“இறைவா !!!!! நீயே அனைத்தும்” இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்.

"இறைவா !!!!! நீயே அனைத்தும்!!!!"
"இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்"

உலகின் ஆதி குரு, மாமுனிவர், குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளிய தினசரி அனைவரும் அதிகாலையில் எடுக்க வேண்டிய உறுதிமொழி. :-


1.தர்மம் செய்வேன்
2.அனைத்திடத்திலும் பின் அன்பாக அதாவது அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன்.
3.போட்டி, பொறாமைகள் நீக்குவேன்
4.அனைத்தும் எந்தனுக்கே சொந்தம் என்று பின் உயிர்ப் பலியும் இடமாட்டேன்
5.பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன்
6.அப்படிக் கொன்றாலும், நிச்சயமாய் அதை யான் தடுப்பேன்
7.அவை மட்டும் இல்லாமல், தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும்.
8.பிறருக்கு நன்மை செய்ய வேண்டும்
9.பிறருக்காக உழைக்க வேண்டும்
10.பிற ஜீவராசிகளும் ( உயிரினங்களும் ) பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில்அனைவரும் நினைக்க வேண்டும்.
11.அப்படி நினைத்தால் அகத்தியன் வந்து அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பான் என்று சொல்மகனே

( அடியவர்களே. இந்த மகிமை புகழ் அகத்திய மாமுனிவர் அருளிய உறுதிமொழி வாக்கினை சிரம்மேல் ஒவ்வொரு நொடியும் ஏந்தி, பிரம்மாவின் முன்பு தலை நிமிர்ந்து நமக்காக விதியை மாற்றஉத்தரவிடும் வண்ணம் அனைவருக்கும் உலகில் உள்ள 700 கோடி மக்களுக்குச்சென்று அடையும்வண்ணம் எடுத்துச் சொல்லுங்கள். )

மற்றவர்களைப்பற்றி எண்ணிப்பார் அப்பனே. மற்றவர்களை எண்ணி எண்ணி, தான் கெட்டுப்போனாலும் பரவாயில்லை என்று யார் ஒருவன் நினைக்கின்றானோ அவனிடத்தில் இறைவன் பிச்சை ஏந்துவான் அப்பா. பிச்சை ஏந்துவான் அப்பனே. என் பக்தர்களுக்கு இது தெரிய நிச்சயம் வேண்டும் அப்பனே.


அகத்திய பிரம்ம ரிஷி உரைத்த முதல் தரப் புண்ணியம் பெறும் ஒரே வழி:- (1) அன்னதானம் + (2) திருவாசகம் சிவபுராணம் + (3) மக்கள் வாழ , நல் வழிகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுதல். இப்படிச் செய்தால் மட்டுமே , முதல்தரப் புண்ணியம் உண்டாகும் என்று குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி உரைத்துள்ளார்கள். இதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள் என்றும் அனைவருக்கும் கூறி உள்ளார்கள். இதுபோல் அனைவரும் செய்து முதல் தரப் புண்ணியம் பெற்றுக் கொள்ளுங்கள். இறை அருளுடன் வளமாக வாழுங்கள். வாழ்க வளமுடன்!!!!!!!!!

siththarkalatchi - Moving text


அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு :- “அப்பனே, தானங்கள் செய்க, அப்பனே, உன்னால் இயன்றவரை தானங்கள் செய்க. அனுதினமும், என் பக்தர்கள், ஒரு உயிருக்காவது உணவளியுங்கள். அது போதும். அப்பனே, அதுவே கோடி புண்ணியமாகும்.”


Wednesday, October 16, 2024

சித்தர்கள் ஆட்சி - 400 :- அன்புடன் அகத்திய மாமுனிவர் - மதுரை வாக்கு ( March 2024 ) - பகுதி 11


இறைவா !!!!! நீயே அனைத்தும்.






அன்புடன் அகத்திய மாமுனிவர் - மதுரை வாக்கு ( March 2024 ) - பகுதி 11

( இவ் தொடர் வாக்கின் முந்தைய பதிவுகள்:-


சித்தர்கள் ஆட்சி -  379 - பகுதி 1
சித்தர்கள் ஆட்சி -  381 - பகுதி 2
சித்தர்கள் ஆட்சி -  382 - பகுதி 3
சித்தர்கள் ஆட்சி -  383 - பகுதி 4 
சித்தர்கள் ஆட்சி -  389 - பகுதி 5
சித்தர்கள் ஆட்சி -  390 - பகுதி 6
சித்தர்கள் ஆட்சி -  391 - பகுதி 7
சித்தர்கள் ஆட்சி -  392 - பகுதி 8
சித்தர்கள் ஆட்சி -  393 - பகுதி 9
சித்தர்கள் ஆட்சி -  398 - பகுதி 10 )

அடியவர் :- ( வேலை வேண்டும் என்று கேட்க ) 

நம் குருநாதர்:- அப்பனே பார்த்துக்கொள்வோம். 

அடியவர்:- சரிங்க ஐயா

நம் குருநாதர்:- அப்பனே, அனைவருக்குமே வேலைதான் முக்கியம் என்று நினைத்துக்கொண்டு இருக்கின்றார்கள். புண்ணியம் ஒன்று இருக்கின்றதே, அதை மறந்து விட்டார்கள் அப்பனே. அப்பனே தன் வழியில் செல்லச் செல்ல தானாக அனைத்தும் நிறைவேறும் அப்பனே. அதே போலத்தான் அப்பனே , புண்ணியப் பாதையில் சென்று,  அனைத்தும் செய்தால்,  தானாக நடக்குமப்பா அனைத்தும். 

அப்பனே தன் கடமையைச் செய்ய வேண்டும் முதலில். இன்னும் புரிய வைக்கின்றேன் அப்பனே. புரிய வைத்து அனைத்தும் செய்கின்றேன் போதுமா? அப்பனே நலன்கள் ஆசிகள். 

( ஒரு அடிவரை வைத்து அங்கு உள்ள பல அடியவர்களுக்கு என்னென்ன தேவை என்று கேட்கச்சொன்னார் குருநாதர். அவ் உரையாடல்களில் வந்த பொது வாக்குகள்) 

நம் குருநாதர்:- அம்மையே விரதம், தன் உள் உறுப்புக்களை , தன் இச்சைகளைக் கட்டுப்படுத்துவதே விரதம். 

( இங்கு ஒரு அடியவர் பங்குதாரர் போல் ஒரு தனியார் தொழில் முதலீடு செய்துள்ளமைக்கு, இதுவரை யாரும் அறியாத ஒரு கர்ம ரகசியத்தை எடுத்து உரைத்தார் நம் குருநாதர்) 

பணத்தைப் பெற்றுக்கொண்டு கர்மத்தை உன்னிடத்தில் சேர்த்து விட்டான். அதற்கும் யான்தான் போராட வேண்டும்.  பல பாவங்களைக் கூட. 

( தவறான இடத்தில் முதலீடு செய்து அல்லது ஒருவர் ஏமாந்து விட்டால், ஏமாற்றுபவர் கர்மா ஏமாற்றப்பட்டவருக்கு வந்து விடும். ஏமாற்றம் அடைபவர்கள் பணத்தை இழப்பதுடன், கர்மாவையும் பெற்றுக்கொள்கின்றனர் என்ற கர்ம உரையாடல் ) 

யாரையும் நம்பிவிடக்கூடாது. 

அடியவர்:- ( குழந்தைகள்தொடர்பாக உரையாடிய போது )

நம் குருநாதர்:- அனைவருமே அப்படித்தான் நினைத்துக்கொண்டிருக்கின்றார்கள். குழந்தைகள் (வாழ்க்கை) பலம் நன்றாக இருக்க வேண்டும் என்று. ஆனால்  பக்தியைச் சொல்லிக் கொடுக்க வேண்டும் முதலில். புண்ணியத்தைச் சொல்லிக்கொடுக்க வேண்டும். இதை (குழந்தைகளுக்கு) தெரிவித்தாலே போதுமானது. அவர்கள் உயர்ந்து விடுவார்கள். பின் நம் ( கனவுகள் ) ஆசை அவர்களை என்ன செய்யும்? 

சுவடி ஓதும் மைந்தன்:- எல்லா பிள்ளைகளுக்கும் இதுதான் சொல்லிக் கொடுக்க வேண்டும். புண்ணியங்கள் எப்படிச் செய்வது என்று சொல்லிக் கொடுக்க வேண்டும். அதுதான் அவர்களை ஜெயிக்க வைக்கும். நம்முடைய ஆசை அவர்களை ஜெயிக்க வைக்காது என்று சொல்கின்றார் குருநாதர். 

அடியவர்:- அதை நான் இப்போ உணர்ந்து விட்டேன் ஐயா. 

( நம் குருநாதர் கருணைக்கடல் அகத்திய மாமுனிவர் அருளால் March 2024 மதுரையில் நடந்த கேள்வி,பதில் வாக்குகள் தொடரும்….)


ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!

சர்வம் சிவார்ப்பணம்!!!!!

No comments:

Post a Comment