“இறைவா !!!!! நீயே அனைத்தும்” இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்.

"இறைவா !!!!! நீயே அனைத்தும்!!!!"
"இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்"

உலகின் ஆதி குரு, மாமுனிவர், குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளிய தினசரி அனைவரும் அதிகாலையில் எடுக்க வேண்டிய உறுதிமொழி. :-


1.தர்மம் செய்வேன்
2.அனைத்திடத்திலும் பின் அன்பாக அதாவது அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன்.
3.போட்டி, பொறாமைகள் நீக்குவேன்
4.அனைத்தும் எந்தனுக்கே சொந்தம் என்று பின் உயிர்ப் பலியும் இடமாட்டேன்
5.பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன்
6.அப்படிக் கொன்றாலும், நிச்சயமாய் அதை யான் தடுப்பேன்
7.அவை மட்டும் இல்லாமல், தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும்.
8.பிறருக்கு நன்மை செய்ய வேண்டும்
9.பிறருக்காக உழைக்க வேண்டும்
10.பிற ஜீவராசிகளும் ( உயிரினங்களும் ) பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில்அனைவரும் நினைக்க வேண்டும்.
11.அப்படி நினைத்தால் அகத்தியன் வந்து அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பான் என்று சொல்மகனே

( அடியவர்களே. இந்த மகிமை புகழ் அகத்திய மாமுனிவர் அருளிய உறுதிமொழி வாக்கினை சிரம்மேல் ஒவ்வொரு நொடியும் ஏந்தி, பிரம்மாவின் முன்பு தலை நிமிர்ந்து நமக்காக விதியை மாற்றஉத்தரவிடும் வண்ணம் அனைவருக்கும் உலகில் உள்ள 700 கோடி மக்களுக்குச்சென்று அடையும்வண்ணம் எடுத்துச் சொல்லுங்கள். )

மற்றவர்களைப்பற்றி எண்ணிப்பார் அப்பனே. மற்றவர்களை எண்ணி எண்ணி, தான் கெட்டுப்போனாலும் பரவாயில்லை என்று யார் ஒருவன் நினைக்கின்றானோ அவனிடத்தில் இறைவன் பிச்சை ஏந்துவான் அப்பா. பிச்சை ஏந்துவான் அப்பனே. என் பக்தர்களுக்கு இது தெரிய நிச்சயம் வேண்டும் அப்பனே.


அகத்திய பிரம்ம ரிஷி உரைத்த முதல் தரப் புண்ணியம் பெறும் ஒரே வழி:- (1) அன்னதானம் + (2) திருவாசகம் சிவபுராணம் + (3) மக்கள் வாழ , நல் வழிகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுதல். இப்படிச் செய்தால் மட்டுமே , முதல்தரப் புண்ணியம் உண்டாகும் என்று குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி உரைத்துள்ளார்கள். இதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள் என்றும் அனைவருக்கும் கூறி உள்ளார்கள். இதுபோல் அனைவரும் செய்து முதல் தரப் புண்ணியம் பெற்றுக் கொள்ளுங்கள். இறை அருளுடன் வளமாக வாழுங்கள். வாழ்க வளமுடன்!!!!!!!!!

siththarkalatchi - Moving text


அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு :- “அப்பனே, தானங்கள் செய்க, அப்பனே, உன்னால் இயன்றவரை தானங்கள் செய்க. அனுதினமும், என் பக்தர்கள், ஒரு உயிருக்காவது உணவளியுங்கள். அது போதும். அப்பனே, அதுவே கோடி புண்ணியமாகும்.”


Friday, October 18, 2024

சித்தர்கள் ஆட்சி - 401 :- அன்புடன் அகத்திய மாமுனிவர் - மதுரை வாக்கு ( March 2024 ) - பகுதி 12

 இறைவா !!!!! நீயே அனைத்தும்.



அன்புடன் அகத்திய மாமுனிவர் - மதுரை வாக்கு ( March 2024 ) - பகுதி 12

( இவ் தொடர் வாக்கின் முந்தைய பதிவுகள்:-


சித்தர்கள் ஆட்சி -  379 - பகுதி 1
சித்தர்கள் ஆட்சி -  381 - பகுதி 2
சித்தர்கள் ஆட்சி -  382 - பகுதி 3
சித்தர்கள் ஆட்சி -  383 - பகுதி 4 
சித்தர்கள் ஆட்சி -  389 - பகுதி 5
சித்தர்கள் ஆட்சி -  390 - பகுதி 6
சித்தர்கள் ஆட்சி -  391 - பகுதி 7
சித்தர்கள் ஆட்சி -  392 - பகுதி 8
சித்தர்கள் ஆட்சி -  393 - பகுதி 9
சித்தர்கள் ஆட்சி -  398 - பகுதி 10
சித்தர்கள் ஆட்சி -  400 - பகுதி 11
சித்தர்கள் ஆட்சி -  401 - பகுதி 12


( ஓர் அடியவர் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் உடனுடனே பதில் அளித்தார்கள் கருணைக்கடல். இறையருள் நிரம்பிய இவ் அடியவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவ் அடியவர் இது குறித்து கேட்காத போது கருணைக்கடல் அவர்களே அந்த கேள்வியை கேட்டு சில வாக்குகள் உரைத்தார்கள். இது தொடர்பாக சில பொது வாக்குகள்.) 

நம் குருநாதர்:- அப்பனே கேட்டிருக்கலாமே அப்பனே, இவ்வளவு (இறை) ஆசிகள் இருந்து   ஏன் திருமணம் ஆகவில்லை என்று? 

அடியவர் :- ஐயப்பன் எப்போது செய்ய நினைக்கின்றாரோ அப்போது…

நம் குருநாதர்:- அப்பனே இறைவன் இருக்கையில் அனைத்தும் தாமதமாகவே நடை பெறும் என்பேன் அப்பனே. ஏனென்றால் முப்பான் ஐந்து (35), பின் நாற்பது பின் இன்னும் நாற்பது, பின் இன்னும் நாற்பதுக்குள்ளே, பின் ஐம்பதுக்கு மேலே  , அறுபதுக்குள்ளே பின் ஏழுபதற்கு மேலே பல பல இன்னல்களும், சோகங்களும் இருக்கும் அப்பா. அவை எல்லாம் ஒரே முறையில் கொடுத்து விடுவான் இறைவன். அதனால்தான் இறைவன் அனைவருக்குமே பின் இறைவனை நெருங்க, நெருங்க அனைத்தும் தாமதமாகத்தான் செய்வான் அப்பா. அனைத்தும் ( துன்பங்களையும் ) ஒரே நேரத்தில் கழித்து விடுவானப்பா. 

அப்பனே நன்றாக உணர்ந்தாயா அப்பனே? அப்பனே உன் பக்கத்தில் உள்ளவனைக் கேள் அப்பனே. இது போலத்தான் அவந்தனக்கும் நடந்து கொண்டிருக்கின்றது. 

அடியவர் :- ( மௌனம் ) 

சுவடி ஓதும் மைந்தன் :- ( சில விளக்கங்கள்)

நம் குருநாதர்:- கடும் முயற்சி செய்து வெற்றிகள் வெற்றிகள் பெற வேண்டும் என்பது உன்னுடைய விதியப்பா. விதிப்படியே நடந்தால் குற்றமில்லை. 

சுவடி ஓதும் மைந்தன்:- எது செய்தாலும் கடும் முயற்சி எடுக்க வேண்டும். 

நம் குருநாதர்:- அப்பனே இப்படி ஜெயித்தால்தான் அப்பனே, ஆனாலும் யான் பார்த்துக்கொண்டே இருக்கின்றேன் அப்பனே. மனதை விட்டுவிடாதே. அப்பனே இதனால் நன்மைகள்தான் நடக்கும். அப்பனே பரிகாரங்கள் தேவை இல்லை. அப்பனே மன உளைச்சல்தான் உந்தனுக்கு பரிகாரம். 

அப்பனே அறிவை பலமாக்க் கொடுத்து விட்டேன் அப்பனே. அதைச் சரியாக முறைப்படுத்து. அதனால்தான் யானே பொறுமை படுத்துகின்றேன். யானே கொடுத்துவிட்டால் அப்பனே நீ ஆறிவிடுவாய் ( சோம்பல் ஆகி விடுவாய்) அப்பனே. 

சுவடி ஓதும் மைந்தன்:- உங்களுக்கு அறிவை பலமாக கொடுத்து விட்டார்கள். நீங்க எப்படிதான் முன்னுக்கு வருவீங்க என்று பார்த்துக்கொண்டு இருக்கின்றார். அவங்க கொடுத்துருவாங்க. ஆனா, நீங்க வேற மாதிரி போய் விடுவீங்க. 

( நம் குருநாதர் கருணைக்கடல் அகத்திய மாமுனிவர் அருளால் March 2024 மதுரையில் நடந்த கேள்வி,பதில் வாக்குகள் தொடரும்….)

ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!

சர்வம் சிவார்ப்பணம்!!!!!

No comments:

Post a Comment