அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடன்உறை பொதிகை வேந்தன் அகத்திய மஹரிஷி திருவடிகள் போற்றி போற்றி போற்றி!
அகத்திய மஹரிஷி அடியவர் ஒருவருக்கு வாசித்த நாடி வாக்கில் உள்ள பொது நாடி வாக்கு.
அம்மையே இது கலியுகம் என்பேன். அம்மையே இங்கு பின்கெட்டவைகளுக்குத்தான் பின் சக்திகள் அதிகம் என்பேன் அம்மையே. அதையும் யாங்கள் நீக்குவோம் அம்மையே வரும் வரும் காலங்களில் சித்தர்கள் அனைவரும் சேரந்து அம்மையே.
ஒவ்வொரு விசயத்தையும் யாங்கள் பார்த்துக்கொண்டே இருப்போம் அம்மையே.
ஆனாலும் மனதில் நினைத்துக்கொள்ள வேண்டும் ஒன்றை மட்டும். அம்மையே இன்பம் துன்பம் இவை எல்லாம் மனிதன் பிறக்கும்போதே வருகின்றது என்பேன் அம்மையே.
ஆனாலும் இன்பம் வரும் பொழுது அம்மையே துன்பமும் வரும் என்று நினைத்துக்கொள்ள வேண்டும் அம்மையே. இன்பம் இல்லாமல், துன்பம் இல்லாமல் இவ்வுலகத்தை யாரும் கடக்க முடியாது என்பேன். ஆனாலும் இன்பம் துன்பம் எவ்வாறு என்பதையும் கூட நினைக்கும் போது துன்பத்திலும் இறைவனை நினைத்துக்கொண்டால் அம்மையே துன்பம் அதி விரைவில் போய்விடும் என்பேன். இன்பமாகவே வரும் என்பேன்.
அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடன்உறை பொதிகை வேந்தன் அகத்திய மஹரிஷி திருவடிகள் போற்றி போற்றி போற்றி!
——நாடி உரை முற்றே ——
No comments:
Post a Comment