சிய இங்கு பின் ஔசதமும் இல்லை. சித்தனுக்கு மிஞ்சிய இங்கு ஏதும் இல்லை. அறிந்தும் எதை என்று அறிய என் தந்தையும் ஓர் சித்தன். அறிந்தும் இவைதன் புரியாமல் மனிதன் வாழ்ந்து கொண்டிருக்கின்றான். வருங்காலம் அறிந்தும் என்ன ஏது? எதை? என்று புரியாமலும் கூட. 

இதனால்தான் சித்தர்கள் பின் அலைந்து, திரிந்து இப்படி வாழக் கற்றுக்கொள். வாழந்துவிட்டால் பின் நன்று என்றெல்லாம் தெரிவித்து..

ஆனால் ( இவ் வாக்குகளை ) இதை படிப்பதற்கும் அதாவது காதால் கேட்பதற்கும் புண்ணியங்கள் வேண்டும். அப்புண்ணியங்கள் முதலில் வளர்த்துக்கொண்டால்தானே? ஆனால் மனிதனோ வளர்த்துக் கொள்வதில்லை. ஆம் எண்ணப்படி ( புண்ணியங்கள் செய்யாமல் பணத்தின் ) பின் போயிற்று மீண்டும் தோல்வியுற்று ( கர்மாவை சேரத்துக் கொண்டு ) மீண்டும் ( இறைவனிடத்தில் ) வருகின்றான். என்ன பயன்?. 

நிச்சயம் பின் தந்தையும் கூட அண்ணாமலைக்குப் பின் நிச்சயம் உண்ணாமலை தாய் தந்தையே அறிந்தும் அறிந்தும் அவ் இருப்பிடம் ( நம் குருநாதர் அகத்திய மாமுனிவர் முன்பு உரைத்த வாக்கில் பூலோக சொர்க்கம் - திருவண்ணாமலை என்று அருளியுள்ளதை மீண்டும் நினைவு படுத்துகின்றோம் )  பின் கர்மாக்களைப் போக்கும். போக்கும் என்பது ஏன் எதற்கு என்றெல்லாம் பின் வரும் காலங்களில் அகத்தியன் தெரிவிப்பான். 

அப்பப்பா!!!!! நிச்சயம் எங்கள் கருத்துக்களைக் கேட்பதற்கும் நிச்சயம் புண்ணியங்கள் செய்திடல் வேண்டும். 

ஆனால் ( புண்ணியங்கள் செய்துவிட்டு ) உடனடியாக ( பலன் ) கிடைக்க வேண்டும் என்று எதிர் பார்த்தால் , அறிந்தும் எதிர் பார்த்து பின் எதையும் செய்யக் கூடாது. எதையும் செய்யக் கூடாது. 

எதிர் பார்த்துச் செய்தால் நிச்சயம் அறிந்தும் பின் சித்தர்கள் எவை என்று அறிய அறிய பின் ஒதுங்கி ஓடு அறிந்தும் இதை என்றும் புரிய இதனால் பின் அதாவது இவ் நரகத்தில் ( பூமியில் ) பிறந்துவிட்டாலே பின் நரகத்துக்கான கட்டுப்பாடுகள் இதை, அடி அறிந்து எவை என்று புரிந்தும் கஷ்டங்கள் பட்டுப் பட்டு எழவேண்டும் என்பது விதி. 

இவைதன் வகுக்கப்பட்டது ஏற்கனவே. அவ்வாறு நடந்திடும் நிச்சயம் ஆனாலும் இன்றளவோ நிச்சயம் இன்னும் கூட உருவாக்குவான் புதுப் புது தலத்தை ( ஆலயங்களை ) எல்லாம். ஆனால் உண்மையானவை ( இறைவன் )  அங்கிருக்கின்றதா என்பதால் நிச்சயம் இல்லை. 

( காசி ரகசியம் - அகத்திய மாமுனிவர் ஆராய்ச்சிக் கூடம்) 

அறிந்தும் இதனால் நிச்சயம் பல பல  கிரகங்கள் பற்றியும் கூட ஆராய்ச்சிக்கள். பல நட்சத்திரங்களைப் பற்றியும் கூட ஆராய்ச்சிகள். அகத்தியன் செய்தான் காசி தன்னிலே. ஈசன் நிச்சயம் அனைவருக்குமே தெரிவிப்பான். இதைத் தன் நிச்சயம் வியந்து பார்க்கும் நிச்சயம் இன்னும் காலங்கள் போகப் போக. 

( திருச்செந்தூர் ரகசியங்கள் )

அப்பப்பா!!!! அறிந்தும் இதைத் தன் இப்பொழுது செந்தூர் ( திருச்செந்தூர் ) அறிந்தும் கூட ஏன் அங்கு பின் யான் அங்கு போய் நின்றேன் என்றெல்லாம் நிச்சயம் தெரியாது மக்களுக்கு. இதை அகத்தியன் எடுத்துரைத்தால்தான் புரியும். யானே என்னைப் பற்றி சொல்வது ஏன் எவை அறிந்தும் கூட. இதனால் எதற்கு அங்கு சென்றேன் ? என்பவை எல்லாம் நிச்சயம் அகத்தியன் தெரிவிக்கும் பொழுது நீயும் அறிவாய். 

( பழனி ரகசியங்கள் ) 

அதாவது அறிந்தும் பின் எனைதனைக்கூட எப்படி பின் பழனி தன்னில் பின் போகனுமே ( போகர் சித்தர் ) அமைத்தான் என்று. அதாவது எனைப் பார்த்துத்தான் அவன் அப்படியே அமைத்தான். 

முருகா!!!!!! அறிந்தும் இதைத்தன் உணர்ந்தும் கூட உன் தாயின் அருளோ அருள். தாய்தான் நிச்சயம். அதாவது உன்னைப் போன்றே யான் வடிவமைக்க வேண்டும். நீ எந்தக் கோலத்தில் நிற்கின்றாயோ இங்கு யான் பின் அறிந்தும் கூட செய்கின்றேன் என்று. அதாவது யான் நின்றேன். நிச்சயம் அப்படியே வடிவமைத்தான். இதை என்று பொருட்படுத்தாமல். 

ஆனாலும் இன்னும் மக்களுக்குத் தெரியவில்லை. ஏன் அங்கு ( பழனி ) அமைக்க வேண்டும் என்பது யாராவது யோசித்தீர்களா? என்று அறிந்தும் கூட யோசிப்பதில்லை. ஆனால் ஓடோடி வருவான் மனிதன். அதனால்தான் சித்தர்கள் தெரிந்து கொண்டு வாழுங்கள். தெரிந்து கொண்டு வாழுங்கள் என்பவை எல்லாம் அறிந்தும் கூட. 

ஆனாலும் இப்பொழுதும் அதே உருவத்தில் ஓர் நாளில் யான் நிச்சயம் அதாவது ஓர் மாதத்தில் நிச்சயம் ஓர் நாள் கீழே இறங்கி வருவேன் அங்கு. ஏன்? எதற்கு? நிச்சயம் என் அன்பானவன் அறிந்தும் கூட என் மீது பாசத்தைப் பொழிந்தவன் ( சித்தர் போகர் )  பின் கீழே இருக்கின்றான் அங்கு வருவேன். 

அனைத்தும் யான் சொல்லிவிட்டால் ஏது எதை என்றும் புரியப்புரிய இதனால் ஏன் எதற்கு அகத்தியன் பின் வாக்குகள் ஏன் செப்பிக்கொண்டு வந்து வந்து? 

முதலில் தெளிவைப் பெற்றால் அனைவரையும் நேரில் தரிசிக்கலாம். அவ்வளவுதான். தெளிவு பெறாவிடில் நிச்சயம் எவரையும் தரிசிக்க முடியாது. பின் செப்பினேன் இங்கு.

அறிந்தும் இதனால்தான் பின் ஓடோடி வருகின்றான் இறைவனைக் காணக் காண. ஆனால் உண்மை தெரியவில்லையே. அதனால்தான் உண்மை  தெரிவித்து பின் அகத்தியன் நிச்சயம் காட்டுவான் அறிந்தும் அறிந்தும். இன்னும் காலங்கள்  சரியில்லாத எதை எதையோ இன்னும் தலை கீழாகும் இவ்வுலகம் அறிந்தும் கூட. 

( திருச்செந்தூர் ரகசியங்கள் ) 

எதை என்றும் புரிந்தும் கூட இன்னும் அலைகள் பின் வந்து கொண்டே. ஆனாலும் யானும் தடுத்து நிறுத்துகின்றேன். நில்லுங்கள்!!!!!! அவ்வளவு கோவமா என்று மனிதன் மீது. பின் அறிந்தும் அறிந்தும் இதனால் சுற்றிச் சுற்றி ஏன் எதற்கு என்று ஒன்று மனிதன் திருந்துவானா இல்லை இயற்கை திருந்துமா? அறிந்தும் கூட நிச்சயம் மனிதன் திருந்த மாட்டான். நிச்சயம் இயற்கையும் திருந்தப்போவதில்லை. இதிலிருந்து புரிகின்றதா? பின் சொல்லடா 

பின் மகனே. ஏன் இன்னும் இன்னும் வாக்கு வருகின்றபோது புரியும். புரியும் பொழுது பின் தெரியும். 

(2004ம் வருடம் டிசம்பர் மாதம் சுனாமி தமிழ் நாட்டைத் தாக்கியபோது, கடற்கரையிலிருந்து 100 மீட்டர் தொலைவில் உள்ள கோயிலில் கடல் நீர் புகவில்லை என்ற தகவல் அடியவர்கள் அனைவரும் அறிந்ததே.) 

ஆனால் மனிதன் இப்படித்தான். இங்கு பிறந்தோம். அங்கு வளர்ந்தோம் மீண்டும் எங்கும் பின் சாகுகின்றோம் என்பவை எல்லாம் அறியாமல் பின் திரிந்து கொண்டிருக்கும் பொழுது ஒன்றும் நடக்காது. பிரச்சனைகள்தான் அதிகமாகும். அதிகமாகும் வரும் காலத்தில் பின் அகத்தியனைப் பின் வணங்கினாலும், அகத்தியனே என்று அழைத்தாலும் ஏன் எதற்கு என்றெல்லாம் அகத்தியன் போலத் திரிந்து வாழ்ந்தால் ( பல ஆலயங்களுக்கு அடிக்கடி சென்று ) நிச்சயம் அவ் கஷ்டங்கள் வராது என்றுதான் அகத்தியன் கூறுகின்றான். 

ஆனால் அறிந்தும் கூட மனித மூடர்களோ பின் நம்பிக்கை வைத்துள்ளான் வாழ்வோம், வாழ்வோம் என்று. ஆனாலும் பின் யாங்களோ அறிந்தும் கூட அதாவது சித்தர்களோ பாவம் பாவம் என்று. அதிலும் கூட அகத்தியனோ பாவமடா மனிதன். அறிந்தும் கூட ( தன் உயர் சித்த நிலையில் இருந்து மனிதர்களுக்காக ) இன்னும் கீழிறங்கிக் கீழிறங்கி பின் என் தந்தையும் “ அகத்தியனே, உன்னால் மனிதனைத் திருத்த முடியாது “ என்றெல்லாம். 

ஆனாலும் ( அகத்திய மாமுனிவரோ ) சபதம் ஏற்று அறிந்தும் கூட நிச்சயம் , பின் “ஈசனே!!!!! ஒரு வாய்ப்பு தாரும். அறிந்தும் கூட யான் திருத்துகின்றேன்.”

(ஈசனார்:-) “பின் அப்படியும் திருந்தவில்லை என்றால்?”

(அகத்திய மாமுனிவர்:-) “நிச்சயம் திருந்துவான். பின் மனிதன் என்றெல்லாம்”

(கந்த வடிவேலன் :-) இன்னும் நிச்சயம் அகத்தியன் தன் பெயரை எங்கெங்கு அழைத்துச் செல்ல எப்படி எங்கெல்லாம் பின் எங்கெல்லாம் அகத்தியன் அதாவது 

“”””””””வருங்காலத்தில் அகத்தியன் என்ற பின் சொன்னாலே பாவம் போகும் என்றெல்லாம்  நிச்சயம் அறிந்தும் அதனையும் ஏற்படுத்துவான் அகத்தியன்.””””””

நிச்சயம் பின் அன்பு , கருணை இவ்வுலகத்தில் நிச்சயம் தடுமாறும் பொழுது நிச்சயம்

 “”””””அகத்தியனுக்குப் பெயர் பின் கருணை வடிவானவனே.””””””

( நம் பூமி சுற்றல் வேகம் குறைந்துள்ளது - அதன் விஞ்ஞான ரகசியங்கள்,  விளைவுகள் ) 

அறிந்தும் உண்மைதனைக்கூட ஏன் எதற்கு இவ்வுலகம் நிச்சயம் அழிவு நிலை. அறிந்தும் அறிந்தும் இன்னும் சுற்றுகின்றது. யானும் சிறிதளவு இங்கு அகத்தியன் சொல்கின்றான் என்று யானும்  சொல்கின்றேன். 

ஆனாலும் பின் அது நிச்சயம் அறிந்தும் இவ்வளவு வேகத்தில்தான் சுற்ற வேண்டும். அப்பொழுதுதான் நலமாக இருக்கும். ஆனால் வர வர நிச்சயம் அறிந்தும் கூட பின் சுலபமாகவே அதாவது நிச்சயம் அதிவேகமாகச் சுற்றும் போது மனிதனுக்கு எவ் தொந்தரவுகளும் வராது. அவனவன் பின் நிச்சயம் உயர்ந்துகொண்டே இருப்பான். நிச்சயம் சிறிது சிறிதாக வேகம் குறையும் பொழுதுதான் நிச்சயம் அறிந்தும் கூட எதை என்று புரிய மனக்குழப்பங்கள், இன்னும் மாற்றங்கள், அறிந்தும் கூட இன்னும் சண்டைகள், சச்சரவுகள் அதனால் இதை , நிச்சயம் அதாவது இப்புவி் தன்னை நிச்சயம் வேகமாக இயக்க வேண்டும். 


“””” அது அகத்தியனால் தான் முடியும். சொல்லிவிட்டேன்.””””


( மேல் உள்ள சுவடி வரியை ஓதும் போது , இங்கு சுவடி ஓதும் மைந்தனின் வாக்கு  ஓங்கி ஒலித்தது ) 

அப்பப்பா!!!!!! அறிந்தும் இதனைக்கூட இன்னும் தத்துவங்கள் விளக்குகின்றேன். 

யாரும் கண்டு பிடிக்காததையும் கூட இனி நிச்சயம் பின் செப்புவான் மக்களுக்கு. அப்பொழுது புரியும். தேடி வருவான். 

அவ் ஆன்மா. ஆன்மா எதை எதை நோக்கிச் செல்கின்றதோ நிச்சயம் அது மனிதப்பிறப்பு அதாவது உடம்பெடுத்து அவ்வாறெல்லாம் செல்லும். 

அதாவது பரப்புவான். வித விதங்களாகப் பொய் சொல்லுவான் மனிதன். பின் எவ்வாறெல்லாம் பொய் சொல்ல வேண்டுமோ அவ்வாறெல்லாம் மனிதனை மயக்குவான். ஆனால் ஒன்றுமே பிரயோஷனம் இல்லை. 

சித்தன் பேசுவான் என்பான். நிச்சயம் பேச மாட்டான். அறிந்தும் கூட இன்னும் கந்தன் பேசுவான் என்று. ஏனடா அறிந்தும் கூட மகனே பின் வேலைக்காரர்கள் என்று நினைத்து விட்டார்கள் சித்தர்களை????. 

அறிந்தும் இதனால்தான் சுலபமாகச் சித்தர்களைக் கூட பயன்படுத்திக் கொண்டார்கள். இன்னும் அறிந்தும் கூட எதை என்று புரிந்தும் கூட ( சித்தர்கள் ) வருவார்கள்,  அடிப்பார்கள். 

இன்னும் தெளிவு பெறுவான் ( மனிதன் ). அறிந்தும் கூட தெளிவு பெறாமல் அவை இவை என்று சொல்லிக் கொண்டு இருந்தாலும் வீணடா. பின் வாய் அறிந்தும் கூட எதை என்று புரிந்தும் கூட. ஆனால் அனைத்தும் பின் தன் சுய நலத்திற்கே. சம்பாதித்து பின் பொருட்களை வைத்துக்கொண்டு பின் கடைசியில் பார்த்தால் பொருள்கள் இல்லை அது. 

“கர்மம்”

இதனால் தன் குடும்பத்தையும் அவனே அழிப்பான். பின்பு யான் அதை கற்பித்தேனே. இன்னும் ஓடுவான். அவை சொன்னானே. பின் சித்தன் பேசுவான் என்று என்று எப்படி என்று தெரியாமல் முழிப்பான். அறிந்து கூட இது நடக்கத்தான் போகின்றது இவ்வுலகத்தில். 

இன்னும் கற்றுணர்ந்து இதைச் செய்தால் பின் அவை நடக்கும் என்பதெல்லாம் பொய். எப்படி எல்லாம் பின் மனித உடம்பு நிச்சயம் அறிந்தும் பின் நடக்கின்றது, பேசுகின்றது. என்பதை எல்லாம் அகத்தியன் செயல்படுத்தும் பொழுது எங்கு  எதை என்று கூற ஒரு துகள் பின் இருக்கின்றது. 

அறிந்தும் கூட அங்குதான் கர்மா சேர்கின்றது. பின் அதை நீக்கிவிட்டால் பின் அறிந்தும் கூட நிச்சயம் நீடூழி வாழலாம் என்பதைக்கூட அப்பப்பா!!!!!! இதனையும் கூட அறிஞன் அறிந்து பின் அகத்தியன் சொல்வானப்பா. 


“””””” எந்தனுக்கு விஞ்ஞானம் அகத்தியன்தான் தான் கற்றுக் கொடுத்தானப்பா. பல விசயங்கள் அறிந்தும் கூட””””””” 

அறிந்தும் பின் ஒருவன் பக்குவங்கள் பட்டுவிட்டால் யார் சொல்வதையும் கேட்க மாட்டான் அறிந்தும் கூட. தான் எடுப்பதே இறுதி முடிவு என்று ( சென்றுவிடுவான்). 

(மனிதன்) இன்னும் இன்னும் பொய்கள் எப்படி எப்படிப் பேச வேண்டுமோ அதாவது தெய்வங்கள் பற்றி நிச்சயம் பேசுவானப்பா. 

அவை எல்லாம் செல்லாது. அழிவுதான் நிச்சயம். அதாவது அழிவு உனைப் பார்த்தே ஒன்று கேட்கின்றேன் மகனே. பின் அதி வேகமாக புவி சுற்றுகின்றதே, ஆனால்  ( அதன் வேகம் ) அது குறைந்து போகின்றதே. ஏன் என்ன காரணம் என்று நீ கேட்டாயா என்ன?

இதை நிச்சயம் அறிந்தும் கூட அதே வேகத்தில் இன்னும் வேகமாகச் சுற்றினால்தான் நிச்சயம் மனிதனுக்கு கஷ்டங்கள் வராது. ஆனால் குறைவு அதாவது நிச்சயம் பின் வேகம் குறைந்து கொண்டே வருகின்றது. இதை எப்படிப் பின் வேகம் அதிகரிக்க வேண்டும் என்று பின் யாராவது சொல்கின்றானா மகனே? நிச்சயம் இல்லை. இதுதான் மனிதன் அதாவது பின் மனிதன் என்பது அதாவது சித்தர்கள் பின் மனிதனைச் சாடுகின்றார்கள். 

( சித்தர்கள் மனிதர்களைத் திட்டுவதன் ரகசியம் ) 

அப்பப்பா!!!!! நிச்சயம் சித்தர்கள் மனிதனை நிச்சயம் அதாவது திட்டித் தீர்த்தால் நிச்சயம் கர்மா ஒழியும் என்பது தெரிவதே இல்லை. 

அதனால்தான் புசண்டன் ( பல பிரம்மாக்களைக் கண்ட காகபுசண்ட மாமுனிவர்) நன்மைக்காக வந்து வந்து, மக்கள் அதாவது அவனும் கருணை மிகுந்தவன்தான். அதனால் நிச்சயம் திட்டித் தீர்க்கின்றான். அதனால் கர்மா ஒழிகின்றது என்பதைக்கூட. அதைக்கூட பின் தெரியவில்லையே மனிதனுக்கு. இது உண்மைதனை கூட. 

இதனால் மகனே கேள். அறிந்தும் கூட சித்தர்களைப் பற்றி நிச்சயம் இவ்வுலகத்தில் யாருக்குமே தெரியாதப்பா. ஆனால் இல்லை என்று பின் அறிந்தும் கூட  இவர்களை எப்படியோ பயன்படுதிவிடலாம் என்று பயன் படுத்திக் கொண்டு இருக்கின்றார்கள். அவ்வளவுதான்.

ஆனால் இதன் விளைவு நிச்சயம் கடைசியில் தெரியும். பின் தெரியும் பொழுது அப்பொழுது தெரியும் சித்தன் யார் என்பதைக்கூட. விளையாடுவது சித்தனிடத்தில். 

***எங்கு விளையாடினாலும் சித்தனிடத்தில் விளையாடக் கூடாது.***

அதாவது முகத்தில் பின் அறிந்தும் கூட அதாவது முடிகளை வளர்த்துக்கொண்டு, இன்னும் அறிந்தும் பின் நாமத்தை இட்டுக் கொண்டு , இன்னும் மீசையை முருக்கிக்கொண்டு இன்னும் இப்படிச் செய்தால் பின் அதாவது கண்களில் சித்தன்  இறங்குவான், பின் உடம்பில் சித்தன் இறங்குவான் என்று ஆனால் சித்தன் என்ன வேலைக்காரனா என்ன? 

அறிந்தும் கூட அதாவது உன் கடமையைச் செய்தாலே சித்தன் உன்னிடத்திற்கு வந்து உதவிகள் செய்வான் அவ்வளவுதான். சித்தன் அறிந்தும் கூட பின் எவை என்று அறிந்தும் கூட எவர்க்கும் அடிமை இல்லை. அவ்வளவுதான். சித்தனை வரவழைப்பானாம். இறைவனை வரவழைப்பானாம். என்னை வரவழைப்பானாம். 

அப்பா, அறிந்தும் கூட மகனே கேள் இங்கு. இப்பொழுது நீ என்னை வரவழைத்தாயா என்ன? நீ வரவழைத்துத்தான் பின் உனக்கு வாக்குகள் வாக்குகள் இங்கு பரப்புகின்றேனா என்ன? அறிந்தும் கூட அப்படி இல்லை. அதாவது  அவ் அன்பிற்காக இப்பொழுது வந்து இவ் குமரனவன் பேசுகின்றேன். 

( சிக்கல் திருத்தலம் ) அறிந்தும் பல  நிச்சயம் அறிவியல் மூலமாகவே அங்கு உணர்ந்திட வேண்டும். 

ஏன் ( சிக்கல் திருத்தலம் ) அங்கு இருக்கின்றேன்? என்று. ஏன் பின் நிச்சயம் இதை அறியும் வண்ணம், பின் சுவாமி மலை, பழமுதிர்ச்சோலை, (திருப்பரங்) குன்றம் இங்கெல்லாம் ஏன் யான் இருக்க வேண்டும்? அறிந்துங் கூட இதனால் யோசிக்க வேண்டும். 

நிச்சயம் அறியும் வண்ணம் அகத்தியனும் இதற்குத் தீர்வு. தீர்வு உண்டு நிச்சயம் அறிந்தும் அறிந்தும் இதனால் என்னென்ன பின் பல வழிகளிலும் கூட அறிந்தும் மனிதன் வாழ வேண்டும் அவ்வளவுதான். ஆனால் இதற்காக எங்கெங்கோ பின் பணம் பின் கொட்டி பின் நன்மை அடையுமா என்று.

ஆனாலும் அப்பப்பா!!!!!! உண்மை தெரிந்து கொள். பின் உலகம் அதாவது அறிந்தும் இதை என்று அறிய அறிய அதாவது இப்புவியானது சற்று சற்று வேகம் குறைந்து கொண்டே வருகின்றது. அழிவு. இதனை நிச்சயம் இன்னும் வேகமாகக் கூட்ட வேண்டும். இது சித்தர்களால் அதாவது அகத்தியனால் மட்டுமே முடியும். இதனால்தான் அகத்தியன் அலைந்து , திரிந்து அலைந்து கொண்டிருக்கின்றான். 

இவ்வாறு இருக்கும் பொழுது அதாவது பின் வேகம் குறைகின்ற பொழுது எப்படியப்பா மனிதன் சிறப்பாக வாழ முடியும் சொல். இதைத் தெரியாமல் மனிதன் அங்கும் இங்கும் அலைந்து திரிந்து கொண்டிருக்கின்றான். 

வரும் பின் பிறப்பில் அதாவது பின் மனித பிறப்பு எடுத்துவிட்டாலே நிச்சயம் அனைவருக்குமே வரும் கோபம் எவை என்றும் அறிந்தும் கூட அதாவது மனக்குழப்பங்கள், இன்னும் இன்னும் எதை எதையோ நோய்கள், இவையன்று அறிய அறிய புதும் புதுமையான இன்னும் இன்னும் பின் பரவிக்கொண்டே வருகின்றது. அதாவது இப் புவியானது வேகம் குறையக் குறைய நிச்சயம் (வானில்) அங்கிருந்தே நிச்சயம் சில சில நுண்ணுயிர்களும் இருக்கின்றது. 

அவை தன் விழுகின்ற பொழுது, அது மனிதனைத் தாக்குகின்ற பொழுது நோய்கள் புதுமையாக. அப்பப்பா அகத்தியன் வழியிலேயே யான் வந்துவிட்டேன் இங்கு. அறிந்தும் உண்மைதனைக்கூட நிச்சயம் செப்புவேன். ஏனென்றால் ஒழுங்காகவே அறிந்தும் எதை என்று அறிய அறிய இன்னும் கூட ஆராய்ச்சிகள் அகத்தியன் கூட. எப்படி எல்லாம் பின் இவ் நுண்ணுயிர்களை அழிப்பது என்பதை எல்லாம் அறிந்தும் அறிந்தும் இதனால்..

“”””””” அகத்தியனுக்கு மிஞ்சிய இங்கு பின் விஞ்ஞானமும் இல்லை.””””””


“”””””நிச்சயம் அகத்தியனுக்கு மிஞ்சிய பின் அறிவாளியும் இங்கு இல்லை.””””””


“””””” அறிந்தும் கூட ( அகத்தியனுக்கு மிஞ்சிய பின் ) காப்பவனும் பின் இல்லை.””””””


தெரிவித்துவிட்டேன் இங்கு. 

இதனால்தான் அகத்தியன் அறிந்தும் அறிந்தும்,  இன்னும் பார்த்தால் அகத்தியன் பின் கிழக்கில் இருந்து மேற்கு ஓடினால் அது வேகமாக பின் சுற்றும். அதற்குத் தகுந்தாற்போல் பின் மனிதர்களை மாற்ற வேண்டும் என்று எண்ணமப்பா அகத்தியனுக்கு. 

இப்பொழுது பார், அகத்தியன் என்ன அனைவருக்குமே நல்லது செய்யப் பார்க்கின்றானப்பா. ஒருவனை விட்டு ஒருவன் எப்படியப்பா இறைவன். அதாவது இரு குழந்தைகள் என்றால் ஒருவனை மட்டும் அன்பாகப் பழகி மற்றொருவனை விட்டுவிட்டால் பின் எண்ணம்.

பின் இவ்வாறு (பிறவி நோக்கத்தை) தெரிந்து கொண்டால்தான் நிச்சயம் பிறவியின் பலனை அனுபவித்து பின் மோட்சத்திற்குப் போக முடியுமே. ஆனால் மனிதன் தெரிந்து கொள்ள முடியவில்லையே. மனிதனின் பாடு பெரும்பாடப்பா. அப்பப்பா ஆசிகள். 

பின் இன்னும் அகத்தியன் வாக்குகள் செப்பும் பொழுது ப பல உண்மைகள் புரிவாய். 

ஆசிகள் ஆசிகள் மகனே.

ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!

சர்வம் சிவார்ப்பணம்!!!!!

Friday, July 12, 2024

சித்தர்கள் ஆட்சி - 384 :- அன்புடன் அகத்திய மாமுனிவர் - மதுரை வாக்கு ( March 2024 ) - பகுதி 4 - ஆன்ம நிலைகள் விளக்கம்


 

சித்தர்கள் ஆட்சி - 383 :- அன்புடன் அகத்திய மாமுனிவர் - மதுரை வாக்கு ( March 2024 ) - பகுதி 4

 



இறைவா!!!! நீயே அனைத்தும்.

அன்புடன் அகத்திய மாமுனிவர் - மதுரை வாக்கு ( March 2024 ) - பகுதி 4

நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே ஆனாலும் அதை, இதை என்று ( YouTube, Facebook, WhatsApp, Instagram, Twitter, social media , இன்னும் பல வழிகளில் ) மனதைக் குழப்புவார்களப்பா. எதனையும் நம்பிவிடாதே. ( தியான, யோக ரகசியங்கள்) திறக்கவும் முடியாதப்பா.

அடியவர் 7: (அமைதி)

நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே யான் விலக்கி விடுவேன்( வழி விடுவேன்)

அடியவர் 7 :- ( வழி ) காட்டினால் போதும் ஐயா.

நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே திரும்பு

அடியவர் 7:- (திரும்பி நின்றார்)

நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே ( வழி ) காட்டிவிட்டேன் அப்பனே.

( இங்கு குருநாதர் அகத்திய மாமுனிவர் அவ் அடியவருக்கு அளித்த வாக்கே வழி. அதனை உணர்த்துகின்றார் )

அடியவர்கள் :- ( சிரிப்பு அலை )

அடியவர் 7 :- சரிங்க ஐயா.

நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- ( அடியவருக்கு அதன் வாக்கு முடிந்த உடன் அவரை அமரச்சொன்னார் குருநாதர். அதன் பின் பொது வாக்கு ஆரம்பம்) அப்பனே ஒன்றுக்குப் பதிலளி?

அடியவர் :- பூஜ்ஜியத்திற்கு அடுத்து ஒன்று.

நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே, இது சிறுபிள்ளைத்தனமாகத்தான் இருக்கின்றது.


அடியவர் 1 :- அவனுள் அனைத்தும் அடக்கம்.


நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே ஏற்கனவே மனப்பாடம் செய்து சொல்லிக்கொண்டிருக்கின்றாய்.


அடியவர் 2 :- ஏகன் அனேகன்


அடியவர் 3:- ஐயா ஒன்று என்பது பரிபூரத்துவம்.


நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே வாயில் வந்ததைச் சொல்லிவிட்டாய்.


அடியவர் :- சர்வம் சிவமயம் என்பது போல் எல்லாமும் ஒன்றே. அனைத்தும் இறைவனே.


நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே இதுவும் சொன்னதுதான்.


அடியவர் 4 :- தாய்மை


நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே இவையும் சொல்லி


அடியவர் 7 :- பூஜ்ஜியம் என்றால் ஒன்றும் இல்லை. ஒன்று என்றால் அனைத்தும் உள்ளது.


நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே இதனால் பூஜ்ஜியத்தில் இருந்தே வரவேண்டும் என்பேன் அப்பனே. அவை மட்டும் இல்லாமல் ஒன்று எதை என்று அறிய அறிய அப்பனே அனைவருமே சொந்தங்கள் என்று. பின் அனைவருமே காப்பாற்றுவார்கள் என்று. அனைத்தும் காப்பாற்றும் என்று. ஆனாலும் நிச்சயம் ஆன்மா தனிதானப்பா. இதனால்தான் ஒன்று என்று சொன்னேன் அப்பனே.


அடியவர் 6 :- அனைத்து ஆன்மாக்களும் ஒன்று


நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே , பின் இரண்டு யார்?.


அடியவர் 2 :- உடலும் , மனமும்


நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே அது குரங்கப்பா உந்தனுக்கு.


அடியவர்கள்:- ( சிரிப்பு அலை )


அடியவர் 3 :- மேடு, பள்ளம். இரவு, பகல். அது போல …


நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- இரண்டு என்பது சொந்தம் பின் இறைவனைக் குறிக்கும்.


அடியவர்கள் அனைவரும் :- ( அமைதி )


நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- மூன்று?


அடியவர் 4 :- பசு, பாசம் , பதி…,


நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- எதை என்றும் அறிய அறியத் தவறு.


அடியவர் 5 :- பிள்ளைகள், வாரிசுகளைக் குறிக்கும்.


நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- சொந்தங்களே இங்கு இல்லை. பின் ஏன்? ஆன்மாவைப் பற்றி எதை என்று அறிய அறியப் பேசுகின்றாய்? அதை பற்றி யான் இங்கு பேசவில்லை.


சுவடி ஓதும் அகத்திய மாமுனிவர் மைந்தன்:- ஆன்மாவுக்கு யாரும் சொந்த பந்தங்கள் இல்லை.


அடியவர்கள் :- ( அமைதி )


நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே மூன்று எதை என்று அறிய அறிய பிரம்மா, விஷ்ணு, சிவன் அப்பனே. அவர்கள் அருளால்தான் நான்கைக் கடக்க வேண்டும்.


சுவடி ஓதும் அகத்திய மாமுனிவர் மைந்தன்:- ஐயா புரியுதுங்களா? நான்கு?


அடியவர் 6:- மாதா, பிதா, குரு, தெய்வம்


நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அம்மையே தவறு. சொல்லி விடுகின்றேன். அவ்வளவு அறிவு இருந்தால் நீங்கள் இங்கு வந்திருக்க மாட்டீர்கள். அதாவது உலகத்தில் பிறந்து விடுகின்றீர்கள். ஆனாலும் இவ் ஆன்மா நான்கு பக்கத்திற்குச் சுற்றும். பின் கஷ்டங்களை அனுபவிக்கும். பின் ஐந்தாகச் செல்லும்.


சுவடி ஓதும் அகத்திய மாமுனிவர் மைந்தன்:- இந்த ஆன்மா பிறந்தவுடனேயே எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள வேண்டும். நான்கு பக்கமும், என்னென்ன நடக்கின்றது? ஏது நடக்கின்றது? எவ்வளவு இன்பம், துன்பம்? இது எல்லாம் தெரிஞ்ச பின் அப்புறம் ஐந்தாவதுக்குப் போகும். சொல்லுங்க ஐயா?


அடியவர் :- பஞ்ச பூதங்கள்


நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பொழுதுதான் மனிதன் உடம்பில்….இதன் தத்துவத்தைப் புரிந்து கொள்வதற்குப் பின் ஐந்தாவது அறிவு. அப்பொழுதுதான் சிந்தித்துப் பேசுவது. ஆனால் பேசவில்லையே! ஆறு?


அடியவர் 2 :- பகுத்தறிவு.


நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே இவை எல்லாம் உணர்ந்து வந்தால் அப்பனே யாங்களே அறிவைக் கொடுப்போம். பின் ஆறாவது அறிவை.


சுவடி ஓதும் அகத்திய மாமுனிவர் மைந்தன்:- ஐயா புரியுதுங்களா?


அடியவர் 2,3, 4 :- புரிகின்றது ஐயா


நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே, அவ்வளவு சுலபமா ஆறாவது அறிவைப் பெறுவதற்கே அப்பனே? ஆனால் ஆறு அறிவு பெற்றுள்ளீர்கள் நீங்கள்.


சுவடி ஓதும் அகத்திய மாமுனிவர் மைந்தன்:- ( அனைவருக்கும் 6 அறிவு உண்டு) ஆனால் இதை எப்படி சொல்றதுன்னா…


அடியவர் :- ( ஆறாம் அறிவு ) முழுமை அடையவில்லை


நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே முழுமை அடையாமல் எதைக் கொடுத்தாலும் உங்களுக்குப் பயன் இல்லை என்பேன் அப்பனே. அதனால்தான் இறைவன் பொறுத்துப் பொறுத்துத்தான் கொடுப்பான்.


சுவடி ஓதும் அகத்திய மாமுனிவர் மைந்தன்:- ( சிறு விளக்கம் )


அடியவர் :- ( அமைதி )


நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே பஞ்சை பின் கையில் வைத்தாற்போல்.


சுவடி ஓதும் அகத்திய மாமுனிவர் மைந்தன்:- என்ன அர்த்தம் ஐயா? பஞ்சை கையில் வைத்தார்


அடியவர் 3 :- பறந்து போய்விடும்


சுவடி ஓதும் அகத்திய மாமுனிவர் மைந்தன்:- பறந்து போய்விடும். அப்போ அந்த 6 அறிவைக் கொண்டு வராமல், எதைக் கொடுத்தாலும் உங்களால் வாழ முடியாது என்று சொல்கின்றார்.


நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே அப்பொழுது துன்பம் ஒன்று கொடுத்தால்தான் அப்பனே அனைத்தும் தெரிந்து கொள்ள முடியும் என்பேன் அப்பனே. பின் இறைவன் அதாவது துன்பத்தை இறைவன் கொடுக்கின்றான் அப்பனே. ஆனால் இறைவனிட்தே சென்றால் இறைவன் நகைக்கின்றான் அப்பா.


சுவடி ஓதும் அகத்திய மாமுனிவர் மைந்தன்:- துன்பம் யார் கொடுப்பதென்றால் இறைவன்தான் கொடுக்கின்றார். அப்போ இறைவன் கிட்ட போய் காப்பாத்துங்க என்றால், இறைவன் என்ன செய்வார்?


அடியவர் :- நான்தான் செய்தேன் ( என்று நகைப்பார் இறைவன் )


நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே இப்பொழுது கூறுங்கள் அப்பனே? நீங்கள் அறிந்துள்ளீர்களா இதை? இதனால்தான் சொன்னேன். தன்னை அறிந்தால் அனைத்தும் நடக்கும் என்று.


அடியவர் :- உண்மையை ( யாரும் ) அறியவில்லை…


அடியவர் 3:- ஆறாவது அறிவு எல்லோருக்கும் இருக்கு. ஆனால் முழுமை அடையவில்லை.


நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே முழுமையாக அறிந்துவிட்டால் பின் ஏழாவதுக்கு சென்றுவிடலாம் என்பேன் அப்பனே. ஏழாவது எதை என்று அறிய அறிய அப்பனே பின் இறைவனைக் காணலாம். பின் எட்டாவதைக் கூட இறைவன் அருகில் இருக்கலாம். பின் அன்பைப் பின் கட்டி அணைத்துக்கொள்ளலாம்.


(7ஆம் அறிவு இறைவனைக் காணுதல். 8ஆம் அறிவு இறைவனோடு இருத்தல்.)


அடியவர் 7 :- ஐயா ஒரு சிறு கேள்வி. ஐயா தன்னை அறிதல் என்று சொல்லுகின்றார்கள். எல்லா ஆத்மாக்களுக்கும் தன்னை அறிதலில் என்ன பிரச்சினை? தன்னை அறிதல் ( எப்படி ) என்ன முறை? புண்ணியங்கள் செய்வதா? ( அவ் ஆத்மாக்களின், மனிதனின் ) பாவங்கள் தான் தன்னை அறிய தடையாக இருக்கின்றதா? இல்லை தியானம், தவம் செய்ய வேண்டுமா?


நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே இதற்குப் பதில் உரைத்து விட்டேன் அப்பனே. பின் அனுதினமும் இவ் ஆன்மா இறைவனை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது. தன்னை அறிந்தால் இறைவனை நோக்கி செல்லாதப்பா. அப்பனே இங்கேயே இருந்துவிடும் என்பேன் அப்பனே.


சுவடி ஓதும் அகத்திய மாமுனிவர் மைந்தன், அடியவர்கள் :- ( சில உரையாடல்கள் )


நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே இதனால்தான் அப்பனே ஆறு அறிவுகளும் சரியாகப் பயன்படுத்திக்கொண்டால் இவ் ஆன்மா இங்கேயே இருக்கும் அப்பனே. எதை என்று அறிய அறிய இறைவன் இங்கு திரிந்து கொண்டிருக்கின்றான் மனித ரூபத்தில் அப்பனே. கட்டி அனைத்துக்கொள்ளும் அப்பா.


சுவடி ஓதும் அகத்திய மாமுனிவர் மைந்தன், அடியவர்கள் :- ( உரையாடல்கள் )


நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே அப்பொழுது நீ என்ன கேட்பாய் என்று தெரியுமா? பின் இறைவா போதும் வாழ்க்கை. உலக வாழ்க்கை போதும் உன்னிடத்தில் அழைத்துக்கொள் என்று. ஆனால் இறைவன், அப்பொழுதுதான் அனைத்தும் கொடுக்க ஆரம்பிப்பான்.


சுவடி ஓதும் அகத்திய மாமுனிவர் மைந்தன், அடியவர்கள் :- ( சல சலப்பு, சிலர் சிரிப்பு, சில உரையாடல்கள் )


நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே இதனால் பின் ஒன்பதாவது கூறு?


சுவடி ஓதும் அகத்திய மாமுனிவர் மைந்தன்:- 7,8 க்கு வந்துவிட்டார். ஒன்பதாவது ( அறிவு ) சொல்லுங்க ஐயா)


அடியவர் 6 :- இறைவனுடன் கலத்தல்…


நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே , ( 9ஆம் அறிவில்) நவ கோள்களும் ஒன்றும் செய்யாதப்பா காலத்தை வென்றவன் நீ.


சுவடி ஓதும் அகத்திய மாமுனிவர் மைந்தன்:- நீங்கள் நினைப்பது நடக்கும். காலத்தை வென்றிடலாம்.


அடியவர் :- நினைப்பது நடக்கும்..


நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- மீண்டும் அப்பனே வரும் பத்து.


அடியவர் :- ( அமைதி )


நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே முதலில் இருந்து வாழ்க்கை தொடங்கிவிட்டது அப்பனே பூஜ்ஜியம். அப்பனே ஒன்றுக்கு வந்து விட்டீர்கள் அப்பனே. அவ்வளவுதான் வாழ்க்கை முடிந்துவிடும் அப்பனே. இறைவனையும் பார்த்து விடுவீர்கள் அப்பனே. இதனால் பின் அனைத்துக்கும் காரணம் இறைவன். அப்பனே இறைவன் ஒன்றே. அப்பனே இவ் ஆன்மாவும் முடிவு பெற்றுவிடும் அப்பா. அப்படி முடிவு பெறாவிடில் அப்பனே மீண்டும், மீண்டும் அலைந்து திரிந்து துன்பங்களைப் பட்டுக்கொண்டிருக்கும் அப்பனே. பின் உடம்பைத் தேடித் தேடி. இது தேவையா? இவை தேவை எதை என்று அறிய அறிய அதனால்தான் அப்பனே சித்தர்கள் சொல்லிக்கொண்டே இருக்கின்றோம் அப்பனே .முதலில் கர்மத்தை எப்படி நீக்க வேண்டும் என்று கூட. அதை நீக்கிவிட்டாலே போதுமானதப்பா. அவரவர் வழியில் அவர் செல்வார்களப்பா. (ஒரு அடியவருக்கு தனிவாக்கு )


அடியவர் :- ( அமைதி )


நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே மந்திரங்கள் எதற்கு?


சுவடி ஓதும் அகத்திய மாமுனிவர் மைந்தன்:- ஐயா யாராவது சொல்லுங்கள்?


அடியவர் :- மனதை திடப்படுத்த..


நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே அப்பொழுது ஒரு மந்திரத்தைக் கொடுக்கின்றேன் அப்பனே. எப்படி திடமாகும் என்று கூறு?


அடியவர் :- ( அமைதி )


நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே , நகாரம், உகாரம், அகாரம் எதை என்றும் புரியப்புரிய அப்பனே இதற்கும் கூட ஒவ்வொரு இடத்திலும் கூட உறுப்புகள் , அதற்குத் தகுந்தாற்போல் மந்திரங்கள் செப்பினால்தான் அப்பனே உடம்பும் ஏற்றுக்கொள்ளும் அப்பனே. அனைத்தும் நடக்கும். அது மீறி ஒரு மந்திரம் மாறிவிட்டாலும் மீண்டும் கஷ்டங்களாகப் போய்விடும் அப்பா. தெரியாமலேயே பின் மனிதன் அவ் மந்திரத்தைக்கூறு, இவ் மந்திரத்தைக்கூறு ( என்று கூறிக்கொண்டு உள்ளான்). பலனில்லையப்பா.


சுவடி ஓதும் அகத்திய மாமுனிவர் மைந்தன்:- உங்கள் உடல் உறுப்புகளுக்குத் தகுந்தவாறு மந்திரம் எடுத்து வரவேண்டும்.


அடியவர் :- ( அமைதி )


நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே இவ்வாறு உடல் உறுப்புகள் அசைகின்ற போது ஒரு சக்தி வரும் அப்பா. அப்பனே அது இறைவனிடத்தில் சேர்க்கும் அப்பா. ஆனால் சரியான மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். அப்படி உச்சரிக்காவிடில் பின் பைத்தியக்காரன்.


அடியவர் :- ( அமைதி )


நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே தந்திரங்கள் எதற்கு?


அடியவர் :- ( அமைதி )


நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே இவை எல்லாம் தெரியாமல் இறைவனைப்பற்றிப் பேசுகின்றாய் அப்பனே. பேசினால் உன்னையே பைத்தியக்காரன் என்று சொல்லிவிடுவார்கள்.


சுவடி ஓதும் அகத்திய மாமுனிவர் மைந்தன், அடியவர் :- ( சில உரையாடல்கள்)


நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே , ஓடிக்கொண்டே இருக்கின்றாய் அப்பனே. அப்பனே பின் கால்களில் முள் குத்துகின்றது என்பேன் அப்பனே. அப்பொழுது ஐயோ குத்துகின்றது. பின் வாருங்கள் வாருங்கள் என்று சத்தம் போடுவாயா? அப்பனே நீயே எடுத்து தூர வீசி விடுவாயா?


அடியவர் :- நானே எடுத்துப் போட்டுவிடுவேன்.


நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே இதுபோலத்தான் பக்தியும் இருக்க வேண்டும். அவனவன் அப்பனே கஷ்டங்கள் பட்டால்தான் திருந்துவான் என்பேன் அப்பனே. யார் சொன்னாலும் கேட்க முடியாதப்பா இக்கலியுகத்தில்.


( நம் குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளால் March 2024 மதுரையில் நடந்த கேள்வி,பதில் வாக்குகள் தொடரும்….)


ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!


சர்வம் சிவார்ப்பணம்!!!!!

Wednesday, July 10, 2024

சித்தர்கள் ஆட்சி - 382 :- அன்புடன் அகத்திய மாமுனிவர் - மதுரை வாக்கு ( March 2024 ) - பகுதி 3




இறைவா!!!! அனைத்தும் நீ


அன்புடன் அகத்திய மாமுனிவர் - மதுரை வாக்கு ( March 2024 ) - பகுதி 3


நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:-

( இங்கு ஒரு பாவம் குறித்து விளக்கினார்கள். யாருக்கும் தெரியாது என்று செய்த ஒரு பாவம். ஆனால் ஆன்மா சென்று இறைவனிடம் கூறிவிட்டது. இப்போது அவ் பாவம் தீர்ப்பது தொடர்பான வாக்கில் அனைவருக்குமான பொது வாக்கு ) அப்பனே இதற்குத் திருத்தலம் திருத்தலமாகச் சென்றாலும் அப்பனே ஔஷதங்கள் ( மருந்துகள் ) எடுத்துக்கொண்டாலும் இறைவன் இப்பொழுதுதான் யான் சொன்னேன் அப்பனே. அவ் ஆன்மா அனுதினமும் இறைவனிடத்தில் செல்லும் என்று கூற அப்பனே பின் பாவக்கணக்கை அனுபவித்துத்தான் ஆகவேண்டும். 


( இங்கு அடியவர்கள் ஒன்று கவனிக்க வேண்டும். ஆன்மா பொய் சொல்வதில்லை இறைவனிடம். ஆனால் ஆன்மா இறைவனிடம் தினமும் அறியாத இவ் உடல் கொண்ட உயிர் அவ் பாவத்தை நீக்க பரிகாரங்களாகத் திருத்தலம் , திருத்தலமாக இன்னும் பல வழிகளில் முயற்சி எடுக்கும். ஆனால் அவை எல்லாம் வீணே. தோல்விகள் உண்டாகும். பொருள் விரயங்கள் உண்டாகும். வெற்றி பெற ஆன்மாவுடன் இவ் உடல் இனைந்து செயலாற்ற வேண்டும். அதற்கு ஆன்மாவின் நோக்கம் தெரிய வேண்டும். அதற்குப் புண்ணியங்கள் மிக மிக அனுதினமும் செய்வது அவசியம். அவ் புண்ணியத்தை வைத்தே சித்தர்கள் விதியில் உள்ளதை தெரிவிப்பார்கள். அதன் மூலம் வெற்றி உண்டாகும். வாருங்கள் வாக்கின் உள் செல்வோம்.) 


சுவடி ஓதும் அகத்திய மாமுனிவர் மைந்தன்:- ( அருமையான விளக்கம் அளித்தார்கள்) 


அடியவர்:- ( அமைதி ) 


நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- ( எதனால்  பாவம் உண்டானதோ அதன் மூலமே பாவம் நீங்கும். அதாவது அவ் பாவம் ஒரு வினையாகச் செயல்பட்டு வேதனையை அளித்து பாவம் விலகும் என்று புரியும்படி உரைத்தார்கள்.) 


சுவடி ஓதும் அகத்திய மாமுனிவர் மைந்தன்:-  ( அருமையான விளக்கம் அளித்தார்கள்) 

அடியவர்:- ( அமைதி) 


நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே ஆனாலும் தன் பிள்ளைகள் நன்றாக இருக்கத்தான் போராடிக்கொண்டிருக்கின்றார்கள். ஆனால் ஒவ்வொரு விதியையும் பார்த்தால் அப்பனே பின் எங்களுக்கே கஷ்டம்தான் அப்பா. 


நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே இவ்வாறு மற்றவனிடத்தில் கஷ்டங்கள் கூறும்போது அப்பனே இவன் சரியாக மாட்டிக்கொண்டான் நம்தன் இடத்தில். பணத்தைப் பிடுங்கிவிடலாம் என்று அப்பனே. இப்படித்தான் அப்பனே பக்திகள் இனிமேல் வரும் அப்பா. 


( அடியவர்களே, உங்கள் கஷ்டங்களை குருநாதர், இறைவன் இடத்தில் மட்டும் கூறுங்கள். வெளி நபர்களிடம் உரைப்பது உங்களிடம் - பரிகாரம், ஜோதிடம், பூசை , யந்திரம், தந்திரம், மந்திரம் இன்னும் பல வழிகள் மூலம் பிறரால் -  பணம் பறிக்க வழி வகுக்கும். ) 


சுவடி ஓதும் அகத்திய மாமுனிவர் மைந்தன், அடியவர்கள் :- ( உரையாடல்கள் , புரிதல் நிகழ்வுகள் ) 


நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே இதற்குத் தகுந்தாற்போல் அப்பனே இப்பொழுதுதான் சொன்னேன் அப்பனே உங்களுக்கு ஏன் கஷ்டங்கள் வருகின்றது.


சுவடி ஓதும் அகத்திய மாமுனிவர் மைந்தன்:- உங்களுக்கு ஏன் கஷ்டங்கள்

வருகின்றது என்று கேட்கின்றார் ஐயா. 


அடியவர்:- மனிதனின் ஆசை


நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே இதனால்தான் அப்பனே அனைத்திற்கும் காரணம் நீங்கள்தான் என்பேன் அப்பனே. அதனால் முதலில் நீங்கள் உங்களை உணர்ந்தால் அப்பனே பின் சுலபமாகிவிடும் எங்களுக்கு. 


சுவடி ஓதும் அகத்திய மாமுனிவர் மைந்தன்:- எல்லாமே நீங்கள்தான். நீங்க உங்களை அறிந்து கொண்டால் , எங்களுக்கு சுலபமாகிவிடும் என்று சித்தர்கள் சொல்கின்றார்கள். 


அடியவர்:- (அமைதி) 


நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே இவ் ஆன்மாக்கள் ஓடி ஓடி இறைவனைத் தேடும் அப்பா. அப்பனே பின் எங்கு சொர்கம் இருக்கின்றது? எங்கு நிம்மதி கிடைக்கும் என்று. அப்பொழுதுதான் அப்பனே சில புண்ணியங்கள் நீங்கள் செய்யும் போது ஆன்மாக்கள் எங்களை நோக்கி வரும் அப்பா. அப்பனே யாங்களே பின் கையைப் பிடித்து பின் பிறவி இருக்கின்றது. அடுத்த பிறவியில் பின் பார்த்துக்கொள்வோம். பின் பாவங்களைக் கரைத்து அனைத்தும் கொடுக்கின்றோம் என்று சொல்லி அனுப்பி விடுவோம் அப்பனே. அப்படிப்பட்டவர்கள்தான் அப்பனே எங்களிடத்தில் வரமுடியும். சொல்லிவிட்டேன் அப்பனே. இதுதான் ஆணித்தரமான உண்மை. 


அடியவர்:- ( சுவடி ஓதும் மைந்தனுடன் சில உரையாடல்கள் ) 


நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே நீங்கள் மட்டும் ஒன்றும் இல்லாமல் , அவன் எல்லாம் பாவங்கள் செய்தவன். அவன் மட்டும் பின் நன்றாக வாழ்ந்து கொண்டு இருக்கின்றானே என்று இறைவனிடத்தில் முறையிடுவதில்லையா அப்பனே? அப்பனே அது போல் பின் தவறு செய்தவனுக்கு அப்பனே தண்டனைகள் கொடுக்காமல் பின் போய்விட்டால் இறைவன் அப்பனே இறைவனை யாரும் மதிக்க மாட்டார்கள் அப்பா. 


சுவடி ஓதும் அகத்திய மாமுனிவர் மைந்தன்:- தண்டனை கொடுத்துதான் திருத்துவார். 


அடியவர்:- ( அமைதி. சில உரையாடல்கள்.) 


நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே உங்களைப் பார்த்தே கேள்விகளை இப்போது கேட்கின்றேன். இறைவனை எப்படி அறிவதப்பா?


( ஒவ்வொரு அடியவர்களாகப் பதில் கூறத் தொடங்கினார்கள் ) 


அடியவர்:- முதலில் நான் என்ற ஆணவம் ஒழிந்தால்தான் இறைவனை உணர இயலும். 


நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே இது தவறான பதில்.


அடியவர் 1 :- சரணடைந்தால்…


நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே இதுவும் தவறு.


அடியவர் 2 :- சரணாகதி


நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அம்மையே தவறு.


அடியவர் :- புண்ணியங்கள் அதிகமானால்…


நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே இதுவும் தவறு


சுவடி ஓதும் அகத்திய மாமுனிவர் மைந்தன்:-  ஐயா அனைவரும் நன்றாக யோசித்துச் சொல்லுங்கள். அனைவரும் தவறு என்று சொல்கின்றார். இறைவனைச் சரணாகதி அடைவது எப்படி? 


அடியவர் 3 :- தன்னை உணர வேண்டும். 


நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே இவை எல்லாம் பழையது. ( தவறு ) 


அடியவர் 4 :- மனம் மட்டும் போதும்


நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அம்மையே, பொறுத்திரு. 


அடியவர் 5 :- அனைத்தும் ஈசன் செயலே என்று கருதிவிட்டால்..


நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அம்மையே இதுவும் பொறுத்திருக்கத்தான் வேண்டும்


அடியவர் 5 :- இறைவனிடத்தில் அன்போடு இருத்தல்.. 


நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- இதுவும் இல்லை. 


அடியவர் 6 :- யாருக்கும் பாவம், துன்பம் செய்யாமல் இருந்தால்..


நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே கோபம் வந்தால் கூட ஒரு பாவம்தானப்பா. 


அடியவர் 7 :- கெட்ட காலம் ( துன்ப காலம்) முடிந்தால் இறைவனைச் சரணடைந்த மாதிரிதான். 


நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே எழுந்து நில். 


அடியவர் 7 :- (அடியவர் எழுந்து நின்றார்)


நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே ( தனிப்பட்ட வாக்கு. ) அப்பனே உன்னைப் பக்குவத்தில் வைத்துள்ளேன். இதற்கு ( நீ என்னிடத்தில் வந்தமைக்கு காரணம்) கஷ்டங்கள் தானப்பா. 


சுவடி ஓதும் அகத்திய மாமுனிவர் மைந்தன்:- ( தனிப்பட்ட விளக்கம் ) 


அடியவர் 7 :- ( சரிங்கய்யா ) 


நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே ஆடிய அட்டம், பாடிய பாட்டம் அப்பனே பார்த்துக்கொண்டே தான் இருந்தேன். ஆனாலும் அப்பனே இப்பொழுது கைக்கட்டி பதில் கூறிக்கொண்டிருக்கின்றாய் அப்பனே. இதற்கெல்லாம் காரணம் துன்பத்தானப்பா. அப்பனே அப்பொழுது துன்பம் கொடுப்பது நல்லதா? பின் நீ சொல்?  


அடியவர் 7:- துன்பம் வந்தால்தான் அந்த பக்குவங்கள் வரும். 


நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே, அண்ணாமலை செல் அப்பனே. அப்படிச் செல்லவில்லை என்றாலும் அப்பனே தலையில் குட்டி ( கஷ்டத்தைக் கொடுத்து ) அவனே அழைத்துச் செல்வான். 


சுவடி ஓதும் அகத்திய மாமுனிவர் மைந்தன்:- ( சில விளக்கங்கள் ) 


அடியவர் 7:- ( சில புரிதல்கள் ) 


நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- ( தனி வாக்கு) 


சுவடி ஓதும் அகத்திய மாமுனிவர் மைந்தன்:- ( தனி வாக்கு விளக்கம் ) 


அடியவர் 7 :- ( சில புரிதல்கள் ) 


நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே துன்பத்தைக் கொடுத்துத்தான் உன்னை இப்படி அழைத்து வந்திருக்கின்றேன். அப்பனே இன்னும் சொல் அனைவருக்கும் ஏதாவது? 


அடியவர் 7:-  நம்ம யார் என்று உணர்ந்தால் சீக்கிரம் முக்தி அடையலாம்..


நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே யார் யார் தன்னை உணர்ந்தார்கள் என்று கேள்? 


சுவடி ஓதும் அகத்திய மாமுனிவர் மைந்தன்:- ஐயா எல்லோரையும் இங்கு கேளுங்கள். 


அடியவர் 7 :- அகத்தியரே கேட்டிருக்கின்றார். அவர்களே சொல்லுவார்கள். 


நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே திருடன் , யான் திருடன் என்று சொல்லுவானா?  


அடியவர்கள்:-  ( பலத்த சிரிப்பு அலை ) 


பல அடியவர்கள்:- ( பலத்த சிரிப்புடன்) 

ஐயா நான் ஒத்துக்கொள்கின்றேன். 

நான் ஒத்துக்கிறேன் ஐயா. 

( அதாவது யான் திருடன் என்று ) 


நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே சொல்


சுவடி ஓதும் அகத்திய மாமுனிவர் மைந்தன்:- ஐயா உங்களை சொல்லுங்கள் என்று கேட்கின்றார். 


அடியவர் 7 :- யாரும் இல்லை அய்யா


நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே ஒத்துக்கொண்டால்? 


சுவடி ஓதும் அகத்திய மாமுனிவர் மைந்தன்:- அப்படி தன் தவற்றை ஒத்துக்கொண்டால்? 


அடியவர் 7:- அதிலிருந்து அவர்களுக்கு விமோசனம் கிடைக்கும். 


நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பனே தண்டனை தீருமப்பா. பாவம் தொலையுமப்பா.


சுவடி ஓதும் அகத்திய மாமுனிவர் மைந்தன்:-  ஐயா புரியுதுங்களா? 


அடியவர்:- ( அமைதி ) 


நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- ( அடியவர் 7 - விதி குறித்த வாக்கு. ) 


அடியவர் 7:- கோயில், கோயிலா போக வேண்டும் என்றால் கஷ்டம் ஐயா


நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:- அப்பொழுது இல்லங்கள் இல்லங்களாகச் சுற்று. 


அடியவர்கள் :- ( பலத்த சிரிப்பு அலைகள்) 


நம் குருநாதர் அகத்திய மாமுனிவர்:-  அப்பனே, இதுவா தன்னை அறிதல் அப்பனே? 


அடியவர் 7:- ( அமைதி ) 


( நம் குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளால் March 2024 மதுரையில் நடந்த கேள்வி,பதில் வாக்குகள் தொடரும்….) 


ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!


சர்வம் சிவார்ப்பணம்!!!!!