“இறைவா !!!!! நீயே அனைத்தும்” இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்.

"இறைவா !!!!! நீயே அனைத்தும்!!!!"
"இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்"

உலகின் ஆதி குரு, மாமுனிவர், குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளிய தினசரி அனைவரும் அதிகாலையில் எடுக்க வேண்டிய உறுதிமொழி. :-


1.தர்மம் செய்வேன்
2.அனைத்திடத்திலும் பின் அன்பாக அதாவது அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன்.
3.போட்டி, பொறாமைகள் நீக்குவேன்
4.அனைத்தும் எந்தனுக்கே சொந்தம் என்று பின் உயிர்ப் பலியும் இடமாட்டேன்
5.பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன்
6.அப்படிக் கொன்றாலும், நிச்சயமாய் அதை யான் தடுப்பேன்
7.அவை மட்டும் இல்லாமல், தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும்.
8.பிறருக்கு நன்மை செய்ய வேண்டும்
9.பிறருக்காக உழைக்க வேண்டும்
10.பிற ஜீவராசிகளும் ( உயிரினங்களும் ) பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில்அனைவரும் நினைக்க வேண்டும்.
11.அப்படி நினைத்தால் அகத்தியன் வந்து அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பான் என்று சொல்மகனே

( அடியவர்களே. இந்த மகிமை புகழ் அகத்திய மாமுனிவர் அருளிய உறுதிமொழி வாக்கினை சிரம்மேல் ஒவ்வொரு நொடியும் ஏந்தி, பிரம்மாவின் முன்பு தலை நிமிர்ந்து நமக்காக விதியை மாற்றஉத்தரவிடும் வண்ணம் அனைவருக்கும் உலகில் உள்ள 700 கோடி மக்களுக்குச்சென்று அடையும்வண்ணம் எடுத்துச் சொல்லுங்கள். )

மற்றவர்களைப்பற்றி எண்ணிப்பார் அப்பனே. மற்றவர்களை எண்ணி எண்ணி, தான் கெட்டுப்போனாலும் பரவாயில்லை என்று யார் ஒருவன் நினைக்கின்றானோ அவனிடத்தில் இறைவன் பிச்சை ஏந்துவான் அப்பா. பிச்சை ஏந்துவான் அப்பனே. என் பக்தர்களுக்கு இது தெரிய நிச்சயம் வேண்டும் அப்பனே.


அகத்திய பிரம்ம ரிஷி உரைத்த முதல் தரப் புண்ணியம் பெறும் ஒரே வழி:- (1) அன்னதானம் + (2) திருவாசகம் சிவபுராணம் + (3) மக்கள் வாழ , நல் வழிகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுதல். இப்படிச் செய்தால் மட்டுமே , முதல்தரப் புண்ணியம் உண்டாகும் என்று குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி உரைத்துள்ளார்கள். இதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள் என்றும் அனைவருக்கும் கூறி உள்ளார்கள். இதுபோல் அனைவரும் செய்து முதல் தரப் புண்ணியம் பெற்றுக் கொள்ளுங்கள். இறை அருளுடன் வளமாக வாழுங்கள். வாழ்க வளமுடன்!!!!!!!!!

siththarkalatchi - Moving text


அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு :- “அப்பனே, தானங்கள் செய்க, அப்பனே, உன்னால் இயன்றவரை தானங்கள் செய்க. அனுதினமும், என் பக்தர்கள், ஒரு உயிருக்காவது உணவளியுங்கள். அது போதும். அப்பனே, அதுவே கோடி புண்ணியமாகும்.”


Friday, February 9, 2024

சித்தர்கள் ஆட்சி - 354 : அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு - 18/8/2021 அன்று தர்மபுரி முத்தம்பட்டி அனுமன் ஆலயத்தைப் பற்றி குருநாதர் அகத்தியர் உரைத்த பொது வாக்கு:-

 




“இறைவா!!! அனைத்தும் நீ”

உலகின் ஆதி குரு , மாமுனிவர் , குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு:- 

18/8/2021 அன்று தர்மபுரி முத்தம்பட்டி அனுமன் ஆலயத்தைப் பற்றி குருநாதர் அகத்தியர் உரைத்த பொது வாக்கு:-

அப்பனே நல்லாசிகள் நல் முறையாக முறையாக இந்த ஆலயத்திற்கு என்று ஒரு சிறப்பு உள்ளது அப்பனே

இறைவன் ராம அவதாரத்தில் நல் முறையாக இலங்கையில் யுத்தகளத்தில் ராமனுக்கு மூலிகைகள் தேவைப்பட பின் நல் முறையாய் அனுமனை பணித்து நல் முறையாக சென்று மூலிகைகளைப் பறித்து வா என்று கட்டளை இட்டான்.... அனுமனும் நல் முறையாகவே மூலிகைகளை தேடி அலைந்து கடைசியில் சஞ்சீவி மலையை பெயர்த்து பின் நல் முறையாக ராமனிடம் கொண்டு சேர்த்தான்.

ராமனும் நல் முறையாக மூலிகைகளை பரிசோதித்து சில மூலிகைகள் கிடைக்கவில்லை மீண்டும் சென்று அந்த மூலிகைகளை பறித்து வா என்று கூறினான்.

அனுமனும் அந்த மூலிகைகளை தேடி இந்த காட்டிற்கு வந்தான் தொப்பூர் காடு என்ற பெயர் இந்த காட்டிற்கு வந்த பொழுது அந்த மூலிகைகள் கிடைத்தது அதை பறித்து செல்ல முற்படும் பொழுது நல் முறையாக அந்த மலையிலும் காட்டிலும் வாழ்ந்து வந்த தேவதைகள் “ஆஞ்சநேயா இந்த மூலிகைகளை பறித்து செல்ல எங்களது அனுமதி தேவை எங்களின் அனுமதி வேண்டும் என்றால் நீ இங்கே இருக்க சம்மதம் தெரிவிக்க வேண்டும் இந்த மலையில் பல அக்கிரமங்களும் அநியாயங்களும் வருங்காலத்தில் நடந்தேறும். இவ்வாறு நடக்காமல் நீ இங்கேயே இருந்து காக்க வேண்டும் தவறான காரியங்களை செய்ய வருபவர்களை தண்டிக்க வேண்டும் அப்போதுதான் இந்த மூலிகைகளை நாங்கள் தருவோம்” என்று கூறிய பின் நல் முறையாக 

பின் நல் முறையாக அனுமனும் சரி என்று சொல்லி மூலிகைகளை தாருங்கள் என்று கேட்டு மூலிகைகளை பறித்து பின் நல் முறைகள் ஆகவே புறப்பட்டான் அப்போது தேவதைகள் என்ன ஆஞ்சநேயா நீ உரைத்ததை மறந்து விட்டாயா?

நீ இங்கேயே இருக்கப் போவதாக வாக்கு தந்தாய் இப்பொழுது நீசெல்கின்றாயே இது நியாயமா?

அனுமனும் பின் நல் முறையாக தேவதைகளே நோக்கி நான் இந்த மூலிகைகளை என் இறைவன் ராமனிடத்தில் கொண்டு சேர்க்கவேண்டும் சற்று பின்னால் திரும்பிப் பாருங்கள் என்று கூறினான். அப்பொழுது அவர்கள் பின்னால் சுயம்பு வடிவாக கல்லால்  அனுமன் சிலையாக தோன்றினான். 

பின் நல் முறைகள் ஆகவே தேவதைகளே நான் இந்த காட்டில் இருக்கப் போகின்றேன். தவறான எண்ணம் கொண்டு வருபவர்கள் தவறை செய்ய வருபவர்கள் அனைவரையும் தண்டிப்பேன். இந்த காடுகளையும் மலைகளையும் நான் இங்கிருந்தே காப்பேன் என்று வாக்கு தந்தான். 

அந்த இடம்தான் இந்த கோயில் அப்பனே! இப்பொழுதும் இந்த இடத்திற்கு தவறான எண்ணம் கொண்டவர்கள் வரமுடியாது. தூய பக்தியுடன் நல் மனதாய் வருவோருக்கு அருள் தந்து கொண்டுதான் இருக்கின்றான், இந்த அனுமன்.

அப்பனே என்னுடைய நல்லாசிகள்.

——————-

கோயில் முகவரி https://g.co/kgs/f3QKGz

ஸ்ரீவீர ஆஞ்சநேயர் - முத்தம்பட்டி கிராமம்

தருமபுரியில் இருந்து பெங்களூரு செல்லும் சாலையில், சுமார் 12 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது முத்தம்பட்டி அருள்மிகு வீர ஆஞ்சநேயர் திருக்கோயில்.

ஸ்ரீவீர ஆஞ்சநேயர் - முத்தம்பட்டி கிராமம்

சுமார் எழுபது ஆண்டுகளுக்கு முன்பு ஓரிடத்தில், மலையில் இருந்து சரிந்து விழுந்த பாறைகள் குவியலாகக் கிடந்ததைக் கண்ட மக்கள், அவற்றை அகற்றிய போது மலைப்பாறையில் புடைப்புச் சிற்பமாகத் திகழும் இந்த அனுமனைக் கண்டு மெய்சிலிர்த்தனர். அந்த இடத்தில் அனுமனுக்குப் பொதுமக்கள் சேர்ந்து கோயில் கட்டி வழிபடத் தொடங்கினர்.

இன்றைக்கும், அமாவாசை தினங்களில் இந்த அனுமனை வழிபடப் பெருந்திரளாக பக்தர்கள் இங்கே கூடுகிறார்கள். சனிக்கிழமைகள், அனுமன் ஜயந்தி, ஆங்கில மற்றும் தமிழ் வருடப் பிறப்பு ஆகிய தினங்களில் விசேஷ வழிபாடுகள் நடைபெறுகின்றன. இந்த ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை, வடைமாலை சாற்றி மனமுருகப் பிரார்த்தித்தால், நினைத்தது நடக்கும், வேண்டிய வரங்கள் கிடைக்கும் என்பது ஐதீகம்.

முத்தம்பட்டி வீர ஆஞ்சநேயர் கோயில் என்பது தர்மபுரி மாவட்டம், தருமபுரியில் இருந்து சேலம் செல்லும் தொடர்வண்டிப் பாதையில் முத்தம்பட்டி தொடர்வண்டி நிறுத்தத்தில் இருந்து ஒன்றரை கிலோமீட்டர் தொலைவில் தொப்பூர் வனப்பகுதியில் உள்ள ஒரு அனுமன் கோயிலாகும். இக்கோயிலை அடைய பேருந்து வசதி கிடையாது சாலைவழியாக வரவேண்டுமானால் தருமபுரியில் இருந்து நல்லம்பள்ளி வந்து அங்கிருந்து வாடகை தானியில் வரவேண்டும் இக்கோயிலுக்கு பெரும்பாலானவர்கள் தொடர்வண்டி வழியாகவே வருகின்றனர்.

இக்கோயிலைச் சுற்றி குன்றுகளும், மரங்கள் சூழ்ந்த நிலையில் அவற்றிற்கு இடையில் சலசலக்கும் ஓடைகள் அதன் கரையில் உள்ள ஒரு பாறையில் ஏழு அடி உயர ஆஞ்சநேயரின் புடைப்புச் சிற்பமாக ஆஞ்சநேயர் கோயில் கொண்டுள்ளா்.

தர்மபுரி: நல்லம்பள்ளி அடுத்த முத்தம்பட்டி வீர ஆஞ்சநேயர் கோவில்

ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய பிரம்ம ரிஷி திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!

No comments:

Post a Comment