“இறைவா !!!!! நீயே அனைத்தும்” இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்.

"இறைவா !!!!! நீயே அனைத்தும்!!!!"
"இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்"

உலகின் ஆதி குரு, மாமுனிவர், குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளிய தினசரி அனைவரும் அதிகாலையில் எடுக்க வேண்டிய உறுதிமொழி. :-


1.தர்மம் செய்வேன்
2.அனைத்திடத்திலும் பின் அன்பாக அதாவது அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன்.
3.போட்டி, பொறாமைகள் நீக்குவேன்
4.அனைத்தும் எந்தனுக்கே சொந்தம் என்று பின் உயிர்ப் பலியும் இடமாட்டேன்
5.பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன்
6.அப்படிக் கொன்றாலும், நிச்சயமாய் அதை யான் தடுப்பேன்
7.அவை மட்டும் இல்லாமல், தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும்.
8.பிறருக்கு நன்மை செய்ய வேண்டும்
9.பிறருக்காக உழைக்க வேண்டும்
10.பிற ஜீவராசிகளும் ( உயிரினங்களும் ) பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில்அனைவரும் நினைக்க வேண்டும்.
11.அப்படி நினைத்தால் அகத்தியன் வந்து அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பான் என்று சொல்மகனே

( அடியவர்களே. இந்த மகிமை புகழ் அகத்திய மாமுனிவர் அருளிய உறுதிமொழி வாக்கினை சிரம்மேல் ஒவ்வொரு நொடியும் ஏந்தி, பிரம்மாவின் முன்பு தலை நிமிர்ந்து நமக்காக விதியை மாற்றஉத்தரவிடும் வண்ணம் அனைவருக்கும் உலகில் உள்ள 700 கோடி மக்களுக்குச்சென்று அடையும்வண்ணம் எடுத்துச் சொல்லுங்கள். )

மற்றவர்களைப்பற்றி எண்ணிப்பார் அப்பனே. மற்றவர்களை எண்ணி எண்ணி, தான் கெட்டுப்போனாலும் பரவாயில்லை என்று யார் ஒருவன் நினைக்கின்றானோ அவனிடத்தில் இறைவன் பிச்சை ஏந்துவான் அப்பா. பிச்சை ஏந்துவான் அப்பனே. என் பக்தர்களுக்கு இது தெரிய நிச்சயம் வேண்டும் அப்பனே.


அகத்திய பிரம்ம ரிஷி உரைத்த முதல் தரப் புண்ணியம் பெறும் ஒரே வழி:- (1) அன்னதானம் + (2) திருவாசகம் சிவபுராணம் + (3) மக்கள் வாழ , நல் வழிகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுதல். இப்படிச் செய்தால் மட்டுமே , முதல்தரப் புண்ணியம் உண்டாகும் என்று குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி உரைத்துள்ளார்கள். இதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள் என்றும் அனைவருக்கும் கூறி உள்ளார்கள். இதுபோல் அனைவரும் செய்து முதல் தரப் புண்ணியம் பெற்றுக் கொள்ளுங்கள். இறை அருளுடன் வளமாக வாழுங்கள். வாழ்க வளமுடன்!!!!!!!!!

siththarkalatchi - Moving text


அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு :- “அப்பனே, தானங்கள் செய்க, அப்பனே, உன்னால் இயன்றவரை தானங்கள் செய்க. அனுதினமும், என் பக்தர்கள், ஒரு உயிருக்காவது உணவளியுங்கள். அது போதும். அப்பனே, அதுவே கோடி புண்ணியமாகும்.”


Sunday, February 4, 2024

சித்தர்கள் ஆட்சி - 327 : அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு (2021ஆம் ஆண்டு ஆடி1 அன்று உரைத்த வாக்கு)

 



“இறைவா!!! அனைத்தும் நீ”


உலகின் ஆதி குரு , மாமுனிவர் , குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு:- 


2021ஆம் ஆண்டு ஆடி 1 அன்று  அகத்தியர் உரைத்த பொதுவாக்கு.


ஆதி சிவசங்கரி திருத்தாள் போற்றி போற்றியே!


மனமகிழ்ந்து சொல்கின்றேன் அகத்தியன்.


இவ்வுலகில் வரும் மாற்றங்கள் எண்ணிலடங்கா எண்ணிலடங்கா என்பேன். ஆனாலும் மனிதர்கள் எப்பொழுது எதைச் செய்ய வேண்டும் என்றெல்லாம் புரியாமல் போகும்

ஆனாலும் இறை பலங்கள் அதிகமாக காணப்படும். ஆனாலும் இறைவனை நோக்கி பின் சென்றாலும் மனிதனுக்கு புத்தி இல்லாமல் பின்பு கீழே விழுந்து விடுவான் என்பேன்.

என்பேன் இதன் பின்னும் மறுவாக்கு எவ்வாறு என்பதையும் உணர்த்தும் அளவிற்கு மேன்மையான இப்புவியில் உயர்வான இடத்திற்கு கூட கிரகங்கள் அழைத்துச்செல்லும் ஆனாலும் மனிதர்களின் போக்கு சரியில்லாமல் கிரகங்கள் அவனை தட்டி தட்டி அமுக்கி விடும்.


அப்பன்களே நல்முறையாக, நல்முறையாக வாழ்ந்து விடுங்கள் உந்தன் வாழ்க்கையை பற்றி பின் எவ்வாறு என்று உணர்ந்து இருக்கின்றீர்களோ அவ்வாறே வாழ கற்றுக்கொள்ளுங்கள்.


உண்மை, நியாயம், தர்மம், அப்பனே உத்தமம், இவை போன்று, இதேபோன்று வாழ்ந்தால்தான் இனிமேலும் வாழ்க்கையை கடக்க முடியும் என்பேன்.


அதை விட்டுவிட்டு பொய், பொய் கூறி அலைதல், ஏமாற்றுதல், பிறரை ஏமாற்றி பணம் பறித்தல் இவையெல்லாம் செய்து கொண்டிருந்தால் அப்பனே பின் எவ்வாறு என்பதையும் கூட பின் நீ அவனிடம் இருந்து பணம் பறித்தாயே அவன்தான் உயர்வானே தவிர நீ ஏமாற்றப்படுவாய் கடைசியில்.

அப்பனே ஒழுங்காக நடந்து கொள்ளுங்கள் வருங்காலங்களில் அப்பனே அவரவர் வினைக்கு ஏற்பவே கிரகங்கள் நிச்சயம் வேலை செய்யும் என்பேன்.

அப்பனே ஏமாற்றி விடாதீர்கள் ஏமாற்றி விடாதீர்கள்.

அப்பனே இன்னும் இன்னும் பல எவ்வாறு என்பதையும் கூட பரிகாரங்கள் மனிதர்கள் செய்து கொண்டுதான் இருக்கின்றார்கள் ஆனாலும் அப்பனே விதியின் மாற்றத்தை யாராலும் மாற்றம் மாற்ற முடியாது இதை மட்டும் தெரிந்து கொள்ளுங்கள் ஆனாலும் அப்பனே அவ் விதியை தான் யான் சொல்லிக்கொண்டே வந்திருக்கிறேன் மனிதர்களே புரிந்து கொள்ளுங்கள்.


அப்பனே பின் நலம் நலமாகும் என்றெல்லாம் அப்பனே இவ்வுலகத்தில் எவை என்றுகூட மனிதனால் அனைத்தும் செய்ய இயலும் என்பேன் ஆனாலும் மனிதன் எவ்வாறு செய்தால் பின் நலமாகும் உயர்ந்து விடலாம் என்பதை கூட என்னால் கூற முடியும்.


ஆனாலும் அதனை வைத்து அப்பனே ஏமாற்றி விடுவார்கள் ஏமாற்றியும் பிழைப்பார்கள் அப்பனே கலியுகத்தில் அப்பனே வருங்காலங்களில் ஏமாற்றுபவர்கள் தான் அதிகம் அப்பனே ஆனாலும் அப்பனே இப்போதுகூட சொல்கின்றேன் சித்தர்கள் உலா வந்து கொண்டிருக்கின்றார்கள் இப்புவியில் அப்பனே ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக பார்த்தால் ஏமாற்றுபவர்கள் தான் அதிகம் இருக்கின்றார்கள் அப்பனே சித்தர்களை கொண்டு ஏமாற்றினால் அப்பனே அப்பனே பொறுத்து கொண்டிருக்கின்றோம் யாங்கள். 


அப்பனே ஆனால் அடி கொடுத்தால் பின் எவ்வாறு என்பதையும் கூட இனிமேலும் ஒவ்வொருவருக்கும் ஒரு ஒரு விதமான நோயை ஏற்படுத்துவோம் யாங்கள்.


அப்பனே நிச்சயமாய் நிச்சயமாய் சொல்கின்றேன் அப்பனே பின் எவ்வாறு என்பதையும் கூட ஏமாற்றி விடாதீர்கள் அப்பனை இவ்வுலகத்தில் உலா வந்து கொண்டிருக்கின்றோம் சித்தர்கள் யாங்கள் அப்பனே ஒவ்வொருவரும் ஒவ்வொரு முறை படுத்தியும் ஏமாற்றி வருகிறார்கள் ஏமாற்றம் எவ்வளவு காலங்கள் காலங்களுக்கு என்று யாங்கள் பார்க்கின்றோம்.


அப்பனே எவ்வாறு என்பதையும் கூட வேண்டாம் அப்பா வேண்டாம் சொல்கின்றேன் நியாயமாக நியாயமாக வாழ கற்றுக்கொள்ளுங்கள் இறைவன் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றான் அப்பனே பொருள் சிலரிடமிருந்து சில ஏழைகளிடம் இருந்தும் அப்பனே பொருள்கள்  பறிக்காதீர்கள் அப்பனே அன்பு கருணை வையுங்கள் அப்பனே அனைவரும் ஒன்றைப் போல் நினையுங்கள் அப்பனே பொறாமை வேண்டாம்.


போட்டிகள் வேண்டாம் அப்பனே இவை இருந்தால் பொறாமையே போட்டியே தன்னை அழித்து விடும் என்பேன் அப்பனே வேண்டாம் வேண்டாம் அப்பா எங்கள் வழியில் வருபவர்கள் உத்தமமாக வாழ கற்றுக்கொள்ளுங்கள்.


அப்படியே திரும்பவும் சொல்கின்றேன் கடைசியாக எச்சரிக்கின்றேன் அப்பனே கடைசியாக எச்சரிக்கின்றேன் எச்சரிக்கின்றேன் எச்சரிக்கின்றேன் மறுபடியும் தவறு மேல் தவறு செய்தால் தண்டனை நிச்சயம் உண்டு என்பேன்.


அப்பனே நல் முறையாய் அகத்தியன் பற்றி எல்லோருக்கும் அறியும் என்பேன் .


அறியும் என்பேன்  கருணை உள்ளவன் என்பதை கூட அறிவீர்கள் ஆனாலும் அப்பனே மனிதர்கள் மனிதர்களை நம்பி பிழைக்காதீர்கள்.


அப்பனே எவ்வாறே மனிதனை நம்பி மனிதன் பிழைப்பதா?


அப்பனே இது தவறு என்பேன் தவறு என்பேன் இன்னொரு இன்னொரு முறையும் விளக்குகின்றேன்.


அப்பனே இவ்வுலகத்தில் மனிதன் மனிதனை அழித்து கொண்டு தான் இருக்கின்றான் அப்பனை ஏமாற்றாதீர்கள் ஏமாற்றாதீர்கள் என்று கனிவுடன் சொல்கின்றேன்.


அப்பனே ஆனாலும் பலமுறை சொல்லியும் அப்பனே ஏமாற்றியவர்கள் ஏமாற்றப் போகிறார்கள் என்பதெல்லாம் அப்பனை ஒன்றை உரைக்கின்றேன் அனைவரையும் இறைவன் படைத்தான் ஆனாலும் இறைவன் படிதான் நடந்து கொண்டிருக்கின்றது விதியின்படி தான் நடந்து கொண்டிருக்கின்றது ஆனாலும் அப்பனே இதில் மனிதன் திருத்துவானா??


எதற்காக திருத்துவான்? எதற்காக எல்லாம் திருத்துவானா?? 


திருத்துவான் ஏன் அப்பனே மனிதனை மனிதன் திருத்த முடியுமா நிச்சயம் முடியாது என்பேன் இவையெல்லாம் திருத்தும் அளவிற்கு நான் அதைச் செய்கிறேன் இதைச் செய்கிறேன் எல்லாம் ஏமாற்றி பணம் பறித்து அப்பனே ஆனாலும் பணம் பறித்து ஓடிவிடுவார்கள் ஆனாலும் ஏமாறுபவர்கள் அங்கேதான் உட்கார்ந்து இருப்பார்கள் அப்பனே ஒன்றும் நடக்கப்போவதில்லை அப்பனே எவ்வாறு என்பதையும் கூட மனிதர்களை நம்புவதை விட இறைவனை நம்புங்கள் ஆனாலும் அப்பனே இவை என்று பல சித்தர்கள் சொல்லிக் கொண்டுதான் இருக்கின்றார்கள் ஆனால் மனிதனுக்கோ புத்தி இல்லை புத்தி இல்லை மனிதன் ஏதாவது சொல்லிவிட்டால் ஓடோடி போகிறார்கள் அப்பனே இது ஞாயமா அப்பனே சித்தர்கள் எவ்வாறு என்பதையும் கூட அப்பனே சித்தர்கள் பின் எப்பொழுதும் பணத்திற்காக ஆசைப்படமாட்டார்கள் அப்பனே அப்பனே இவ்வுலகத்தில் சித்தர்கள் வந்ததே அப்பனே பின் நல்வழிப்படுத்தி நல் ஒழுக்கமாக வாழ பின் வாழ்ந்து நல் முறையாக பெயர் புகழும் வாழ்வதற்கே பின் ஏற்படுத்தி இருக்கின்றோம் யாங்கள்.


அப்பனே அதனால்தான் சொல்கின்றேன் அப்பனே எவை என்றும் கூட எங்கு பணம் அதிகம் இருக்கின்றதோ நிச்சயமாய் அங்கு யாங்கள் இருக்க மாட்டோம்.


என்பதுதான் ஆனாலும் அப்பனே பொய் சொல்லி பொய் சொல்லி ஏமாற்றுகிறார்களே அப்பனே 


நியாயமா? அப்பனே?


அப்பனே தண்டனை உண்டு தண்டனை உண்டு இப்படி எவ்வாறு எதனால் என்பதை கூட யான் பொறுத்திருந்துதான் பார்த்துக் கொண்டிருந்தேன் அப்பனே எவ்வாறு என்பதையும் கூட நினைத்துப் பார்க்கும் அளவிற்கு கூட இவ்வுலகில் மாற்றங்கள் உண்டு மாற்றங்கள் உண்டு ஆனாலும் மனிதனின் மனிதனின் மாற்றம் உண்டு ஆனால் மனிதன் சத்திய வழியில் நிற்பதில்லை அதனாலே மனிதன் மாற்றம் ஏற்படுத்தினாலும் மனிதன் கீழே இறங்கி விடுவான் அப்பனே.


அப்பனே கலியுகம் கலியுகத்தில் ஏமாற்றுபவர்கள் அதிகம் என்பேன் அப்பனே சத்தியம் நீதி தர்மம் எங்கடா?? ஏதடா??


அப்பனே தர்மத்தைக் கடைப் பிடி அப்பனை அனைவரும் ஒன்றாக கடைபிடி பின் எவ்வாறு பின் அனைவரும் சமம் ஏழை பணக்காரன் என்ற வித்தியாசம் இல்லாமல் சமம் என்ற சொல்லுக்கு அப்பனே அப்பொழுதுதான் என்னுடைய அருளைப் பெற முடியுமே தவிர அப்பனை மற்றவை எதைச் செய்தாலும் என் துன்பங்கள் தான் விளைவிக்கின்றேன். 


இப்பொழுதே சொல்கின்றேனடா மனிதா மனிதா உணர்ந்துகொள் ஏமாற்றாதே பொறாமை கொள்ளாதே அப்பனே என்னுடைய அடியவராக இருந்தாலும் பொறாமை கொண்டவர்களாகவே இருக்கின்றார்கள் நிறையபேர் அப்பனே வேண்டாமாடா எச்சரிக்கின்றேன்.


எச்சரிக்கின்றேன் கடைசியாக ஒரு முறை ஆனாலும் இவ்வாறே சென்று கொண்டு இருந்தால் யானே அழிப்பேன் வந்து.


பின் அப்பனே அப்பனே அகத்தியா என்று சொல்லி கொஞ்சவும் கூடாது என்பேன்.


அப்பனே ஒன்றை தெரிவித்துக் கொள்கின்றேன். அப்பனே வேண்டாம் அப்பா.


கர்மத்தை கர்ம பூமியில் கர்மம் விலகட்டும் அப்படியே இருந்து விடு. இவை எல்லாம் விட்டுவிட்டு அப்பனே இனிதான் ஆனாலும் இன்னும் போலியானது போலியானவர்களே வருவார்களப்பா .


சாமியார்கள் யாங்கள் சாமியார்கள் நாங்கள் அதை செய்கின்றோம் இதைச் செய்கின்றோம் என்பதெல்லாம் சொல்லிச் சொல்லி ஏமாற்றி விடுவார்கள் அப்பனே நம்பாதீர்கள்.


அப்பனே நல் முறையாக இன்னும் கூட வருவார்களப்பா சுவடியின் மூலம் பணம் சம்பாதிக்கலாம் என்று சுவடியை வைத்துக்கொண்டு ஏமாற்றுவார்களப்பா.


ஏமாற்றி திரிவார்களப்பா.


அப்பனே எச்சரிக்கின்றேன் அடி விழுந்தால் அனைத்தும் விழுந்து விடுவீர்கள் அப்பனே இனிமேலும் ஏமாற்றியது போதும் திருந்தி விடுங்கள் அப்பனே நல் முறையாக.


அப்பனே மனசாட்சி என்று ஒன்று இருக்கின்றது அதை கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள் மனசாட்சிக்கு தகுந்தார் போல் நடந்தால் விளைவுகள் பலமாகும் என்பேன் அப்பனே சித்தர்கள் யாங்கள் பார்த்துக் கொண்டே இருக்கின்றோம் அப்படி ஒன்றே ஒன்று யோசித்துக் கொள்ளுங்கள் அப்பனை இனிமேலும் தவறு செய்தால் முதலில் நோயை சிறிது ஏற்படுத்துவோம் அதன்பின்னே பலமாக்குவோம்.


அப்பனே உணருங்கள் திருந்துங்கள் நல்வழி படுத்துகின்றேன் யான். 


அப்பனே வேண்டாமப்பா


அப்பனே நல்வழி செல்லுங்கள். அதைச் செய்கிறேன் இதைச் செய்கிறேன் ஏன்? பொய்யான விஷயங்களை செய்து கொண்டிருக்கின்றீர்கள் நியாயமா? இது?


அப்பனே யானும் பலமுறை பூலோகத்தில் வந்து கொண்டுதான் இருக்கின்றேன் அப்பனே கஷ்டங்கள் கஷ்டங்கள் என்று என்னிடத்தில் வருகின்றீர்களே! அப்படி நீங்கள் முதலில் என்ன செய்தீர்கள் என்று நினைத்து பாருங்கள் அப்பனே அப்பொழுது புரியும்.


அப்பனே நிச்சயமாய் விதியையும் என்னால் மாற்ற முடியும் அப்பனே தெரிந்துகொள்ளுங்கள்.


அன்பால் இறைவனை வணங்குங்கள் போதுமானது மற்றவை யான் செய்கின்றேன் அப்பனே அடுத்த வாக்கும் நல் முறையாக சொல்கின்றேன்.




ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய பிரம்ம ரிஷி திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!

No comments:

Post a Comment