மதுரை அகத்திய மஹரிஷி ஆலயம் முகவரி

திருவாசகம் - உரை

அகத்திய பிரம்ம ரிஷி அருளிய , முதல் தர புண்ணியம் உங்களுக்கு பெற்றுத்தர உதவும் நாடி வாக்குகள்.

Sunday, September 3, 2023

சித்தர்கள் ஆட்சி - 116 : அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு

 




குருநாதர் அகத்திய பெருமான் தம் திருவாய் மலர்ந்து ஓதிமலையின் சிறப்பு குறித்து ஓதிய  பா!!!! 


சங்கரனுக்குசரவணகுகன் ஓதிய கிரி !!!!!


சங்கடப்பட்ட பல்மாந்தர்கள் தலைவிதி மாறிய கிரி !!!


சபலங்கள்,சலனங்கள் விட்டு ஓடிடும் கிரி !!!


சிறப்பில்லா முன்வினை ஊழ்பயன் சிறப்பாக மாற்றித் தரும் கிரி !!!


சிந்தனையில் அணுவளவும் கட்டமில்லா தன்மையை நல்கிடும் கிரி !!!


சிறப்போ,சிறப்பில்லையோ,பேதம் பார்க்கா வாழ்க்கையை ஏற்க வைக்கும் கிரி !!!


சப்த கன்னியர்கள்,அன்னையோடு,அன்னை அருளால் அருளும் கிரி !!!


 செப்புங்கால்,

பஞ்சமும் அடங்கபஞ்சவதனத்தோன் அருளும் கிரி !!!


சிறப்பாக எத்தனை குன்றுகள் இளையவன் அருளால் இருந்திட்டாலும்,குன்றுக்கெல்லாம் உயர்குன்றாய் இன்றும் சான்றாய் அருளும் கிரி !!!


அன்னையோடு,ஐயன் அமர்ந்து அன்றும்,இன்றும்,என்றும் அருளும் கிரி !!!


நீறு வேறுநாமம் வேறு என்று அறியாமையால் எண்ணும் மாந்தனுக்கு,

நீறு பூத்த அக்னிபோல் நீரோடு நாமமும் கலந்து வேங்கடகிரியாய் அருளும் கிரி !!!


கட்டிய கணவன் காதில் ரகசியமாய் மனையாள் ஓதினாலும்,

கட்டிய மனைவி ஓதுகிறாளே என்று தாய் ஓதினாலும்,

உபயத்தையும் தாண்டி பிள்ளைகளுக்கு எதை ஓதினாலும்

மாந்த குரு சிஷ்யனுக்கு ஓதினாலும்

அனைத்திலும் பேதமுண்டு!!!

.சுயநல நோக்குண்டு !!


பேதமில்லா தாண்டிய நிலையில் வேதமெல்லாம் ஓர் உருவாக !!!

ஓம்கார நாத வெள்ளம் ரூபமாக,

நேத்திரத்தில் கருணை வெள்ளம் பிரவாகமெடுக்க,!!!

அறுவதனமும் ஐவதனமாகி,

எழு பிறப்பும் எட்டென விரட்டி,

உபயவினையும் இல்லாது ஒழித்து,

சூல நேத்திரத்தோன் திரு மைந்தன் சதுரத்தை நவரசமாய் பிழிந்தெடுத்து,

அதனையும் தாண்டி பல்வேறு நுட்பத்தை பேதமில்லா ஓதி

ஒருமுகமாய்திருமுகமாய்ஒரு நினைவாய் மாந்தன் வாழ அருளும் கிரி.!!!!


ஞானத்தை நல்கும் கிரி !!!


அஞ்ஞானத்தை அடியோடு அழிக்கும் கிரி !!!


பேதத்தை நீக்கும் கிரி !!!


வேதத்தை உணர்த்தும் கிரி !!!


சீரற்ற குணங்களை சீராக்கும் கிரி !!!


நிலைத்த செல்வத்தை நல்கும் கிரி !!!


வாழ்வின் தடைகளை நீக்கும் கிரி !!!


எதிர்பார்த்த விடைகளை நல்கும் கிரி !!!


கர்ம நிலைகளை மாற்றும் கிரி !!!


அக உளைச்சல் ஒழிக்கும் கிரி !!!


பேதம் காட்டாத வேத கிரி !!!


ஓம் எனும் பிரணவம் ஒலிக்கும் நாத கிரி !!!


இளையவன் திருவடி பாதம் படிந்த கிரி !!!


அன்னை நிரந்தரமாய் அருளும் கிரி !!!


ஐயனோடு இன்று அனைவரும் இருக்கும் கிரி !!!


ஓதும் கிரி !!!! அது ஓதிய கிரி !!!


பேதம் தவிர்த்து பிரணவநாதம் கலந்து ஒலிக்கும் கிரி !!!


ஓம் நமகுமாராய !


ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

No comments:

Post a Comment