“இறைவா !!!!! நீயே அனைத்தும்” இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்.

"இறைவா !!!!! நீயே அனைத்தும்!!!!"
"இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்"

உலகின் ஆதி குரு, மாமுனிவர், குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளிய தினசரி அனைவரும் அதிகாலையில் எடுக்க வேண்டிய உறுதிமொழி. :-


1.தர்மம் செய்வேன்
2.அனைத்திடத்திலும் பின் அன்பாக அதாவது அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன்.
3.போட்டி, பொறாமைகள் நீக்குவேன்
4.அனைத்தும் எந்தனுக்கே சொந்தம் என்று பின் உயிர்ப் பலியும் இடமாட்டேன்
5.பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன்
6.அப்படிக் கொன்றாலும், நிச்சயமாய் அதை யான் தடுப்பேன்
7.அவை மட்டும் இல்லாமல், தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும்.
8.பிறருக்கு நன்மை செய்ய வேண்டும்
9.பிறருக்காக உழைக்க வேண்டும்
10.பிற ஜீவராசிகளும் ( உயிரினங்களும் ) பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில்அனைவரும் நினைக்க வேண்டும்.
11.அப்படி நினைத்தால் அகத்தியன் வந்து அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பான் என்று சொல்மகனே

( அடியவர்களே. இந்த மகிமை புகழ் அகத்திய மாமுனிவர் அருளிய உறுதிமொழி வாக்கினை சிரம்மேல் ஒவ்வொரு நொடியும் ஏந்தி, பிரம்மாவின் முன்பு தலை நிமிர்ந்து நமக்காக விதியை மாற்றஉத்தரவிடும் வண்ணம் அனைவருக்கும் உலகில் உள்ள 700 கோடி மக்களுக்குச்சென்று அடையும்வண்ணம் எடுத்துச் சொல்லுங்கள். )

மற்றவர்களைப்பற்றி எண்ணிப்பார் அப்பனே. மற்றவர்களை எண்ணி எண்ணி, தான் கெட்டுப்போனாலும் பரவாயில்லை என்று யார் ஒருவன் நினைக்கின்றானோ அவனிடத்தில் இறைவன் பிச்சை ஏந்துவான் அப்பா. பிச்சை ஏந்துவான் அப்பனே. என் பக்தர்களுக்கு இது தெரிய நிச்சயம் வேண்டும் அப்பனே.


அகத்திய பிரம்ம ரிஷி உரைத்த முதல் தரப் புண்ணியம் பெறும் ஒரே வழி:- (1) அன்னதானம் + (2) திருவாசகம் சிவபுராணம் + (3) மக்கள் வாழ , நல் வழிகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுதல். இப்படிச் செய்தால் மட்டுமே , முதல்தரப் புண்ணியம் உண்டாகும் என்று குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி உரைத்துள்ளார்கள். இதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள் என்றும் அனைவருக்கும் கூறி உள்ளார்கள். இதுபோல் அனைவரும் செய்து முதல் தரப் புண்ணியம் பெற்றுக் கொள்ளுங்கள். இறை அருளுடன் வளமாக வாழுங்கள். வாழ்க வளமுடன்!!!!!!!!!

siththarkalatchi - Moving text


அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு :- “அப்பனே, தானங்கள் செய்க, அப்பனே, உன்னால் இயன்றவரை தானங்கள் செய்க. அனுதினமும், என் பக்தர்கள், ஒரு உயிருக்காவது உணவளியுங்கள். அது போதும். அப்பனே, அதுவே கோடி புண்ணியமாகும்.”


Wednesday, October 18, 2023

சித்தர்கள் ஆட்சி - 200 : அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - யாரிடத்தில் இறைவன் பிச்சை கேட்பார்?


உலகின் ஆதி குரு , மாமுனிவர் , குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு:- 



ஆனாலும் நீங்கள் கஷ்டம் என்று வந்து விட்டீர்கள் அப்பனே. ஆனாலும் உங்கள் கீழேஎத்தனைபேர்கள் கஷ்டப்பட்டுக்கொண்டு இருக்கின்றார்கள் என்பதை தெரியுமா அப்பனே? ஆனால்இப்பொழுது தெரிந்து கொண்டீர்களா நீங்கள் சுய நலவாதிகள் என்று கூட. அப்பனேஇச்சுயநலவாதிதான் வேண்டாம்ப்பா. எந்தனுக்கு அவை வேண்டும், இவை வேண்டும் அப்பனேஉந்தனுக்கு கீழே உள்ளவர்களை யோசி. அவர்களுக்கு ஏதாவது உதவி செய். அப்பனே தானாகவேநீ முன் வந்து விடுவாய் அப்பனே. இதனால் தனக்காக வேண்டும் இன்னும் அனைத்தும்சேர்த்துக்கொள்ள வேண்டும். இன்னும் பிள்ளைகளுக்கு வேலை வேண்டும். இன்னும் படிப்புக்கள்வேண்டும். இன்னும் எதை எதையோ வேண்டும் என்று நீ கேட்டுக்கொண்டிருந்தால் கூட இறைவன்தர மாட்டான் அப்பா. மற்றவர்களைப்பற்றி எண்ணிப்பார் அப்பனே. மற்றவர்களை எண்ணி எண்ணிதான் கெட்டுபோனாலும் பரவாஇல்லை என்று யார் ஒருவன் நினைக்கின்றானோ அவனிடத்தில்  இறைவன் பிச்சை ஏந்துவான் அப்பா. பிச்சை ஏந்துவான் அப்பனே. என் பக்தர்களுக்கு நிச்சயம் இதுதெரியவேண்டும் அப்பனே. 


(வணக்கம் அகத்திய பிரம்ம ரிஷி அடியவர்களை. மேலே சொன்ன இந்ந வாக்கின் படிஉலகைக்காக்கும் இறைவன் பகவான் மகாவிஷ்ணுவான நாராயணரே மதுரையில் தொழுநோயால்வாடும் எழை எளியோர்களுக்கு சேவை செய்யும் அகத்திய பிரம்ம ரிஷி அடியவர் ஒருவரிடம் மதுரைபசுமலை அகத்திய பிரம்ம ரிஷி ஆலயத்தில் கை ஏந்தி யாசகம் கேட்டு உணவு உண்டார். அந்தமகத்தான நிகழ்வின் பதிவு கீழே உங்களுக்காக


https://siththanarul.blogspot.com/2022/02/1081.html?m=1


இதனால் ஓடி ஓடிச்சென்று மக்களுக்கு கட்டாயம் உதவுங்கள். இறைவன் உங்களை நோக்கிவருவார். தான் எப்படிப்போனாலும் கவலை இல்லை, பிறர் வாழ வேண்டும் என்ற உங்கள் தன் சுயநலம் அற்ற மனம் இறைவனை உங்களிடம் வர வைக்கும். குரு வாக்கை ஏற்று பிறர நலம் காண்பதேஉங்கள் அனுதினமும் பூசை ஆகட்டும்) 



ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய பிரம்ம ரிஷி திருவடிகளில் சமர்ப்பணம்!!!

No comments:

Post a Comment