அப்பனே ஒன்றை தெரிவித்துக்கொள்கின்றேன் அப்பனே.
யான் ஏற்க்கனவே இதை யான் செப்பியும்விட்டேன் அப்பனே.
அதாவது புவிதன்னில் பிறந்துவிட்டால் கர்மாதானப்பா.
இதனால் அப்பனே பின்ஒவ்வொருவரும் பின் கட்டங்கள் பட வேண்டியது. அதாவது நிச்சயம் ஆணித்தரமான உண்மை என்பேன் அப்பனே. பல பல வழிகளிலும் கூட அப்பனே ஞானத்தை பெற்றவர்களாயினும் இறைவன்கள் எதை என்று அறிய அறிய ஞானிகள்,
ரிஷிகள் வந்தாலும் கட்டங்கள்தான் என்பேன்அப்பனே.
எவை என்று அப்பனே பரந்த உலகம் அப்பனே எதை என்று
எளிதில் புரிந்து கொள்ளஇயலாது அப்பனே. இவை எல்லாம் வரும் காலங்களில் விஞ்ஞானப்பூர்வமாகவே யான் நிச்சயம்
எடுத்துரைப்பேன் அப்பனே மனிதர்களுக்கு தெரிந்து
கொள்ளும்படியே அப்பனே.
ஏனைன்றால் இன்னும் அப்பனே முதல் வகுப்பிலேயே மனிதர்கள் தேர்ச்சி பெறவில்லை என்பேன்அப்பனே. இதனால் எப்படித்தான் இறைவனைக்கானப்போகின்றார்கள் அப்பனே தெரிந்துகொள்.
- அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு
No comments:
Post a Comment