“இறைவா நீயே அனைத்தும். இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்.

"இறைவா நீயே அனைத்தும்!. இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்" ஈரேழு உலகத்தையும் காத்து அருளக்கூடிய அன்னை ஶ்ரீ உண்ணாமலை அம்மை உடனுறை தந்தை அண்ணாமலையார் பொற்கமலத்தை பணிந்து, அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளை பணிந்து இந்த தளத்தில் பதிவினை வெளியிடுகின்றோம்.

உலகின் ஆதி குரு, மாமுனிவர், குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளிய தினசரி அனைவரும் அதிகாலையில் எடுக்க வேண்டிய உறுதிமொழி. :-

1. தர்மம் செய்வேன் 2. அனைத்திடத்திலும் பின் அன்பாக அதாவது அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன் 3. போட்டி, பொறாமைகள் நீக்குவேன் 4. அனைத்தும் எந்தனுக்கே சொந்தம் என்று பின் உயிர்ப் பலியும் இடமாட்டேன் 5. பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன் 6. அப்படிக் கொன்றாலும், நிச்சயமாய் அதை யான் தடுப்பேன் 7. அவை மட்டும் இல்லாமல், தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும் 8. பிறருக்கு நன்மை செய்ய வேண்டும் 9. பிறருக்காக உழைக்க வேண்டும் 10. பிற ஜீவராசிகளும் (உயிரினங்களும்) பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில் அனைவரும் நினைக்க வேண்டும் 11. அப்படி நினைத்தால் அகத்தியன் வந்து அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பான் என்று சொல்மகனே.


அகத்திய பிரம்ம ரிஷி உரைத்த முதல் தரப் புண்ணியம் பெறும் ஒரே வழி:- (1) திருவாசகம் சிவபுராணம் + (2) மக்கள் வாழ , நல் வழிகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுதல் + அதன் பின் (3) அன்னதானம், மற்றும் இதர தான தர்மங்கள். இப்படிச் செய்தால் மட்டுமே , முதல்தரப் புண்ணியம் உண்டாகும் என்று குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி உரைத்துள்ளார்கள். இதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள் என்றும் அனைவருக்கும் கூறி உள்ளார்கள். இதுபோல் அனைவரும் செய்து முதல் தரப் புண்ணியம் பெற்றுக் கொள்ளுங்கள். இறை அருளுடன் வளமாக வாழுங்கள். வாழ்க வளமுடன்!!!!!!!!!

siththarkalatchi - Moving text


அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு :- “அப்பனே, அனுதினமும், என் பக்தர்கள், ஒரு உயிருக்காவது உணவளியுங்கள். அது போதும். அதுவே கோடி புண்ணியமாகும்.”


Google Translate

Friday, November 21, 2025

சித்தர்கள் ஆட்சி - 517 :- அன்புடன் அகத்திய மாமுனிவர் பெங்களூர் சத்சங்கம் - 12.November.2024 - பகுதி 6

 இறைவா நீயே அனைத்தும். இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்.



அன்புடன் அகத்திய மாமுனிவர் பெங்களூர்  சத்சங்கம் - 12.November.2024 - பகுதி 6


ஆதி முதல்வனை மனதில் எண்ணி செப்புகின்றேன், அகத்தியன். 


(இவ் தொடர் வாக்கின் முந்தைய பகுதிகள்

(1) பகுதி 1 https://siththarkalatchi.blogspot.com/2025/11/510.html (2) பகுதி 2 https://siththarkalatchi.blogspot.com/2025/11/511.html (3) பகுதி 3 https://siththarkalatchi.blogspot.com/2025/11/512.html (4) பகுதி 4 https://siththarkalatchi.blogspot.com/2025/11/514.html (5) பகுதி 5 https://siththarkalatchi.blogspot.com/2025/11/516.html

(6) பகுதி 6 https://siththarkalatchi.blogspot.com/2025/11/517.html



( இவ் தொடர் வாக்கின்- 6 ஆம் பகுதி - குருநாதர் வாக்குகளை மட்டும் இப்போது பார்ப்போம் )


குருநாதர் :- அப்பனே, அம்மைகளே, நல்விதமாக, அனைத்து திறமைகளும் உங்களிடத்தில் உள்ளது, ஆனால் சரியாக உபயோகிக்கவில்லை. அவ்வளவுதான். அதனால்தான் நான் தெளிவுபடுத்துகின்றேன் உங்களுக்கு. 


அடியவர்:- சொல்லிக் கொடுங்க, ஐயா, சரியாக 


குருநாதர் :-  அறிந்து கூட, தாயே, இவ்வளவு நேரம் என்ன சொல்லிக் கொண்டிருந்தேன்? 


குருநாதர் :-  தாயே, அப்பனே, உன்னிடத்தில் படித்து, நிச்சயம், மக்கு என்கிறாள். இவள், இவள் என்னத்தான் சொல்ல போகின்றாள்? 


குருநாதர் :-  எது என்பது அறிய, இப்பொழுது புரிகின்றதா? அனைவருக்கும், நிச்சயம், ஆசிரியன், பின் பேச்சை கேட்டிருந்தால், நிச்சயம், பின் எவை என்று அறிய, மாணவன் 


குருநாதர் :-  அதேபோலத்தான், நிச்சயம், யான் சொல்வதை கேட்டிருந்தாலே, நிச்சயம், நன்முறைகளாக நீங்கள் பிழைத்துக் கொள்வீர்கள். யான் ஒன்றும் பின் செய்ய தேவையே இல்லை. 


குருநாதர் :-  அப்பனே, அனைவருக்கும், நிச்சயம், ஒரு பெரிய மகாசக்தி, அப்பனே, ஆட்டிப் படைத்துக் கொண்டே இருக்கின்றது. அப்பனே, அதை முதலில் இயக்க வேண்டும். பின் அதை இயக்கினால் தான், அப்பனே, இறைவனும் தெரிவான். 


குருநாதர் :- அப்பனே, அவர் சக்தியை எழுப்பி விட்டால், அனைத்தும் உங்களுக்கே தெரிந்துவிடும் என்பேன் அப்பனே. அவ் சக்தி, பின் எழுப்பதற்காகவே, யாங்கள் போராடிக் கொண்டிருக்கின்றோம். 


அடியவர் :- அது என்ன சக்தி? 


குருநாதர் :- அப்பனே, இவையெல்லாம் ஒரு கேள்வியா? அப்பனே, 


குருநாதர் :-  அப்பனே, அப்பொழுது நீ எங்கு இருக்கின்றாய்? அப்பனே, பார். 



குருநாதர் :-  அப்பனே, நீ நிச்சயம் அறிவுள்ளவனாக இருந்தால், தீய சக்தியா, நல்ல சக்தியா என்று கேட்டிருக்க வேண்டும். ஏன் கேட்கவில்லை? 


குருநாதர் :- அப்பனே, அதாவது ஆசிரியனே, இவனுக்கு சொல்லிக்கொடு. 


(சில உரையாடல்கள்)


குருநாதர் :- அப்பனே, உந்தனக்கே புரியவில்லை. ஆசிரியன், நீ கேள். 


(சில உரையாடல்கள்)


குருநாதர் :-  அப்பனே, இதை வைத்துக்கொண்டு, நீ என்ன செய்ய போகின்றாய்? 


அடியவர் :-  நல்லது செய்யணும். நல்லதே செய்யணும். 


குருநாதர் :-  அம்மையே, அறிந்தும் கூட, முதலிலிருந்து இதைத்தான் நான் செப்பிக் கொண்டிருக்கின்றேன். 


குருநாதர் :-  அப்பனே, நீ ஏதாவது அவனை கேள். 


அடியவர் :- தியானம் எப்படி பண்ணனும்? 


அடியவர் 2:- இப்ப இன்பமோ, துன்பமோ, ரெண்டுமே ஒரு உணர்ச்சிதான். அந்த உணர்ச்சிகளுக்கு பக்கம் போடாம, சும்மா இருக்கணும். மூச்சை கவனிச்சுட்டே இருக்கணும். 


குருநாதர் :-  அப்பனே, நிச்சயம், இப்போதெல்லாம் தியானம் செய்வது தியானமே இல்லை என்பேன் அப்பனே. நிச்சயம் அப்பனே, தியானம் எப்பொழுது பலிக்கும் என்றால், ஆசைகளே இருக்கக்கூடாது அப்பா. இதுதான் உண்மையான தியானம். ஆனால் இப்பொழுது இல்லையப்பா. ஒருவன் பார்த்துக் கொண்டே இருக்கின்றேன், என் பக்தன் என்று சொல்லி, பெண்ணை நினைத்து, தவம் செய்து கொண்டிருக்கின்றான். அப்பனே, இன்னொருவன் காசுகள் வேண்டும் என்று, தவம் செய்து கொண்டிருக்கின்றான். அப்பனே, இன்னொருவன் இன்னும் பெண், அவை செய்ய வேண்டும், இவை செய்ய வேண்டும் என்று, அப்பனே, ஆசைகளோடே தவம் செய்து கொண்டிருக்கும் பொழுது, எப்படி அப்பா? அப்பனே, நிறைவேறும் அனைத்தும் பொய்யப்பா. 


அடியவர்:- சாமி, தியானம்ங்கிறது ஒரு விருப்பம் தானே? சாமி, தியானம் செய்யணும்னு நினைக்கிறேன். ஒரு விருப்பம் தானே? 


குருநாதர் :-  அப்பனே, விருப்பத்திற்காகத்தான் தியானங்களை செய்கின்றாய். 


சுவடி ஓதும் மைந்தன் :- நீ அந்த விருப்பத்தை அடையறதுக்கு தான், சாமி, தியானம் பண்றான். 


குருநாதர் :- அப்பனே, நிச்சயம், நீ செய். அப்பனே, உலகத்தை, அப்பனே, தூக்கி விடலாம் என்று பார்ப்போம். 


சுவடி ஓதும் மைந்தன் :- ஆசையை இருக்கக்கூடாது. அப்பதான் தியானம் செய்யணும். 


குருநாதர் :- அப்பனே, நிச்சயம், அவ் ஆசை, அதாவது, அப்பனே, பின் வெள்ளைத்தாலாக இருந்து விட்டாலே, அவன் வெள்ளைத்தாளில் இறைவன் வந்து எழுதுவான். அப்பா, 


சுவடி ஓதும் மைந்தன் :-  ( தியானத்தின் உண்மை நிலை என்பது — எந்த ஆசையும் இல்லாமல், வெறும் வெள்ளைத் தாளாக மனதை வைத்திருப்பது. அப்போது இறைவன் அந்த வெள்ளைத்தாளில் தன் எழுத்தை எழுதுவார். நாமோ, எதையும் எதிர்பார்க்காமல், கேட்காமல், வெறுமையாக இருக்க வேண்டும். இன்பம், துன்பம் இரண்டையும் சமமாகக் கையாள வேண்டும். தியானம் செய்பவர்கள் உண்மையில் எதையும் விரும்பாமல், வெறும் இருப்பில் இருக்கிறார்கள். ஆனால் பலர் தியானம் என்ற பெயரில் ஏதோ ஒரு ஆசையை அடைய வேண்டும் என்று நினைத்து அதற்காகவே முயல்கிறார்கள் — "அது வேணும், இது வேணும்" என்று. இது தியானத்தின் உண்மை நோக்கமல்ல.

🕊️ முக்கியக் கருத்து: தியானம் என்பது வெறுமையாக இருப்பது — இறைவனின் எழுத்துக்கு இடம் கொடுப்பது ) 


அடியவர் :- அது தியானத்தை எப்படி ப்ரோக்ரஸ் பண்றோம்னு எப்படி தெரியும்? முன்னாடி எப்படி போகணும்? அதுல எப்படி முன்னேறணும்னு அறிஞ்சுக்கிறது?


குருநாதர் :-  அப்பனே, நிச்சயம், பெண், அதாவது, ஆசைகள் அறிந்து கொண்டே இருக்கும். அப்பா, அப்பொழுதுதான் முன்னேறுவது போன்று. 



குருநாதர் :- அப்பனே, நிச்சயம். அப்பனே, பின் மூளைகளும் கூட எது என்று  தெரியும் அப்பனே. தியானம் செய்கின்ற பொழுது, அப்பனே, நிச்சயம், அனைத்தும் உணர்ந்து கொள்ள முடியும் அப்பனே. நிச்சயம், கிரகங்களை பற்றி கூட, நட்சத்திரங்களை பற்றி கூட, அவர் நிச்சயம், அனைத்தும் உணர்ந்து கொள்ள முடியும் அப்பா. ஆனால் அதற்கும் கூட சரியாக ஆள் இல்லையப்பா. 


குருநாதர் :-  அப்பனே, இப்பொழுது கேட்கிறீர்களே? பணம் கூட தானாக வரும். அப்பா, அந்த தியானத்தின் மூலம் பணம் கூட வர வைக்கலாம். 


அடியவர்:- சரிங்க, ஐயா. அந்த தியானத்துல உட்கார, அந்த ஒரு மைக்ரோ செகண்டை கூட மனசு நிலைப்படுத்த முடியாதப்போ, எப்படி நம்ம அடுத்த ஸ்டேஜ்க்கு போக முடியும்? 


குருநாதர் :- அப்பனே, நிச்சயம். அப்பனே, பின் ஆசிரியரின் கேள்வி இங்கு இருக்கின்றானே? அனைத்தும் சொல்லிக் கொடுக்கின்றானே? அந்த ஆசிரியரின் கேள்வி பதம் என்றால், 


( ஓரி அடியவர் சில விளக்கங்கள் அளித்தார் )


குருநாதர் :-  அப்பனே, நிச்சயம். அப்பனே, இது போலத்தான் முன் ஜென்மத்தில், அப்பனே, பின் அனைவரும் குழப்பிக் கொண்டிருந்தான் அப்பனே. இப்பொழுதும் அனைவரும் குழப்பிக் கொண்டுதான் இருக்கின்றான். ஏதோ யான் தீர்வு தந்து கொண்டிருக்கின்றேன். 


குருநாதர் :-  அப்பனே, பின் உன்னால் உன்னை சமாளிக்க முடியவில்லையப்பா. உன்னில் வீட்டில் எப்படித்தான் சுதாரித்துக் கொண்டிருக்கின்றார்கள்? 


குருநாதர் :-  அப்பனே, அறிந்து கூட, இதனால், அப்பனே, நிச்சயம், தெளிவு பெற என்ன செய்ய வேண்டும் என்று கூறு. 


அடியவர் :- ஏதோ உங்களுக்கு ஒரு காரணத்துக்காக தான் நிக்க வச்சுக்கிறாருங்க.  உங்களுடைய குலதெய்வத்தையும், உங்களுடைய குருநாதரை நம்புங்க. அவங்க உதவி செய்வாங்க. 


அடியவர் 2:- என்னுடைய குலதெய்வம் எதுன்னே தெரியாம, இங்க தடுமாறிட்டு இருக்கேன், ஐயா. 


குருநாதர் :- அப்பனே, தெரிந்தால் என்ன செய்யப் போகின்றாய்? 


அடியவர் 2:- எந்த ஒரு விஷயத்தையும் ஆரம்பிக்கிறதுக்கு, குலதெய்வத்தோட துணை தேவை. அருள், 


குருநாதர் :- அப்பனே, இவ்வளவு நாட்கள் இப்படித்தான் செய்து கொண்டிருந்தாயா? 


அடியவர் 2:- தெரியாமல் தான், ஐயா. நம்ம தடுமாறி, 


=============================================

# உங்கள் குலதெய்வ ரகசியங்கள் - கெட்டியாக பிடித்துக்கொள்க 

=============================================


=============================================

# புண்ணியம் செய்தால் தானாகவே குலதெய்வம் நிச்சயம் தேடி வருமப்பா

=============================================


குருநாதர் :- அப்பனே, தெரியாமலே இருக்கட்டும் என்பேன். அப்பனே, புண்ணியம் செய்தால் தானாகவே, அப்பனே, நிச்சயம் தேடி வருமப்பா. குலதெய்வம் கூட எதை செய்து, அப்பனே, அதனால், நிச்சயம், அப்பனே, தேடி உன் நிலத்தில் தான் இருக்கின்றது. கவலை விடு, 


=============================================

# சீடனானவன் , நிச்சயம், குருவானவனை, பின் பிடிக்கக்கூடாது

# குருவானவன் தான் சீடனை பிடிக்க வேண்டும்.

=============================================


குருநாதர் :- அப்பனே, நிச்சயம், அப்பனே, நல் மனதாக இருந்தாலே, அப்பனே, குலதெய்வமே, அப்பனே, பின் அவரிடத்திற்கு வந்துவிடும் அப்பா. 


குருநாதர் :- அப்பனே, நிச்சயம், சீடனானவன் , நிச்சயம், குருவானவனை, பின் பிடிக்கக்கூடாது என்பேன். அப்பனே, குருவானவன் தான் சீடனை பிடிக்க வேண்டும் என்பேன். அப்பனே, அப்படி தகுதிகள் நீங்கள் பெற்றிருக்க வேண்டும். ஏனென்றால், அப்பனே, இறைவன் பலமுள்ள அறிவாளியாகத்தான் உங்களை அனுப்புகின்றான் என்பேன். அப்பனே, இவ்வுலகத்திற்கு, 


அடியவர் :- ஐயனோட ஆசீர்வாதம் இல்லை. 


குருநாதர் :-  அப்பனே, ஆசீர்வாதம் இல்லாமல் தான், அப்பனே, இந்தனை  பின், அதாவது, பின், நான் சொல்லிக் கொண்டே இருக்கின்றேன். நீ, நிச்சயம், கேட்டுக்கொண்டே இருக்கின்றாயா? 



சுவடி ஓதும் மைந்தன் :-  ஆசீர்வாதம் இருக்குது. 


அடியவர் :- மிக்க நன்றி, ஐயா.


============================================

# சித்திரகுப்தர்  தினமும் எழுதும்  உங்கள் புண்ணிய கணக்கு ரகசியங்கள் 

============================================

 

குருநாதர் :-  அப்பனே, இதனால் யார் யாருக்கு எப்பொழுது இறைவன் தர வேண்டும் என்றெல்லாம் குறித்துக் கொண்டிருக்கின்றான் அப்பனே.  நிச்சயம், பின் , அப்பொழுது தருவான் என்பேன் அப்பனே. நிச்சயம், அப்பனே, அனைவருக்குமே, பின், அதாவது, சித்திரகுப்தன் எழுதி வைத்திருக்கின்றான் அப்பா. அனுதினமும், அவன் தான் பார்ப்பான் அப்பா. நிச்சயம், அப்பனே, அதில் தன் இவன் தன் என்ன செய்திருக்கின்றான் என்றெல்லாம். ஆனாலும், அப்பனே, அனுதினமும், நீங்கள் ஏதாவது புண்ணியம், பின், அதாவது, செய்திருக்கின்றாரா என்று பார்த்துக் கொண்டிருப்பான் என்பேன் அப்பனே. நீங்கள் செய்து கொண்டிருந்தால், அப்பனே, அவன் எழுதி வைப்பான் அப்பா.  இதனால், உங்கள் பரம்பரை, நிச்சயம், நீளும். அப்பா, 


============================================

# எமதர்மன் எப்போது வந்து  உங்களை தூக்கி விடுவார் ?

============================================


குருநாதர் :-  அப்பனே, அதில் கூட, எமதர்மன் ஒரு நாள் பார்ப்பான் அப்பா. நிச்சயம், பின், அட பாவி, இவன் (புண்ணியங்கள்) ஒன்றுமே செய்யவில்லை. இவனை தூக்கு, என்று தூக்கி விடுவான். 


============================================

# உங்களை சித்திரகுப்தார் அப்போது திட்டுவார் ?

============================================


குருநாதர் :-  அப்பனே, அதனால்தான் புண்ணியம் செய்யுங்கள் என்று. ஆனால், சித்திரகுப்தன் கூட, பின், நிச்சயம், மனிதனுக்கு அறிவே இல்லை. ஏதாவது, இவன் எமதர்ம ராஜாவிடம், நிச்சயம், பின், அதாவது, தப்பித்திருக்க ஏதாவது புண்ணியம் செய்கின்றானா என்று பார் என்று. 



சுவடி ஓதும் மைந்தன் :- (சித்திரகுப்தர்  கூட, எமதர்ம ராஜாவிடம், "இவன் ஏதாவது புண்ணியம் செய்திருக்கிறானா?" என்று கேட்கிறார். ஏதாவது செய்திருந்தால், தப்பிக்க வாய்ப்பு இருக்கிறது. இல்லையென்றால், திட்டுவாராம். )


=========================================

#  நீங்கள் செய்வதே உங்களுக்கு வருகின்றது

=========================================


குருநாதர் :- அறிந்து கூட, நிச்சயம், இதை வைத்துக் கொண்டு, நிச்சயம், பின், அறிந்து கூட, எவை என்று புரிய. தாயே, அனைத்தும் நீங்கள் செய்வதே உங்களுக்கு வருகின்றது. அவ்வளவுதான். 


சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப, நீங்க என்ன செய்றீங்களோ, அது அழகா உங்களுக்கு வரும், திரும்பி வரும். 


குருநாதர் :-  தாயே, பின், அதாவது, பிள்ளைகளை, பின், தாய் தந்தையர் , அதாவது, தாய் தந்தையர் பிள்ளை மதிக்கவில்லையா? நிச்சயம், பின், அவனுடைய பிள்ளைகள் பிறந்தாலும், அப்படித்தான் இருக்கும். 


சுவடி ஓதும் மைந்தன் :- புரியுதுங்களா? இப்படித்தான் இருக்குமாம்.


குருநாதர் :-  அறிந்து கூட, தாய், அவளை, தந்தை, அவனை, நிச்சயம், ஒரு பிள்ளை துன்பப்படுத்துகின்றது  என்றால், நிச்சயம், அவனதனக்கும் திருமணம் ஆகும். இறைவன், அதன் மூலமே, அவனுக்கு படிப்பை கொடுப்பான். அவ்வளவுதான். 



குருநாதர் :- அதேபோல், தாயே, நிச்சயம், ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும், சரி, திருமணம் எது என்று அறிய அறிய. அதனால், நிச்சயம், இப்படித்தான் எவை என்று ஒவ்வொன்றாக. 


குருநாதர் :-  அறிந்து கூட, பெண், அவள் தாயை மதிக்கவில்லையா? நிச்சயம், பெண் பிள்ளையாக பிறந்து, அவளை மதிக்காமல் போகும். 


குருநாதர் :-  அதனாலதான், தாயே, ஆசையே வேண்டாம் என்று. 


குருநாதர் :-  அப்பனே, எவை என்று கூட, நீ இவ்வாறு செய்கின்றாய் என்றால், அப்பனே, உன் பிள்ளையும் இவ்வாறுதான் செய்யும். 


அடியவர் : - ( அங்கு ஒரு விருப்பத்தை கூறினார் )


குருநாதர் :-  அப்பனே, இவையெல்லாம், அப்பனே, நீ கேட்கக்கூடாது. இதுவும் ஒரு ஆசைதான். இதெல்லாம் நீ கேட்கக்கூடாதுப்பா. 


குருநாதர் :-  அப்பனே, நிச்சயம், ஏன் எதற்கு திருமணங்கள் தோல்வியில் முடிந்துவிடுகின்றது? அப்பனே, இதுதான் காரணம். 


சுவடி ஓதும் மைந்தன் :- ( ஒருவர் தன் பெற்றோரை மதிக்கவில்லை என்றால், அவருடைய வாழ்க்கைத் துணையும் அவரை மதிக்க மாட்டாள். இது ஒரு பரிணாமச் சுழற்சி. )


அடியவர் :- ஆனா, ஐயா, இன்னைக்கு திருமணங்கள் ஒரு நிர்பந்தத்து மேல தான், சாமி, ஏற்படுத்திக்கிறாங்க. 


குருநாதர் :-  அப்பனே, அனைத்தும் உன் ஆசைக்காக செய்துவிட்டு, அப்பனே, எவை என்ற அறிய, அப்பனே, 


அடியவர் :- ஆனா, பெற்றவங்க உங்களுக்கு கடமை தீருதுன்னு, 


=================================================

# உங்கள் குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும் ?

=================================================


குருநாதர் :-  இவையெல்லாம் ஒரு கடமையா? அப்பா, அறிந்து கூட, எது என்றும் அறிய அறிய, நோய் இல்லாமல், நல் மனதோடு வளர்த்தால்தான் கடமை. 


குருநாதர் :- அப்பனே, அதாவது, இறைவன் செய்யாதது, நிச்சயம், நீ செய்யப் போகின்றாயா என்ன?


அடியவர் :- கண்டிப்பா இல்ல. 


========================

# திருமண ரகசியங்கள் 

========================


குருநாதர் :-  அப்பனே, இறைவன் நினைத்தால் தான் திருமணம் கூட. 


குருநாதர் :- அப்பனே, பிள்ளைகள் பெற்றவருக்கு திருமணம் கூட. அப்பனே, பின், இறைவன் தான் செய்து செய்து வைக்க முடியும் என்பேன் அப்பனே. 


குருநாதர் :-  அப்பனே, இப்பொழுது எத்தனையோ பெண் பெற்றோர்கள், இவன் சொன்னபோல், நிச்சயம், கடமை செய்துவிடுங்கள். கடமை செய்தீர்கள் என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். முடிகின்றதா? தேடிக்கொண்டிருக்கின்றான். 


குருநாதர் :- அப்பனே, இறைவனுக்கு தெரியும். அப்பா, அப்பனே, நிச்சயம், தாமதமானால், அப்பனே, ஏதோ ஒரு பிரச்சனை இருக்கின்றது என்று. அதனால்தான், இறைவனே, தடை போய்விட்டான் (என்று மனிதனின் புலம்பல்கள்). 


குருநாதர் :-  அப்பனே, இறைவன் செய்வதெல்லாம் உங்கள் நன்மைக்காகவே. ஆனால், நீங்கள் தான் புரிந்து கொள்ளவில்லை அப்பனே. உடனடியாக நடந்து விட வேண்டும் என்று எண்ணுகின்றீர்கள் என்பேன் அப்பனே. அப்பனே, நிச்சயம் அதாவது, பின், எங்களுக்கு நிச்சயம், இளமையானவன்  கூட முதுமையாக்க முடியும். முதிர்வன் கூட இளமையாக்கலாம். ஆனால், இன்றளவு எந்தனுக்கு வயதாகிவிட்டதே? வயதாகிவிட்டேன் என்று புலம்பிக் கொண்டிருக்கின்றார்கள். 


==============================================

# உங்கள் முன்னோர்களை சந்தோசப் படுத்துங்கள் - குடும்பம் செழிக்கும்.

==============================================


குருநாதர் :- அப்பனே, அனைவருக்குமே, நிச்சயம். அதனால்தான், நிச்சயம், சொல்லிக் கொண்டே இருக்கின்றேன். உன் முன்னோர்கள் எல்லாம், நிச்சயம், என்ன செய்தார்கள் என்று, அதை பயன்படுத்திக் கொண்டாலே, முன்னோர்கள் ஆன்மாக்கள் மகிழும். பின், அவ் மகிழும்போதே, உங்களுக்கும் கூட மகிழ்வடையும், உங்கள் குடும்பம் கூட செழிக்கும். 


==================================================

# பணத்தை விட இங்கு புண்ணியம்தான் மிக அவசியம் 

===================================================


குருநாதர் :- அப்பனே, இவ்வுலகத்தில், பின், நல்லது. பின், சொல்வதே, அப்பனே, சிரமம் தானப்பா. அப்பனே, அதனால்தான், உங்களுக்கு சொல்லிக் கொடுத்துவிட்டால், நீங்கள் உயர்ந்துவிட்டால், நீங்களும் மற்றவர்களுக்கு சொல்லலாம். அதனால், உங்களுக்கும் புண்ணியம் ஏற்படும். அதனால், உங்களிடம் புண்ணியத்தை சேகரித்து, பின், அதாவது, புண்ணியத்தை எப்படி சேகரித்து விட்டது என்பதை சொல்லிவிட்டால், அப்பனே, நிச்சயம், பணத்தை விட, புண்ணியம் இங்கு அவசியமாகின்றது. 

சுவடி ஓதும் மைந்தன் :- ( அகத்திய மாமுனிவர்  ஒரு ஆழமான உண்மையை வெளிப்படுத்துகிறார்: “பணம் நான் கொடுத்துடுவேன்” என்றாலும், அதற்கான அடிப்படை புண்ணியம் தேவை. நீங்கள் புண்ணியங்களைப் பற்றிய அறிவை பெறுகிறீர்கள் என்றால், மீதமுள்ள எல்லா வளங்களும் தானாகவே உங்கள் பக்கம் ஓடிவரும். பணத்தை விரும்பி அதைத் தேடி ஓடுவதற்குப் பதிலாக, புண்ணியத்திற்காக ஓடுங்கள் — அப்போது பணம் உங்கள் பின்னால் ஓடிவரும். )


குருநாதர் :- அப்பனே, பணம் ஒன்று, பின் கொடுத்துவிட்டால், அப்பனே, நிச்சயம், உன் உந்தனக்கு, அதாவது, உன்னையே உந்தனக்கு தெரியாதப்பா. 


சுவடி ஓதும் மைந்தன் :- ( பணத்தை விரும்பாதீர்கள், புண்ணியத்தை விரும்புங்கள் — பணம் தானாக வரும். )


குருநாதர் :-  அப்பனே, இங்கு முதலில் எதை தர வேண்டும்? அனைவரும் கூற வேண்டும். 


சுவடி ஓதும் மைந்தன் :- அப்பனா, எதை தர வேண்டும்? 


சத்சங்க அடியவர்கள் :- (ஒருமித்த குரலில் ) புண்ணியத்தை….


குருநாதர் :- அப்பனே, நிச்சயம். அப்பனே, பின், அதிகமாக சத்தம் கேட்கவே இல்லை என்பேன் அப்பனே. 


சத்சங்க அடியவர்கள் :- (ஒருமித்த குரலில் ) புண்ணியம், 


=====================================================

# பைத்தியக்கார மனிதன், பணம்தான் என்று முக்கியம் சொல்லுவான். 

=====================================================


குருநாதர் :- அப்பனே, அறிந்து கூட, எது என்று புரிய புரிய. அப்பனே, ஆனாலும், அப்பனே, பின், மனிதன், பைத்தியக்கார மனிதன், பணம்தான் என்று முக்கியம் சொல்லுவான். 


குருநாதர் :- அப்பனே, ஆனால், பாவத்தை சம்பாதித்துக் கொள்வான் என்பேன். அப்பனே, அவன் 


குருநாதர் :-  அப்பனே, மீண்டும் இறைவனிடத்தில் வந்தால், நிச்சயம், பின், இறைவன் ஒன்றுமே செய்ய மாட்டான். அப்பா, 


குருநாதர் :-  அப்பனே, அதனால், நிச்சயம், அனைவருமே என் பக்தர்கள் தானப்பா நீங்கள்  அப்பனே. இதனால், அப்பனே, நிச்சயம், வழி தெரியாமல், முன்னொரு காலத்தில் இருந்தபொழுது, என்னை தேடி வந்து, தேடி வந்து, வாக்குகளை கேட்டு கேட்டு. அப்பனே, அதனால்தான், அப்பனே, அதனால், எவை என்று கூட, மீண்டும் கஷ்டத்திலே. அதனால்தான், அப்பனே, இப்பிறப்பிலாவது, அனைத்தும் தெரிந்து கொண்டு வாழ்ந்தால், அனைத்தும் கிடைக்கும் என்பது, அப்பனே. அதனால், உங்களை எல்லாம் யான் சந்தித்தவன் தான் என்பேன்  அப்பனே. 


அடியவர் :- எல்லாருமே, சாமி, நாங்க பார்த்திருப்போம். ஆனா, (அகத்தியர்) இவர்தான் நமக்கு தெரியாது. 


குருநாதர் :-  அப்பனே, அறிந்து கூட, இப்பொழுது என்னை பார்த்திருக்கின்றாய்.  அப்பனே, அப்பனே, இப்பொழுது அதை சொல்



சுவடி ஓதும் மைந்தன் :- இப்ப, அகத்தியரை பாக்குறீங்களா? இப்ப பார்க்கும்போது என்ன தோணுதுன்னு சொல்ற சொல்றாரு. என்ன தோணுது? அவரை பார்க்கும்போது என்ன தோணுது? என்ன தோணுதுன்னு கேக்குறாரு. 


அடியவர் : ( அமைதி )


குருநாதர் :-  அப்பனே, இதே போலத்தான், இறைவன்கள் கூட, சித்தர்கள் கூட, பார்த்துவிட்டால், நிச்சயம், மௌனமாகி விடுவீர்கள் நீங்கள் என்பேன் அப்பனே. பின், அதிக அளவு பேசமாட்டீர்கள் என்பேன் அப்பனே. 


குருநாதர் :- அப்பனே, பின், பார்க்க முடியாதவன் தான். பின், சுலபமாக, நான் பார்த்துவிட்டேன் என்று சொல்லிக் கொண்டிருப்பான். 


குருநாதர் :- அப்பனே, நிச்சயம், ஏன் இவ்வளவு உங்களுக்கு சொல்லிக் கொண்டிருக்கின்றேன் என்றால், அப்பனே, நிச்சயம், கலியுகத்தில், அப்பனே, பின், பக்தி என்பது. அப்பனே, நிச்சயம், அப்பனே, பொய்யாகும் என்பேன் அப்பனே. அதனால்தான், சித்தர்கள் யாங்கள் விடவில்லையப்பா. 


குருநாதர் :-  அதனால், அப்பனே, ஒவ்வொருவரையும் கூட, அப்பனே, பின், உருவாக்கி, அப்பனே, நல்வழிப்படுத்துகின்றேன். 


சுவடி ஓதும் மைந்தன் :-  (நல்ல ஆளை தேர்ந்தெடுத்து, அதன்மூலம் நல்வழிப்படுத்துகின்றார்.)


குருநாதர் :- அப்பனே, நின்று கொண்டிருக்கின்றானே. இன்வந்தனக்கு  பேசக்கூடாது, தெரியாது என்பேன். அப்பனே, யான்தான் இவனுக்கு தைரியம் ஊட்டிக்கொண்டே இருக்கின்றேன். 



குருநாதர் :- அப்பனே, இப்படி சரணாகதி அடைந்து விட்டால், அப்பனே, யானே  வழிநடத்துவேன் என்பேன். அப்பனே, ஆனால் அதை, இதை என்று கேட்டுக்கொண்டிருந்தால் என்ன? 


குருநாதர் :-  அப்பனே, இன்றைக்கு பணம் கேட்பீர்கள், நாளைக்கு ஏதோ கேட்பீர்கள். 


குருநாதர் :-  அப்பனே, பக்குவம் உங்களுக்கு கொடுத்துவிட்டால், அப்பனே, எதுவும் கேட்க மாட்டீர்கள். 


சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப, ஒரு பக்குவத்தை கொடுத்துட்டோம்னா, எதுவுமே, எதுவுமே கேட்க மாட்டீர்கள். 


குருநாதர் :-  அப்பனே, நிச்சயம், நிச்சயம். அப்பனே, நடப்பதும் அவன் செயலே. அப்பனே, நடக்காததும் அவன் செயலே. 


சுவடி ஓதும் மைந்தன் :- நடக்குபதும் அவன் செயலே. நடக்காததும் அவன் செயலே. 


குருநாதர் :-  அப்படி இருந்தால், எப்படி? அப்பா, நீங்கள் கேட்கலாம். 


அடியவர் :- நீங்க தான் வேணும். 


குருநாதர் :- அப்பனே, நிச்சயம், அப்படி கேட்பதில்லையே அப்பனே.


=============================================

# குரு நாரதருக்கு கோபம் ஏன் அடியவர்களால் ?

=============================================


குருநாதர் :- என்னிடத்தில் வருபவர்கள் எல்லாம், அப்பனே, அவை வேண்டும், இவை வேண்டும் என்றுதான் கேட்கின்றார்கள் என்பேன் அப்பனே. அப்பனே, கோபம் தான் வருகின்றது. அப்பனே, பாசத்துடன் வந்தாலே போதுமானதப்பா. அனைத்தும் இத்தந்தை செய்வான். 

சுவடி ஓதும் மைந்தன் :- ( பாசத்துடன் வந்தால், அகத்தியர் செய்வர் அனைத்தும். — அதுவே போதும். எதுவும் கேட்க வேண்டாம்; அகத்தியர் பார்த்துக்கொள்வார்.) 

=============================================

# தெரிந்தவன் ஒன்றும் கேட்க மாட்டான்

=============================================


குருநாதர் :-  அப்பனே, தெரியாதவன் தான் அனைத்தும் கேட்டுக்கொண்டிருக்க வேண்டும். அப்பனே, தெரிந்தவன் ஒன்றும் கேட்க மாட்டான். அப்பா, அதனால்தான் உங்களுக்கு அனைத்தும் தெரிய வைக்கின்றேன், புரிய வைக்கின்றேன். 


குருநாதர் :- அப்பனே, இன்னும், அப்பனே, அறிந்து மறிந்தும் இவன் நின்று கொண்டிருக்கின்றானே. இன்னும் இவன் சேவைகளுக்கு யான் உதவிடுவேன். 


சுவடி ஓதும் மைந்தன் :-  நீங்க நிக்கிறீங்க பாருங்க. நீங்க என்ன சேவை, ஏதோ செய்றீங்கன்னா கூட, இன்னும் நான் உதவிடுவேன்றார். 


குருநாதர் :-  நிச்சயம், மக்களுக்காக எடுத்துரை அப்பனே. (மனிதன்) நல்லவன் ஆகட்டும். 


சுவடி ஓதும் மைந்தன் :-  சில விஷயங்கள் எல்லாம் நீ சொல்லுப்பா. மனிதன் நல்லவன் ஆகட்டும் பண்றார். 


குருநாதர் :-  அப்பனே, யான் உனக்கு உதவிடுவேன் அப்பனே.


குருநாதர் :-  அப்பனே, நிச்சயம். அப்பனே, அறிந்து கூட எவை என்று புரிய புரிய. அப்பனே, இதுபோல், நிச்சயம், பின் நல்லவர்கள் வாழ வைக்க வேண்டும். நல்லதை, பின் நினைத்து, பின் அறிந்து கூட, பின் எவை என்று சொல்ல வேண்டும் என்று இருந்தால், யான் வழிகாட்டுவேன். பின், அதன் மூலம் நீங்கள் புண்ணியத்தை பெற்றுக்கொள்ளலாம். 


அடியவர் :- அதுக்கு உண்டான தகுதி நமக்கு வேணுங்க, ஐயா. 


குருநாதர் :-  அப்பனே, நிச்சயம், அவ்வாறு நினைத்தாயே. அப்பனே, பின் எவை என்று யாங்கள் வந்துவிடுவோம். 


குருநாதர் :- அப்பனே, அவ் (நல்)  மனது (யாருக்கும் )  இருப்பதில்லையே ஏன் ?


(சில உரையாடல்கள்)


குருநாதர் :- தாயே , அறிந்து கூட, அதனால் இல்லத்தில் உன் வாயை அமைதியாக வைத்துக்கொள். இறைவன் அனைத்தையும் உன் பின் அடித்து நொறுக்கி திருந்த வைப்பான். 


சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப, வீட்ல இதே மாதிரி அமைதியா இருந்தீங்கன்னா, இறைவனே வந்து யார் மூலம் எல்லாம் அடித்து நொறுக்கி நன்மை செஞ்சிருவாருன்றார். 


அடியவர் :- சரி, சூப்பர். 


குருநாதர் :- தாயே, வளவள என்று பேசிக் கொண்டிருந்தால், ஒன்றும் செய்ய முடியாது. 


குருநாதர் :-  அதனால் அடித்து நொறுக்கித்தான் சில மனிதர்கள் திருத்த வேண்டும்.  தாயே, பின் அதாவது மனிதனுக்கு வாழ தெரியவில்லை. தாயே, அவ்வளவுதான்.


குருநாதர் :- தாயே, ஒரு சக்தி இருக்கின்றது. அவ்  சக்தி யானை எழுப்பிடுவேன். அனைத்தும் நீங்கள் தெரிந்து கொண்டால், 


சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப உங்களுக்கு எல்லாருக்குள்ள ஒரு சக்தி இருக்குது. அதை வந்து அவரே இயக்கி விட்டுருவாராம். 


அடியவர் :- என்ன தெரிஞ்சுக்கணும்? அதை 


குருநாதர் :- தாயே, நிச்சயம், பின் அதாவது இவ்வளவு நேரம் என்ன சொல்லிக் கொண்டிருந்தேன்? 


=======================================

# அனைத்தும் இறைவனாலே - இறைவா நீயே அனைத்தும்.

=======================================


சுவடி ஓதும் மைந்தன் :-  இவ்வளவு நேரம் என்னமா சொல்லிக்கிறேன்? 


பின்னால் இருந்து ஒரு அடியவர் :-  பக்குவப்படுத்த, பக்குவப்படுத்த. 


குருநாதர் :- அறிந்து கூட, அது கூட பின்னால் இருந்து தான் வருகின்றது. 


சுவடி ஓதும் மைந்தன் :- அது கூட பின்னாடி,  ப்ராம்ட் பண்ணிட்டு இருக்காரு. 


குருநாதர் :- தாயே, இதிலிருந்து என்ன புரிகின்றது? 


சுவடி ஓதும் மைந்தன் :-  உங்களை இயக்குவதே இறைவன் தான் என்று சொல்றார். உன்னை இயக்குவது யாரு? இறைவன். இறைவன், பின்னாடி இருந்து இறைவன் இருக்கிறார். இறைவன் இயக்குகிறார். அவ்வளவுதான்.


குருநாதர் :- நிச்சயம், அதை விட்டுவிட்டு, நிச்சயம், அவை வேண்டும், இவை வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தால், தாயே, நன்மையும் தீமையும், நிச்சயம், பின் எவை என்று கூற? அவரவர் செய்த, நிச்சயம், பின் வினைகளாலே .


குருநாதர் :-  அதனால்தான், நிச்சயம், பின் உங்களுக்கு தெரியாதது தான் இப்படி நடந்து கொண்டிருக்கின்றது. தெரிய வைக்கவே, யாங்கள் சித்தர்கள். 


குருநாதர் :- அனைத்தும் தெரிந்துவிட்டால், நீங்களே வாக்குகளாகவும் சொல்லலாம். 


==================================================

# உங்களை கண்காணிக்கும் CCTV கேமரா - சூரியன் , சந்திரன் 

==================================================


குருநாதர் :- அறிந்தும் எதை என்றும் புரிந்தும் கூட, எப்பொழுது, நிச்சயம், எதை என்றும் அறிய. நிச்சயம், பின் நன்மை, தீமை, அனைத்தும் இறைவனால் வழங்கப்பட்டவை. அறிந்தும், அறிந்தும் கூட, அனைவரிடத்திலும் இறைவன், நிச்சயம், பக்குவங்களாக பின்னே இருக்கின்றான். இவன் என்ன செய்கின்றான் என்று பார்த்துக் கொண்டே இருக்கின்றான். தாயே, அதாவது ஏற்கனவே, ஏற்கனவே சொல்லிவிட்டேன். சூரியனும், சந்திரனும் என்னவென்றால், நிச்சயம், தாயே, சொல்லுங்கள், அனைவருமே, 


சுவடி ஓதும் மைந்தன் , அடியவர் உரையாடல் சுருக்கம்  :- ( சூரியனும் சந்திரனும் நம்மை எப்போதும் கண்காணிக்கின்றனர் — நம்முடைய செயல்கள் அனைத்தும் அவர்கள் முன்னிலையில் ஒரு சிசிடிவி கேமரா போல பதிவு செய்யப்படுகின்றன. நம்முடைய ஒவ்வொரு செயலும், ஒவ்வொரு எண்ணமும், பிக் பாஸ் போல கண்காணிக்கப்படும் ஒரு பரபரப்பான நிகழ்வாகவே இருக்கிறது. அதனால், நாம் செய்வதெல்லாம் பதிவாகி, பதிலளிக்க வேண்டிய ஒரு கணக்காக மாறுகிறது. )


குருநாதர் :- தாயே, நிச்சயம், அது நிச்சயம் நிறைந்துவிட்டால், ராகுவானவனும், கேதுவானவனும் எடுத்துக்கொள்வான். 


சுவடி ஓதும் மைந்தன்:- அப்ப அந்த சூரியனோட சந்திரனோட மெமரி அதிகமாச்சுன்னா என்ன பண்ணுவாங்க? ராகுவும் கேதுவும் வந்து இழுத்துப்பாங்க. 


==================================================

# CCTV கேமரா - சூரியன் , சந்திரன். தண்டனை - ராகு , கேது 

==================================================


குருநாதர் :-  பின்பு ராகுவும் கேதுவும் அதை பார்ப்பார்கள். அதற்கு படி தண்டனை கொடுப்பார்கள் உங்களுக்கு. அப்பொழுது ராகுவானவனும் , கேதுவானவனும், நன்மையானவனா?   தீமையானவனா?


அடியவர் : - நன்மையானவங்க.


சுவடி ஓதும் மைந்தன்:-  இப்ப என்ன பண்ணுவாங்களாம்? அவங்க அதை கேமரா ஃபுல் ஆயிடுச்சுன்னா என்ன பண்ணுவாங்களாம்? போட்டு, இவங்க (ராகுவானவனும் , கேதுவானவனும், ) ரெக்கார்டிங் பார்ப்பாங்க. யாரு ப்ளே பண்ணி விட்டுருவாங்க. ராகு கேது வந்து ப்ளே பண்ணுவாங்க. ஓ, ரைட்டா! இவன் இப்படி, ஓ, இப்படி எல்லாம் செஞ்சுக்கினா, அடிடா! இவனை இங்க, அடிடா! இங்க, அடிடா! 


அடியவர் : - போடு, ப்ளே பண்ணு. 


குருநாதர் :-  அதனால்தான் தாயே, ராகு கேதுக்கள், நிச்சயம், தெரியாத கிரகங்களாகவே இருக்கின்றது. 


குருநாதர் :- நிச்சயம், அதனைப் பற்றியும் யான் சொல்வேன். உலகத்திற்கே தெரியாது, அனைத்தும் யான் சொல்வேன். 


குருநாதர் :- தாயே. அதனால்தான், நிச்சயம், பின் எவை என்று அறிய, அறிய, பின் அதாவது ஒரு பழமொழி இருக்கின்றது, அல்லவா? பின் தூண்டிலில் இருப்பான், சொல், தாயே, 


அடியவர் : - (இறைவன்) தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான்.


குருநாதர் :- அறிந்து, அறிந்து கூட, அதனால், நிச்சயம், கிரகங்கள் சாதாரணம் இல்லை. 


===============================================

# மனிதன் தத்துவம் - மனிதனுக்கே தெரியவில்லை 

===============================================


குருநாதர் :- அறிந்தும் எவை என்று புரிந்து கூட, இன்னும் மானிடனின் தத்துவம், மானிடனுக்கே தெரியவில்லை. 


குருநாதர் :- எப்படி செயல்படுகின்றாய் என்று, நிச்சயம், விளக்கத்துடன் யான் சொல்வேன், தாயே. அனைவருக்கும் 


குருநாதர் :- அறிந்தும், புரிந்து கூட, வாழ வேண்டும், தாயே. 


குருநாதர் :- அப்படி வாழவில்லை என்றால், தோல்விதான். 


சுவடி ஓதும் மைந்தன்:- ஒன்னும் பண்ண முடியாது என்றார். 


குருநாதர் :- இதனால், தாயே, நிச்சயம், பின் துன்பம் வருவதும், இன்பம் வருவதும், நிச்சயம், யாரிடத்தில்? இப்பொழுது கூறு, 


அடியவர் :-  நம்மகிட்ட தான், நம்ம கையில தான். 


குருநாதர் :- பின் உன்னிடத்தில் குறைகள் வைத்துக்கொண்டு, இறைவனை வணங்கினால், இறைவன் என்ன செய்வான்? பாவம், இறைவன் 


குருநாதர் :- அறிந்தும் எது என்று புரிய, புரிய. இதனால், தாயே, தெரிந்து கொண்டு வாழ வேண்டும். நிச்சயம், தெரியாமல் வாழ்ந்தால், நிச்சயம், இறைவனை குறை கூறிக்கொண்டே இருப்பார்கள். 


சுவடி ஓதும் மைந்தன்:- அப்ப, தெரிஞ்சு வாழ வேணும்.


குருநாதர் :- இறைவன் தெரியாமல் வாழ்ந்தால், நிச்சயம், பின் இறைவனை கெட்டியாக பிடித்துக் கொள்வார்கள். ஏன் பிடித்துக் கொண்டிருக்கின்றார்கள்? கூறு, 


சுவடி ஓதும் மைந்தன்:- தெரியாதவர்கள் இறைவனை கெட்டியா பிடித்திருப்பார்கள்.


குருநாதர் :-  ஏன்? அவன் ஒரு சோம்பேரிதான் என்று யான் சொல்வேன். 


சுவடி ஓதும் மைந்தன்:- ( தன்னம்பிக்கை இல்லாதவன் தான் என்ன பண்ணுவானாம்? இறைவனை வந்து கெட்டியா புடிச்சு,  எப்பா, என்ன கடவுள் தான் காப்பாத்துவார். )


குருநாதர் :- ஆனாலும், நிச்சயம், பின் அனைத்தும் அதாவது அறிந்து கூட, இறைவன் அனைத்துமே உங்களுக்கு கொடுத்திருக்கின்றான். அது சரியாகவே, நிச்சயம், அறிந்து கூட புரிந்து கொண்டால், இறைவனை கூட நேரடியாக தரிசிக்கலாம். 


குருநாதர் :-  இறைவன், பின் தரிசனம் கொடுப்பதற்கு தயார் ஆங்கள், ஆனால் நீங்கள் தயாரில்லை. 


குருநாதர் :-  அறிந்து கூட ஆசைகளை வைத்துக்கொண்டு, எப்படி அப்பா? 


சுவடி ஓதும் மைந்தன்:-  அந்த ஆசைகள் தான் நம்மள தடுக்குது, தடுக்குது, 


குருநாதர் :- தூண் போல் தடுப்பது. 


=============================================

# வெள்ளைத்தாள் காகிதம் போல் இருந்தால் இறைவன் அனைத்தும் கொடுப்பார் 

=============================================


குருநாதர் :- பின் ஆசை இல்லாமல் எப்படி வாழ முடியுமா என்று கேட்கிறீர்கள்?  அப்பனே, இதற்கும் பதில் எடுத்துவிட்டேன். 


குருநாதர் :- அப்பனே, வெள்ளை தாள்  போல் இருந்து, இருந்துவிட்டால், நிச்சயம், இறைவன் அனைத்தும் கொடுப்பான். 


சுவடி ஓதும் மைந்தன்:-   ஆசையே இல்லாம இருக்கணும். வெள்ளைத்தாள் சொன்னாருங்களா? அப்படி இருந்துட்டா, இறைவன் வந்து எழுதுவார், எல்லாம் தருவார். 



(ஏன் உங்களுக்கு கஷ்டங்கள் வருகின்றது  என்று அடுத்த பதிவில் பார்ப்போம்…..அன்புடன் அகத்திய மாமுனிவர் பெங்களூர்  சத்சங்கம் - தொடரும் …. )


ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!

சர்வம் சிவார்ப்பணம்!!!!!


No comments:

Post a Comment