“இறைவா !!!!! நீயே அனைத்தும்” இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்.

"இறைவா !!!!! நீயே அனைத்தும்!!!!"
"இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்"

உலகின் ஆதி குரு, மாமுனிவர், குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளிய தினசரி அனைவரும் அதிகாலையில் எடுக்க வேண்டிய உறுதிமொழி. :-


1.தர்மம் செய்வேன்
2.அனைத்திடத்திலும் பின் அன்பாக அதாவது அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன்.
3.போட்டி, பொறாமைகள் நீக்குவேன்
4.அனைத்தும் எந்தனுக்கே சொந்தம் என்று பின் உயிர்ப் பலியும் இடமாட்டேன்
5.பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன்
6.அப்படிக் கொன்றாலும், நிச்சயமாய் அதை யான் தடுப்பேன்
7.அவை மட்டும் இல்லாமல், தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும்.
8.பிறருக்கு நன்மை செய்ய வேண்டும்
9.பிறருக்காக உழைக்க வேண்டும்
10.பிற ஜீவராசிகளும் ( உயிரினங்களும் ) பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில்அனைவரும் நினைக்க வேண்டும்.
11.அப்படி நினைத்தால் அகத்தியன் வந்து அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பான் என்று சொல்மகனே

( அடியவர்களே. இந்த மகிமை புகழ் அகத்திய மாமுனிவர் அருளிய உறுதிமொழி வாக்கினை சிரம்மேல் ஒவ்வொரு நொடியும் ஏந்தி, பிரம்மாவின் முன்பு தலை நிமிர்ந்து நமக்காக விதியை மாற்றஉத்தரவிடும் வண்ணம் அனைவருக்கும் உலகில் உள்ள 700 கோடி மக்களுக்குச்சென்று அடையும்வண்ணம் எடுத்துச் சொல்லுங்கள். )

மற்றவர்களைப்பற்றி எண்ணிப்பார் அப்பனே. மற்றவர்களை எண்ணி எண்ணி, தான் கெட்டுப்போனாலும் பரவாயில்லை என்று யார் ஒருவன் நினைக்கின்றானோ அவனிடத்தில் இறைவன் பிச்சை ஏந்துவான் அப்பா. பிச்சை ஏந்துவான் அப்பனே. என் பக்தர்களுக்கு இது தெரிய நிச்சயம் வேண்டும் அப்பனே.


அகத்திய பிரம்ம ரிஷி உரைத்த முதல் தரப் புண்ணியம் பெறும் ஒரே வழி:- (1) அன்னதானம் + (2) திருவாசகம் சிவபுராணம் + (3) மக்கள் வாழ , நல் வழிகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுதல். இப்படிச் செய்தால் மட்டுமே , முதல்தரப் புண்ணியம் உண்டாகும் என்று குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி உரைத்துள்ளார்கள். இதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள் என்றும் அனைவருக்கும் கூறி உள்ளார்கள். இதுபோல் அனைவரும் செய்து முதல் தரப் புண்ணியம் பெற்றுக் கொள்ளுங்கள். இறை அருளுடன் வளமாக வாழுங்கள். வாழ்க வளமுடன்!!!!!!!!!

siththarkalatchi - Moving text


அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு :- “அப்பனே, தானங்கள் செய்க, அப்பனே, உன்னால் இயன்றவரை தானங்கள் செய்க. அனுதினமும், என் பக்தர்கள், ஒரு உயிருக்காவது உணவளியுங்கள். அது போதும். அப்பனே, அதுவே கோடி புண்ணியமாகும்.”


Tuesday, December 31, 2024

சித்தர்கள் ஆட்சி - 417 :- அன்புடன் அகத்திய மாமுனிவர் - மதுரை வாக்கு ( March 2024 ) - பகுதி 20

இறைவா !!!!! நீயே அனைத்தும்.

இறைவா!!!!! நீ நன்றாக இருக்கவேண்டும். 



அன்புடன் அகத்திய மாமுனிவர் - மதுரை வாக்கு ( March 2024 ) - பகுதி 20

( இவ் தொடர் வாக்கின் முந்தைய பதிவுகள்:-

சித்தர்கள் ஆட்சி -  379 - பகுதி 1
சித்தர்கள் ஆட்சி -  381 - பகுதி 2
சித்தர்கள் ஆட்சி -  382 - பகுதி 3
சித்தர்கள் ஆட்சி -  383 - பகுதி 4 
சித்தர்கள் ஆட்சி -  389 - பகுதி 5
சித்தர்கள் ஆட்சி -  390 - பகுதி 6
சித்தர்கள் ஆட்சி -  391 - பகுதி 7
சித்தர்கள் ஆட்சி -  392 - பகுதி 8
சித்தர்கள் ஆட்சி -  393 - பகுதி 9
சித்தர்கள் ஆட்சி -  398 - பகுதி 10
சித்தர்கள் ஆட்சி -  400 - பகுதி 11
சித்தர்கள் ஆட்சி -  401 - பகுதி 12
சித்தர்கள் ஆட்சி -  402 - பகுதி 13
சித்தர்கள் ஆட்சி -  403 - பகுதி 14
சித்தர்கள் ஆட்சி -  404 - பகுதி 15
சித்தர்கள் ஆட்சி -  408 - பகுதி 16
சித்தர்கள் ஆட்சி -  414 - பகுதி 17
சித்தர்கள் ஆட்சி -  415 - பகுதி 18
சித்தர்கள் ஆட்சி -  416 - பகுதி 19
சித்தர்கள் ஆட்சி -  417 - பகுதி 20

நம் குருநாதர் :- அம்மையே அதனால்தான் சொல்கின்றேன். புண்ணியங்கள் செய்து கெட்டுப்போனாலும் சரி, இறைவன் கெட்டியாக பாசத்தோடு அணைத்துக்கொள்வான் உங்களை. ( புண்ணியம் ) இவை வேண்டுமா?  (பாவம் ) அவை வேண்டுமா? 

அடியவர் 11 :- சரிங்க ஐயா. புண்ணியம் தான் ஐயா. 

அடியவர் :- பொருள் வேண்டுமா? அருள் வேண்டுமா? 

அடியவர் 11 :- கர்ணன் போல..

நம் குருநாதர் :- அம்மையே பின் புண்ணியம் செய்து கொண்டே இருந்தால் பல வழிகளில் கூட தொந்தரவுகள், மனக் கஷ்டங்கள் , அம்மையே எது எதுவோ வரும். ஆனாலும் இவை எல்லாம் தாங்கும் சக்தி இருந்துவிட்டால் உயர்ந்த உள்ளமாக மாறிவிடும். பின் எவர் என்ன சொன்னாலும் நடக்காது தாயே!!!!!

ஆனாலும் மனம் குறுகிய அளவு உள்ளது மனிதனிடத்தில் அம்மையே. இதுதான் பின் எப்படி அவைதன் பின் பெரிதாக்குவது? ஆனால் கஷ்டங்கள் என்ற நிலைமைக்கு வந்தால்தான் பெரிதாக்க முடியும் என்று அள்ளிக் கொடுத்துக் கொண்டிருக்கின்றேன் யானே கஷ்டத்தை. 

அடியவர் 11 :- புரியுதுங்க ஐயா. 

சுவடி ஓதும் மைந்தன் :- மனது பெரிதாக வேண்டும். 

நம் குருநாதர் :- அதனால் எதையும் கேட்பீர்களா நீங்கள்? 

சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா எதுவும் வேண்டுமா என்று கேட்கின்றார். ஒரு வாய்ப்பு கொடுக்கின்றார். 

அடியவர் 11 :- உயர்ந்த உள்ளம் ஆவதற்கான வழி வேண்டும்? 

நம் குருநாதர் :- அம்மையே நற்பண்புகள், நற்சிந்தனைகள், உழைக்கும் திறன், இவ்வுலகத்தில் எப்படி வாழ்வது இவை எல்லாம் கற்றுக் கொடுத்தாலே புண்ணியங்கள் ஆகிவிடும் அதிக அளவு. பின்பு நீங்களே உயர்ந்து விடுவீர்கள் தாயே. யான் உயர்த்துவது என்ன? இதை பலமுறை  சொல்லிவிட்டேன். 

சுவடி ஓதும் மைந்தன் :- ( விளக்கங்கள் )

நம் குருநாதர் :- அதனால் வினையாக வருவது நீங்கள் செய்யும் பாவம், புண்ணியம் மட்டுமே.  அதனால்தான் கற்றுக்கொடுத்துக் கொண்டே இருக்கின்றேன். புண்ணியங்கள் பெருக்குக, பெருக்குக என்று. 

ஆனாலும் சில நேரத்தில் புண்ணியங்கள் சென்றுகொண்டிருக்கும் பொழுது இறைவனே சோதிப்பான். ஆனாலும் விட்டு வைக்கக் கூடாது ( கஷ்டத்திலும் புண்ணியம் செய்வதை விடக் கூடாது). சரி என்று பரவாயில்லை விட்டுவிடு என்று. அது போலத்தான் இங்கு சோதனைகள் சில பேரை செய்து கொண்டிருக்கின்றான் இறைவன். 

அடியவர் :- ( குறைந்த கட்டணத்தில் காசி யாத்திரை பயணம் சிலரை அழைத்துச் செல்லும் எண்ணம் குறித்து  ஒரு அடியவர் கேட்ட போது ) 

நம் குருநாதர் :- அப்பனே எண்ணம் வந்துவிட்டாலே அது நல்லதா, தீயதா என்று இறைவனுக்குத் தெரியும் அப்பனே. நல்லது இருந்தால் இறைவனே செய்து முடிக்கப் போகின்றான் அப்பனே.  உந்தனுக்கு ஏதப்பா கவலை? 

அப்பனே, கொடுப்பதும் அவனே. எடுப்பதும் அவனே. இதை புரிந்து கொண்டால் நன்று. 

அப்பனே, அம்மையே உங்களைப் பார்த்து ஒரு கேள்வி கேட்கின்றேன். இதைத் தான் அனைவரிடத்திலும் கேட்டுவிட்டேன். இப்பொழுதும் கேட்கப் போகின்றேன். உயிரே உங்களுக்குச் சொந்தம் இல்லை. இறைவனுக்குச் சொந்தமானது. ஆனால் நீங்களோ அவை இவை என்று தேடிக்கொண்டிருக்கின்றீர்கள் நீங்கள். அதனால்தான் மனிதர்களைப் பாவம் என்று இறங்கி வந்து சொல்லிக் கொண்டிருக்கின்றேன். 

அம்மையே அவை நடத்தல், இவை நடத்தல் , இன்னும் பதவி வேண்டும், புகழ் வேண்டும், பணங்கள் வேண்டும், பிள்ளைகள் வேண்டும் என்று கேட்பது மூடத்தனம் என்பேன் அம்மையே. இவையெல்லாம் கொடுத்து இவைகளால் கஷ்டங்கள் வரும் அதிக அளவு. ஆனால் நீங்கள் கேட்காவிடில் , பின் இறைவா!!!! படைத்துவிட்டாய். எப்படி வாழ்வது என்று கேட்டுவிட்டால், நிச்சயம் அவைகளெல்லாம் சரி செய்து, பின் நீங்கள்   கேட்டதை விட உயர்வாகக் கொடுப்பான் இறைவன். இதனால்தான் மூட நம்பிக்கையில் ஒளிந்துள்ளீர்கள் என்று யான் சொல்லிக்கொண்டே இருக்கின்றேன். அதனால்தான் கையைப் பிடித்து , நற்காரியங்கள் செய்ய வைத்து, உங்களை பின் புண்ணியப் பாதையில் தேட வைத்து விட்டால் எத்தனுக்கு வேலையே இல்லை. அப்புண்ணியமே உங்களை உயர்ந்த நிலைக்கு ஆளாகிவிடும். உன் பிள்ளைகளும் உந்தனுக்கு என்னென்ன தேவையோ அப்புண்ணியங்களே கொடுத்து விடும். 

அடியவர்கள் :- சரிங்க ஐயா. 

அடியவர் ஒருவர் :- ( சுவடி ஓதும் மைந்தனைப் பார்த்து) உங்களுக்கு (சுவடி) கிடைத்தது போல் ஐயா. (உங்கள்) அப்பா செய்த புண்ணியத்திற்கு உங்களுக்கு ( மும்மூர்த்திகள் ஆசி பெற்ற ஒரே சுவடி ) இந்த பெரும் புண்ணிய சேவை. 

நம் குருநாதர் :- அம்மையே தர்மனைப் பற்றித் தெரியுமா யாருக்காவது? நிச்சயம் எடுத்துரையுங்கள்? 

அடியவர் 4 :- குந்தியின் மைந்தன். 

நம் குருநாதர் :- அம்மையே ஏதோ பின் வந்ததை பின் வாயில் கொட்டிவிடாதே. 

அடியவர் 6 :- ( தர்மரைப் பற்றி ஒரு மகாபாரத கதை உரைத்தார்) 

நம் குருநாதர் :-  அப்பனே, தர்மன் என்னென்ன செய்தான் அப்பனே?

அடியவர்கள் :- ( சில உரையாடல்கள் ) நீதி , நெறி வழுவாமல்…

நம் குருநாதர் :- அப்பனே அவந்தனக்கே கடைசியில் எவ்வளவு கஷ்டங்கள் என்று நீங்கள் அறிந்து கொண்டீர்களா? என்ன. ஆனால் இறைவனே நாய் வடிவில் வந்தானப்பா. ஆனால் இன்றளவோ நாயினை எப்படி எப்படியோ பேசுகின்றார்கள் அப்பனே. 

அப்பனே அதுபோல் நீங்கள் நிச்சயம் புண்ணியங்கள் அதிக அளவு செய்து கொண்டால் நாயைப் போல் நிற்பானப்பா இறைவன். மிகக் கருணை கொண்டவனப்பா. 

அப்பனே வீழ்வதும்,  உயர்வதும் உங்களிடத்திலே. 

அடியவர் :- புண்ணியங்கள் செய்ய வேண்டும் என்று நினைத்தாலும், புண்ணியம் செய்ய முடியாதபடி நம்மை பாவங்கள் தடுக்கின்றது. 

நம் குருநாதர் :- அப்பனே எப்படியப்பா? அதாவது இரவு உணவு, மதிய உணவு, காலை உணவு அப்பனே வேளாவேளைக்கு சாப்பிடுகின்றாய் அல்லவா? அது மட்டும் ஐயோ!!!! என்னை தடுக்கின்றது என்று ஏன் பேச மாட்டாய் அப்பா? அப்பனே இதெல்லாம் சுயநலம் அப்பா. செய்யலாமா அப்பா? சோம்பேறி அப்பா. 

அடியவர் 11 :- தீதும் நன்றும் பிறர் தர வாரா. 

நம் குருநாதர் :- அப்பனே இறைவன் அனைத்தும் பிறக்கும் பொழுது உங்களிடையே கொடுத்து அனுப்புகின்றான். ஆனால் சிலரோ சரியாக உபயோகப் படுத்தி உயர்ந்து விடுகின்றார்கள்.  சிலரோ சரியாகப் பயன்படுத்திக் கொள்ளாமல்  கீழே விழுந்து விடுகின்றார்கள் அப்பனே. இதனால்தான் அப்பனே இறைவன், ஐயோ!!!! இவனுக்கு அனைத்தும் கொடுத்து விட்டோமோ என்று மனம் வருந்துகின்றான் இறைவனே. 

அப்பனே அப்பொழுது இறைவன் மனம் வருந்தினாலே மிகப் பாவமப்பா. இன்னும் கீழே செல்வீர்கள் நீங்கள் அப்பனே.

அப்பனே அப்பொழுது இறைவன் வருந்தக் கூடாதப்பா. அப்பனே நீதி, நேர்மை, பின் தவறாமல் தர்மத்தோடு வாழ்ந்தால், பிற உயிரைக்கூட தன்போல் நினைத்து வாழ்ந்தால் இறைவன் மகிழ்வானப்பா. உயர்த்திவிடுவான் என்பேன் அப்பனே.

ஆனாலும் நீங்களும் கேட்கலாம் அப்பனே. ( அங்கு உள்ள ஒரு அடியவரை சுட்டிக்காட்டி ) இப்பொழுது கேட்டாளே இவள் தாய் , பின் தீயோர்கள் நன்றாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்களே என்று.

ஆனாலும் இதற்கும் இன்னொரு கட்டத்தில் பதில் அளிக்கின்றேன். ( இப்போது யான் பதி அளித்தால் இவ் சத்சங்க உரையாடல்கள் ) நீண்டு போகும். 

அனைவருக்கும் என்ன வேண்டும்? கேளுங்கள்? 

( தனி வாக்குகள் ) 

நம் குருநாதர் :- (தனி வாக்கில் உள்ள மகத்தான பொது வாக்கு ) நீங்கள் செய்யும் உதவியில் யானும் பின்னே சிலகாலம் இருக்கின்றேன் என்றால்  , பாவம் தொலைந்திருக்கும் அப்பனே. அவ் புத்தி வரவில்லையே. அவ் புத்தி வந்திருந்தால் உந்தனுக்கு இறைவன் அனைத்தும் கொடுத்திருப்பான்.

(தனி வாக்குகள்)

( நம் குருநாதர் கருணைக்கடல் பிரம்ம ரிஷி அகத்திய மாமுனிவர் அருளால் March 2024 மதுரையில் நடந்த கேள்வி,பதில் வாக்குகள் தொடரும்….)


ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!


சர்வம் சிவார்ப்பணம்!!!!!

No comments:

Post a Comment