“இறைவா !!!!! நீயே அனைத்தும்” இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்.

"இறைவா !!!!! நீயே அனைத்தும்!!!!"
"இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்"

உலகின் ஆதி குரு, மாமுனிவர், குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளிய தினசரி அனைவரும் அதிகாலையில் எடுக்க வேண்டிய உறுதிமொழி. :-


1.தர்மம் செய்வேன்
2.அனைத்திடத்திலும் பின் அன்பாக அதாவது அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன்.
3.போட்டி, பொறாமைகள் நீக்குவேன்
4.அனைத்தும் எந்தனுக்கே சொந்தம் என்று பின் உயிர்ப் பலியும் இடமாட்டேன்
5.பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன்
6.அப்படிக் கொன்றாலும், நிச்சயமாய் அதை யான் தடுப்பேன்
7.அவை மட்டும் இல்லாமல், தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும்.
8.பிறருக்கு நன்மை செய்ய வேண்டும்
9.பிறருக்காக உழைக்க வேண்டும்
10.பிற ஜீவராசிகளும் ( உயிரினங்களும் ) பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில்அனைவரும் நினைக்க வேண்டும்.
11.அப்படி நினைத்தால் அகத்தியன் வந்து அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பான் என்று சொல்மகனே

( அடியவர்களே. இந்த மகிமை புகழ் அகத்திய மாமுனிவர் அருளிய உறுதிமொழி வாக்கினை சிரம்மேல் ஒவ்வொரு நொடியும் ஏந்தி, பிரம்மாவின் முன்பு தலை நிமிர்ந்து நமக்காக விதியை மாற்றஉத்தரவிடும் வண்ணம் அனைவருக்கும் உலகில் உள்ள 700 கோடி மக்களுக்குச்சென்று அடையும்வண்ணம் எடுத்துச் சொல்லுங்கள். )

மற்றவர்களைப்பற்றி எண்ணிப்பார் அப்பனே. மற்றவர்களை எண்ணி எண்ணி, தான் கெட்டுப்போனாலும் பரவாயில்லை என்று யார் ஒருவன் நினைக்கின்றானோ அவனிடத்தில் இறைவன் பிச்சை ஏந்துவான் அப்பா. பிச்சை ஏந்துவான் அப்பனே. என் பக்தர்களுக்கு இது தெரிய நிச்சயம் வேண்டும் அப்பனே.


அகத்திய பிரம்ம ரிஷி உரைத்த முதல் தரப் புண்ணியம் பெறும் ஒரே வழி:- (1) அன்னதானம் + (2) திருவாசகம் சிவபுராணம் + (3) மக்கள் வாழ , நல் வழிகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுதல். இப்படிச் செய்தால் மட்டுமே , முதல்தரப் புண்ணியம் உண்டாகும் என்று குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி உரைத்துள்ளார்கள். இதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள் என்றும் அனைவருக்கும் கூறி உள்ளார்கள். இதுபோல் அனைவரும் செய்து முதல் தரப் புண்ணியம் பெற்றுக் கொள்ளுங்கள். இறை அருளுடன் வளமாக வாழுங்கள். வாழ்க வளமுடன்!!!!!!!!!

siththarkalatchi - Moving text


அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு :- “அப்பனே, தானங்கள் செய்க, அப்பனே, உன்னால் இயன்றவரை தானங்கள் செய்க. அனுதினமும், என் பக்தர்கள், ஒரு உயிருக்காவது உணவளியுங்கள். அது போதும். அப்பனே, அதுவே கோடி புண்ணியமாகும்.”


Saturday, November 8, 2025

சித்தர்கள் ஆட்சி - 498 :- அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு - 05.10.2025 மதுரை சிவபுராணம் கூட்டுப் பிரார்த்தனை

 இறைவா !!!!! நீயே அனைத்தும்.

இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்.



அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளிய மதுரை கூட்டுப் பிரார்த்தனை வாக்கு - 05.10.2025


நாள் : 05.10.2025 ஞாயிற்றுக்கிழமை. நேரம் : காலை 8 மணி - மாலை 6 மணி.



ஆதி மூலனை மனதில் எண்ணி செப்புகின்றேன் அகத்தியன்.


அனைவருக்குமே எம்முடைய ஆசிகள்.


எம்முடைய ஆசிகள் நிச்சயம் தன்னில் கூட உங்களை வழிநடத்தும். இதனால் சில சில மாற்றங்கள் இவ்வுலகத்தில், அதாவது இங்கிருந்து சொல்கின்றேன், மீனாட்சியிடம் இருந்தே சொல்கின்றேன். 


==================================================

#     உங்கள்  குழந்தைகள் வாழ்வில்  முன்னேற ……

==================================================


நிச்சயம் நீங்கள் என்ன செய்தீர்களோ, அதைத்தன் நிச்சயம் உங்கள் பிள்ளைகள் செய்யும். அதை மட்டும் நீங்கள், ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். அதனால்தான் உங்களை பின் பக்திக்குள் இழுத்து வந்து விட்டால், உங்கள் குழந்தைகளும், உங்கள் குழந்தைகளும் கூட பக்திக்குள் வந்துவிடும். 


அதைவிட்டு நீங்கள் என்னென்ன செய்தீர்களோ, நிச்சயம் நீங்கள் நினைத்துக் கொள்ளுங்கள். பின் நிச்சயம், பின் உங்கள் பிள்ளைகளும் அதேபோலத்தான் செய்வார்கள். 


மீண்டும் நிச்சயம், ஐயோ, என் பிள்ளைகள் இப்படி இருக்கின்றதே என்று இறைவனிடம் முறையிட்டாலும், நிச்சயம் அதை பின் நடக்கப்போவதில்லை. அதனால்தான் முதலிலிருந்தே, நிச்சயம் தன்னில் கூட, வரும் காலத்தில் அழிவுகள் என்றே சொல்லிக்கொண்டு வருகின்றோம் நிச்சயம் தன்னில் கூட. 


இதனால் நீங்கள் நிச்சயம் தன்னில் கூட மனம் ஊர்ந்து, திரிந்து, இறைவனை பின் வழிபட்டால், பின் உங்கள் பின்னே வரும் குழந்தைகள் நன்றாக, நிச்சயம் இறைவனை பிடித்துக் கொண்டு முன்னேறி விடும். 


==================================================

#     பழமையை கடைபிடிக்க வேண்டும் 

==================================================


இதனால்தான் சித்தர்கள், யாங்கள் ஏன் எதற்கு என்றெல்லாம், அதாவது நிச்சயம் ஒவ்வொரு இல்லத்திலும், அதாவது பழமையை கடைபிடிக்க வேண்டும். ஏனென்றால் இவ்வுலகத்தில் மனிதனை, பின் மனிதனே நம்புவதில்லை. 


==================================================

#     உயர்ந்த எண்ணங்கள் - தீய  எண்ணங்கள் 

==================================================


ஏனென்றால், பின் அறிந்தும்  கூட மனிதனின் எண்ணங்கள், தீய எண்ணங்கள், அதாவது நிச்சயம் தன்னில் கூட.  


அத் தீய எண்ணங்கள் தான், நிச்சயம் தன்னில் கூட உங்களை வழிநடத்தும். 


உங்கள் குடும்பத்தையும் பின் வழிநடத்தும். 


உங்களை சார்ந்தவர்களையும் கூட வழிநடத்தும். 


அதேபோலத்தான் உயர்ந்த எண்ணங்கள், பின் கொண்டோர்கள், நிச்சயம் தன்னில் கூட 


உயர்ந்த எண்ணங்களோடு, 


உயர்ந்த வாழ்க்கையோடு, 


அவ் உயர்ந்த எண்ணங்களே வழிநடத்தும். 


இதனால் மனிதனின் எண்ணங்கள், நிச்சயம் வரும் வரும் காலத்தில், அதாவது கீழ் நோக்கித் தான் செல்லும். மேல் நோக்கி செல்லாது. 


எப்பொழுது மேல்நோக்கி நல்லெண்ணங்களோடு செல்கின்றீர்களோ, 


அப்பொழுதுதான் நிச்சயம் விடிவும் கூட,


அப்பொழுதுதான் மோட்சம் கூட,


அப்பொழுதுதான் நல்வாழ்வும் கூட,

 

அப்பொழுதுதான் நிம்மதியான வாழ்க்கை கூட.


ஆனால் இக்கலியுகத்தில், நிச்சயம் தீய மனதோடு தான் வாழ்வான் மனிதன் என்பதெல்லாம், நிச்சயம் பின் கலியின் கட்டாய விடயம். 


==================================================

#       உங்களிடமே அனைத்தும் உள்ள ரகசியம்    

==================================================


அதை நிச்சயம் உங்கள், எதை என்று புரியும். அது மட்டுமில்லாமல், நீங்கள் அதாவது எதை என்று புரிய, பின் எல்லாம் எதை என்று அறிய, இறைவனிடத்தில் இருக்கின்றதா என்றால், நிச்சயம் இல்லை. 


ஏனென்றால், நிச்சயம் தன்னில் கூட, நீங்கள் பிறக்கும் பொழுதே, இறைவன் உங்களிடத்தில் அனைத்தும் பத்திரமாக கொடுத்து அனுப்பி வைத்திருக்கின்றான். பாவமும் புண்ணியம்.


ஆனாலும், நீங்கள் பாவத்தோடு விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது, புண்ணியம் என்ற பின் சொல்லே மறந்து. 


==================================================

#       உங்களிடமே புண்ணியம் தேங்கி கிடக்கின்றது    

==================================================


அதாவது புண்ணியம் என்பதே, நிச்சயம் தேங்கி கிடக்கின்றது, இக்கலியுகத்தில் ஒவ்வொரு ஒவ்வொருவரின் பின் வாழ்க்கையிலும் கூட. 


அதை எப்படி நீங்கள் வெளிக்கொண்டு வருவது ?????


அப்புண்ணியத்தை எப்பொழுது வெளிக்கொண்டு வருவீர்களோ, அப்பொழுதுதான் நல்வாழ்க்கை. 



=========================================================

#       உங்கள் புண்ணியத்தை சித்தர் பெருமக்களால் 

#       மட்டுமே  வெளிக்கொண்டு வர முடியும்

=========================================================


அப்புண்ணியத்தை எப்படி எதை என்று அறிய யாராலும்,  அப்புண்ணியத்தை வெளிக்கொண்டு வர முடியாது. 


நீங்கள் என்ன பின் தவங்கள், தியானங்கள் என்னென்ன செய்தாலும், இறைவனிடத்தில் சென்றாலும், அப் புண்ணியங்கள் நிச்சயம் உங்களை, அதாவது எதை என்று புரிய, பின் அதை கொண்டு வரவே முடியாது. 


“““““““ நிச்சயம் சித்தர் பெருமக்களால் மட்டுமே முடியும். ”””””””


அதனால்தான், நிச்சயம் இக்கலியுகம், அழியும் காலமாகவே வந்து கொண்டிருக்கின்றது. அதனால்தான் உண்மைகளை சொல்லிச் சொல்லி, நிச்சயம் உங்களை பக்குவப்படுத்தி, பக்குவப்படுத்தி இருந்தாலே போதுமானது. 


நீங்களும் நன்றாக வாழலாம்.


உங்கள் பின் பின்னே வருபவர்களும் நன்றாக வாழலாம்.


அனைத்து ஜீவராசிகளும் நன்றாக வாழலாம். 


=========================================================

#       உங்கள் இல்லங்களில், ஜீவ ராசிகள் பிராணிகளை  

#       பாசத்துடன் வளர்த்தால், புண்ணியங்கள் பெருகும். 

=========================================================


ஏன், எதற்கு, நிச்சயம் அப்புண்ணியத்தை எப்படி பெருக்குவது என்றால், நிச்சயம் அன்றைய காலகட்டத்தில், நிச்சயம் ஒவ்வொரு இல்லத்திலும் கூட ஆடுகள், மாடுகள் இன்னும், பின் இன்னும் எதை என்று புரிய அறிந்தும்  கூட சில சில உயிரினங்கள் இருந்தது. 


அதேபோல், பின் ஒவ்வொரு இல்லத்திலும், நிச்சயம் தன்னில் கூட, பின் பரிசுத்தமாக அன்பை வெளிப்படுத்துவதற்காக, இன்னும் சில சில நிச்சயம் தன்னில் கூட, பின் வளர்த்தல் அவசியம். 


நிச்சயம் அவ்வாறாக, பின் வளர்த்துக் கொண்டு வந்தாலே, நிச்சயம் உங்களுக்கு பாசம் என்பது தெரியும். 


ஏனென்றால், இக்கலியுகத்தில், பின் கருணை என்பதே இருக்காது. 


பாசம் என்பதே இருக்காது. 


நிச்சயம் இதனால், மனிதன், மனிதனே அழித்துக் கொள்வான், அதாவது நண்பர்களாக இருப்பான். நிச்சயம் அறிந்தும் புரிந்தும் கூட, மறைமுகமாகவே ஏன், எதற்கு என்றெல்லாம். 


ஆனாலும், நிச்சயம் நீங்கள் தெரிந்தும் தெரியாமலும் வந்துவிட்டீர்கள். 


===============================================================

#       அன்னை மீனாட்சி தேவி அருளால் - போகர் சித்தர் ரகசியங்கள் 

===============================================================


இதனால், போகனின் நிச்சயம் தன்னில் கூட, இவ்வு தேசம் மீனாட்சியிடம் வந்து, நிச்சயம் தவழ்ந்து, பின் மீனாட்சி தேவியுடன் மன்றாடி கேட்டதனால், நிச்சயம் பின் விடிவெள்ளியாக, பின் போகனுக்கும் அருள் சித்திகள் கிடைத்து, நிச்சயம் அவன் வித்தைகளை இவ்வுலகிற்கு பின் எடுத்துக் காட்டினான். 


================================================================

#    போகர் சித்தர் பாடல் பாடி , கூட்டுப் பிரார்த்தனை அடியவர்களுக்கு 

#    மீனாட்சி தேவியிடம் ஆசிகள் வாங்கிக் கொடுத்தார்கள், 

===============================================================


அதேபோல், உங்களுக்கும் நிச்சயம் அவன் தன் பின் மீனாட்சி தேவி பாடிட்டு, நிச்சயம் உங்களுக்கும் அருளாசி வழங்கி, நிச்சயம் தன்னில் கூட பரிசுத்தமாக. 



======================================

#      நோய்கள் விலகும் ரகசியங்கள்  

======================================


ஏனென்றால், இக்கலியுகத்தில் நோய்கள் ஒவ்வொருவருக்கும் பின் பரவிக்கொண்டே வருகின்றது. ஏன், எதற்கு என்று பார்த்தால், சற்று சிந்தியுங்கள். 


அனைத்தும் நீங்களே தான் காரணம். 


இதனால் எப்படி ஏது என்று அறிய. 


““““““ அதனால், போகனின் அருள் இருந்தால் மட்டுமே, அவர் நோயும் விலகிப் போகும். நிச்சயம் தன்னில் கூட.  ””””””



இதனால், மனிதன் நிச்சயம், அதாவது மனிதன் திருந்தினால் மட்டுமே, இவ்வுலகத்திற்கு நிச்சயம் தன்னில் கூட நீதி கிடைக்கும். 


அப்படி இல்லை என்றால், நீதியும் கிடைக்காது. இறைவனும் கண்ணுக்குத் தெரிய மாட்டான். 


நிச்சயம் தன்னில் கூட, இறைவனை நீங்கள் தேடி தேடி அடைய வேண்டியதுதான். 


==================================================

#      ஏன் மனிதன்  குருடானனாக இருக்கின்றான்? 

==================================================


அதாவது, குருட்டு கண்களுடனே, நிச்சயம் இறைவன், அதாவது கண்களுக்கு பின் தெரியும்படி, நிச்சயம் இருக்கின்றான். 


ஆனால், மனிதனோ, நிச்சயம், அதாவது குருடன் என்பேன். யான். 


ஏன், எதற்கு குருடன் பின் என்றேன், எதை என்று புரிய. ஆனால், இக்குருடுக் கண்ணை வைத்து, இறைவனை காண முடியவில்லையே !!!!!!!!!!!!!!!!!!! 


ஏன், எதற்கு என்றால், அவ்வளவு அழுக்குகள் மனிதன் மனதில் தேங்கி உள்ளது என்பேன். 


இதனால்தான், இறைவன் கண்ணுக்கே தெரியப்படுவதில்லை. அதனால், இன்னும் எது என்று புரிய. அது மட்டுமில்லாமல், நிச்சயம் இறைவன் எவை என்று அறிய அறிய, இறைவன் பெயரே மனிதன் தான் கிடைக்கப் போகின்றான் என்பது, நிச்சயம் யாங்கள் அறிவோம். 


====================================================================

#     பக்தி  =   அன்பு + கருணை + பாசம் + அமைதி +  நற்பண்புகள் 

#                        + உயர்ந்த எண்ணங்கள் 

#                         - பொறாமை  விட்டொழித்தல் 

#                       - கள்ளத்தனம் பின் இல்லாமை 

====================================================================


ஏனென்றால், இறைவனின், அதாவது பக்தி என்பது சாதாரணம் இல்லை. பக்தி என்ற சொல்லுக்கு அன்பு, கருணை, பாசம், இன்னும் எது என்று அறிய, எவை என்று புரிய அமைதி, 


இவையெல்லாம் பின், அதாவது பொறாமை, விட்டொழித்தல், நிச்சயம் கள்ளத்தனம் பின் இல்லாமை, இன்னும் எது என்று கூற, நற்பண்புகள், உயர்ந்த எண்ணங்கள், இவையெல்லாம் சேர்ந்தால்தான் பக்தி. 


ஆனால், நிச்சயம் பின், அதாவது மனிதன் இறைவனிடத்தில் பக்தியே செலுத்துவதில்லை நிச்சயம் தன்னில் கூட, 


இவ்வாறு பக்தி, பின் எது என்று அறிய, பின் கோடியில், பின் ஒருத்தன் தான் பக்தி செலுத்துகின்றான். 


மற்றவர்கள், நிச்சயம் எப்படி, அதனால் எது என்று புரிய. வருங்காலத்தில், பக்தர்களே தவறு செய்வார்கள். இதனால், நிச்சயம் மற்றவர்களும் கூட, பின் எதை என்று கூற, இறைவனை வணங்கி என்ன பிரயோஜனம் என்று கேட்பார்களே, அப்பொழுது, உன்னாலும் கூட, இறைவனுக்கு அவப்பெயர் தான் ஏற்படும். 


அதேபோல், நீங்களும் எங்கெங்கே சென்று, இறைவனை வணங்கி வணங்கி, நிச்சயம் துன்பங்களை தான் சந்தித்துக் கொண்டே வருவீர்கள். அப்பொழுது, இன்னொருவன் கேட்பான், இறைவன் திருத்தலங்கள் சென்றீர்களே, என்ன நடந்தது என்று. 


இதனால், நிச்சயம் பக்குவத்தோடு, இறைவன் யார் என்பதை உணர்ந்து வணங்க வேண்டும். இல்லையென்றால், கஷ்டங்களே


==================================================

#      நோய்களுக்கு மூல காரணம் உங்கள் பாவமே……. 

==================================================


ஆனாலும், நிச்சயம் பேரன்பு எது என்று அறிய, நிச்சயம் காக்கும். இதனால், தெரிந்தும் தெரியாமலும், எது என்று அறிய, பல நோய்களை நீங்கள் சம்பாதித்து உள்ளீர்கள். நிச்சயம் தன்னில் கூட, பின் பல நோய்களுக்கும் காரணம் எவை என்று அறிய, இவ் நிச்சயம் தன்னில் எது என்று புரிய. அறிந்தும் கூட, இப்பாவமே 


ஏனென்றால், இக்கலியுகத்தில் பாவம் தான் வழிநடத்தும் நிச்சயம் தன்னில் கூட. 


அப்பொழுது, நிச்சயம் தீங்கு எது என்று அறிய, மனிதனின் எண்ணங்கள் தீங்கு செய்யத்தான் நினைக்கும். 


அதனால், புண்ணியங்கள் ஆனாலும், சேர்த்து வைத்துள்ளீர்கள். 


ஆனால், அது அதை செலவு செய்ய மனமில்லையே. 


எப்படி செலவு செய்வது, அப்படி நன்றாக உணர்ந்து செலவு செய்தால் மட்டுமே, உங்களை நீங்கள் நிச்சயம் அணுகுவீர்கள் நிச்சயம் தன்னில் கூட.


மீனாட்சி எது என்று அறிய பார்த்து, நிச்சயம் போகணும். பின் அருளாசிகள் உங்களுக்கு தருவான். 


அதை பெற்றுக்கொண்டு, நல்லவிதமாக ஆசிகளோடு மீண்டும் யான் விவரிக்கின்றேன். போகன் வாக்குரைப்பான்.



====================================================

#              அகத்திய மாமுனிவர் ஆசி வாக்கு நிறைவு !            

====================================================



ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம் !

சர்வம் சிவார்ப்பணம் !



No comments:

Post a Comment