“இறைவா !!!!! நீயே அனைத்தும்” இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்.

"இறைவா !!!!! நீயே அனைத்தும்!!!!"
"இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்"

உலகின் ஆதி குரு, மாமுனிவர், குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளிய தினசரி அனைவரும் அதிகாலையில் எடுக்க வேண்டிய உறுதிமொழி. :-


1.தர்மம் செய்வேன்
2.அனைத்திடத்திலும் பின் அன்பாக அதாவது அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன்.
3.போட்டி, பொறாமைகள் நீக்குவேன்
4.அனைத்தும் எந்தனுக்கே சொந்தம் என்று பின் உயிர்ப் பலியும் இடமாட்டேன்
5.பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன்
6.அப்படிக் கொன்றாலும், நிச்சயமாய் அதை யான் தடுப்பேன்
7.அவை மட்டும் இல்லாமல், தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும்.
8.பிறருக்கு நன்மை செய்ய வேண்டும்
9.பிறருக்காக உழைக்க வேண்டும்
10.பிற ஜீவராசிகளும் ( உயிரினங்களும் ) பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில்அனைவரும் நினைக்க வேண்டும்.
11.அப்படி நினைத்தால் அகத்தியன் வந்து அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பான் என்று சொல்மகனே

( அடியவர்களே. இந்த மகிமை புகழ் அகத்திய மாமுனிவர் அருளிய உறுதிமொழி வாக்கினை சிரம்மேல் ஒவ்வொரு நொடியும் ஏந்தி, பிரம்மாவின் முன்பு தலை நிமிர்ந்து நமக்காக விதியை மாற்றஉத்தரவிடும் வண்ணம் அனைவருக்கும் உலகில் உள்ள 700 கோடி மக்களுக்குச்சென்று அடையும்வண்ணம் எடுத்துச் சொல்லுங்கள். )

மற்றவர்களைப்பற்றி எண்ணிப்பார் அப்பனே. மற்றவர்களை எண்ணி எண்ணி, தான் கெட்டுப்போனாலும் பரவாயில்லை என்று யார் ஒருவன் நினைக்கின்றானோ அவனிடத்தில் இறைவன் பிச்சை ஏந்துவான் அப்பா. பிச்சை ஏந்துவான் அப்பனே. என் பக்தர்களுக்கு இது தெரிய நிச்சயம் வேண்டும் அப்பனே.


அகத்திய பிரம்ம ரிஷி உரைத்த முதல் தரப் புண்ணியம் பெறும் ஒரே வழி:- (1) அன்னதானம் + (2) திருவாசகம் சிவபுராணம் + (3) மக்கள் வாழ , நல் வழிகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுதல். இப்படிச் செய்தால் மட்டுமே , முதல்தரப் புண்ணியம் உண்டாகும் என்று குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி உரைத்துள்ளார்கள். இதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள் என்றும் அனைவருக்கும் கூறி உள்ளார்கள். இதுபோல் அனைவரும் செய்து முதல் தரப் புண்ணியம் பெற்றுக் கொள்ளுங்கள். இறை அருளுடன் வளமாக வாழுங்கள். வாழ்க வளமுடன்!!!!!!!!!

siththarkalatchi - Moving text


அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு :- “அப்பனே, தானங்கள் செய்க, அப்பனே, உன்னால் இயன்றவரை தானங்கள் செய்க. அனுதினமும், என் பக்தர்கள், ஒரு உயிருக்காவது உணவளியுங்கள். அது போதும். அப்பனே, அதுவே கோடி புண்ணியமாகும்.”


Thursday, June 12, 2025

சித்தர்கள் ஆட்சி - 455 :- அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு - அன்னதானம் புண்ணியங்கள் செய்பவர்களுக்கு சில விடை தெரியாத கேள்விகளும் அதற்கான சித்தன் அருள் பதிவுகளும் உங்கள் பார்வைக்குச் சமர்ப்பிக்கின்றோம்.

இறைவா நீயே அனைத்தும்.   

இறைவா நீ நன்றாக இருக்கவேண்டும்.



வணக்கம் அடியவர்களே , நம் குருநாதர் அன்பு அகத்திய மாமுனிவர் பாதம் வணங்கி , அன்னதானம் புண்ணியங்கள் செய்பவர்களுக்கு சில விடை தெரியாத கேள்விகளும் அதற்கான சித்தன் அருள் பதிவுகளும் உங்கள் பார்வைக்குச் சமர்ப்பிக்கின்றோம்.


===================

அன்பு அகத்திய மாமுனிவர் அடியவர்கள் மனதில் உள்ள விடை தெரியாத கேள்விகள் / சந்தேகங்கள் :- 


1) ஏன்  அன்னதானம் புண்ணியங்கள் செய்பவர்களுக்கும் கர்மா ஏற்படுகின்றது ? ஏன்  அவர்களுக்கெல்லாம் கஷ்டங்கள்தான் வருகின்றது? அந்த கஷ்டங்கள் வராமல் இருக்க , மன நிறைவுடன் வாழ என்ன செய்யவேண்டும்?

2) என்ன சொல்லிக்கொடுத்தல் கஷ்டங்கள் , துன்பங்கள் விலகும் ? 

3) புண்ணியங்களும்  செய்யும்போது சித்தன் அருள் வலைத்தளத்தில் உள்ள எந்த வாக்குகளை  அனைத்தும் நீங்கள் அனைவர்க்கும்  சொல்ல வேண்டும்?

4) புண்ணியங்களும்  செய்யும்போது  எப்போது உங்களிடம்  புண்ணியம் மிகுந்து காணப்படும்?


பதில் :- 

சித்தன் அருள் - 1488 - அன்புடன் அகத்தியர் - பொதுவாக்கு - மதுரை! 04.09.2023 பகுதி 8!

https://siththanarul.blogspot.com/2023/10/1488-04092023-8_29.html

====================

அன்பு அகத்திய மாமுனிவர் அடியவர்கள் மனதில் உள்ள விடை தெரியாத கேள்விகள் / சந்தேகங்கள் :- 


1) உயர் தர புண்ணியமென்றால் என்ன?

2) ஏன்  அன்னதானம் புண்ணியங்கள் செய்பவர்களுக்கும் கர்மா ஏற்படுகின்றது ?

3) ஏன் புண்ணியங்கள் செய்பவர்களுக்கும் தோல்விகள் ஏற்படுகின்றது?

4) எனக்குக் கஷ்டங்கள் வர உள்ளது என்றால் , எப்படி அதை போக்குவது?


பதில் :- 

சித்தன் அருள் - 1495 - அன்புடன் அகத்தியர் - பொதுவாக்கு - மதுரை! 04.09.2023 பகுதி 10!

https://siththanarul.blogspot.com/2023/11/1495-04092023-10.html

===================

அன்பு அகத்திய மாமுனிவர் அடியவர்கள் மனதில் உள்ள விடை தெரியாத கேள்விகள் / சந்தேகங்கள் :- 


1) ஏன் மதுரை அடியவர் இல்லத்தில் உலகத்தில் முதல் முறையாகப் புண்ணிய ரகசியங்களை உரைத்தார்கள் ?

2) வெறும் அன்னத்தை மட்டும் கொடுத்தால் ஏன் கர்மா வருகின்றது ?

3) அன்னதானத்துடன் , புண்ணியங்கள் பெறுவது  எப்படி?

4) ஏன் சித்தன் அருள் வலைத்தளத்தில் 2023 மதுரை வாக்கு - புண்ணியங்கள் செய்பவர்களுக்கு ஒரு பொக்கிஷம் ?

5) அன்னதானம் செய்யும் போது , உயர் முதன்மை புண்ணியம் பெரும் வழி முறை எது ?


பதில் :- 

சித்தன் அருள் - 1498 - அன்புடன் அகத்தியர் - பொதுவாக்கு - மதுரை! 04.09.2023 பகுதி 12!

https://siththanarul.blogspot.com/2023/11/1498-04092023-12.html


==========================

அன்பு அகத்திய மாமுனிவர் அடியவர்கள் மனதில் உள்ள விடை தெரியாத கேள்விகள் / சந்தேகங்கள் :- 


1) நம் குருநாதர் ஒரே ஒரு வாக்கில் ஒரு ரகசியம் அதனை  மட்டும் கெட்டியாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று உரைத்துள்ளார்கள். அது என்ன ரகசியம் ? எந்த வாக்கில் உள்ளது ?

2) ஒவொரு அன்னதானம், புண்ணியங்கள்  செய்யும்போது எப்படி முதல் வகை புண்ணியங்கள் பெறுவது - அதுவும் கர்மாக்கள் இல்லாமல் ?

3) எப்படி புண்ணியங்கள் செய்ய வேண்டும் என்று  தெரிந்துகொண்டு சரியான முறையில் செய்தால் கர்மம் எங்களை நெருங்காது?

4) என்ன செய்தல் அன்னதானம், புண்ணியங்கள்  செய்யும்போது எப்படி எனக்கு வரும் கர்மாவை நீக்குவது ?

5) அன்னதானம் மற்றும் புண்ணியங்கள் செய்யும்போது ஏன் அவசியம் சிவபுராணம் படிக்கவேண்டும் ?

6) ஏன் அன்னதானம், புண்ணியங்கள் செய்பவர்கள் அனைவரும் அவசியமாக எப்படி வாழ வேண்டும் என்று மற்றவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும் ? இது அவ்வளவு முக்கியமா ?

7) ஏன் நாங்கள்  அன்னதானம், புண்ணியங்கள்  செய்யும்போது  மக்களிடம் எடுத்து நேரில்  சொல்லிச் சொல்லி அவர்களை மாற்றம் அடையச் செய்ய வேண்டும்?


பதில் :- 

சித்தன் அருள் - 1505 - அன்புடன் அகத்தியர் - பொதுவாக்கு - மதுரை! 04.09.2023 பகுதி 17!

https://siththanarul.blogspot.com/2023/11/1505-04092023-17.html

==========================

அன்பு அகத்திய மாமுனிவர் அடியவர்கள் மனதில் உள்ள விடை தெரியாத கேள்விகள் / சந்தேகங்கள் :- 


1) முதல் வகையான புண்ணியம் என்றால் என்ன ? இது எந்த வாக்கில் நம் குருநாதர் உரைத்துள்ளார்கள்?


பதில் :- 

சித்தன் அருள் - 1097 - அன்புடன் அகத்தியர் - திருவண்ணாமலை வாக்கு!

https://siththanarul.blogspot.com/2022/03/1097.html

======================

அன்னதானம் செய்யும்போது  கர்மா இல்லாத உயர் முதல் வகை புண்ணியம் பெறும் உயர் ரகசியம் - விளக்கம்


(1) இறைவா நீயே அனைத்தும். இறைவா நீ நன்றாக இருக்கவேண்டும் என்று வாயார அனைவர் முன் சொல்லி பின்னர் திருவாசகம் சிவபுராணம் அனைவர் முன் ஓதுதல்.

(2) எப்படி வாழ வேண்டும் என்று மற்றவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும், மக்கள் நன்கு வாழ வழி சொல்லுதல் , குருநாதர் அளித்த 11 உறுதிமொழிகளை மக்களுக்குச் சொல்லுதல்

(3) அதன் பின்னர் அனைத்து அடியவர்களுக்கும் அன்னதானம் அளித்தல், மகிழ்தல்.

இறையருளால் இப்போது உங்களுக்கு கர்மா இல்லாத முதல் உயர் வகை புண்ணியங்கள் கிடைக்கும். வெற்றிகள் உண்டாகும்.

===========================


ஓம் அன்னை  ஸ்ரீ  லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சர்வம் சிவார்ப்பணம்!


No comments:

Post a Comment