மதுரை அகத்திய மஹரிஷி ஆலயம் முகவரி

திருவாசகம் - உரை

அகத்திய பிரம்ம ரிஷி அருளிய , முதல் தர புண்ணியம் உங்களுக்கு பெற்றுத்தர உதவும் நாடி வாக்குகள்.

Wednesday, January 3, 2024

சித்தர்கள் ஆட்சி - 278 : அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு - “எதன் மூலம் மனிதனுக்குக் கர்மா ஆரம்பம் ஆகின்றது?”


 

“இறைவா!!! அனைத்தும் நீ”


உலகின் ஆதி குரு , மாமுனிவர் , குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு:- 

அகத்திய மாமுனிவர் வாக்கு 14-12-2022

ஆதி அந்தம் இல்லாதவனைப் பணிந்து வாக்குகள் பரப்புகின்றேன் அகத்தியன். 

( நாடி வாசிக்கும் போது உங்கள் பக்கத்தில் யாரும் உள்ளார்களா என்று நாடி வாசிக்கும் அருளார் கேட்க இதற்க்கு அடியவர் “யாரும் இல்லை “ என்று சொன்னார்.


ஒன்றுக்கொன்று உணர்ந்து உணரந்து சொந்தங்கள். இதுதான் வாழ்க்கையப்பா. அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே உணர்ந்நு உணரந்து எவைதான் யான் சொல்ல அப்பனே. அனைத்தும் உணர்ந்து விட்டாய் அப்பனே. பின் உலகம் நாடகம் அப்பனே எதை என்று கூற. 

அப்பனே வாழ்க்கை எவை என்று உணர்ந்து உணர்ந்து அப்பனே ஆனாலும் மனிதன் சொந்தம் என்று எண்ணிக்கொன்டு இருக்கின்றான் அப்பனே. ஆனால் இப்பொழுது நீ சொன்னாயே பின் எதை என்று அறிய அறிய யாரும் இல்லை என்று அதுதான் உண்மை அப்பா. 

ஒவ்வொரு மனிதனும் இதை உணர்ந்து விட்டால் அவனை ஒன்றுமே செய்ய இயலாது என்பேன் அப்பனே. 

பந்தத்திற்கு சென்று சென்று அப்பனே சிக்கிக்கொண்டு பின் தன் இல்லத்திறக்கு இவ்வளவு, தன் மகனுக்கு இவ்வளவு என்று சொல்லிக்கொண்டு இருந்தால் அதில் இருந்துதான் கர்மா ஆரம்பம் என்பேன். 

அதனால் உந்தனுக்கு இனி இல்லை கர்மா.  ( இனிமேல் அந்த அடியவருக்கு இனி வாழ்நாளில் கர்மா சேராது என்ற மகத்தான அருள் வாக்கு அருளினார் மகத்தான மகிமை புகழ் அகத்திய மாமுனிவர். ) 

அப்பனே நலன்கள் நலன்கள். கவலை கொள்ளாமல் இரு அப்பனே. 


ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய பிரம்ம ரிஷி திருவடிகளில் சமர்ப்பணம்!!!





No comments:

Post a Comment