“இறைவா !!!!! நீயே அனைத்தும்” இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்.

"இறைவா !!!!! நீயே அனைத்தும்!!!!"
"இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்"

உலகின் ஆதி குரு, மாமுனிவர், குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளிய தினசரி அனைவரும் அதிகாலையில் எடுக்க வேண்டிய உறுதிமொழி. :-


1.தர்மம் செய்வேன்
2.அனைத்திடத்திலும் பின் அன்பாக அதாவது அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன்.
3.போட்டி, பொறாமைகள் நீக்குவேன்
4.அனைத்தும் எந்தனுக்கே சொந்தம் என்று பின் உயிர்ப் பலியும் இடமாட்டேன்
5.பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன்
6.அப்படிக் கொன்றாலும், நிச்சயமாய் அதை யான் தடுப்பேன்
7.அவை மட்டும் இல்லாமல், தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும்.
8.பிறருக்கு நன்மை செய்ய வேண்டும்
9.பிறருக்காக உழைக்க வேண்டும்
10.பிற ஜீவராசிகளும் ( உயிரினங்களும் ) பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில்அனைவரும் நினைக்க வேண்டும்.
11.அப்படி நினைத்தால் அகத்தியன் வந்து அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பான் என்று சொல்மகனே

( அடியவர்களே. இந்த மகிமை புகழ் அகத்திய மாமுனிவர் அருளிய உறுதிமொழி வாக்கினை சிரம்மேல் ஒவ்வொரு நொடியும் ஏந்தி, பிரம்மாவின் முன்பு தலை நிமிர்ந்து நமக்காக விதியை மாற்றஉத்தரவிடும் வண்ணம் அனைவருக்கும் உலகில் உள்ள 700 கோடி மக்களுக்குச்சென்று அடையும்வண்ணம் எடுத்துச் சொல்லுங்கள். )

மற்றவர்களைப்பற்றி எண்ணிப்பார் அப்பனே. மற்றவர்களை எண்ணி எண்ணி, தான் கெட்டுப்போனாலும் பரவாயில்லை என்று யார் ஒருவன் நினைக்கின்றானோ அவனிடத்தில் இறைவன் பிச்சை ஏந்துவான் அப்பா. பிச்சை ஏந்துவான் அப்பனே. என் பக்தர்களுக்கு இது தெரிய நிச்சயம் வேண்டும் அப்பனே.


அகத்திய பிரம்ம ரிஷி உரைத்த முதல் தரப் புண்ணியம் பெறும் ஒரே வழி:- (1) அன்னதானம் + (2) திருவாசகம் சிவபுராணம் + (3) மக்கள் வாழ , நல் வழிகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுதல். இப்படிச் செய்தால் மட்டுமே , முதல்தரப் புண்ணியம் உண்டாகும் என்று குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி உரைத்துள்ளார்கள். இதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள் என்றும் அனைவருக்கும் கூறி உள்ளார்கள். இதுபோல் அனைவரும் செய்து முதல் தரப் புண்ணியம் பெற்றுக் கொள்ளுங்கள். இறை அருளுடன் வளமாக வாழுங்கள். வாழ்க வளமுடன்!!!!!!!!!

siththarkalatchi - Moving text


அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு :- “அப்பனே, தானங்கள் செய்க, அப்பனே, உன்னால் இயன்றவரை தானங்கள் செய்க. அனுதினமும், என் பக்தர்கள், ஒரு உயிருக்காவது உணவளியுங்கள். அது போதும். அப்பனே, அதுவே கோடி புண்ணியமாகும்.”


Thursday, December 23, 2021

சித்தர்கள் ஆட்சி - 13 : இறைவனிடம் எப்படி வேண்ட வேண்டும்?


அகத்திய மஹரிஷி பாதம் காப்பு


அகத்திய மஹரிஷி பொது நாடி வாக்கு:
வாசிக்கப்பட்ட இறை தலம் :- மதுரை பசுமலையில் சக்தி மாரியம்மன் தளத்தில் அமைந்துள்ள அன்னை லோபாமுத்திரை உடன் உறை அகத்திய மஹரிஷி ஆலயம்
நாடி அருளாளர்:- திரு.ஜானகிராமன் ஐயா அவர்கள்.

6-September-2021, திங்கள் கிழமை

அகத்திய மஹரிஷி : அப்பனே இன்னும் என்னென்ன தேவை கூறு உந்தனுக்கு.

( இங்கு நாடி அருளாளர் எவை வேண்டும் என்று அந்த வாக்கு கேட்ப்பரிடம கேட்க்க அதற்க்கு அவர் எல்லோரும் நல்லா இருக்கனும் என்று கேட்க்க உடனே பின்வருமாறு உரைத்தார் மகத்தான அகத்திய மஹரிஷி)

அகத்திய மஹரிஷி : அப்பனே இவை என்றுகூற இதைத்தான் கேட்க வேண்டுமே தவிர தன்பிள்ளைகள் , தன் இல்லங்கள், தன் சொந்த பந்தங்கள் இவை எல்லாம் நன்றாக இருக்க வேண்டும் என்பதை எல்லாம் பின் கேட்க்க்கூடாது என்பேன். அவ்வாறு கேட்டாலும் இறைவன் செய்ய மாட்டான். அப்பனே இறைவனே நீ என்று நீ என்று கூட இறைவனே அனைத்தும் உந்தனுக்கே தெரியும் என்று பின் நல்முறைகளாக கேட்டு விட்டால் அனைத்தும் தருவான். ஆனாலும் அறியாத முட்டாள்கள் எதை எதையோ கேட்டுக்கொண்டுதான் இருக்கின்றார்கள்.

 ===============================================================

No comments:

Post a Comment