மதுரை அகத்திய மஹரிஷி ஆலயம் முகவரி

திருவாசகம் - உரை

அகத்திய பிரம்ம ரிஷி அருளிய , முதல் தர புண்ணியம் உங்களுக்கு பெற்றுத்தர உதவும் நாடி வாக்குகள்.

Wednesday, October 18, 2023

சித்தர்கள் ஆட்சி - 200 : அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - யாரிடத்தில் இறைவன் பிச்சை கேட்பார்?


உலகின் ஆதி குரு , மாமுனிவர் , குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு:- 



ஆனாலும் நீங்கள் கஷ்டம் என்று வந்து விட்டீர்கள் அப்பனே. ஆனாலும் உங்கள் கீழேஎத்தனைபேர்கள் கஷ்டப்பட்டுக்கொண்டு இருக்கின்றார்கள் என்பதை தெரியுமா அப்பனே? ஆனால்இப்பொழுது தெரிந்து கொண்டீர்களா நீங்கள் சுய நலவாதிகள் என்று கூட. அப்பனேஇச்சுயநலவாதிதான் வேண்டாம்ப்பா. எந்தனுக்கு அவை வேண்டும், இவை வேண்டும் அப்பனேஉந்தனுக்கு கீழே உள்ளவர்களை யோசி. அவர்களுக்கு ஏதாவது உதவி செய். அப்பனே தானாகவேநீ முன் வந்து விடுவாய் அப்பனே. இதனால் தனக்காக வேண்டும் இன்னும் அனைத்தும்சேர்த்துக்கொள்ள வேண்டும். இன்னும் பிள்ளைகளுக்கு வேலை வேண்டும். இன்னும் படிப்புக்கள்வேண்டும். இன்னும் எதை எதையோ வேண்டும் என்று நீ கேட்டுக்கொண்டிருந்தால் கூட இறைவன்தர மாட்டான் அப்பா. மற்றவர்களைப்பற்றி எண்ணிப்பார் அப்பனே. மற்றவர்களை எண்ணி எண்ணிதான் கெட்டுபோனாலும் பரவாஇல்லை என்று யார் ஒருவன் நினைக்கின்றானோ அவனிடத்தில்  இறைவன் பிச்சை ஏந்துவான் அப்பா. பிச்சை ஏந்துவான் அப்பனே. என் பக்தர்களுக்கு நிச்சயம் இதுதெரியவேண்டும் அப்பனே. 


(வணக்கம் அகத்திய பிரம்ம ரிஷி அடியவர்களை. மேலே சொன்ன இந்ந வாக்கின் படிஉலகைக்காக்கும் இறைவன் பகவான் மகாவிஷ்ணுவான நாராயணரே மதுரையில் தொழுநோயால்வாடும் எழை எளியோர்களுக்கு சேவை செய்யும் அகத்திய பிரம்ம ரிஷி அடியவர் ஒருவரிடம் மதுரைபசுமலை அகத்திய பிரம்ம ரிஷி ஆலயத்தில் கை ஏந்தி யாசகம் கேட்டு உணவு உண்டார். அந்தமகத்தான நிகழ்வின் பதிவு கீழே உங்களுக்காக


https://siththanarul.blogspot.com/2022/02/1081.html?m=1


இதனால் ஓடி ஓடிச்சென்று மக்களுக்கு கட்டாயம் உதவுங்கள். இறைவன் உங்களை நோக்கிவருவார். தான் எப்படிப்போனாலும் கவலை இல்லை, பிறர் வாழ வேண்டும் என்ற உங்கள் தன் சுயநலம் அற்ற மனம் இறைவனை உங்களிடம் வர வைக்கும். குரு வாக்கை ஏற்று பிறர நலம் காண்பதேஉங்கள் அனுதினமும் பூசை ஆகட்டும்) 



ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய பிரம்ம ரிஷி திருவடிகளில் சமர்ப்பணம்!!!

No comments:

Post a Comment