“இறைவா !!!!! நீயே அனைத்தும்” இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்.

"இறைவா !!!!! நீயே அனைத்தும்!!!!"
"இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்"

உலகின் ஆதி குரு, மாமுனிவர், குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளிய தினசரி அனைவரும் அதிகாலையில் எடுக்க வேண்டிய உறுதிமொழி. :-


1.தர்மம் செய்வேன்
2.அனைத்திடத்திலும் பின் அன்பாக அதாவது அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன்.
3.போட்டி, பொறாமைகள் நீக்குவேன்
4.அனைத்தும் எந்தனுக்கே சொந்தம் என்று பின் உயிர்ப் பலியும் இடமாட்டேன்
5.பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன்
6.அப்படிக் கொன்றாலும், நிச்சயமாய் அதை யான் தடுப்பேன்
7.அவை மட்டும் இல்லாமல், தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும்.
8.பிறருக்கு நன்மை செய்ய வேண்டும்
9.பிறருக்காக உழைக்க வேண்டும்
10.பிற ஜீவராசிகளும் ( உயிரினங்களும் ) பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில்அனைவரும் நினைக்க வேண்டும்.
11.அப்படி நினைத்தால் அகத்தியன் வந்து அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பான் என்று சொல்மகனே

( அடியவர்களே. இந்த மகிமை புகழ் அகத்திய மாமுனிவர் அருளிய உறுதிமொழி வாக்கினை சிரம்மேல் ஒவ்வொரு நொடியும் ஏந்தி, பிரம்மாவின் முன்பு தலை நிமிர்ந்து நமக்காக விதியை மாற்றஉத்தரவிடும் வண்ணம் அனைவருக்கும் உலகில் உள்ள 700 கோடி மக்களுக்குச்சென்று அடையும்வண்ணம் எடுத்துச் சொல்லுங்கள். )

மற்றவர்களைப்பற்றி எண்ணிப்பார் அப்பனே. மற்றவர்களை எண்ணி எண்ணி, தான் கெட்டுப்போனாலும் பரவாயில்லை என்று யார் ஒருவன் நினைக்கின்றானோ அவனிடத்தில் இறைவன் பிச்சை ஏந்துவான் அப்பா. பிச்சை ஏந்துவான் அப்பனே. என் பக்தர்களுக்கு இது தெரிய நிச்சயம் வேண்டும் அப்பனே.


அகத்திய பிரம்ம ரிஷி உரைத்த முதல் தரப் புண்ணியம் பெறும் ஒரே வழி:- (1) அன்னதானம் + (2) திருவாசகம் சிவபுராணம் + (3) மக்கள் வாழ , நல் வழிகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுதல். இப்படிச் செய்தால் மட்டுமே , முதல்தரப் புண்ணியம் உண்டாகும் என்று குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி உரைத்துள்ளார்கள். இதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள் என்றும் அனைவருக்கும் கூறி உள்ளார்கள். இதுபோல் அனைவரும் செய்து முதல் தரப் புண்ணியம் பெற்றுக் கொள்ளுங்கள். இறை அருளுடன் வளமாக வாழுங்கள். வாழ்க வளமுடன்!!!!!!!!!

siththarkalatchi - Moving text


அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு :- “அப்பனே, தானங்கள் செய்க, அப்பனே, உன்னால் இயன்றவரை தானங்கள் செய்க. அனுதினமும், என் பக்தர்கள், ஒரு உயிருக்காவது உணவளியுங்கள். அது போதும். அப்பனே, அதுவே கோடி புண்ணியமாகும்.”


Friday, October 20, 2023

சித்தர்கள் ஆட்சி - 204 : அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 4-9-2023 உரைத்த வாக்கு - பகுதி 6


 

அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு - அடியவர் ஒருவர் இல்லத்தில் உரைத்த வாக்கு - 04.09.2023 ( பகுதி 6)


இந்த வாக்கின் முந்தைய பகுதி கீழே உள்ள பதிவில் படிக்கவும்


https://siththarkalatchi.blogspot.com/2023/10/202-4-9-2023-5.html?m=0


(பகுதி 6 - வாக்கு ஆரம்பம் ) 


ஆதி சிவசங்கரியின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன். 


குருநாதர்:- இன்பங்களே கொடுத்துக் கொண்டு இருந்தால்….. சிந்திக்கவே மாட்டான் அப்பா. எப்படியப்பா யான் நல்லது செய்வது? 


அப்பனே, வாழ்க்கை என்பது என்ன? 


அடியவர்:- பிறருக்கு உபகாரமாக இருப்பது. 


குருநாதர்:- அப்பனே, உந்தனுக்கே அதாவது உபகாரமாக நீ இல்லையப்பா எப்படியப்பா பேசுகின்றாய்?


அடியவர்:- (அடியவர்கள் அமைதி. சில நொடிகளுக்குப் பின்னர் ஒர் அடியவர்) ஐயா ஜெயிக்க முடியாது ஐயா. அகத்தியப்பெருமானிடம் பேசி. 


குருநாதர்:- அப்பனே எழுந்து நில் அப்பனே. 


(இங்குதான் அந்த மகத்துவம் மிக்க மகிமை புகழ் நிகழ்வு  பூலோகத்தில் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப்பின் நடந்தது. குருநாதர் நேரடியாகச்  சீடர்களுக்குப் பாடம் எடுப்பது போல ஆரம்பித்தார் சில நல் ஆத்மாக்களுக்கு. நாடி வாக்கே பலருக்குக் கிடைக்கவில்லை என்ற நிலையில்,  ஆனால் இந்த அடியவர்கள் குருநாதரின் நேரடி வகுப்பில் குருநாதரின் பாடங்களை கற்கும் வாய்ப்பு கிட்டியது. எப்பேர்ப்பட்ட பாக்கியம் அந்த அடியவர்களுக்கு


அடியவர்:- (அடியவர் எழுந்து நின்றார்) 



குருநாதர்:- அப்பனே ஒரு காலில் நில். 


அடியவர்:- (ஒரு காலில் நிற்க ஆரம்பித்தார்)


குருநாதர்:- அப்பனே கைகளை மேலே துக்கி , 


அடியவர்:- ( இரு கைகளை மேலே தூக்கி ஒற்றைக்காலில் நிற்க ஆரம்பித்தார்)


குருநாதர்:- ஏதாவது அனைவருக்கும் ஓர் உரை, உரை. 


அடியவர்:- (அடியவர் மெதுவாகப் பேசினார்) 


குருநாதர்:- அப்பனே, உன் மனதிலேயே தான் நீ சொன்னாய் என்பேன் அப்பனே. அனைவருக்கும் பலமாக எடுத்துரை என்பேன் அப்பனே. 


அடியவர்:-  எல்லோரும் அன்பாக இருங்கள். எல்லோரையும் அகத்தியப்பெருமான் பார்த்துக்கொள்வார்

( இப்போது ஒற்றைக்காலில் நிற்கும் அடியவர் , நிற்க இயலாமல் ஆடிக்கொண்டே இதை அனைவருக்கும் உரைத்தார். ) 


குருநாதர்:- அப்பனே, ஏன் ஆடினாய்,? அப்பனே இவையே உன்னால் நிற்க முடியவில்லையே அப்பனே வாழ்க்கை எப்படியப்பா வாழ்வாய்? அப்பா. அப்பனே தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே. 

இப்படித்தான் மனிதன் பிறந்து விடுகின்றான். பின் வாழத்தெரியாமல் வாழ்ந்து விடுகின்றான் என்பேன் அப்பனே. அப்பனே இப்பொழுது சொன்னானே , ஆடினானே இதுபோலத்தான் அப்பா. ஆடிக்கொண்டிருக்கின்றான் மனிதன். கர்மாவில் மிதந்து கொண்டிருக்கின்றான் என்பேன் அப்பனே. 

ஆடாமல் நிற்கவேண்டும் என்றால் அப்பனே எங்களை நிச்சயம் சரண்டைதல் அதாவது எங்களைச் சரணடையத்தேவை இல்லை. நீங்கள் புண்ணியம் செய்து கொண்டிருந்தாலே யான்  உங்களை நோக்கி வருவோம். 

அப்பனே (ஒரு) பாடலைப்பாடு முருகனை நோக்கி. 


அடியவர்:-  (முருகன் பாடலை பாட ஆரம்பித்தார் அடியவர். ஆனால் கால் ஊன்றிவிட்டு  - திரு.அருணகிரிநாதர் அருளிய திருப்புகழில் உள்ள - வாதினை அடர்ந்த  (பழமுதிர்ச்சோலை) என்ற பாடலை பாட ஆரம்பித்தார்.) 


குருநாதர்:- அப்பனே, நிறுத்து. அப்பனே கால்களை யான் ஊனச்சொன்னேனா என்ன? 


அடியவர்:- (மறுபடியும் இந்த அடியவர் குருநாதர் உத்தரவை ஏற்று ஒரு காலில் நின்று கையை தூக்கிப் பாட ஆரம்பித்தார். அந்த திருப்புகழ் பாடல் படித்து முருகனை உளம் உருகித் தொழுது உய்யுங்கள்.


வாதினை யடர்ந்த வேல்விழியர் தங்கள்

     மாயமதொ ழிந்து ...... தெளியேனே


மாமலர்கள் கொண்டு மாலைகள் புனைந்து

     மாபதம ணிந்து ...... பணியேனே


ஆதியொடு மந்த மாகிய நலங்கள்

     ஆறுமுக மென்று ...... தெரியேனே


ஆனதனி மந்த்ர ரூபநிலை கொண்ட

     தாடுமயி லென்ப ...... தறியேனே


நாதமொடு விந்து வானவுடல் கொண்டு

     நானிலம லைந்து ...... திரிவேனே


நாகமணி கின்ற நாதநிலை கண்டு

     நாடியதில் நின்று ...... தொழுகேனே


சோதியுணர் கின்ற வாழ்வுசிவ மென்ற

     சோகமது தந்து ...... எனையாள்வாய்


சூரர்குலம் வென்று வாகையொடு சென்று

     சோலைமலை நின்ற ...... பெருமாளே.

நன்றி : https://www.kaumaram.com/thiru/nnt1318_u.html

)


குருநாதர்:- (இந்த பாடலை முழுவதும் பாடி முடிக்கும் முன்னரே , இடையிலேயே குருநாதர் குறுக்கிட்டு ) அப்பனே, நிறுத்து. அப்பனே கர்மா வைத்துக்கொண்டிருக்கின்றாய் அப்பனே. இதிலிருந்தே தெரிகின்றது என்பேன் அப்பனே. ஆடி ஆடி பாடுகின்றாய் என்பேன் அப்பனே. உன் பக்கத்தில் இருப்பவனை எழச்சொல். 


அடியவர்:- ( அடியவர் எழுந்து நின்றார்)


குருநாதர்:- அப்பனே இது போலே நில். ( ஒற்றைக்காலில், இரு கைகளைத் தலைக்கு மேலே தூக்கி)


அடியவர்:- ( அடியவர் குருநாதர் சொன்னது போல் நின்றார்)


குருநாதர்:- அப்பனே, முருகனைப்பார்த்து ஒரு பாடலைப்பாடு. 


அடியவர்:- (திரு அருணகிரிநாதர் அருளிய கந்தர் அநுபூதியில் உள்ள பின் வரும் பாடலை பாட ஆரம்பித்தார்) 


உருவாய் அருவாய், உளதாய் இலதாய்

மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க்

கருவாய் உயிராய்க், கதியாய் விதியாய்க்

குருவாய் வருவாய், அருள்வாய் குகனே.


( இப் பாடலின் விளக்கத்தை இங்கு காணவும்  

நன்றி :- https://kaumaram.com/anuboothi/anuboothi_sn051_u.html )


குருநாதர்:- அப்பனே, இறைவனை நம்பினாலும் ஓர் பக்குவப்படுத்த அப்பனே ஓர் ஆள் தேவையப்பா. 

உன்னால் ஒன்றுமே அதாவது பக்கத்தில் உள்ளவன் கெட்டியாக (ஒற்றைக்காலில் நிற்கும் உன்னை) பிடித்தான். அதுபோலத்தானப்பா மனிதனுக்கு சில சில வினைகளில் யாங்களே வந்து அப்பனே அப்படியே பிடித்துக்கொள்வோம் அப்பனே. புரிந்து கொண்டாயா அப்பா? 


உன் நிலமையும் உந்தனுக்கு அதனால்தான் அப்பனே வாக்குகள் உந்தனுக்கு கொடுக்கவில்லை என்பேன் அப்பனே. சில கர்மாக்களை எதை என்று அறிய அறியச் சம்பாதித்து அப்பனே அனுபவித்துக்கொண்டிருந்தாய். ஆனாலும் அப்பனே சிறுக சிறுக முருகனே அதை நீக்கிவிட்டான். அதனால் நிச்சயம் அப்பனே பாடலை பாடு. அப்பனே காலை கீழே விடாதே. 


அடியவர்:- (அதே முருகன் பாடலை பாட ஆரம்பித்தார்) 


குருநாதர்:- அப்பனே, யான் சொல்லியதை இதைக்கூடச் சரியாகச் செய்யவில்லை என்பேன் அப்பனே. ஆனால் நீங்கள் என்னென்ன கேட்கின்றீர்கள் அப்பனே. அவை எல்லாம் யான் தரவா முடியும் அப்பனே. 

எவை என்று அறிய இதைச் சரியாக  யான் சொல்லியதைச் சரியாகப் பின்பற்றினால்தான் அப்பனே பின் அனைத்தும் செய்ய முடியும். 

ஏனென்றால் அப்பனே ஏன் எதற்காகச் சொல்கின்றேன் என்றால் அவ் கர்மாவை நீக்க வேண்டும் என்பேன் அப்பனே. அப்பனே கர்மாவை பற்றி இப்படியே எடுத்துக் கூறு நீ. 


அடியவர்:- கர்ம வினை என்பது நாம் செய்கின்ற பாவ புண்ணியங்கள் ஏற்ப வரும். நல்லது பன்னால் நல்லது வரும். கெட்டது பன்னா கெட்டதை வரும். 


குருநாதர்:- ( தனிப்பட்ட வாக்கு அந்த அடியவருக்கு மட்டும் உரைத்தார். அந்த பதிவுகள் நீக்கப்பட்டது. அந்த அடியவர் இல்லத்திலே குருநாதர் இருப்பதாக உரைத்தார்.) இறைவன் தான் செய்த வினைகளுக்கு ஏற்ப்பவே அப்பனே சில சில துன்பங்கள் கொடுத்துக்கொண்டு இருக்கின்றான். இது தவறா? 


அடியவர்:- சரிதான். 


குருநாதர்:- அப்பனே எதை என்று கூற நீங்கள் இன்னும் அப்பனே தவறு செய்துவிட்டுத் தவறு செய்து விட்டு , தவறு செய்து விட்டு என்னிடத்தில் வந்தால் எப்படியப்பா யான் கொடுப்பது? அப்பனே. சொல்லுங்கள் நீங்களே. 


அடியவர்:- ( அனைவரும் அமைதியானார்கள். )


குருநாதர்:- அதனால் அப்பனே, உன் பக்கத்திலேயே இருக்கின்றானே இவன்தன் ( தனி நபர் வாக்கு நீக்கப்பட்டது) தாய்க்கு பல உதவிகள் சேவை செய்ய வேண்டும் அப்பொழுதுதான் இறைவன் சேவைகள் செய்வான். தாயை பாரத்து ஒரு பாடல் பாடு. 


அடியவர்:- (பாடல் ஒன்றைப் பாடினார்) 


குருநாதர்:- அப்பனே அனுதினமும் உன்தாயை வணங்கிக்கொண்டே வா அப்பனே. நிச்சயம் மாறுதல் ஏற்படுத்துகின்றேன் அப்பனே. 

முதலில் அப்பனே தாய் தந்தையரை வணங்குதல் வேண்டும். இதை வணங்காதவர்கள் (உலகில் உள்ள அனைவருக்கும் ) அப்பனே, எப்படியப்பா கொடுப்பது? அதனால் உங்களுக்கு அருகிலேயே யான் இருக்கின்றேன். ஆனால் நீங்கள் புரிந்து கொள்ளவே இல்லையப்பா. அதனால்தான் சில சில கஷ்டங்களை உங்களுக்கு யானே வைத்தேன் அப்பனே. 


அடியவர்:- ( அனைத்து அடியவர்களும் அமைதி) 


குருநாதர்:-  இதனால் அப்பனே உணருங்கள்.  அப்பனே, (உங்களால்) சிறிது நேரம் கூட நிற்க முடியவில்லை என்பேன் அப்பனே. வாழ்க்கை எப்படித்தான் வாழப்போகின்றீர்கள் என்பேன் அப்பனே? 

ஆனால் யான் இருக்கின்றேன் அப்பனே. பாதை காட்டுகின்றேன். வையுங்கள் காலை கீழே. 


(மதுரையில் அகத்திய பிரம்ம ரிஷி அடியவர் இல்லத்தில் உரைத்த இந்த வாக்கு பின் வரும் பதிவில் தொடரும்………)


https://siththarkalatchi.blogspot.com/2023/10/207-4-9-2023-7.html?m=0


ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய பிரம்ம ரிஷி திருவடிகளில் சமர்ப்பணம்!!!


No comments:

Post a Comment