“இறைவா நீயே அனைத்தும். இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்.

"இறைவா நீயே அனைத்தும்!. இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்" ஈரேழு உலகத்தையும் காத்து அருளக்கூடிய அன்னை ஶ்ரீ உண்ணாமலை அம்மை உடனுறை தந்தை அண்ணாமலையார் பொற்கமலத்தை பணிந்து, அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளை பணிந்து இந்த தளத்தில் பதிவினை வெளியிடுகின்றோம்.

உலகின் ஆதி குரு, மாமுனிவர், குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளிய தினசரி அனைவரும் அதிகாலையில் எடுக்க வேண்டிய உறுதிமொழி. :-

1. தர்மம் செய்வேன் 2. அனைத்திடத்திலும் பின் அன்பாக அதாவது அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன் 3. போட்டி, பொறாமைகள் நீக்குவேன் 4. அனைத்தும் எந்தனுக்கே சொந்தம் என்று பின் உயிர்ப் பலியும் இடமாட்டேன் 5. பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன் 6. அப்படிக் கொன்றாலும், நிச்சயமாய் அதை யான் தடுப்பேன் 7. அவை மட்டும் இல்லாமல், தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும் 8. பிறருக்கு நன்மை செய்ய வேண்டும் 9. பிறருக்காக உழைக்க வேண்டும் 10. பிற ஜீவராசிகளும் (உயிரினங்களும்) பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில் அனைவரும் நினைக்க வேண்டும் 11. அப்படி நினைத்தால் அகத்தியன் வந்து அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பான் என்று சொல்மகனே.


அகத்திய பிரம்ம ரிஷி உரைத்த முதல் தரப் புண்ணியம் பெறும் ஒரே வழி:- (1) திருவாசகம் சிவபுராணம் + (2) மக்கள் வாழ , நல் வழிகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுதல் + அதன் பின் (3) அன்னதானம், மற்றும் இதர தான தர்மங்கள். இப்படிச் செய்தால் மட்டுமே , முதல்தரப் புண்ணியம் உண்டாகும் என்று குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி உரைத்துள்ளார்கள். இதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள் என்றும் அனைவருக்கும் கூறி உள்ளார்கள். இதுபோல் அனைவரும் செய்து முதல் தரப் புண்ணியம் பெற்றுக் கொள்ளுங்கள். இறை அருளுடன் வளமாக வாழுங்கள். வாழ்க வளமுடன்!!!!!!!!!

siththarkalatchi - Moving text


அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு :- “அப்பனே, அனுதினமும், என் பக்தர்கள், ஒரு உயிருக்காவது உணவளியுங்கள். அது போதும். அதுவே கோடி புண்ணியமாகும்.”


Monday, December 25, 2023

சித்தர்கள் ஆட்சி - 263 : கந்த வடிவேலன் உரைத்த அருள்வாக்கு 19-12-2023


 

“இறைவா!!! அனைத்தும் நீ”

அழகன் குமரன் கந்த வடிவேலன் வாக்கு:- 

சில சில உண்மைகள் எடுத்துரைத்து பின் சில பின்நோக்கி , முன்நோக்கி போக வேண்டும். 

அறிந்தும் கூட அதனால் பின் நோக்கி வந்து விட்டோமே என்று எண்ணினால் முன்நோக்கிச் செல்ல இயலாது மகனே.

அறிந்தும் கூட சிறிதளவு பின்நோக்கி இறைவன் தள்ளிவிட்டால், ஆனால் பின் முன்நோக்கி பன் மடங்கு செய்து விடுவான். 

அதனால்தான் இதனை துன்பமாகவும் எண்ணிக் கொள்ளலாம். அறிந்தும் அறியாமலும் கூட மனிதனுக்குச் சிறிது இறைவன் பின் நோக்கித் தள்ளுகின்ற போது,  மனிதன் கஷ்டங்கள் கொடுத்து விட்டானே என்று ஏங்குகின்றான்!!!!

அதனால் பின் நோக்கி வந்து விட்டோமே என்று ஆனால் என்று எப்போது மனிதன் சிந்திக்கின்றானோ , ஏதாவது பதில்கள் வருமா இறைவனுடத்தில் இருந்து என்று (எதிர்பார்க்கின்றான்) , ஆனால் நல்லதற்காகவே என்று மனிதன் எண்ணவில்லேயே.

அதனால்தான் இன்னும் கூட தரம் தாழ்த்திச் சென்று கொண்டே இருக்கின்றான் மனிதன். 

ஆனால் உண்மை நிலை புரியவில்லையே !!!!!


ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய பிரம்ம ரிஷி திருவடிகளில் சமர்ப்பணம்!!!