“இறைவா !!!!! நீயே அனைத்தும்” இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்.

"இறைவா !!!!! நீயே அனைத்தும்!!!!"
"இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்"

உலகின் ஆதி குரு, மாமுனிவர், குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளிய தினசரி அனைவரும் அதிகாலையில் எடுக்க வேண்டிய உறுதிமொழி. :-


1.தர்மம் செய்வேன்
2.அனைத்திடத்திலும் பின் அன்பாக அதாவது அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன்.
3.போட்டி, பொறாமைகள் நீக்குவேன்
4.அனைத்தும் எந்தனுக்கே சொந்தம் என்று பின் உயிர்ப் பலியும் இடமாட்டேன்
5.பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன்
6.அப்படிக் கொன்றாலும், நிச்சயமாய் அதை யான் தடுப்பேன்
7.அவை மட்டும் இல்லாமல், தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும்.
8.பிறருக்கு நன்மை செய்ய வேண்டும்
9.பிறருக்காக உழைக்க வேண்டும்
10.பிற ஜீவராசிகளும் ( உயிரினங்களும் ) பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில்அனைவரும் நினைக்க வேண்டும்.
11.அப்படி நினைத்தால் அகத்தியன் வந்து அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பான் என்று சொல்மகனே

( அடியவர்களே. இந்த மகிமை புகழ் அகத்திய மாமுனிவர் அருளிய உறுதிமொழி வாக்கினை சிரம்மேல் ஒவ்வொரு நொடியும் ஏந்தி, பிரம்மாவின் முன்பு தலை நிமிர்ந்து நமக்காக விதியை மாற்றஉத்தரவிடும் வண்ணம் அனைவருக்கும் உலகில் உள்ள 700 கோடி மக்களுக்குச்சென்று அடையும்வண்ணம் எடுத்துச் சொல்லுங்கள். )

மற்றவர்களைப்பற்றி எண்ணிப்பார் அப்பனே. மற்றவர்களை எண்ணி எண்ணி, தான் கெட்டுப்போனாலும் பரவாயில்லை என்று யார் ஒருவன் நினைக்கின்றானோ அவனிடத்தில் இறைவன் பிச்சை ஏந்துவான் அப்பா. பிச்சை ஏந்துவான் அப்பனே. என் பக்தர்களுக்கு இது தெரிய நிச்சயம் வேண்டும் அப்பனே.


அகத்திய பிரம்ம ரிஷி உரைத்த முதல் தரப் புண்ணியம் பெறும் ஒரே வழி:- (1) அன்னதானம் + (2) திருவாசகம் சிவபுராணம் + (3) மக்கள் வாழ , நல் வழிகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுதல். இப்படிச் செய்தால் மட்டுமே , முதல்தரப் புண்ணியம் உண்டாகும் என்று குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி உரைத்துள்ளார்கள். இதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள் என்றும் அனைவருக்கும் கூறி உள்ளார்கள். இதுபோல் அனைவரும் செய்து முதல் தரப் புண்ணியம் பெற்றுக் கொள்ளுங்கள். இறை அருளுடன் வளமாக வாழுங்கள். வாழ்க வளமுடன்!!!!!!!!!

siththarkalatchi - Moving text


அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு :- “அப்பனே, தானங்கள் செய்க, அப்பனே, உன்னால் இயன்றவரை தானங்கள் செய்க. அனுதினமும், என் பக்தர்கள், ஒரு உயிருக்காவது உணவளியுங்கள். அது போதும். அப்பனே, அதுவே கோடி புண்ணியமாகும்.”


Monday, January 10, 2022

ஒரு முக்கிய அறிவிப்பு - அகத்திய மஹரிஷி சன்னதி வருஷாபிஷேகம்

 


ஒரு முக்கிய அறிவிப்பு

அகத்திய மஹரிஷி பாதம் காப்பு

மதுரை - பசுமலை - தியாகராசர் குடியிருப்பில் உள்ள ஶ்ரீசக்தி மாரியம்மன் கோவில் வளாகத்தில் உள்ள அன்னை லோபமுத்திரை சமேத மகரிஷி அகத்தியர் சன்னதியின்  வருஷாபிஷேகம், தற்போதைய அரசின் வழிகாட்டுதலில் பொது மக்கள் பங்கேற்க அரசு தடை விதித்திருப்பதால்,   சிவாச்சாரியார்கள் மற்றும் ஆலய நிர்வாகத்தினரால் மட்டும் கலந்து   சிறப்பு பூசைகள் நடைபெற உள்ளன என்பதை  தெரிவித்துக் கொள்கிறோம். 

மூன்று நாட்களுக்கு நடைபெறுவதாக இருந்த அன்னதானம், தமிழக அரசின் நெறிமுறை மற்றும் வழிகாட்டுதலால்  தற்போது செய்ய இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது.

அரசின் வழிகாட்டுதலில் மாற்றம் ஓரிரு நாளில் அறிவித்தால், அதற்கேற்ப நிகழ்ச்சியின் மாற்றம் பற்றி பின்னர் அறிவிக்கப்படும். 

மேலதிக விவரங்களுக்கு கீழேயுள்ள அலைபேசியில் தொடர்புகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

+919842439261 / +918144444274

அகத்திய மஹரிஷி புகழ் ஓங்குக



அகத்திய மரிஷி சன்னதி வருஷாபிஷேகம்

17-ஜனவரி-2022 (பிலவ ஆண்டு தை 4ம் தேதி - புனர்பூசம் நட்சத்திரம்)

அகத்திய மரிஷி பாதம் காப்பு

மதுரை - பசுமலை - தியாகராசர் குடியிருப்பில் உள்ள ஶ்ரீசக்தி மாரியம்மன் கோவில் வளாகத்தில் உள்ள அன்னை லோபமுத்திரை சமேத மகரிஷி அகத்தியர் சன்னதியின்  வருஷாபிஷேகம் - 17/01/2022 - திங்கள் கிழமை தை பூசம் சிறப்பு பூசை - 18/01/2022 - செவ்வாய் கிழமை தை மாத ஆயில்ய பூசை - 19/01/2022 - புதன் கிழமை சிறப்பு பூசைகள் விமரிசையாக நடைபெற உள்ளன என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கிறோம் பூசை, சிறப்பு அபிஷேகங்கள் அதை தொடர்ந்து அன்னதானமும்  மூன்று நாடகளும் சிறப்பாக நடைபெறும் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம். நன்கொடை அளித்து அன்னதானத்தில் பங்கேற்க்க விரும்பும் அடியவர்கள் கீழேயுள்ள அலைப்பேசி எண்களில் தொடர்புகொள்ளவும். +919842439261 / +918144444274

அகத்திய மரிஷி புகழ் ஓங்குக!

No comments:

Post a Comment