“இறைவா !!!!! நீயே அனைத்தும்” இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்.

"இறைவா !!!!! நீயே அனைத்தும்!!!!"
"இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்"

உலகின் ஆதி குரு, மாமுனிவர், குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளிய தினசரி அனைவரும் அதிகாலையில் எடுக்க வேண்டிய உறுதிமொழி. :-


1.தர்மம் செய்வேன்
2.அனைத்திடத்திலும் பின் அன்பாக அதாவது அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன்.
3.போட்டி, பொறாமைகள் நீக்குவேன்
4.அனைத்தும் எந்தனுக்கே சொந்தம் என்று பின் உயிர்ப் பலியும் இடமாட்டேன்
5.பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன்
6.அப்படிக் கொன்றாலும், நிச்சயமாய் அதை யான் தடுப்பேன்
7.அவை மட்டும் இல்லாமல், தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும்.
8.பிறருக்கு நன்மை செய்ய வேண்டும்
9.பிறருக்காக உழைக்க வேண்டும்
10.பிற ஜீவராசிகளும் ( உயிரினங்களும் ) பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில்அனைவரும் நினைக்க வேண்டும்.
11.அப்படி நினைத்தால் அகத்தியன் வந்து அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பான் என்று சொல்மகனே

( அடியவர்களே. இந்த மகிமை புகழ் அகத்திய மாமுனிவர் அருளிய உறுதிமொழி வாக்கினை சிரம்மேல் ஒவ்வொரு நொடியும் ஏந்தி, பிரம்மாவின் முன்பு தலை நிமிர்ந்து நமக்காக விதியை மாற்றஉத்தரவிடும் வண்ணம் அனைவருக்கும் உலகில் உள்ள 700 கோடி மக்களுக்குச்சென்று அடையும்வண்ணம் எடுத்துச் சொல்லுங்கள். )

மற்றவர்களைப்பற்றி எண்ணிப்பார் அப்பனே. மற்றவர்களை எண்ணி எண்ணி, தான் கெட்டுப்போனாலும் பரவாயில்லை என்று யார் ஒருவன் நினைக்கின்றானோ அவனிடத்தில் இறைவன் பிச்சை ஏந்துவான் அப்பா. பிச்சை ஏந்துவான் அப்பனே. என் பக்தர்களுக்கு இது தெரிய நிச்சயம் வேண்டும் அப்பனே.


அகத்திய பிரம்ம ரிஷி உரைத்த முதல் தரப் புண்ணியம் பெறும் ஒரே வழி:- (1) அன்னதானம் + (2) திருவாசகம் சிவபுராணம் + (3) மக்கள் வாழ , நல் வழிகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுதல். இப்படிச் செய்தால் மட்டுமே , முதல்தரப் புண்ணியம் உண்டாகும் என்று குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி உரைத்துள்ளார்கள். இதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள் என்றும் அனைவருக்கும் கூறி உள்ளார்கள். இதுபோல் அனைவரும் செய்து முதல் தரப் புண்ணியம் பெற்றுக் கொள்ளுங்கள். இறை அருளுடன் வளமாக வாழுங்கள். வாழ்க வளமுடன்!!!!!!!!!

siththarkalatchi - Moving text


அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு :- “அப்பனே, தானங்கள் செய்க, அப்பனே, உன்னால் இயன்றவரை தானங்கள் செய்க. அனுதினமும், என் பக்தர்கள், ஒரு உயிருக்காவது உணவளியுங்கள். அது போதும். அப்பனே, அதுவே கோடி புண்ணியமாகும்.”


Wednesday, January 1, 2025

சித்தர்கள் ஆட்சி - 422 :- காகபுசுண்டர் மாமுனிவர் வாக்கு - கோவை வாக்கு ( April 2024 ) - பகுதி 2

                                                              இறைவா !!!!! நீயே அனைத்தும்.
                                                    இறைவா!!!!! நீ நன்றாக இருக்கவேண்டும்.



அன்புடன் அகத்திய மாமுனிவர் - கோவையில் காகபுசண்ட மாமுனிவர் வாக்கு ( April 2024 ) - பகுதி 2


நமச்சிவாயனை பணிந்து வாக்குகள் ஈகின்றேன் புசண்டனவன். 


( இவ் தொடர் வாக்கின் முந்தைய பதிவுகள்:-

சித்தர்கள் ஆட்சி - 421- கோவை - பகுதி 1 

சித்தர்கள் ஆட்சி - 422- கோவை - பகுதி 2

வாருங்கள் வாக்கின் உள் செல்வோம். ) 


31. எதைப் பின்பற்ற வேண்டுமோ அதைப் பின்பற்றினால் நிச்சயம் மோட்ச கதிதான். 

32. தர்மத்தைப் பற்றி எடுத்துரையுங்கள்.

33. உன்மைதனை இவ்வுலகத்தில் யாருக்குமே புரியவில்லையே. உன்மைதனைப் புரிந்து விட்டால் கஷ்டங்கள் ஏதடா? 

34. மற்றவர்களைப் பற்றி யோசி. தானாகவே அனைத்தும் நடக்கும். 

35. இறைவன் அவனவனுக்கு என்ன தகுதியோ அதைக் கொடுக்கின்றான். இறைவன் மிகப்பெரியவன்

36. பக்தியில் இருப்பவன் என்ன செய்ய வேண்டும்? முதலில் கோபப்படக்கூடாது. பிறரைப்பற்றி  குறை கூறக் கூடாது. பொறாமை கொள்ளக் கூடாது. தலையே போனாலும் பொய் சொல்லக்கூடாது. அப்படிப்பட்ட பக்தன் எங்கு காண்பி? அப்படிப்பட்ட பக்தனை நீ காட்டினால் அனைத்தும் உனக்கு தருகின்றேன். ஆனால் இருக்கின்றார்கள். ஆனாலும் மறைந்து வாழ்ந்து வருகின்றனர். உலகத்திற்கு வெளிக்காட்டவே இல்லை.( தன்னை வெளிக் காட்ட மாட்டார்கள்.) 

37. இவ்வுலகத்தில் மிகப் பெரும் புண்ணியம் எது? ( அடியவர்கள் :- தர்மம். ) அத் தர்மத்தைப் பற்றி யாராவது எடுத்துரைத்தீர்களா? பக்தி தன் தனக்கு சாதகமாக வேண்டும் என்று இறைவனையே வணங்குகின்றார்கள். இது தர்மம் ஆகாது. 

38. ஏதும் செய்யாமல் அமைதியாக இரு. இறைவன் நிச்சயம் என்னென்ன செய்ய வேண்டும் என்று பொம்மையை நகர்த்துவான். 

39. (மனித) பொம்மையில்  மின்சாரம் இருந்தால்தான் அதையும் நகர்த்த முடியும். அதுதான் புண்ணியம். உன்னிடத்தில் புண்ணியங்கள் இருந்தால்தான் இறைவனும் உன்னை அசைப்பான் அப்பா. புண்ணியங்கள் இல்லையே. 

40. (புண்ணியம்) நிச்சயம் செய்யாமல் கேட்பது தவறுதானே?

41. நீங்கள் ( புண்ணியங்கள் செய்துவிட்டு) இறைவனிடத்தில் சண்டை இடலாம். அதை யானே பொறுப்பு. கல்லைக்கூட வீசலாம். ஆனாலும் அதனுள்ளே இறைவன் கொடுத்துவிடுவான்.

42. தான் தன் நிலைமைக்கு தானே காரணம். 

43. வாசி செய்தால் சொந்த பந்தங்களே போய்விடும். புது உறவுகளைத் தேடுவான் ( பல கள்ளத் திருமணங்கள் செய்வான்).

44. பாதுகாப்பு என்பது புண்ணியம் தானப்பா. அதைச் செய்யாமல் எதைச் செய்தாலும் பாதுகாப்பு இல்லை. 

45. பெரிய புண்ணியங்கள்  எதை என்று யான் கூற? புண்ணியம் செய் என்று சொன்னாலே அதுவும் புண்ணியம் தாயே. 

46. எங்களுக்கு ஒருவன் போதும் அப்பா. அவனை வைத்துக்கொண்டு யாங்கள் பல விளையாட்டுக்கள் விளையாடுவோம். 

47. ( இவ்வாக்கு கேட்ட அங்கு இருந்த அனைவரும்) அகத்தியன் அருளைப் பெற்றவர்கள்தான் நீங்கள் அனைவருமே. அதனால்தான் இப்பொழுது கூட உங்களுக்கு போதித்துக் கொண்டிருக்கின்றேன். 

48. மாயையில் சிக்கிக் கொள்பவனுக்கு இறைவன் பக்தி தெரியாதப்பா. இன்னும் மாயையில் சிக்கிக் கொள்ளலாம் என்று பக்தியை காண்பித்துக் கொண்டே இருக்கின்றான் அப்பா.

49. இறைவன்தான் அழிவில்லாதவன். 

50. முதலில் இறை பக்தனாக இருந்தால் முதலில் புண்ணியங்கள் பற்றியே உபசரிப்பான். ( இறை பக்தியில் பக்தனாக உள்ளவர்கள் புண்ணியங்கள் பற்றியே பிறருக்கு எடுத்துச் சொல்வார்கள்.) அறிந்தும் எதைச் சொல்வான்? முதலில் புண்ணியங்கள் செய். பிறர் உயிர் கொல்லாமை. நிச்சயம் தானின்றி இரு. பின் பிறர் பற்றி குறை கூறுதல் வேண்டாம். பொறாமை கொள்ளுதல் அவசியம் இல்லை. நிச்சயம் யான், எனது, எந்தனுக்குத்தான் இறைவன் என்று பீத்திக்கொள்ள மாட்டான். 

51. அனைத்தும் இறைவன் செயலே என்று யார் ஒருவன் இருக்கின்றானோ , அவந்தனக்குத்தான் நிச்சயம் அதி விரைவிலே நன்மைகள் ஏற்படும். யாராவது சொல்வீர்களா?

52. நான் செய்தேன். நான் செய்தேன். என்ன செய்தாய்? பாவம்தான் செய்தாய். 

53. புண்ணிய ஆத்மாக்கள் அனைத்தும் செயல் இறைவனே என்று ஒரே வார்த்தையில் முடித்துவிடுவான். 

54. இறைவனுக்கு சொந்தமானதை நீங்கள் உட்கொண்டு, அதை இறைவனுக்கே செய்தேன் என்று பாவத்தை இறைவன் மேலே பழி போடுகின்றீர்களே!!! நீங்கள் எவ்வளவு பெரிய திருடர்கள் என்று. அதாவது மனிதன் எவ்வளவு பெரிய திருடன்? ( வாயில்லா ஜீவராசிகளை - ஆடு, கோழி முதலியவற்றை - கொன்று, அதை உட்கொண்டு, மாமிசத்தை இறைவனுக்கே படைத்து இறைவன் மீதே பழி போடுகின்றான். என் சாமி பலி கேட்டது என்று மூட நம்பிக்கையில் உச்சம்.) 

55. ( குல தெய்வ ஆலயத்தில் ) உயிர் பலி கொடு. பின் ( இறைவனுக்கு ) உன் சொந்தக்காரர்களைக்கூட பின் அடித்து நொறுக்கிக் கொடு. ( உயிர் பலி மகா பாவம் ) 

56. தாய், தந்தையரை, தன் மகனை, உற்றார் உறவினரை உயிர் பலி கொடுங்கள். ஏன் கொடுப்பதில்லை? மனிதன் திருடனப்பா. திருடன். பேசத் தெரியாத உயிர்களைக்கூட  சாகடிக்கின்றீர்களே, நீங்கள் மனிதர்களா? முதலில் மனித நிலைமைக்கு வந்தால்தான் புண்ணியங்கள் செயல்படும். 

57. ( அசைவம் உண்பதை நிறுத்தாவிடில் )  நிச்சயம் சொல்கின்றேன். சிறிது காலம் ஈசன் பார்ப்பான். அப்படி இல்லையென்றால் நிச்சயம் சூரியனைத் பின் தட்டி பின் புவியில் உராய்வினை ஏற்படுத்துவான். அப்பொழுது உங்களால் தாங்க முடியாது. அப்பொழுது தெரியும். இறைவனுக்குச் சொந்தமானதை எப்படி எல்லாம் அதாவது வாயில்லா ஜீவராசிகள் அலையடிக்குது என்பது. ( வாயில்லா ஜீவராசிகள் துடித்துத் துடித்து மடிவதைப்போல உலகம் துடிக்கப்போகும் கற்பனை செய்ய இயலாத கொடூர பயங்கரம். அவசியம் அனைவரிடமும் எடுத்துச் சொல்லுங்கள் அசைவம் வேண்டாம். அசைவம் தவிர் என்று. இதில் பாதிக்கப்படுவது உங்கள் வருங்கால சந்ததியினர் கூட.) 

58. சித்தன் வழி வருபவர்களுக்கு புண்ணியங்கள் தேவை.

59. (மனதில்) அழுக்குகளை வைத்துக்கொண்டு இறைவனைச் சென்றடைந்தாலும் ஒன்றும் நடக்கப்போவதில்லை.

60. ( மனதில் ) அழுக்குகளை நீங்கினால் என்ன ஆகும்? இறைவன் உன் மனதில் குடி கொள்வான். 


( நம் குருநாதர் கருணைக்கடல் பிரம்ம ரிஷி அகத்திய மாமுனிவர் அருளால், April  2024 கோவையில் காகபுசண்ட மாமுனிவர் உரைத்த  கேள்வி, பதில் வாக்குகள் தொடரும்….)


ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!


சர்வம் சிவார்ப்பணம்!!!!!

No comments:

Post a Comment