மதுரை அகத்திய மஹரிஷி ஆலயம் முகவரி

திருவாசகம் - உரை

அகத்திய பிரம்ம ரிஷி அருளிய , முதல் தர புண்ணியம் உங்களுக்கு பெற்றுத்தர உதவும் நாடி வாக்குகள்.

Friday, January 12, 2024

சித்தர்கள் ஆட்சி - 291 : அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு - “ஏன் மனிதர்கள் கண்களுக்கு இறைவன் தெரிவதில்லை? எதன் மூலம் இறைவனைக் கூட வென்று விடலாம்?”


 

“இறைவா!!! அனைத்தும் நீ”


உலகின் ஆதி குரு , மாமுனிவர் , குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு:- 


அப்பனே மனிதனுக்கு தெரியாதப்பா அப்பனே  அதனால் தான் அப்பனே பின் எவை என்று கூட அதாவது கோமாதாவிற்கு ஏன் அப்பனே யான் உணவுகளை அளிக்கச் சொன்னேன் அப்பனே?

கண்களுக்கு தெரியும் அப்பா எவை என்று கூட இறைவன்  அப்பனே

ஆனால் அப்பனே பைரவர்களுக்கும் (பைரவ வாகன ஜீவராசிகள்) கூட அப்பனே தெரியுமப்பா இறைவனை காண!!! 


ஆனால் மனிதன் இருக்கின்றானே!!!!!........ அவன் கண்களுக்கு மட்டும் இறைவன் தெரிய மாட்டான் அப்பா!!!!

ஏனென்றால் ஆசைகளப்பா ஆசைகள் கோடி கோடி ஆசைகளப்பா!!!

அக் கோடி எதை என்றும் அறிய அறிய அப்பனே எப்படியப்பா சொல்வது???


அப்பனே ஆசைகளை வென்று விட்டால் அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே இறைவனைக் கூட வென்று விடலாம் அப்பனே!!!!!!

காலத்தைக் கூட வென்று விடலாம் அப்பனே!!!!!

இதனால் அப்பனே உங்கள் பாதையில் இறைவனா??? 

அப்பனே இறைவன் பாதையில் நீங்களா ????


அப்பனே இறைவன் பாதையில் நீங்கள் என்று இருந்தால்  இறைவனே தன் பக்கத்தில் அமர்த்தி  அனைத்தும் ஏற்பாடு செய்வான். அதாவது மனித ரூபத்திலே வந்து அப்பனே. 


ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய பிரம்ம ரிஷி திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!

No comments:

Post a Comment