“இறைவா !!!!! நீயே அனைத்தும்” இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்.

"இறைவா !!!!! நீயே அனைத்தும்!!!!"
"இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்"

உலகின் ஆதி குரு, மாமுனிவர், குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளிய தினசரி அனைவரும் அதிகாலையில் எடுக்க வேண்டிய உறுதிமொழி. :-


1.தர்மம் செய்வேன்
2.அனைத்திடத்திலும் பின் அன்பாக அதாவது அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன்.
3.போட்டி, பொறாமைகள் நீக்குவேன்
4.அனைத்தும் எந்தனுக்கே சொந்தம் என்று பின் உயிர்ப் பலியும் இடமாட்டேன்
5.பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன்
6.அப்படிக் கொன்றாலும், நிச்சயமாய் அதை யான் தடுப்பேன்
7.அவை மட்டும் இல்லாமல், தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும்.
8.பிறருக்கு நன்மை செய்ய வேண்டும்
9.பிறருக்காக உழைக்க வேண்டும்
10.பிற ஜீவராசிகளும் ( உயிரினங்களும் ) பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில்அனைவரும் நினைக்க வேண்டும்.
11.அப்படி நினைத்தால் அகத்தியன் வந்து அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பான் என்று சொல்மகனே

( அடியவர்களே. இந்த மகிமை புகழ் அகத்திய மாமுனிவர் அருளிய உறுதிமொழி வாக்கினை சிரம்மேல் ஒவ்வொரு நொடியும் ஏந்தி, பிரம்மாவின் முன்பு தலை நிமிர்ந்து நமக்காக விதியை மாற்றஉத்தரவிடும் வண்ணம் அனைவருக்கும் உலகில் உள்ள 700 கோடி மக்களுக்குச்சென்று அடையும்வண்ணம் எடுத்துச் சொல்லுங்கள். )

மற்றவர்களைப்பற்றி எண்ணிப்பார் அப்பனே. மற்றவர்களை எண்ணி எண்ணி, தான் கெட்டுப்போனாலும் பரவாயில்லை என்று யார் ஒருவன் நினைக்கின்றானோ அவனிடத்தில் இறைவன் பிச்சை ஏந்துவான் அப்பா. பிச்சை ஏந்துவான் அப்பனே. என் பக்தர்களுக்கு இது தெரிய நிச்சயம் வேண்டும் அப்பனே.


அகத்திய பிரம்ம ரிஷி உரைத்த முதல் தரப் புண்ணியம் பெறும் ஒரே வழி:- (1) அன்னதானம் + (2) திருவாசகம் சிவபுராணம் + (3) மக்கள் வாழ , நல் வழிகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுதல். இப்படிச் செய்தால் மட்டுமே , முதல்தரப் புண்ணியம் உண்டாகும் என்று குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி உரைத்துள்ளார்கள். இதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள் என்றும் அனைவருக்கும் கூறி உள்ளார்கள். இதுபோல் அனைவரும் செய்து முதல் தரப் புண்ணியம் பெற்றுக் கொள்ளுங்கள். இறை அருளுடன் வளமாக வாழுங்கள். வாழ்க வளமுடன்!!!!!!!!!

siththarkalatchi - Moving text


அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு :- “அப்பனே, தானங்கள் செய்க, அப்பனே, உன்னால் இயன்றவரை தானங்கள் செய்க. அனுதினமும், என் பக்தர்கள், ஒரு உயிருக்காவது உணவளியுங்கள். அது போதும். அப்பனே, அதுவே கோடி புண்ணியமாகும்.”


Tuesday, February 6, 2024

சித்தர்கள் ஆட்சி - 349 : அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு ( கர்ம வட்டம் )

 




“இறைவா!!! அனைத்தும் நீ”


உலகின் ஆதி குரு , மாமுனிவர் , குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு:- 

அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு - மதுரையில் ஓர் அடியவர் இல்லத்தில் 6 அடியவர்களுக்கு இரவு உரைத்த வாக்கு. செப்டம்பர்.2023

வள்ளி, தெய்வானையோடு அன்பாக அமர்ந்திட்ட ஐயா போற்றி.

பணிந்தே வாக்குகள் ஈகின்றேன்.

அப்பனே எது என்றும் அறிய ஏன் இந்நேரத்தில் உங்களுக்கு யான் வாக்குகள் கூற வேண்டும்? அப்பனே யாருக்காவது தெரியுமா?

(அடியவர்கள் மௌனம்)

அப்பனே எது என்றும் அறிய அனைவருமே ஒரு பக்குவத்தை அதாவது ஒரு எல்லை தாண்டி வந்து விட்டீர்கள் அப்பனே. அதனால் தான் இப்பொழுது உரைத்துக் கொண்டிருக்கிறேன். யார் ஒருவன் எல்லை தாண்டி வருகின்றானோ அவன் தனக்கு எப்பொழுது வேண்டுமானாலும் எம்முடைய வாக்குகள் கிட்டும் அப்பனே.

அப்பனே ஆனாலும் எதை என்றும் புரியும் அளவிற்குக் கூட அதனால் அப்பனே சித்தனுக்கு அப்பன் இரவு பகல் கிடையாது அப்பா. சொல்லி விட்டேன் அப்பனே.

அதனால் உங்களுக்கு யான் என்ன தெரிவிப்பது?. 

அப்பனே எது என்று அறிய அதனால் அப்பனே ஒரு எல்லைக்குத்தான் அப்பனே அனைத்தும் சொல்லிக் கொண்டே இருக்க முடியும். 

ஆனால் அதைத் தாண்டி வந்து விட்டால் அப்பனே , மற்றவை எல்லாம் யாங்களே பார்த்துக் கொண்டு வழியும் நடத்துவோம். அப்பனே. அப்படித்தான் நீங்கள் இருக்கின்றீர்கள் அப்பனே.

அப்பனே இதனால் நான் என்ன சொல்வது? அப்பனே எதை என்று அறிய அதனால்தான் அப்பனே யாருக்கு எப்படி வாக்குகள் தர வேண்டும்? அப்பனே எப்பொழுது தர வேண்டும் என்பவை எல்லாம்  அப்பனே யான் தீர்மானித்துத் தீர்மானித்து அப்பனே சித்தர்கள் கூட அப்பனே அதுபோலத்தான் என் அப்பனே. அதனால் உங்களைப் பலமுறை பார்த்திட்டேன். அதனால் அப்படியே பல அனுபவங்கள் கூட நீங்கள்   பெற்றுள்ளீர்கள் என்பதை அப்பனே.

அதனால்தான் அப்பனே எவை என்றும் அறிந்தும் அறிந்தும் கூட  இதனால் எக்குறைகளுமே கொள்ள  அவசியமில்லை என்பேன் அப்பனே. 

வாழ்க்கையில் அப்பனே அதாவது வாழ்க்கை பயணம் எப்படி இருக்கும் என்பதை எல்லாம் நீங்கள் உணர்ந்ததே என்பேன் அப்பனே. அதை உணர்ந்து கொண்டால் அப்பனே பின் எதுவும் தேவை இல்லை அப்பா.

இறைவன் கூட அப்பனே தம்மிடத்தில் ( உங்களிடத்தில் )  இருந்து கொண்டு வழி நடத்துவான் அப்பனே.

அப்பனே இதனால் குற்றங்கள் இல்லை. குறைகள் இல்லை. அப்பனே அனைத்தும் யான் சொல்லி எதை என்றும் அறிய அறிய அப்பனே நீங்கள்  எவை என்று அறிய அறிய அதனால் நீங்களே கேளுங்கள் உங்களுக்கு என்ன தேவை என்று. 

ஆனாலும் பக்குவங்கள் உங்களுக்குப் பிறந்து விட்டன அப்பனே. அதனால் எதை என்றும் அறிய அறிய உங்களுக்குத் தேவையானவையெல்லாம் யான் கொடுப்பேன் அப்பனே. கவலையை விடுங்கள்.  

மனிதன் என்றாலே அப்பனே பெரும் கஷ்டமப்பா. அவ் கஷ்டங்கள் எப்படியெல்லாம் உங்களை வந்தடைந்தது என்பதெல்லாம் என்பதை எல்லாம் யான் அறிந்தும் அறிந்தும்  கூட அப்பனே  இதனால் அப்பனே ஒரு தெளிவான, அப்பனே முடிவுக்கு வந்துவிட்டார்கள் என்பேன் அப்பனே. இதுதான் அப்பனே அனுபவம். அப்பனே அனுபவங்கள் இல்லாமல் அப்பனே எதைச் சொன்னாலும் புரியாதப்பா. தெரியாதப்பா.

அப்பனே எவை என்றும் அறிய அப்பொழுது அனுபவங்கள் பிறந்தால் அப்பனே இறைவன் பக்கத்திலே இருப்பான் அப்பா. அப்பனே எவை செய்ய வேண்டும், எதைச் செய்யக்கூடாது என்றெல்லாம்.

அப்பனை பின் ஒரு வட்டத்திற்குள் தான் அப்பனே வாழ்க்கை. அப்பனே அவ்வட்டத்திற்கு  வெளியே வந்து விட்டீர்கள் நீங்கள் அப்பனே.

அப்பனே எதை என்றும் அறிய அறிய அதனால் அப்பனே வட்டத்திற்குள் இருக்கும் வரையில் தான் அப்பனே கர்மா. அப்பனே வட்டத்திற்கு வெளியே வந்துவிட்டால் எவ்கர்மா தாக்கினாலும் அப்பனே உங்களை எதை என்று அறிய இதுதானா என்று,  ஓ!!!!! இதுதானா வாழ்க்கை என்று போய்க் கொண்டே இருப்பீர்கள் அப்பனே. அப்படித்தான் உங்கள் வாழ்க்கையும் ஆகிவிட்டது.

ஆனாலும் அப்பனே அறிந்தும் அறிந்தும் கூட அதனால் அவ்வட்டத்தில் வெளியே எவை என்று அறிய வட்டத்தில் இருக்கும் வரை இறைவனைக் காண முடியாதப்பா சொல்லிவிட்டேன் அப்பனே. 

அப்பனே எவை என்று கூற வட்டத்தில் இருக்கும் பொழுது அப்பனே ஆசைகள் அப்பனே பின் பண்புகள் அப்பனே இன்னும் இன்னும் என்னென்ன பாசங்கள் அப்பனே எவை என்று கூற விருப்பங்கள். ஆனாலும் அவ் வட்டத்திற்குள்ளே இருக்கும் வரைதான் அப்பனே. 

ஆனாலும் அனைத்தும் கூட அப்பனே வீண் என்று எதை என்று கூறு எப்பொழுது நினைத்து அப்பனே மனிதன் வந்து விடுகின்றானோ வெளியில் வந்து விடுகின்றானோ அப்பனே இதனால் இறைவனே பார்த்துக்கொள்வான் என்பேன் அப்பனே.

அதனால் உங்கள் அனைவரையுமே இறைவன் பார்த்துக் கொள்வான். அவ்வளவுதான் வாழ்க்கை என்பேன் அப்பனே. வெளியே வந்து விட்டீர்கள் அப்பனே.

(வட்டத்திற்கு) உள்ளே இருந்தால்தான் அப்பனே பெரும் பிரச்சனை அப்பா. 

எதை என்று அறிய அறிய (அவ் கர்ம வட்டத்திற்கு) வெளியே வந்துவிட்டால் இறைவனை எவை என்று அறிய அறிய நீ வணங்கினாலும்,  வணங்காவிடினும் இறைவன் உன்னை அழைத்துச்செல்வான் அப்பனே. புரிந்து விட்டதா அப்பனே?

அடியவர்கள் :- ( அமைதி ) 

குருநாதர்:- அப்பனே எது என்றும் அறிய அறிய அவ் வட்டத்துக்குள் இருந்தால்தான் அப்பனே யான் அனைத்தும் சொல்ல வேண்டும் என்பேன் அப்பனே. 

ஏனென்றால் அவ் வட்டத்திற்குள்ளே இருக்கும்பொழுதே அனுபவங்கள் பல உங்களுக்கு பிறந்து விடுகின்றது என்பேன் அப்பனே. இதனால்தான் இறைவன் வெளியே அனுப்புகின்றான் அப்பனே. 

எவை என்று அறிய அறிய , யார் யார் எப்பொழுது பின் வெளியில் அனுப்ப வேண்டும் என்று உணர்ந்து உணர்ந்துத்தான் (இறைவன் வெளியே அனுப்புவான்).

அப்பனே அதனால் வாழ்க்கையை வெறுத்தவர்கள் நீங்கள். அப்பனே சொல்லிவிட்டேன்.

அப்பனே எதை என்று அறிய அறிய அதனால் அப்பனே எவை என்று புரிய புரிய அதனால் இப்படி எவை என்றும் அறிய அப்பனே இப்படி (இவ் வட்டத்திற்கு வெளியே) இருப்பவர்களுக்கு வாக்குகளா அப்பனே?  

அதனால் உங்கள் எண்ணப்படியே செல்லுங்கள் அப்பனே. எவை என்றும் அறிய அறிய அப்பனே அறியும் வண்ணம் யாங்கள் வழிகளெல்லாம் நின்று காப்போம் அப்பனே.  இதுவே எவை என்று அறிய அறிய உங்களுக்கெல்லாம் கடைப்பிறப்பு என்பேன் அப்பனே.

அறிந்தும் அறிந்தும் கூட அதனால் அப்பனே பின் அதாவது ஒரு எல்லைக்குள் தான் அப்பனே இறைவன் கூட சில கஷ்டங்களை ஏற்படுத்தி ஆனாலும் அப்பனே உங்கள் வாழ்க்கையில் பல இன்னல்களைச் சந்தித்துச் சந்தித்து,  அப்பனே அனுபவங்களைப் பெற்றுப் பெற்று அப்பனே எவை என்றும் அறிய அப்பனே இவ் அனுபவம்தான் பேசும் அப்பா, இறைவனிடத்தில் பேசும் அப்பா. 

அனுபவத்தைப் பெற்றுவிட்டால் அப்பனே இறைவனை நாட தேவையில்லை. இறைவன் தன்னிடத்தில் வந்து அப்பனே உங்களைக் கேட்பான் எவை என்று அறிய அறிய எந்தனுக்கு இவை வேண்டும், அவை வேண்டுமென்று கூற அப்பனே. அப்பொழுது நீங்கள் தெரிந்துகொள்ளலாம்.  பின் நீங்கள் எவை என்று கூட இன்னொருவர் பின் திருத்தலத்திற்கு அழைத்தாலும்,  வாருங்கள் என்று அழைத்தாலும் திருத்தலமா? எதற்காக யான் வர வேண்டும்? என்று நிலை வந்துவிட்டது அப்பனே உங்களுக்கு. 

அதனால்தான் அப்பனே எப்பொழுது எதைச் செப்ப வேண்டும். எதை வாக்குகளாகப் பரப்ப வேண்டும் என்று.











ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய பிரம்ம ரிஷி திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!

No comments:

Post a Comment