“இறைவா !!!!! நீயே அனைத்தும்” இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்.

"இறைவா !!!!! நீயே அனைத்தும்!!!!"
"இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்"

உலகின் ஆதி குரு, மாமுனிவர், குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளிய தினசரி அனைவரும் அதிகாலையில் எடுக்க வேண்டிய உறுதிமொழி. :-


1.தர்மம் செய்வேன்
2.அனைத்திடத்திலும் பின் அன்பாக அதாவது அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன்.
3.போட்டி, பொறாமைகள் நீக்குவேன்
4.அனைத்தும் எந்தனுக்கே சொந்தம் என்று பின் உயிர்ப் பலியும் இடமாட்டேன்
5.பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன்
6.அப்படிக் கொன்றாலும், நிச்சயமாய் அதை யான் தடுப்பேன்
7.அவை மட்டும் இல்லாமல், தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும்.
8.பிறருக்கு நன்மை செய்ய வேண்டும்
9.பிறருக்காக உழைக்க வேண்டும்
10.பிற ஜீவராசிகளும் ( உயிரினங்களும் ) பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில்அனைவரும் நினைக்க வேண்டும்.
11.அப்படி நினைத்தால் அகத்தியன் வந்து அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பான் என்று சொல்மகனே

( அடியவர்களே. இந்த மகிமை புகழ் அகத்திய மாமுனிவர் அருளிய உறுதிமொழி வாக்கினை சிரம்மேல் ஒவ்வொரு நொடியும் ஏந்தி, பிரம்மாவின் முன்பு தலை நிமிர்ந்து நமக்காக விதியை மாற்றஉத்தரவிடும் வண்ணம் அனைவருக்கும் உலகில் உள்ள 700 கோடி மக்களுக்குச்சென்று அடையும்வண்ணம் எடுத்துச் சொல்லுங்கள். )

மற்றவர்களைப்பற்றி எண்ணிப்பார் அப்பனே. மற்றவர்களை எண்ணி எண்ணி, தான் கெட்டுப்போனாலும் பரவாயில்லை என்று யார் ஒருவன் நினைக்கின்றானோ அவனிடத்தில் இறைவன் பிச்சை ஏந்துவான் அப்பா. பிச்சை ஏந்துவான் அப்பனே. என் பக்தர்களுக்கு இது தெரிய நிச்சயம் வேண்டும் அப்பனே.


அகத்திய பிரம்ம ரிஷி உரைத்த முதல் தரப் புண்ணியம் பெறும் ஒரே வழி:- (1) அன்னதானம் + (2) திருவாசகம் சிவபுராணம் + (3) மக்கள் வாழ , நல் வழிகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுதல். இப்படிச் செய்தால் மட்டுமே , முதல்தரப் புண்ணியம் உண்டாகும் என்று குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி உரைத்துள்ளார்கள். இதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள் என்றும் அனைவருக்கும் கூறி உள்ளார்கள். இதுபோல் அனைவரும் செய்து முதல் தரப் புண்ணியம் பெற்றுக் கொள்ளுங்கள். இறை அருளுடன் வளமாக வாழுங்கள். வாழ்க வளமுடன்!!!!!!!!!

siththarkalatchi - Moving text


அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு :- “அப்பனே, தானங்கள் செய்க, அப்பனே, உன்னால் இயன்றவரை தானங்கள் செய்க. அனுதினமும், என் பக்தர்கள், ஒரு உயிருக்காவது உணவளியுங்கள். அது போதும். அப்பனே, அதுவே கோடி புண்ணியமாகும்.”


Saturday, October 26, 2024

சித்தர்கள் ஆட்சி - 406 :- திரு அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் 83 பெருக்கச் சஞ்சலித்து (திருச்செந்தூர்)

 

இறைவா நீயே அனைத்தும் 

திரு அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் 83 பெருக்கச் சஞ்சலித்து  (திருச்செந்தூர்)


பெருக்கச்சஞ் சலித்துக்கந்

     தலுற்றுப்புந் தியற்றுப்பின்

          பிழைப்பற்றுங் குறைப்புற்றும் ...... பொதுமாதர்


ப்ரியப்பட்டங் கழைத்துத்தங்

     கலைக்குட்டங் கிடப்பட்சம்

          பிணித்துத்தந் தனத்தைத்தந் ...... தணையாதே


புரக்கைக்குன் பதத்தைத்தந்

     தெனக்குத்தொண் டுறப்பற்றும்

          புலத்துக்கண் செழிக்கச்செந் ...... தமிழ்பாடும்


புலப்பட்டங் கொடுத்தற்கும்

     கருத்திற்கண் படக்கிட்டும்

          புகழ்ச்சிக்குங் க்ருபைச்சித்தம் ...... புரிவாயே


தருக்கிக்கண் களிக்கத்தெண்

     டனிட்டுத்தண் புனத்திற்செங்

          குறத்திக்கன் புறச்சித்தந் ...... தளர்வோனே


சலிப்புற்றங் குரத்திற்சம்

     ப்ரமித்துக்கொண் டலைத்துத்தன்

          சமர்த்திற்சங் கரிக்கத்தண் ...... டியசூரன்


சிரத்தைச்சென் றறுத்துப்பந்

     தடித்துத்திண் குவட்டைக்கண்

          டிடித்துச்செந் திலிற்புக்கங் ...... குறைவோனே


சிறக்கற்கஞ் செழுத்தத்தந்

     திருச்சிற்றம் பலத்தத்தன்

          செவிக்குப்பண் புறச்செப்பும் ...... பெருமாளே.


ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!!!!!

சர்வம் சிவார்ப்பணம்!!!!!


1 comment: