“இறைவா நீயே அனைத்தும். இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்.

"இறைவா நீயே அனைத்தும்!. இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்" ஈரேழு உலகத்தையும் காத்து அருளக்கூடிய அன்னை ஶ்ரீ உண்ணாமலை அம்மை உடனுறை தந்தை அண்ணாமலையார் பொற்கமலத்தை பணிந்து, அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளை பணிந்து இந்த தளத்தில் பதிவினை வெளியிடுகின்றோம்.

உலகின் ஆதி குரு, மாமுனிவர், குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளிய தினசரி அனைவரும் அதிகாலையில் எடுக்க வேண்டிய உறுதிமொழி. :-

1. தர்மம் செய்வேன் 2. அனைத்திடத்திலும் பின் அன்பாக அதாவது அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன் 3. போட்டி, பொறாமைகள் நீக்குவேன் 4. அனைத்தும் எந்தனுக்கே சொந்தம் என்று பின் உயிர்ப் பலியும் இடமாட்டேன் 5. பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன் 6. அப்படிக் கொன்றாலும், நிச்சயமாய் அதை யான் தடுப்பேன் 7. அவை மட்டும் இல்லாமல், தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும் 8. பிறருக்கு நன்மை செய்ய வேண்டும் 9. பிறருக்காக உழைக்க வேண்டும் 10. பிற ஜீவராசிகளும் (உயிரினங்களும்) பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில் அனைவரும் நினைக்க வேண்டும் 11. அப்படி நினைத்தால் அகத்தியன் வந்து அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பான் என்று சொல்மகனே.


அகத்திய பிரம்ம ரிஷி உரைத்த முதல் தரப் புண்ணியம் பெறும் ஒரே வழி:- (1) திருவாசகம் சிவபுராணம் + (2) மக்கள் வாழ , நல் வழிகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுதல் + அதன் பின் (3) அன்னதானம், மற்றும் இதர தான தர்மங்கள். இப்படிச் செய்தால் மட்டுமே , முதல்தரப் புண்ணியம் உண்டாகும் என்று குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி உரைத்துள்ளார்கள். இதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள் என்றும் அனைவருக்கும் கூறி உள்ளார்கள். இதுபோல் அனைவரும் செய்து முதல் தரப் புண்ணியம் பெற்றுக் கொள்ளுங்கள். இறை அருளுடன் வளமாக வாழுங்கள். வாழ்க வளமுடன்!!!!!!!!!

siththarkalatchi - Moving text


அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு :- “அப்பனே, அனுதினமும், என் பக்தர்கள், ஒரு உயிருக்காவது உணவளியுங்கள். அது போதும். அதுவே கோடி புண்ணியமாகும்.”


Saturday, December 16, 2023

சித்தர்கள் ஆட்சி - 257 : மாமுனிவர் காகபுசண்டர் அருள்வாக்கு - “இனிமேலும் நிரம்பி வழியுமடா திருத்தலங்கள்!!!!!”






 


“இறைவா!!! அனைத்தும் நீ”


12/12/2023 அன்று அமாவாசை திதி அன்று மாமுனிவர் காகபுசண்டர் மகரிஷி உரைத்த பொதுவாக்கு. வாக்குரைத்த ஸ்தலம். காக்கும் சிவன் காசியில் கங்கை ஆற்றில். 


காகபுசண்டர் வாக்கு:- 


அப்பனே ஈசன் நாமத்தை பின் சொல்லிச் சொல்லி பொய் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள் அப்பனே. 


அதனால்தான் ஈசன் விடுவதில்லை இனிமேலும்.


பக்தி என்னவென்று நிச்சயம் புரிந்து, அடித்து, நொறுக்கித்தான் உண்மை நிலை தெரிந்துதான் இதனால்தான் பல பல வழிகளிலும் கூட ஈசன் கஷ்டத்தைக் கொடுத்து கொடுத்து!!!!!!!!.............


இனிமேலும் நிரம்பி வழியுமடா திருத்தலங்கள்!!!!! 


ஏனென்றால் கஷ்டங்கள், கஷ்டங்கள் என்று ஓடோடி வருவார்கள்


வரட்டும் பார்த்துக் கொள்கின்றோம் யாங்கள் சித்தர்கள். 


உண்மை உள்ளவர்களை எடுத்துப் பல மனிதர்களை அதன் மூலம் உருவாக்கி பொய்கள்  எதை என்று அறிய அறிய எவை என்றும் அறிய அறிய அடித்து இனிமேலும் கஷ்டங்கள்தான்!!!


இதனால் சொல்லிவிட்டேன். எதை என்று அறிய அறிய உண்மையாக நீங்கள் இருந்தால் என்னிடத்தில் வாருங்கள். 


எதை என்றும் அறிய அறிய அதாவது இவ் கங்கா பின் எதை என்று அறிய நதியில் இருந்தே இச் சுவடியை வாசிக்கின்றான். எதை என்றும் அறிய அறிய யானும் செப்புகின்றேன். 


(சுவடியை ஓதும் அகத்திய மைந்தன் தன் திரு ஜானகிராமன் ஐயா கங்கை நதியின் மேல் சுவடி பெட்டகத்தை வைத்து சுவடி பூஜை புஷ்பங்கள் ஆராதனைகள் எல்லாம் செய்து விட்டு கங்கை நதியின் மேல் இருந்து வாக்குகள் வாசிக்கத் தொடங்கினார் )

 

எதை என்று புரிய புரிய  எவை என்று அறிய அறிய நீதி, நேர்மை நிச்சயம் இருந்தால் வாருங்கள். உண்மை நிலையைச் சொல்லுகின்றேன் !! என்னென்ன செய்தாய் என்று. 



ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய பிரம்ம ரிஷி திருவடிகளில் சமர்ப்பணம்!!!