“இறைவா !!!!! நீயே அனைத்தும்” இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்.

"இறைவா !!!!! நீயே அனைத்தும்!!!!"
"இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்"

உலகின் ஆதி குரு, மாமுனிவர், குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளிய தினசரி அனைவரும் அதிகாலையில் எடுக்க வேண்டிய உறுதிமொழி. :-


1.தர்மம் செய்வேன்
2.அனைத்திடத்திலும் பின் அன்பாக அதாவது அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன்.
3.போட்டி, பொறாமைகள் நீக்குவேன்
4.அனைத்தும் எந்தனுக்கே சொந்தம் என்று பின் உயிர்ப் பலியும் இடமாட்டேன்
5.பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன்
6.அப்படிக் கொன்றாலும், நிச்சயமாய் அதை யான் தடுப்பேன்
7.அவை மட்டும் இல்லாமல், தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும்.
8.பிறருக்கு நன்மை செய்ய வேண்டும்
9.பிறருக்காக உழைக்க வேண்டும்
10.பிற ஜீவராசிகளும் ( உயிரினங்களும் ) பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில்அனைவரும் நினைக்க வேண்டும்.
11.அப்படி நினைத்தால் அகத்தியன் வந்து அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பான் என்று சொல்மகனே

( அடியவர்களே. இந்த மகிமை புகழ் அகத்திய மாமுனிவர் அருளிய உறுதிமொழி வாக்கினை சிரம்மேல் ஒவ்வொரு நொடியும் ஏந்தி, பிரம்மாவின் முன்பு தலை நிமிர்ந்து நமக்காக விதியை மாற்றஉத்தரவிடும் வண்ணம் அனைவருக்கும் உலகில் உள்ள 700 கோடி மக்களுக்குச்சென்று அடையும்வண்ணம் எடுத்துச் சொல்லுங்கள். )

மற்றவர்களைப்பற்றி எண்ணிப்பார் அப்பனே. மற்றவர்களை எண்ணி எண்ணி, தான் கெட்டுப்போனாலும் பரவாயில்லை என்று யார் ஒருவன் நினைக்கின்றானோ அவனிடத்தில் இறைவன் பிச்சை ஏந்துவான் அப்பா. பிச்சை ஏந்துவான் அப்பனே. என் பக்தர்களுக்கு இது தெரிய நிச்சயம் வேண்டும் அப்பனே.


அகத்திய பிரம்ம ரிஷி உரைத்த முதல் தரப் புண்ணியம் பெறும் ஒரே வழி:- (1) அன்னதானம் + (2) திருவாசகம் சிவபுராணம் + (3) மக்கள் வாழ , நல் வழிகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுதல். இப்படிச் செய்தால் மட்டுமே , முதல்தரப் புண்ணியம் உண்டாகும் என்று குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி உரைத்துள்ளார்கள். இதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள் என்றும் அனைவருக்கும் கூறி உள்ளார்கள். இதுபோல் அனைவரும் செய்து முதல் தரப் புண்ணியம் பெற்றுக் கொள்ளுங்கள். இறை அருளுடன் வளமாக வாழுங்கள். வாழ்க வளமுடன்!!!!!!!!!

siththarkalatchi - Moving text


அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு :- “அப்பனே, தானங்கள் செய்க, அப்பனே, உன்னால் இயன்றவரை தானங்கள் செய்க. அனுதினமும், என் பக்தர்கள், ஒரு உயிருக்காவது உணவளியுங்கள். அது போதும். அப்பனே, அதுவே கோடி புண்ணியமாகும்.”


Monday, March 21, 2022

சித்தர்கள் ஆட்சி - 54 : ஆதி வாலை பரமேஸ்வரி ஜீவ நாடி வாக்கு



 ஆதி வாலை பரமேஸ்வரி ஜீவ நாடி  - 16/2/2020 




(அகத்திய மஹரிஷி அடியவர் ஒருவருக்கு உரைக்கப்பட்ட நாடி வாக்கில் அன்னை தன்னைப்பற்றி உரைத்த பொது வாக்கு.)


நாடி உரை ஆரம்பம்


ஆதி மூல கணநாதனின் அம்சமும் நானே!

ஆறுமுகன் வடிவமாய் இருப்பவள் நானே!

முப்பெரும் தேவராய் வந்ததும் நானே!

முப்பெரும் தேவியின் தோற்றமும் நானே!

நானேதான் ஏதும் இல்லா இடத்திலும் உள்ளேன். நானேதான் இருக்கும் இடம் மறைந்தே உள்ளேன். வந்தவளும், வருபவளும் வரமாகவும் உள்ளேன்.  

வற்றாத அருளாக பரசிவமாக உள்ளேன். 

உள்ளேன் சித்தர்களின் ஆதித்தாயாய் யானும். 

உள்ளேன் நம்புவோரக்கு சேயாய் யானும். பாவையாய், பார்வையாய், பரம்பொருளாய் யானும். 

பாசமுள்ள சேய்களுக்கு அடிமையே யானும். 

யானுமே அழைத்திடாது வரவும் மாட்டேன். யானும் அழைத்தாலும் வந்திடவும் மாட்டேன். 

தான் அதுவான தத்துவத்தை உணர்த்தவும் மாட்டேன். தவமான ஜோதியை மறைக்கவும் மாட்டேன்.  

மாட்டேன் என எது நிலையிலும் உரையேன். மாட்டேன் என எவருக்கும் உரையேன்.  

உலகிலே எல்லோரும் என் சேயே உண்மை. 

உலகிலே பெருமை சிறுமை எனக்கில்லை உண்மை.  

உண்மையான சத்தியத்தை உணர்ந்தவள் நான் மட்டும்.  உண்மையான சத்தியத்தை உரைப்பவளும் நான் மட்டும்.  

நிலமதில் தர்மவழி, நீதி வழி வருபவருக்கு நித்தியத்தை, சத்தியத்தை உரைத்து மகிழ்வேன். 

மகிழ்வேன் நல்ரோரை காணும்கால் யானும். மன்னிப்பேன் திருந்திவரும் மாந்தரை எல்லாம். 

அருளாளர் ஆத்துமாவில் உறைந்திடும் ஓர் சக்தி அன்னை யானே அறிய வேண்டும் உலகிறக்கு சொன்னேன். சொன்னேன் சத்தியத்தை இன்று நாள் யானும். 

தேடித்தேடி பல வாக்கு கேட்டாய். வேலவன் வழி வந்திட்ட சித்தரை எல்லாம் பணிந்தாய். பணிந்தாய் எல்லோரும் ஒன்றுதான் மகனே. பரசிவமே, பாலாவே எல்லாவாவும் இருக்க. அகத்தியன் யார? ஆறுமுகன் யார்? ஆதி சிவன் யார்? அன்னை யார்? அனைத்தும் நானடா அறியவில்லை எவரும். எவரும் உணரந்திடா சத்தியத்தை சொன்னேன். எவரும் உரைத்திடா சத்தியமும் சொன்னேன்.  

என் சேய்கள் யார் என உணரவில்லை நீயும். எனை நினையா ஞானியரை தொழுபவரும் என் சேயே.  அறிவிலே தெளிவு கொள் அகந்தையை வளர்த்துக்கொள். 

அகத்தியனே எல்லாமும் அமைதி கொள் குழந்தாய்.

உத்தமனே நம்பினால் எதையும் தருவோம். தருவோம் அண்டத்தையே ஆட்டிவிக்கும் வித்தை. தரமாட்டோம் நம்பிக்கை இல்லார்க்கு நாங்கள். நானேதான் நாங்களாக உள்ள உண்மை. நானே வந்து சொல்லிவிட்டேன் அறிவாய் , தெளிவாய்.  

 அடிமை இல்லை மகன் நீயும் பிறவிகண்ட எவருக்கும்.  அடிமை நீ நான் நீ என உணராவரைக்கும்.  உணராவரையும் உள் ஒளி பெருகிடாது உனக்கு. 

உனக்குமே பிரம்மாண்டம் அருளாய்த்தெரிந்தால் உண்மை இல்லை சாதாரண நிலை யான் உனக்கு.  

உனக்குமே சாதாணமாய் இருப்பேன் என நினைத்தால் உண்மை இல்லை மாபிரம்மாண்டம் யான் உணர்வாய். 

உணர்வாய் உணரத்துவேன் மகனே உனக்கு. உணர்வால், உணர்ச்சியால் கட்டுடா சக்தி யான். 

சத்தியத்திற்க்கு கட்டுப்பட்ட திருட்டு மாயை யான். சத்திய ஜோதி நானடா அறிந்தவர் எவரும் இல்லை. எவரும் இல்லை எனை காட்ட உந்தனுக்கு உலகில்.  எவரும் இல்லை எனை உணர்த்த உந்தனுக்கு உலகில். 

கடும் தவத்தை இயற்றிடடா அகத்தியன் பேரில். கருணைபட வெளிக்காட்டி மகிழ்வேன் அன்னை. 

அன்னை யானும் அவதாரம் பலவும் எடுத்தேன்.  அருளாளர் வடிவெல்லாம் நானே நானே. 

தனித்து நீ பார்த்து விட்டால் தனித்தே நிற்ப்பேன்.  தானே அனைத்தென உணர ஓர்மையாகிடுவேன். ஓர்மையாகிவிடுவேன் உன்னுள்ளும் யான் அன்றே. 

ஓர் எழுத்து உண்மையும் நானே நானே. ஊமை எழுத்து ரகசியமும் நானே. உலகை ஆளும் அருள் நிலையும் நானே நானே. நானே சத்தியத்தை உரைத்து மகிழந்தேன். 

நானே இட்டமுடன் உன்னுள் வாழ்வேன். யாவருக்கும் அடிமை இல்லா வாழ்வாய் வாழ்வாய்.  யாவரில் எனையும் சேர்த்தே சொன்னேன் உனக்கு. உனக்குமே பட்ட கல்வி, பயின்ற கல்வி , பயிலும் கல்வி உலகிலே எனையன்றும் உணரத்திடாது. 

நான் விரும்பா, எனை அறியார் எவரும் உலகில் நானே நீயாய் உள்ளதை அறிவாய்.

-அருள் ஆசி முற்றே-

-சுபம்-