அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு - அடியவர் ஒருவர் இல்லத்தில் உரைத்த வாக்கு - 04.09.2023 ( பகுதி 2)
இந்த வாக்கின் முதல் பகுதி கீழே உள்ள பதிவில் படிக்கவும்
https://siththarkalatchi.blogspot.com/2023/10/191-4-9-2023-1.html?m=0
(பகுதி 2 - வாக்கு ஆரம்பம் )
ஆதி சிவசங்கரியின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன்.
ஒன்றும் முடியாதப்பா. மனிதன் அதாவது
யாங்கள் சொல்லிக்கொடுக்கின்றோம் அப்பனே.
அப்பனே முதலில்
ஆனாலும் இன்றைய நிலையில் அப்பனே அனைத்தும் பொய் ஆகி விட்டதப்பா. யான் எழுதி வைத்த நூல்கள் எல்லாம் மாற்றி விட்டார்கள் அப்பா. அதாவது சித்தர்கள் எழுதி வைத்த நூல்கள் எல்லாம் மாற்றி விட்டார்கள் அப்பா.
ஏன் மாற்றிவிட்டார்கள் அப்பனே?.
மனிதன் பின் சரியாக வாழக்கூடாது என்பது எல்லாம். ஆனாலும் யாங்கள் பல பல வழிகளிலும் கூட சுவடிகள் எழுதி வைத்து விட்டோம் அப்பனே.
ஆனாலும் அப்பனே அவை எல்லாம் எடுத்துவிட்டு மனிதன் இப்போது கண்டுபிடித்துக்கொண்டிருக்கின்றான். நிச்சயம் முடியாதப்பா. தோல்வி அடையச்செய்து விடுவோம்.
கஷ்டங்கள்தான் கொடுத்துக்கொண்டு இருப்போம் அப்பனே. ஆனால்
அதனால் புரிந்து கொள்ளுங்கள். புரிந்து கொண்டு வாழுங்கள். அப்படி வாழ்ந்தாலே போதுமானதப்மா. எவையும் தேவை இல்லையப்பா.
திருத்தலம் முதலில் உன் மனதில் சரியாகவே சமநிலைப்படுத்தி
( உங்கள் மனதிலேயே நீங்கள் விரும்பும் வண்ணம் இறைவனுக்கு திருத்தலம் அமைக்கும் மகா சூட்சும அருள் வாக்கு. இந்த பகுதியை மூன்று முறை படிக்கவும் )
இதனால்தான் எதை என்று அறியாமல், புரியாமல் மனிதன் இப்பொழுது கூட
ஆனாலும் எப்படி வாழவேண்டும் என்பதை எல்லாம் நிச்சயம் தெரிந்து கொள்ளாமல் , எப்படி வணங்கி வந்தால் இறைவன் காட்சிகள் அளிப்பான் என்பதை எல்லாம் தெரியாமல் வணங்கி வந்து கொண்டிருக்கின்றீர்கள்.
அதனால்தான் அவ்மூட நம்பிக்கை எல்லாம் ஒழித்திட வேண்டும் என்பதற்காகத்தான் யாங்கள் பாடுபட்டுக்கொண்டிருக்கின்றோம்.
ஆனாலும் யான் ( ஏதும் உங்களுக்கு உரைக்காமல் ) சென்றுவிடலாம். எப்படியாவது செல்லுங்கள் என்று. என்னையே நம்பிக்கொண்டிருக்கின்றீர்கள் நீங்கள். அதனால் சில பக்குவங்கள்
ஆனாலும் என் பெயரைச்சொல்லியும் கூட அநியாயங்கள், அக்கிரமங்கள் எல்லாம் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. ஆனாலும் சிறிது நேரம்தான் யான் பொறுத்திருப்பேன். ஆனாலும் பின்பு அடிகள் விழுந்தால் தாங்கவும் மாட்டீர்கள் என்பேன். ஆனாலும் அதை அறிந்தும் கூட தவறுகள் செய்கின்றார்கள். இதுதானப்பா பெரிய இழப்பு என்பேன் அப்பனே.
இதனால் இறைவன் மிகப்பெரியவன் அப்பனே.
அதனால் (இறைவனை) நெருங்குவது சாதாரணமில்லை என்பேன் அப்பனே.
அப்படி நெருங்க நெருங்க, மீண்டும் சொல்கின்றேன் அப்பனே. ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள். துன்பங்கள் வரும் என்பேன்.
பின் நெருங்க நெருங்க நிச்சயம் அத்துன்பங்கள் பொறுத்துக்கொண்டிருந்தால், இறைவனை நெருங்கிவிட்டாலே இறைவன் பார்த்துக்கொள்வான் உங்கள் வாழ்க்கையை. செப்பிவிட்டேன் அப்பனே.
ஆனாலும் அப்பனே பாதியிலேயே திரும்பி வந்து விடுகின்றீர்கள். ஒன்றும் நடக்கவில்லை என்று. இங்குதான் அப்பா கஷ்டங்கள் மீண்டும், மீண்டும்.
ஆனால் தெரியாமலேயே
நீங்கள் எதையுமே கேட்கத்தேவை இல்லை.
மீண்டும் என்னிடத்தில் கேட்பது. இதைத்தா , அதைத்தா என்றெல்லாம். ஆனாலும் அப்படி கேள்விகள் கேட்பதும், அப்பனே (பதில்) சொல்வதும் தவறுகள்.
உந்தனுக்கு எந்நேரத்தில் எதைக்கொடுக்க வேண்டும். ஏற்கனவே அப்பனே இறைவன் அழகாகவே குறித்து வைத்திருக்கின்றான் என்பேன். இதனால் அப்பொழுது அனைத்தும் நடக்குமப்பா. ஆகையால் அதுநாள் வரையில் பொறுத்திருக்க வேண்டும் அப்பனே.
ஆனால் அதன் முன்னே முந்திச்சென்றால்தான் கஷ்டங்களப்பா.
ஆனாலும் எங்கள் வழியில் வந்துவிட்டால் அது எப்பொழுது நடக்கும் என்பவை எல்லாம் யாங்கள் நிச்சயம் தெளிவு படுத்துவோம். சொல்லிவிட்டோம் அப்பனே.
நலன்களாக எதை என்று அறிய அறிய மறைமுகப் பொருள் யார்? இறைவனே என்பேன் அப்பனே.
ஆனால் இறைவன் இருப்பதை மறந்து விட்டு மனிதன் வழியில் சென்றடைந்தால் அப்பனே ஒருநாள் நிச்சயம் பள்ளத்தில் விழவேண்டும் சொல்லிவிட்டேன்.
ஆனால் இறைவன் மறைமுகமாக இருக்கின்றான். அவனை நம்பினால், பள்ளத்தில் விழுந்தாலும் அப்பனே எழுந்து விடுவீர்கள்.
ஆனால் மனிதனை நம்பினால் நிச்சயம் பள்ளமப்பா. யாரும் கடைசியில் காப்பாற்றக்கூட ஆள் இல்லாமல் போகும். ஆனால் மீண்டும் மனிதனிடத்தில் சென்றால் நீங்கள்
புரிந்து கொள்ளுங்கள் அப்பனே.
ஆனாலும் அப்பனே இறைவன் யார் மனதில் தங்கி இருக்கின்றான் என்றால் காசுகளுக்காக ஆசைப்படக்கூடாது என்பேன் அப்பனே. ஆனால் காசுகளுக்காக ஆசைப்பட்டால் மனதில் முழுவதும் அழுக்குகளாக இருக்கும்.
அப்பனே யார் ஒருவன் காசுகளுக்காக ஆசைப்படாமல் வாழுகின்றானோ அவன் மனதில் இறைவன் தங்கி இருப்பான் அவ்வளவுதான் என்பேன் அப்பனே.
ஏன்? எதற்காக?.
அப்பனே அதனால் இன்னும் இன்னும் ஏழ்மையில் கூட மனிதர்கள் வாழத்தெரியாமல் கூட வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள் என்பேன் அப்பனே.
அதனால்தான் முதலில் என் பக்தர்களைக்கூட எப்படி
அனைத்தும் தருவேன்.
அதனால் அப்பனே ஒவ்வொருவருக்கும் ஏதாவது ரூபத்தில் நல்லது செய்து கொண்டே இருங்கள் அப்பனே.
அவ்நல்லவை நிச்சயம்
இவ்வுலகத்தில் யாரும் காக்க மாட்டார்கள் சொல்லிவிட்டேன் அப்பனே.
அப்பனே உயிர் பிரியும் நேரத்தில் உணர்க. அப்பனே இறைவன்தான் வருவான் அப்பா. உந்தனுக்கு அதைச்செய்
அதனால் தெரிந்து கொள்ளுங்கள். இறைவனே மெய் என்று இறைவனை நாடி
இதை நீங்கள்
அய்யய்யோ இப்படி எல்லாம் செய்து விட்டேனே. இப்படி எல்லாம் தெரியாமல் வாழந்து விட்டேனே என்ன லாபம் என்று எங்களிடத்தில் வரும்ப்பா. காப்பாற்றுங்கள். காப்பாற்றுங்கள் என்றெல்லாம். அப்பனே யாங்கள் எப்படியப்பா காப்பாற்றுவது? அப்பனே நீங்களே தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே.
(மதுரையில் அகத்திய பிரம்ம ரிஷி அடியவர் இல்லத்தில் உரைத்த இந்த வாக்கு பகுதி -3 அதனை பின் வரும் பதிவில் படிக்கவும்)
https://siththarkalatchi.blogspot.com/2023/10/196-4-9-2023-3.html?m=0
ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய பிரம்ம ரிஷி திருவடிகளில் சமர்ப்பணம்!!!
No comments:
Post a Comment