“இறைவா !!!!! நீயே அனைத்தும்” இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்.

"இறைவா !!!!! நீயே அனைத்தும்!!!!"
"இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்"

உலகின் ஆதி குரு, மாமுனிவர், குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளிய தினசரி அனைவரும் அதிகாலையில் எடுக்க வேண்டிய உறுதிமொழி. :-


1.தர்மம் செய்வேன்
2.அனைத்திடத்திலும் பின் அன்பாக அதாவது அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன்.
3.போட்டி, பொறாமைகள் நீக்குவேன்
4.அனைத்தும் எந்தனுக்கே சொந்தம் என்று பின் உயிர்ப் பலியும் இடமாட்டேன்
5.பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன்
6.அப்படிக் கொன்றாலும், நிச்சயமாய் அதை யான் தடுப்பேன்
7.அவை மட்டும் இல்லாமல், தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும்.
8.பிறருக்கு நன்மை செய்ய வேண்டும்
9.பிறருக்காக உழைக்க வேண்டும்
10.பிற ஜீவராசிகளும் ( உயிரினங்களும் ) பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில்அனைவரும் நினைக்க வேண்டும்.
11.அப்படி நினைத்தால் அகத்தியன் வந்து அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பான் என்று சொல்மகனே

( அடியவர்களே. இந்த மகிமை புகழ் அகத்திய மாமுனிவர் அருளிய உறுதிமொழி வாக்கினை சிரம்மேல் ஒவ்வொரு நொடியும் ஏந்தி, பிரம்மாவின் முன்பு தலை நிமிர்ந்து நமக்காக விதியை மாற்றஉத்தரவிடும் வண்ணம் அனைவருக்கும் உலகில் உள்ள 700 கோடி மக்களுக்குச்சென்று அடையும்வண்ணம் எடுத்துச் சொல்லுங்கள். )

மற்றவர்களைப்பற்றி எண்ணிப்பார் அப்பனே. மற்றவர்களை எண்ணி எண்ணி, தான் கெட்டுப்போனாலும் பரவாயில்லை என்று யார் ஒருவன் நினைக்கின்றானோ அவனிடத்தில் இறைவன் பிச்சை ஏந்துவான் அப்பா. பிச்சை ஏந்துவான் அப்பனே. என் பக்தர்களுக்கு இது தெரிய நிச்சயம் வேண்டும் அப்பனே.


அகத்திய பிரம்ம ரிஷி உரைத்த முதல் தரப் புண்ணியம் பெறும் ஒரே வழி:- (1) அன்னதானம் + (2) திருவாசகம் சிவபுராணம் + (3) மக்கள் வாழ , நல் வழிகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுதல். இப்படிச் செய்தால் மட்டுமே , முதல்தரப் புண்ணியம் உண்டாகும் என்று குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி உரைத்துள்ளார்கள். இதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள் என்றும் அனைவருக்கும் கூறி உள்ளார்கள். இதுபோல் அனைவரும் செய்து முதல் தரப் புண்ணியம் பெற்றுக் கொள்ளுங்கள். இறை அருளுடன் வளமாக வாழுங்கள். வாழ்க வளமுடன்!!!!!!!!!

siththarkalatchi - Moving text


அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு :- “அப்பனே, தானங்கள் செய்க, அப்பனே, உன்னால் இயன்றவரை தானங்கள் செய்க. அனுதினமும், என் பக்தர்கள், ஒரு உயிருக்காவது உணவளியுங்கள். அது போதும். அப்பனே, அதுவே கோடி புண்ணியமாகும்.”


Sunday, May 1, 2022

சித்தர்கள் ஆட்சி - 61 : பள்ளி குழந்தைகளுக்கு திருவாசகம் சிவபுராணம் வகுப்பு

 


       அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடன் உறை அகத்திய மஹரிஷி









 இன்று , மே 1ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மதுரை பசுமலையில் அமைந்துள்ள ஶ்ரீ சக்தி மாரியம்மன் ஆலயத்தில்  பள்ளி குழந்தைகளுக்கு நடந்த திருவாசகம் சிவபுராணம் வகுப்பு நடந்தது. இதன் மூலம் பக்தி எனும் இறை ஒழுக்கம். இதன் தொடர்பாக பின் வரும் காகபுசண்ட மஹரிஷி அளித்த வாக்கு நமக்கு நல்ல விழிப்புணர்வு உண்டாக்கும். 

👇👇👇👇👇👇👇👇

பக்தியை கடைபிடியுங்கள்!!!

பக்தியை கடைப்பிடித்தால் ஒழுக்கங்கள் நிறையும்!!!

ஒழுக்கங்கள் நிறைந்தால் குடும்பங்கள் செழிப்புகள் அடையும்.

குடும்பங்கள் செழித்தால்.. இவ் நாட்டில் உள்ள அனைத்தும் மாறும்.

முதலில் குழந்தைகளுக்கு கற்றுத் தாருங்கள் ஒழுக்கங்களை...!!! 

இதையன்றி கூற இவை ஆனாலும் பின் அவ் ஒழுக்கங்கள் கற்றுக் கொடுக்கவில்லை என்றால்  உந்தனை நிச்சயம் ஒழுக்கம் இல்லாமல் அக்குழந்தைகள் உன்னையே அழித்துவிடும்.

- 22/4/2022 அன்று காகபுஜண்டர் ரிஷி உரைத்த பொது வாக்கு 
(  நாடி உரை மூலம்  https://siththanarul.blogspot.com/2022/05/1127.html) 

🙏🌸🙏🌸🙏🌸🙏🌸🙏

பள்ளி குழந்தைகளுக்கு திருவாசகம் வகுப்பை உங்கள் அருகில் உள்ள ஆலயங்களில் எடுக்க உதவி புரியுங்கள் என உங்கள் முன் மானசீகமாக இந்த செய்தியின் மூலம் மண்டியிட்டு சிரம் தாழ்த்தி இரு கை ஏந்தி வேண்டுகின்றோம். 

திருவாசகம் ஓதும் பெரியோர்களே, உங்கள் ஆதி சிவன் ஞானத்தை பள்ளி குழந்தைகளுக்கு அளித்து அருள் ஆட்சி நடக்க உதவி புரிய வேண்டுகின்றோம்.

இந்த செய்தியை உண்மைப்பொருள் மெய்ப்பொருளை உலகம் உணர, உலகெங்கிலும் உள்ள அனைத்து குழுக்களுக்கும் பகிர வேண்டுகின்றோம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

No comments:

Post a Comment