“இறைவா !!!!! நீயே அனைத்தும்” இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்.

"இறைவா !!!!! நீயே அனைத்தும்!!!!"
"இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்"

உலகின் ஆதி குரு, மாமுனிவர், குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளிய தினசரி அனைவரும் அதிகாலையில் எடுக்க வேண்டிய உறுதிமொழி. :-


1.தர்மம் செய்வேன்
2.அனைத்திடத்திலும் பின் அன்பாக அதாவது அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன்.
3.போட்டி, பொறாமைகள் நீக்குவேன்
4.அனைத்தும் எந்தனுக்கே சொந்தம் என்று பின் உயிர்ப் பலியும் இடமாட்டேன்
5.பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன்
6.அப்படிக் கொன்றாலும், நிச்சயமாய் அதை யான் தடுப்பேன்
7.அவை மட்டும் இல்லாமல், தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும்.
8.பிறருக்கு நன்மை செய்ய வேண்டும்
9.பிறருக்காக உழைக்க வேண்டும்
10.பிற ஜீவராசிகளும் ( உயிரினங்களும் ) பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில்அனைவரும் நினைக்க வேண்டும்.
11.அப்படி நினைத்தால் அகத்தியன் வந்து அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பான் என்று சொல்மகனே

( அடியவர்களே. இந்த மகிமை புகழ் அகத்திய மாமுனிவர் அருளிய உறுதிமொழி வாக்கினை சிரம்மேல் ஒவ்வொரு நொடியும் ஏந்தி, பிரம்மாவின் முன்பு தலை நிமிர்ந்து நமக்காக விதியை மாற்றஉத்தரவிடும் வண்ணம் அனைவருக்கும் உலகில் உள்ள 700 கோடி மக்களுக்குச்சென்று அடையும்வண்ணம் எடுத்துச் சொல்லுங்கள். )

மற்றவர்களைப்பற்றி எண்ணிப்பார் அப்பனே. மற்றவர்களை எண்ணி எண்ணி, தான் கெட்டுப்போனாலும் பரவாயில்லை என்று யார் ஒருவன் நினைக்கின்றானோ அவனிடத்தில் இறைவன் பிச்சை ஏந்துவான் அப்பா. பிச்சை ஏந்துவான் அப்பனே. என் பக்தர்களுக்கு இது தெரிய நிச்சயம் வேண்டும் அப்பனே.


அகத்திய பிரம்ம ரிஷி உரைத்த முதல் தரப் புண்ணியம் பெறும் ஒரே வழி:- (1) அன்னதானம் + (2) திருவாசகம் சிவபுராணம் + (3) மக்கள் வாழ , நல் வழிகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுதல். இப்படிச் செய்தால் மட்டுமே , முதல்தரப் புண்ணியம் உண்டாகும் என்று குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி உரைத்துள்ளார்கள். இதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள் என்றும் அனைவருக்கும் கூறி உள்ளார்கள். இதுபோல் அனைவரும் செய்து முதல் தரப் புண்ணியம் பெற்றுக் கொள்ளுங்கள். இறை அருளுடன் வளமாக வாழுங்கள். வாழ்க வளமுடன்!!!!!!!!!

siththarkalatchi - Moving text


அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு :- “அப்பனே, தானங்கள் செய்க, அப்பனே, உன்னால் இயன்றவரை தானங்கள் செய்க. அனுதினமும், என் பக்தர்கள், ஒரு உயிருக்காவது உணவளியுங்கள். அது போதும். அப்பனே, அதுவே கோடி புண்ணியமாகும்.”


Tuesday, December 26, 2023

சித்தர்கள் ஆட்சி - 270 : அழகன் கந்தன் அருள் வாக்கு - “இறைவன் இயக்கும் கருவியே மனிதன்”


 

“இறைவா!!! அனைத்தும் நீ”


அழகன் கந்தன் வாக்கு (19-12-2023):- 


ஒரு கருவியை நினைத்துக் கொள். கருவியை வைத்து விடுகின்றான். ஆனாலும் பின் அதை இயக்கும் சக்தி உன்னிடத்தில்தான் இருக்கின்றது. அதே போலத்தான் (இறைவன்) மனிதனைப் படைத்து விடுகின்றான். ஆனாலும் அதனை இயக்கும் சக்தி இறைவனிடத்தில் இருக்கின்றது என்பது சரியாக எவன் ஒருவன் உணர்ந்து விடுகின்றானோ, அப்பொழுது அவன்தன் புண்ணியப்பாதையில் செல்கின்றான். 


பின் அப்படி இல்லை என்றால் யான் அதைச் செய்ய வேண்டும். இதைச் செய்ய வேண்டும் என்று இறைவனுக்கு, எங்களுக்கு…யான் தான் அனைவருக்கும் நன்மை செய்யவேண்டுமே தவிர எங்களுக்கு ஏன் செய்ய வேண்டும் என்று… அதாவது இறைவனுக்கு ஏன் செய்ய வேண்டும் என்பதைக்கூட அறிந்தும் கூட சிந்தித்ததுண்டா மனிதன்? ஆனால் சிந்திப்பதில்லை மகனே கேள். 

( விளக்கம் :- இறைவன்தான் மனிதனுக்கு அனைத்தும் கொடுக்க வேண்டுமே தவிர, மனிதன் முட்டாள்தனமாக இறைவனுக்கு அதைச் செய்கின்றேன், இதைச் செய்கின்றேன் என்று புரியாமல் அனைத்தும் செய்கின்றான். இது ஆணவத்தை விலைக்கு வாங்கும் செயல். இறைவன்தான் அனைத்திற்கும் காரணம் என்றால் அவ் மனிதனிடம் ஜீவகாருண்யம் தலை தூக்கி அவனிடம் கருணையுடன் அரசாளும் என்பதை உணர்க.)

இவ் சிந்திப்பு இல்லை என்றால் என்ன கொடுத்தாலும் புரயோஜனம் இல்லை. இறைவன் தான் அனைத்திற்கும் காரணம் என்பதை எல்லாம். 


ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய பிரம்ம ரிஷி திருவடிகளில் சமர்ப்பணம்!!!


No comments:

Post a Comment