“இறைவா !!!!! நீயே அனைத்தும்” இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்.

"இறைவா !!!!! நீயே அனைத்தும்!!!!"
"இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்"

உலகின் ஆதி குரு, மாமுனிவர், குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளிய தினசரி அனைவரும் அதிகாலையில் எடுக்க வேண்டிய உறுதிமொழி. :-


1.தர்மம் செய்வேன்
2.அனைத்திடத்திலும் பின் அன்பாக அதாவது அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன்.
3.போட்டி, பொறாமைகள் நீக்குவேன்
4.அனைத்தும் எந்தனுக்கே சொந்தம் என்று பின் உயிர்ப் பலியும் இடமாட்டேன்
5.பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன்
6.அப்படிக் கொன்றாலும், நிச்சயமாய் அதை யான் தடுப்பேன்
7.அவை மட்டும் இல்லாமல், தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும்.
8.பிறருக்கு நன்மை செய்ய வேண்டும்
9.பிறருக்காக உழைக்க வேண்டும்
10.பிற ஜீவராசிகளும் ( உயிரினங்களும் ) பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில்அனைவரும் நினைக்க வேண்டும்.
11.அப்படி நினைத்தால் அகத்தியன் வந்து அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பான் என்று சொல்மகனே

( அடியவர்களே. இந்த மகிமை புகழ் அகத்திய மாமுனிவர் அருளிய உறுதிமொழி வாக்கினை சிரம்மேல் ஒவ்வொரு நொடியும் ஏந்தி, பிரம்மாவின் முன்பு தலை நிமிர்ந்து நமக்காக விதியை மாற்றஉத்தரவிடும் வண்ணம் அனைவருக்கும் உலகில் உள்ள 700 கோடி மக்களுக்குச்சென்று அடையும்வண்ணம் எடுத்துச் சொல்லுங்கள். )

மற்றவர்களைப்பற்றி எண்ணிப்பார் அப்பனே. மற்றவர்களை எண்ணி எண்ணி, தான் கெட்டுப்போனாலும் பரவாயில்லை என்று யார் ஒருவன் நினைக்கின்றானோ அவனிடத்தில் இறைவன் பிச்சை ஏந்துவான் அப்பா. பிச்சை ஏந்துவான் அப்பனே. என் பக்தர்களுக்கு இது தெரிய நிச்சயம் வேண்டும் அப்பனே.


அகத்திய பிரம்ம ரிஷி உரைத்த முதல் தரப் புண்ணியம் பெறும் ஒரே வழி:- (1) அன்னதானம் + (2) திருவாசகம் சிவபுராணம் + (3) மக்கள் வாழ , நல் வழிகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுதல். இப்படிச் செய்தால் மட்டுமே , முதல்தரப் புண்ணியம் உண்டாகும் என்று குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி உரைத்துள்ளார்கள். இதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள் என்றும் அனைவருக்கும் கூறி உள்ளார்கள். இதுபோல் அனைவரும் செய்து முதல் தரப் புண்ணியம் பெற்றுக் கொள்ளுங்கள். இறை அருளுடன் வளமாக வாழுங்கள். வாழ்க வளமுடன்!!!!!!!!!

siththarkalatchi - Moving text


அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு :- “அப்பனே, தானங்கள் செய்க, அப்பனே, உன்னால் இயன்றவரை தானங்கள் செய்க. அனுதினமும், என் பக்தர்கள், ஒரு உயிருக்காவது உணவளியுங்கள். அது போதும். அப்பனே, அதுவே கோடி புண்ணியமாகும்.”


Thursday, January 11, 2024

சித்தர்கள் ஆட்சி - 287 : அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு - “புண்ணியச் சேவையில் உள்ள அடியவர்களைப் பற்றிக் குறை சொல்பவர்களைப் பற்றி குருநாதர் உரைத்த எச்சரிக்கை வாக்கு”



“இறைவா!!! அனைத்தும் நீ”

உலகின் ஆதி குரு , மாமுனிவர் , குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு:- 

அடியவர்:- நிறையப் பேர் மனசுக்கு வருத்தப்படுவது போல் செய்கின்றனர். மனசுக்குக் கஷ்டமாக உள்ளது. ( இந்த அடியவர்  முழுமையாகப் புண்ணியச் சேவையில் குரு வழியில் செயல்படுபவர். ) 

குருநாதர்:- அம்மையே இதனால்தான் யான் சொன்னேன். அம்மையே இது கலியுகம் என்பேன். விசித்திரமானது தான். ஆனாலும் இங்கு யானே இருக்கின்றபொழுது,  ( உங்களைக் குறை சொல்லும்) அவர்கள் எல்லாம் எதை என்று கூற என் காலடியில்தான் இருக்கின்றார்கள்.  எந்தனுக்குத் தெரியும் எப்படி அவர்களை எதை என்று அறிய , எங்கு எவை என்று அறிய அறிய பின் எதை என்று அறியாமலே பின்..

ஆனாலும் உயர்வான இடத்திற்குச் சென்று அடையும் போது உயர்வானவர்களே நல் மனதுடையவர்களே நம்மிடையே வருவார்கள். ஆனாலும் தாழ்வான எதை என்று அறிய அறிய இடத்திற்குச் செல்லும் பொழுது அவர்களே மனக்குழப்பத்தை ஏற்படுத்தி அவர்களே தாழ்வானவற்குப் போய்விடுவார்கள். இதுதான் ரகசியம் என்பேன். 

( குருநாதர் அடியவர்களே, உங்கள் புண்ணியச்சேவைக்கு இந்த வாக்கு மிக்க தைரியமூட்டும் வாக்கு. குருநாதர் பாதங்களில் உங்கள் மனக்கவலையை விட்டு உங்கள் புண்ணியச் சேவையைத் தொடருங்கள். உங்கள் உதவிக்குப் பல கோடி பேர், ஜீவராசிகள் காத்துள்ளனர். உதவிகளை விதைத்துக்கொண்டே செல்லுங்கள். அனைத்தும் குருநாதர், சித்தர்கள் அழகாக அமைத்துத் தருவார்கள். கவலை வேண்டாம். வாழ்க உங்கள் சேவை.

ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய பிரம்ம ரிஷி திருவடிகளில் சமர்ப்பணம்!!!

No comments:

Post a Comment