பகுதி - 28
“அனைத்தும் இறைவா நீ”
அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு - மதுரை அடியவர் ஒருவர் இல்லத்தில் இரண்டாம் நாள் உரைத்த வாக்கு - 05.09.2023 ( மதுரை வாக்கு - பகுதி 28)
இந்த வாக்கின் முந்தைய பகுதி கீழே உள்ள பதிவில் படிக்கவும்
https://siththarkalatchi.blogspot.com/2023/11/231-5-9-2023-27.html?m=0
கேள்வி கேட்ட அடியவர்:- ஐயா நான் openஆக சொல்ரேன். இந்த பணம் வாங்கி கொடுத்தேன் இல்லையா…( தனிப்பட்ட பிரச்சினையை விவரிக்க ஆரம்பித்தார் …)
குருநாதர்:- அப்பனே செலவு செய்து விட்டான். அவ்வளவுதான் அப்பனே.
அப்பனே இதே போல் நின்று அப்பனே தியானங்கள் செய் உன்தனுக்கே தோன்ற வைப்பேன்.
நாடி அருளாளர்:- ( இதோபோல் ஒற்றைக்காலில் நின்று தியானங்கள் செய்ய குருநாதர் உள் உரைப்பார்கள் என்று விளக்கம் )
குருநாதர்:- அதனால்தான் அப்பனே ஒரு வேளை யார் சொன்னாலும் அறிவுகள் இருக்கின்றது அல்லவா? அப்பனே யோசித்து செய்ய வேண்டும் என்பேன். யோசித்து செய்யாவிடில் அப்பனே கடைசியில் நீங்கள் தான் சிக்கிக் கொண்டு அப்பனே தவிப்பீர்கள் பின்பு இறைவா இறைவா என்று சொன்னாலும் இறைவன் எப்படியப்பா காப்பாற்றுவான்? அப்பனே சொல்லுங்கள் அப்பனே.
அதனால் அப்பனே நிச்சயம் விளக்கங்கள் நீங்கள் தர வேண்டும் சொல்லிவிட்டேன். மூவருமே ஒவ்வொரு கருத்தையும் மக்களுக்கு புரிய வையுங்கள்.
நாடி அருளாளர்:- எதாவது மக்களுக்கு ஏதாவது சொல்லி புரிய வைங்க. நீங்க ஒரு கருத்த சொன்னா , இவரு கொஞ்சம் , நீங்க கொஞ்சம். முனு பேருமே சொல்லி புரிய வைக்கனும்
அடியவர் 1:- ஐயா நான் அகத்தியருடைய பெருமையை சொல்ரேன் ஐயா. குருநாதர் பெருமையை. எல்லாருக்கும் தெரிஞ்சு இருக்கும். தெரியாத விசயங்களை சொல்ரேன்.
நாடி அருளாளர்:- சொல்லுங்க ஐயா.
அடியவர் 1:- அகத்தியர் வந்து சப்த ( ஏழு ) லோகங்கள் என்று சொல்லுவாங்க.
அந்த ஏழு உலகங்கள்.ஏழு பிரபஞ்சத்தில் நம்ம வசிக்கக்கூடிய இந்த பூமி முதன்மையான பிரபஞ்சம். இந்த பிரபஞ்சத்தில் சூரியனை இயக்குவதே அகத்தியர்தான். ஏழு பிரபஞ்சத்தில முதன்மையானது இந்த பூமி சூரியனால இயக்கப்படுது. அப்போ இந்த சூரியனை இயக்குவது அகத்தியர்தான். அகத்தியர் தான் உள்ள ஈசனாக நின்று பூமியை இயக்குகின்றார். இதுல இந்த பிரபஞ்சத்தை control பன்றதே அவர்தான்.
சூர்யனுக்குள்ள பாத்தீங்கன்னா ஈசன். ஈசானன்க்கு அப்புறம் ஆதி சக்தி. ஆதி சக்தி அதுக்கு உள்ள அகத்தியர்தான் இருக்கிறார். அதுக்கு அப்புறம் தான் சூரியனுடைய புறப்பகுதி. சூரியனுடைய குழந்தைகள். வெளிப்புறத்தில் சூரியன் இருக்கின்றார். So உள்ள வந்து பாத்தீங்கன்னா ஈசனுக்கு அப்புறம் வந்து ஆதி சக்தியோட கரைந்து உருகி இருக்கிறார். So அப்டின்றப்போ ஒவ்வொரு உயிருக்குள்ளேயும் அதாவது நம்மளுடைய உங்களுடைய சிரசுக்குள்ள இருக்கக்கூடிய மூளைதான் இறை பகுதி. இந்த இறை பகுதிக்குள்ள அகத்தியர்
வசிக்கிறாரு. அதாவது மூளை என்பது இறைவன் வசிக்கக்கூடிய இடம். நம்ம சிரசில அகத்தியர் எல்லா பேருக்கு உள்ளேயும் அகத்தியர் இருக்கிறார்.
( வெளியில் ) எங்கயும் இல்ல. இறைவன் எங்கும் இருப்பது போல அகத்தியர் நமக்குள்ள இருக்குறாரு. ஆனா நம்ம தான் வந்து நம்ம வெளிய கடவுள தேடிகிட்டு இருக்கோம். நமக்குள்ள கடவுள் இருக்கின்றார். நம்ம நம்மள சுத்தப்படுத்திகிறப்போ அகத்தியர் இவ்வளவு நேரம் சொன்ன மாதிரி, தான தர்மங்கள் செய்து, சரிங்களா. அவரு சொன்ன மாதிரி இவ்வளவு நேரம் சொன்ன மாதிரி நீதி நெறி நடந்து , பிற உயிர்களைக் கொல்லாமல் , நம்ம நல்ல வாழ்க்கை வாழ்ந்து வந்ததோம்னா உண்மையிலேயே சொல்றேன் நமக்குள்ள இருக்க கூடிய தெய்வமான அகத்திய முனி நமக்கு வெளிவந்து நமக்கு காட்சி தந்து நம்மை வழிநடத்துவார்.
குருநாதர்:- அப்ப னே இதற்காகவே அப்பனே உன் இல்லத்திற்கு ஜீவ நாடி வரும் என்பேன். ஆனால் இங்கே தான் கேள்விகள் கேட்க வேண்டும் என்பேன் அப்பனே.
( அடுத்த இரண்டாம் அடியவர் உரைக்க ஆரம்பித்தார் )
அடியவர் 2:- அய்யா அம்மா அப்பா அம்மா எப்படி ஒரு பிள்ளை பாக்குற மாதிரி கோடான கோடி கருணையா அப்பா அகத்தீசன். ஒரு எண்ணிக்கையில அடங்காத ஒரு தாய், தந்தையும் ஆனவர் நம் குருநாதர். அவரு கிட்ட
வந்து பாத்திங்கன்னா கடவுள், தாய் எல்லாத்தையும் தாண்டி ஒரு அன்பு கருணை உள்ள ஒரு ஈசன் அதனால வந்து பாத்திங்கனா நமக்கு எந்த பிரச்சனையாக ஓடி அம்மா அப்பா தான் போகும் எந்த ஒரு கஷ்ட நஷ்டமெல்லாம் அம்மா அப்பா எப்டி நம்ம ஷேர் பண்ணி ஒரு அந்த மாதிரி
குருநாதருக்கு கருணைக்கடல் அந்த கருணை மழை அவர்தான் எல்லாமே அவர எப்போதுமே வந்து பாத்திங்கன்னா அவருடைய நாமத்துல நம்ம இருந்தா அப்படினா எந்த பிரச்சனையும் சூரியனைக் கண்ட பனி போல வந்து உருகி ஒடிரும் ஐயா.அதனால எப்பவுமே எல்லாருமே வந்து நம்ம நம்மளும் சரி நம்மள சார்ந்தவங்களும் சரி இந்த கருணைக் கடல்ல கொண்டு போய் நம்ம எல்லாத்தையும் வழிகாட்டுனோம் என்றால் அவங்க எல்லாரும் நல்லா இருப்பாங்க. நம்ம வந்து பிறவி என்னும் பெரும் கடல் இதை அவருடைய திருஅடிபற்றி நீந்தி
அவருடைய திருவடிபாதத்துல நம்ம போய்விடலாம் ஐயா. அந்த திருவடிபாதம் நமக்கு கிடைத்தால் இந்த பிறவி நமக்கு வராது. திருப்பி திருப்பி பல யோனிகள்ல பிறந்து பிறந்து இந்த மாதிரி நம்ம கஷ்டத்த அனுபவிக்காம அவருடைய திருவடி பாதத்திலேயே எப்போதுமே சந்தோசமாக நம்ம இருந்துடலாம் ஐயா. நமக்கு தேவையானது இந்த பணம், சொத்து அதோட பெரிய கிடைப்பெரும் அரியதுன்னா மோட்சம்தான். அதை வந்து அப்பா குடுக்க readyஆ இருக்குறாரு. அதுக்கு நம்ம தகுதியா வாய்தவரா நம்ம மாறிடனும். அது அவரு திருவடியை பற்றி நம்ம மாறிடனும் ஐயா.
( இதனிடையில் அங்கு சிலர் அடியவர்களுக்கு வெளியே இருந்து தேனீர் வரவழைத்து கொடுத்தனர். இதை கவணித்த கருணைக்கடல் இறங்கிவந்து பின்வருமாறு உரைத்தார்கள்..அது சுயசார்பு பொருளாதாரம் மற்றும் உணவு தயாரிப்பில் வரும் கர்மங்களை நீக்கும் வழி ஆகும். வெளியே சாப்பிடும் உணவில் கட்டாயம் கர்மா இருக்கும். இல்லத்தில் ஆத்மாரத்தமாக செய்யும் உணவு தயாரிப்பே கர்மாவை தவிர்கும். இன்றும் பல இல்லத்தரசிகள் அனைத்து உணவு இல்லத்தில் தயாரிக்கும்போது ராமர் மந்திரம், சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்பணம், சர்வம் சிவார்ப்பணம், சர்வம் விஷ்ணுவர்பணம் என்று சொல்லி சொல்லியே தன்குடும்பத்தை உணவு கர்மத்தில் விழாமல் காக்கின்றனர். அந்த தெய்வீக இல்லத்தரசிகளை போற்றுவோம். இப்போது மீண்டும் குருநாதர் வாக்கின் உள நுழைவோம்….)
குருநாதர்:- அப்பனே அனைவருமே அப்பனே தற்பொழுது தேநீர் என்று சொல்கிறார்கள் அப்பனே அருந்துகின்றார்கள். அதை யார் கொடுத்தவர்கள் அதை யார் கொடுத்தவர்கள்? அவர்கள் முன்னே ( வரட்டும்).
நாடி அருளாளர்:- அம்மா இந்த டீ எல்லாம் இங்க யார் குடுத்தாங்க. வர சொல்லுங்க அவங்களை.
அடியவர்:- ( பல உரையாடல்கள், சலசலப்பு அங்கு. வாங்கி கொடுத்தவர், கொண்டுவந்த அனைத்து அடியவர்கள் ஜீவ நாடியின் முன்னர் வந்தனர் )
குருநாதர்:- அப்பனே இதை ஏன் கொடுத்தாய்?
அடியவர:- (அங்கு உள்ள ஒரு அடியவர் ) ஐயா வாங்கிட்டு வர சொன்னாங்க.
குருநாதர்:- அப்பனே இத்தனை பேர்கள் ( இங்கு ) இருக்கிறார்களே? ஒருவருக்காவது இதை ( தேனீர் ) செய்ய செய்ய தெரியாதா என்ன?
நாடி அருளாளர்:- இத்தனை பேர் இருக்காங்களே இங்க காபி டீ யாருக்கும் தயார் செய்ய தெரியாதான்னு கேட்கின்றார்.
அடியவர்:- தெரியும் ஐயா
குருநாதர்:- அப்பனே முதலில் யாருக்கு யார் இடத்தில் கொடுத்தாய்?
( பல உரையாடல்கள். ஒரு அம்மை வந்தார் )
குருநாதர்:- அம்மையே நீதான் அல்லவா? அனைவருக்கும் நீயே உன் கையால் கொடு. அம்மையே தயாரித்து கொடு.
( இந்த அம்மை மிகவும் கொடுத்து வைத்தவர். கருணாமூரத்தியே நேரில் கொடுத்த அருள் உத்தரவு. இந்த அம்மை மட்டும் தனியே அனைவருக்கும் தயாரித்து கொடுக்க உத்தரவு இட்டார்கள்)
குருநாதர்:- அம்மையே என்று அறிய முதலில் இச்சோம்பேறியை போடச்சொல்.
( அடியவர் தேனீர் தயார் செய்ய ஆரம்பித்தார். இதனிடையில் பல உரையாடல்கள்)
குருநாதர்:- அம்மையே ஆசைகள் அனைவருக்குமே கேளுங்கள்.
( மீண்டும் கருணைக்கடல் அனைவருக்கும் கேள்வி கேட்க ஒரு வாய்ப்பு அருளினார்கள்)
(அடியவர் ஒருவர் தனது பெயரை கூறினார்)
குருநாதர்:- அப்பனே உந்தனுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கிறேன். அனைவருக்கும் என்ன வேண்டும் என்று கேட்டிட்டு என்னிடத்தில் கேள் அப்பனே.
( இந்த அடியவருக்கு கருணைக்கடல் அனைவரின் கேள்விகளை கேட்டு நாடி அருளாளருடம் சொல்ல உத்தரவு இட்டார்கள்)
அடியவர்:- ஐயன் வந்து கிருமிகள் தொற்று வரப்போகுதுன்னு ஜீவ நாடியில. அதனால
ஐயன் வந்து பல பரிகாரங்கள் , தானங்கள் தருமங்கள் செய்யனும்னு சொல்லிட்டாங்க. மக்களுக்கு எடுத்து எல்லாமே சொல்லிட்டாங்க. நீங்க தர்மப்படிதான் வாழனும். நீங்க தர்ம சிந்தனையோட இருக்கனும் என்று பல இடங்களில் / வலைதளங்களில் சொல்லிட்டாங்க. ஆனா இப்ப அடியேனுடைய ஒரு எண்ணம் என்ன ஒரு கேள்வினா இப்போ அக்னிஹோத்தரம் சொல்லி இப்ப பண்ணிட்டு இருக்காங்க. அது இல்லந்தோறும் அகத்தியப்பெருமானுடைய அணியவர்களோ , மற்றவர்களோ அந்த அக்னி ஹோத்தரம் காலை மாலை தொடரந்து செய்யலாமா? அய்யன் உத்தரவு கொடுக்கனும்.
குருநாதர்:- அப்பனே 108 மூலிகைகளால் சுவாசித்தாலே அப்படியே பல நோய்கள் தீரும் அப்பா. முடிந்தது.
அடியவர்:- வாழ்க்கை நிலை தடுமாற்றம்…
குருநாதர்:- அப்பனே என்ன செய்கிறாய் என்று கேள்?
அடியவர்:- (_________)
குருநாதர்:- அப்பனே என்னை பற்றி கேள்.
(அடியவர் அடியவரிடம் கேட்டார். )
அடியவர் :- ( கருணைக்கடல் அகத்திய பிரம்ம ரிஷி குறித்து சில செய்திகள் உரைத்தார் )
குருநாதர்:- அப்பனே யான் சொல்கின்றேன் அப்பனே. இது போல் அப்பனே பின் அதாவது 100 பேரையாவது அப்பனே உயிர்களை கொன்று அப்பனே சாப்பிட்டக் கூடாது என்று சொல்லச் சொல் அப்பனே. தானாக அனைத்தும் மாறும் என்று சொல்.
( அசைவம் சாப்பிடும் இந்த அடியவருக்கு அவர் அசைவம் உண்ணுவதை வாழ்வில் அடியோடு நிறுத்தி பின்னர் 100 பேரிடம் அசைவம் தவிர்க்க வேண்டும் என்று உரைக்க வேண்டும் என்று கருணைக்கடல் குருநாதர் ஒரு வினை தீர்க்கும் எளிய வழி சூட்சும பரிகாரத்தை அருளினார்கள் )
குருநாதர்:- அப்பனே முதலில் கூறு அவன் தனக்கு பிற உயிர்களின் மாமிசத்தை உண்ணக் கூடாது என்று. அப்பனே நீ கேள் இவன்தனை.
அடியவர்:- ( சில உரையாடல்கள் )
குருநாதர்:- அப்பனே நீ கூறு ஈசனைப் பற்றி.
அடியவர்:- ஈசன் தான் மூலப்பொருளாக இருக்கின்றார். அவரை மீறிய தெய்வங்கள் இல்ல. அவரைய நினைச்சுகிட்டா வாழ்க்கையில எல்லாமே நடக்கும். அவர் அருளால் தான் இந்த உலகத்தில் எல்லாமே நடக்கின்றது. அவரு இன்றி எந்த அனுவும் அசையாது.
குருநாதர்:- அப்பனே பிற உயிர்களை கொல்லாது என்று ஏன் சொல்கிறாய் என்று அவன் இடத்தில் கூறு.
அடியவர்:- நம்ம மாதிரி தான் இன்னொரு உயிரும் பிறந்திருக்கு. அதனால அந்த உயிருக்கு ஜீவ காருண்யத்தோட இருந்து அந்த உயிர காப்பாத்தனும்.
குருநாதர்:- அப்பனே இப்பொழுது அதைத்தின்றால் ( அசைவம் ) நிச்சயமாய் நோய்கள் வரும் அப்பா. இப்பொழுது நீயே கூறிவிடு சாப்பிட்டால் நோய்கள் வரும். உடம்பில் அனைத்து குறைகளும் வரும் அப்பனே என்று நீயே கூறு பலமாக அனைவருக்கும் பலமாக.
அடியவர்:- எந்த உயிரையும் கொல்லக்கூடாது.இந்த உயிரை கொன்று சாப்பிடுவதனால கன்டிப்பாக நோய் வரும் என்று அகத்தியர் சொல்ரார். அதனால ஜீவ காருண்யத்தை கடை புடிக்கனும் என்று அகத்தியர் சொல்ரார்.
அடியவர் 2:- அந்த உயிரோட கர்மாவும் நமக்கு சேரும்.
குருநாதர்:- அதனால் அப்பனே அனைவருக்கும் வள்ளல் பெருமான் சொன்னானே அதைச்சொல்.
அடியவர்:- வள்ளல் பெருமான் ஜீவகாருண்யத்தை அனைவரும் கடைபிடிக்கனும். எந்த உயிரையும் கொல்லக்கூடாது. கொல்லாமை ஐயா சொல்லி இருக்காங்க. அத வந்து எல்லாரும் பின் பற்ற வேண்டும்.
குருநாதர்:- அப்பனே பின் ( வள்ளலார் இராமலிங்க அடிகள் ) அவனை விட ஒரு ஞானியா? அப்பனே. அவன் சொல்வதை கேட்காவிடில் அப்பனே அனைவருக்குமே கஷ்டங்கள் தான் வரும். அவன் சொல்வதையே கேட்டதில்லை. அப்பொழுது உண்ணுகின்றவன் அப்பனே அறிவாளியா? சொல்கின்றவன் முட்டாளா? அப்பனே. நீ விளக்கம் அளி அனைவருக்குமே.
அடியவர்:- ( இராமலிங்க அடிகளர் , வள்ளல் பெருமான்) அவரைவிட அறிவாளி இல்லை ( யாரும் மனிதர்களில் ).
குருநாதர்:- அப்பனே அப்போது அறிவாளி சொல்வதை கேட்க வேண்டுமா இல்லையா?
அடியவர்:- கண்டிப்பாக கேட்க வேண்டும்.
குருநாதர்:- அப்பனே அதை கேட்காதனால்தான் வருவதே பிரச்சனை என்பேன் அப்பனே. பக்தர்களே சொல்கிறார்கள் அப்பா பின் உண்டு என்று கவலை இல்லை என்று. இது நியாயமா? அங்கேயே பக்தி பொய்யாகின்றது. ஆனாலும் அவர்கள் தான் நம்புகிறார்கள் அப்பனே எப்படி அப்பா உங்களுக்கு மோட்சம் கிடைக்கும்? உன் கஷ்டங்கள் தீரும் அப்பா ? கூறுங்கள்?
( நாடி அருளாளர் சில விளக்கங்கள் )
குருநாதர்:- அப்பனே ஈசன் யார் என்று தெரியுமா? அனைவருக்குமே.
அடியவர்:- தெரியும் ஐயா.
குருநாதர்:- அப்பனே ஈசன் தண்டனை கொடுத்தால் யாராவது பின் தாங்குவார்களா என்ன?
அடியவர்கள்:- தாங்க முடியாது.
குருநாதர்:- அப்பனே அப்படிப்பட்டவன் பிள்ளைகளை ( பிற உயிர்களை) கூட அப்பனை கொன்று தின்கின்றார்களே அப்பனே அப்பொழுது அவனுக்கு கோபம் வந்தால் உலகத்தில் அப்பனே எதை எதையோ செய்து விட்டு நோய்களாக பரப்பி கஷ்டங்களை கொடுத்து கடைசி யில் அழித்து விடுவான். அப்பனே சொல்லிவிட்டேன்.
( அனைத்து உயிர்களும் ஆதி ஈசனின் பிள்ளைகள். ஜீவ காருண்யத்தை அடுத்தவர்களுக்கு எடுத்து சொல்லி அவர்களை அசைவம் சாப்பிடாமல் தடுத்தால் அதுவே மிக்பெரிய ஆதி ஈசன் மனம் மகிழும் புண்ணியம். அடியவர்கள் அனைவர்ருக்கம் எடுத்து சொல்லுங்கள். அப்படி சொல்லவில்லை என்றால்……..)
எச்சரிக்கையாக இருங்கள் அப்பனே. நீங்களும் மற்றவர்களுக்கும் உங்களால் முடிந்தவரை சொல்லுங்கள். பின் சொல்லாமல் இருந்தால் நிச்சயம் கடைசியில் நோய்கள் வந்துவிடும். அப்பனே குடும்பங்களில் சிக்கல்கள் வந்துவிடும். அப்பனே சண்டை சச்சரவுகள் வந்துவிடும் அப்பனே. அதனால் அவை எல்லாம் அதாவது இப்பொழுதே உணரச்செய்யுங்கள் அப்பனே.
ஆனால் ( நீங்கள் அசைவம் சாப்பிட வேண்டாம் என்று எடுத்துச்சொல்லி அப்படி அவர்கள் கேட்காவிடில் ) அவருடைய விருப்பமே என்று நீங்கள் விட்டுவிடுங்கள். ஆனால் ( அசைவம் உட்கொண்டு ) தவறு செய்தவன் அப்பனே நிச்சயம் தண்டனை அனுபவித்தே ஆக வேண்டும் அப்பனே . எதை என்று அறிந்த பொழுதும் அறியாத பொழுதும் கூட அப்பனே நின்றுட்டு நின்றுட்டு் எவை என்று அறிய அறிய பிரம்மஹத்தி தோஷத்தில் முதல் வகையான ( தோஷமாக ) வருவது தன் சுயநலத்திறக்காக தன் சுவைக்காக அப்பனே எவனொருவன் உட்கின்றானோ அதில்தான் முதல் வகையான அடிக்கும் அடி பலமான அடியப்பா பின் குடும்பமே கெட்டு விடும் என்பேன் சொல்லிவிட்டேன் அப்பனே.
அப்பனே ஆனாலும் சிலபேர் கேட்பார்கள் அப்பனே இதையும் கூட நேற்றைய பொழுதில் சொல்லி விட்டேன் அப்பனே. உண்பவர்கள் அப்பனே நலமாக இருக்கிறார்கள் என்று. ஆனால் எத்தனை எத்தனை நோய்கள் அப்பா.
அப்பனே நீங்கள் போய் அப்படியாப்பா எதையும் புரியாமல் கூட அப்பனே கடைசியில் நோய்கள், நோய்கள் என்று எங்கெங்கோ அலைந்து கொண்டிருக்கிறார்கள். தீபங்கள் ஏற்றிக் கொண்டிருக்கிறார்கள். இறைவனை நாடி நாடி கொண்டிருக்கிறாரகள் அப்பனே.
அதானால்தான் சொன்னேன். பின்பே வருவதை முன்பே சொல்லிவிட்டேன். அப்பனே பயன்படுத்தினால் பயன்படுத்திக் கொள்ளுங்கள். அப்படி இல்லை என்றால் யாரோ சொல்கிறான் என்று அதாவது இதை என்று அறிய பின்பற்றவில்லை என்றால் அப்பனே தண்டனைகள் உண்டு கடைசியில் அப்பனே சொல்லிவிட்டேன்.
அப்பனே அவை மட்டும் இல்லாமல் ஈசனுடைய குழந்தைகளை ( பிற ஜீவரீசிகளை ) கொன்று விட்டு அப்பனே ஈசனிடத்தில் சென்றால் அப்பனே என்ன பிரயோஜனம்? அப்பனே. அப்போது எண்ணிக்கொள்ளுங்கள் மனிதன் எவ்வளவு கீழானவனாக ( கேவலமாக) இருக்கின்றான் என்று அப்பனே. எப்படி அப்பா ஈசன் நல்லதே செய்வான் அப்பனே.?
அதனால் அப்படியே சொல்லிவிட்டேன். எப்பொழுதும் என் பக்தர்கள் இதை தெரிந்து கொள்ள வேண்டும் அப்பனே. மாமிசத்தை உண்டால் கஷ்டங்கள் வந்தே தீரும். அதாவது அகத்தியனை நம்பினாலும் சொல்லிவிட்டேன்.
(மதுரையில் அகத்திய பிரம்ம ரிஷி அடியவர் இல்லத்தில் உரைத்த இந்த வாக்கு பின் வரும் பதிவில் தொடரும் ………)
https://siththarkalatchi.blogspot.com/2023/11/231-5-9-2023-29.html?m=0
ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய பிரம்ம ரிஷி திருவடிகளில் சமர்ப்பணம்!!!
No comments:
Post a Comment