மதுரை அகத்திய மஹரிஷி ஆலயம் முகவரி

திருவாசகம் - உரை

அகத்திய பிரம்ம ரிஷி அருளிய , முதல் தர புண்ணியம் உங்களுக்கு பெற்றுத்தர உதவும் நாடி வாக்குகள்.

Thursday, January 18, 2024

சித்தர்கள் ஆட்சி - 305 : அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு


 

“இறைவா!!! அனைத்தும் நீ”


உலகின் ஆதி குரு , மாமுனிவர் , குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு:- 


துன்பமே இல்லாமல் வாழ வேண்டும், உளைச்சல்கள் இல்லாமல் வாழ வேண்டும், மெய்யான நிம்மதியோடு வாழ வேண்டும் என்று எண்ணுகின்ற மாந்தர்கள் எந்த நிலையிலும் துன்பங்களைப் பிறருக்கு எந்த வழியிலும் செய்யாமல் இருக்கப் பழகவேண்டும். 


கடினம்தான். மனிதப் பிறவி எடுத்துவிட்டால் அறிந்தும், அறியாமலும் பாவங்களைச் செய்ய நேரிடுகின்றது. அறிந்த பிறகு மீண்டும், மீண்டும் அப் பாவ நினைவை, பாவச் செயலை, பாவ வாக்கை நினையாமல், செய்யாமல் இருப்பதே இறையருள் பெறுவதற்கு உகந்த வழியாகும். 


ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய பிரம்ம ரிஷி திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!


No comments:

Post a Comment