மதுரை அகத்திய மஹரிஷி ஆலயம் முகவரி

திருவாசகம் - உரை

அகத்திய பிரம்ம ரிஷி அருளிய , முதல் தர புண்ணியம் உங்களுக்கு பெற்றுத்தர உதவும் நாடி வாக்குகள்.

Monday, March 11, 2024

சித்தர்கள் ஆட்சி - 363 : அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு - 15/9/2021 அன்று குருநாதர் அகத்தியர் உரைத்த பொது வாக்கு! வாக்குரைத்த இடம். ஸ்ரீ திருநிலை நாயகி உடனுறை பிரம்மபுரீஸ்வரர் ஆலயம், சித்தருகாவூர் கிராமம், வந்தவாசி வட்டம், திருவண்ணாமலை மாவட்டம்.














“இறைவா!!! அனைத்தும் நீ”

உலகின் ஆதி குரு , மாமுனிவர் , குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு:- 

15/9/2021 அன்று குருநாதர் அகத்தியர் உரைத்த பொது வாக்கு! வாக்குரைத்த இடம்.  

ஸ்ரீ திருநிலை நாயகி உடனுறை பிரம்மபுரீஸ்வரர் ஆலயம், சித்தருகாவூர் கிராமம், வந்தவாசி வட்டம், திருவண்ணாமலை மாவட்டம். 


ஆதி பரமனை மனதில் எண்ணி உரைக்கின்றேன் அகத்தியன் 

நல் முறைகள் ஆகவே இத்தலம் உயர்வடையும் என்பேன் பல சித்தர்களும் இங்கு நாடி வந்து பல சித்துக்களும் செய்தார்கள் என்பேன்.

அப்பனே இங்கு ஓர் பெரிய மண்டபம் உண்டு என்பேன் இதனால் அதில் கூட பல சித்தர்கள் ஞானிகள் வந்து அமர்ந்து உறங்கி சென்று இருக்கின்றார்கள் முன்னொரு காலத்தில் என்பேன்.


நல் முறைகள் ஆகவே எவை என்று கூற இதனையும் நல் முறைகள் ஆகவே கருவூரானும் (கருவூர் சித்தர்) அமைத்தான் என்பேன்.



நல் முறைகளாக இதனால் எவ்வாறு என்பதையும் கூட இத்தலத்திற்கு இன்னும் புகழ் பெற நல் முறைகள் ஆகவே வலம்வந்து வலம் வந்து கொண்டிருந்தால் தொழிலில் உயர்வு பெறலாம் என்பேன் என்பேன்.



தொழிலுக்கு அதிபதி இவனே என்பேன்.

அப்பனே நல் முறைகளாக இன்னும் பல திருத்தலங்கள் இன்னும் சிதிலடைந்து கொண்டே இருக்கின்றது ஆனாலும் மனிதர்களோ எவை எவை என்று புதுப்புது திருத்தலங்களை அமைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனாலும் பழைய திருத்தலங்களில் அப்பனே பல அற்புத சக்திகள் உள்ளன என்பேன் அங்கு சென்றால்தான் மட்டுமே கலியுகத்தில் மனிதன் பிழைத்துக் கொள்வான் என்பேன்.

ஆனாலும் இத்திருத்தலமும் அதில் ஒன்று என்பேன்.

நல் முறைகளாக விளக்கங்கள் அப்பனே புண்ணியங்கள் எவை என்று செய்ய அப்பனே நல் முறைகள் ஆகவே இங்கு வணங்கி செல்பவர்கள் நிச்சயம் தொழில் அமைப்பார்கள் என்பேன் தொழிலில் சிறந்து விளங்குவார்கள் என்பேன்.


(இங்கு வணங்கி செல்பவர்கள் நிச்சயம்) சுயதொழில் நல் முறையாக செய்வார்கள் என்பேன். இதுதான் ( இத்தலத்தின்) சிறப்பு என்பேன்.


சுயதொழில் செய்பவர்கள் நல் முறையாக இங்கே பின் ஒரு மண்டலம்(48நாட்கள்) நல் முறைகளாக இவனை வணங்கி பாடி துதித்து பின் சிவ புராணத்தைப் பாடி நல் முறைகள் ஆகவே தீபம் ஏற்றி அனுதினமும் அப்பனே நல் முறைகள் ஆகவே அரை மண்டலம்(24நாட்கள்) அதன் உரையே இருபத்தி நான்கு மனிதர்களுக்கு அனுதினமும் உணவை தானம் அளித்து நல் முறைகளாக சென்று விட்டால் பின் ஒரு மண்டலம் கழித்து உயர்வுகள் வரும் என்பேன். இதுதான் இத்தலத்தின் அதி சிறப்பு என்பேன்.



அப்பனே ஆனாலும் சித்தர்களுடைய திருத்தலங்கள் எவருக்கும் தெரிவது இல்லை கலியுகத்தில் அப்பனே முன்னே சொன்னேன் அப்பனே அற்ப சுக வாழ்க்கைக்காக வே மனிதன் ஓடோடி கொண்டிருக்கிறான் அதனால்தான் அப்பனே பின் பரிகாரங்கள் பரிகாரங்கள் என்றெல்லாம் தேடிக் கொண்டிருக்கின்றார்கள் ஆனாலும் அவை எல்லாம் ஒன்றும் செய்ய இயலாது என்பேன் அப்பனே இதனை நன்குணர்ந்து அனைத்து தலங்கள் சித்தர்கள் வாழ்ந்த ஸ்தலங்கள் மேலும் எழும்ப இங்கு வந்தும் எவ்வாறு என்பதையும் கூட ஆங்காங்கே மனிதர்கள் வணங்கி வந்தால் விமோசனம் கிடைக்கும்.

அதனை விட்டுவிட்டு எதையெதையோ செய்து கொண்டால் ஒன்றும் செய்ய இயலாது என்பேன்.

மனிதன் பின் படுகுழியில் விழத்தான் வேண்டும் என்பேன்.


நல் முறைகள் ஆகவே அப்பனே எவ்வாறு என்பதையும் கூட நினைக்கும் பொழுது கருவூரானே அனைத்தும் செய்து விடுவான் என்பேன் கருவூரான் பக்தர்கள் இங்கு வருவார்கள் என்பேன் அனைத்தும் நல் முறைகள் ஆகவே எவை எவை என்று கூற அதி விரைவிலேயே இத்தலத்திற்கும் நல் முறைகள் ஆகவே நடக்கும் என்பேன் சித்தர்களும் வருவார்கள் என்பேன் முன் ஜென்மத்தில் வாழ்ந்த பல ரிஷிகளும் இங்கே வருவார்கள் என்பேன். இதனை அதி விரைவில் முடித்து யான் அகத்தியனும் இங்கு வருவேன் என்பேன்.


நல் முறைகள் ஆகவே பலப்பல அப்பனே எவ்வாறு என்பதையும் கூட உணர்ந்து அப்பனே முறைகள் ஆகவே இச் சிவன் துணை புரிவான் தொழிலுக்கு மூலமான அதிபனும் துணை புரிவான் என்பேன்.



இன்னொரு விஷயத்தையும் சொல்கின்றேன் அப்பனே முறைகள் ஆகவே இங்கு வலம் வந்து எவ்வாறு என்பதையும் கூட நிலைநிறுத்தி அனுதினமும் இச் சிவனை 108 முறை நல் முறைகளாக வலம் வந்தால் குழந்தை பாக்கியமும் கிடைக்கும் என்பேன்.



அப்பனே எவ்வாறு என்பதையும் கூட எதனால் இதனில் இவன் தனக்கு பெயரையும் வைக்கலாம் என்பேன் திருநிலை நாயகி உடனுறை பிரம்மபுரீஸ்வரர் இன்று நீங்கள் அழைத்தாலும் சந்தான ஈஸ்வரி சந்தான ஈஸ்வரர் என்றும் அழைக்கலாம் தவறு இல்லை என்பேன்.


அப்பனே இன்னொரு விஷயத்தையும் சொல்கின்றேன் அப்பனே நல் முறைகள் ஆகவே இவன்தனை வணங்க பிரம்மனும் நல் முறைகள் ஆகவே வரங்கள் தருவான் என்பேன்.



( இவ் திருத்தலம் பல மகிமை புகழ் ) அற்புதங்கள் நிறைந்தது அப்பனே. 



ஆனாலும் இதனை யான் ஏற்கனவே சொல்லி கொண்டே இருக்கின்றேன் எவ்வாறு என்பதையும் கூட  பல பல திருத்தலங்களை அப்பனே மனிதர்கள் வணங்கி உயர்வு பெறுகிறார் என்று சில தீய மனிதர்கள் அழித்து விட்டார்கள்.

அப்பனே ஆனாலும் ஈசன் விடமாட்டான் என்பேன். எழுவான் என்பேன்.

ஆனாலும் எவரெவர் நியமிக்கப்பட வேண்டும் என்று என்பதுகூட ஈசனுக்கு தெரியும் அப்பனே. நல் முறையாக நல் மனிதர்களை நியமத்து விட்டான். அப்பனே.

அப்பனே நல் மேல் முறைகள் ஆகவே இங்கு கருவூரான் நல் முறைகள் ஆகவே வலம் வந்து இன்றளவும் அனுதினமும் இங்கே உறங்கித்தான் செல்கின்றான். என்பேன் இத்திருத்தலத்தை நல் முறையாக முடிக்கும் வரை அனுதினமும் இங்கு வந்து சென்று கொண்டுதான் இருப்பான் என்பேன்.

அப்பனே எவ்வாறு என்பதையும் கூட நினைக்கும் பொழுது நல் முறைகள் ஆகவே எவ்வாறு என்று நினைக்கும் அளவிற்கு கூட ராஜராஜ சோழனின் பங்கும் இங்கு உள்ளது என்பேன்.

அவனும் இம் மண்டபத்தை நல் முறையாக பெரிதாக்க அவன் தனும் பின் நல் முறைகளாக இத் திருத்தலத்திற்கு பல உதவிகள் செய்வான் என்பேன்.அதனால் ராஜராஜசோழனும் இங்கு வந்து இச் சிவனை தரிசித்து தான் சென்றிருக்கின்றான் என்பேன்.


அப்பனே நல் முறைகள் ஆகவே அருணகிரிநாதன் இங்கு சில நேரத்தில் தங்கிச் சென்று பின்  நல் முறைகளாக பின்பு தான் அண்ணாமலைக்கு சென்றான் என்பேன்.

அப்பனே இங்கு வந்து நல் முறைகளாக அவன்தனக்கு சில சில உதவிகள் கிடைக்காததால் அண்ணாமலைக்கு சென்று அங்கு உயிரையும் துறந்துவிட துணிந்து விட்டான் ஆனாலும் முருகன் காப்பாற்றினான் அப்பனே.



முருகனும் இங்கு ஒளிந்து கொண்டுதான் இருக்கிறான் இங்கு.


அப்பனே நல்முறைகள் ஆகவே அப்பனே இவ்வுலகத்தில் சிவனே பெரியவன் என்பேன் 

ஆனாலும் இதனையும் தடுத்தழிக்க அப்பனே முன்னொரு ஜென்மத்தில் படையெடுத்து வந்து பின் மனிதர்களெல்லாம் பின் திருத்தலங்களுக்குச் சென்றால்வாழ்ந்து விடுவார்கள் என்று நினைத்து பின் அனைத்தையும் அழித்து விட்டார்கள் ஆனாலும் கலியுகத்தில் நிச்சயம் நல்லோர்களால் எவ்வாறு என்பதையும் கூட யார் மூலம் எதனை செய்தால் நல்லது என்று கூட நினைத்து ஈசனே வரவழைத்து அனைத்தும் செய்துகொள்வான் என்பேன்.

இனிமேலும் கலியுகத்திலும் அப்பனே அக்கிரமங்கள் அநியாயங்கள் நடக்கும்பொழுது ஈசன் நிச்சயமாய் அன்றன்றே தண்டிப்பான் என்பேன்.

அப்பனே இதிலும் சூட்சமம் உள்ளது என்பேன் சூட்சமங்கள் அப்பனே எவை எவை என்று கூற மனிதன் இன்னும் ஒன்றுமே தெரியாமல் வாழ்ந்து வருகின்றான் அப்பனே முட்டாள்களாகவே வாழ்ந்து வருகின்றான்.

ஆனால் எவை என்று கூற இருக்கும்பொழுது இறையருள் பெற்று விட்டால் அப்பனே வேறு எதுவும் தேவை இல்லை என்பேன் இறையருளே அனைத்தும் கொடுத்துவிடும்.



ஆனாலும் மனிதன் எதன் எதனோ மாயையில் சிக்கிக் கொண்டு அனைத்தையும் இழந்துவிட்டு திரும்பவும் இறைவனிடத்தில் வந்தால் அவன் என்ன செய்வான்? மகனே?

அப்பனே ஆனாலும் எவ்வாறு என்பதையும் கூட மனிதன் எதை நோக்கிச் செல்கின்றானென்றால் கர்மாவை நோக்கியே செல்கின்றான்.

இதனையும் பல தடவைகளில் பல உரைகளில் யான் சொல்லியே வந்திருக்கின்றேன் அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே.


மனிதன் கர்மாவை சேர்ப்பதில் வல்லவன் என்பேன் அப்பனே இவ்வாறு என்பது கடைசியில் பின் எவ்வாறு என்பதையும் கூட கஷ்டங்கள் வந்தால் இறைவா இறைவா என்று ஓடோடி வருவது அப்பனே அதனால்தான் ஆறு அறிவுகள் இறைவன் பயன்படுத்தி கொள்வதற்காகவே கொடுத்திருக்கின்றான். ஆனாலும் மனிதர்களுக்கு அதை ஒழுங்காக பயன்படுத்தத் தெரியவில்லை மகனே. 


அப்பனே நல் முறைகள் ஆகவே இந்த ஆறு அறிவையும் ஒருவன் ஒழுங்காக கடைப்பிடித்தால் ஏழாவது அறிவு அவனுக்கு தெரிந்துவிடும் அவன் இறைவனையே காணலாம் என்பேன்.


அப்பனே நல் முறைகள் ஆகவே இறைவன் அனைத்து திறமைகளும் கொடுத்து தான் மனிதனை அனுப்புகின்றான் ஆனால் முட்டாள் மனிதனோ அவ விஷயங்களை அனைத்தையும் கெடுத்து கொண்டிருக்கின்றான்.

அப்பனே நல் முறைகள் ஆகவே சிவன் வருவான் எவ்வாறு என்பதை நினைத்துப் பார்க்கும் அளவிற்கு கூட அப்பனே நல் முறைகளாக அனைத்து சித்தர்களும் இங்கு வருவார்கள் என்பேன். நீங்கள் குறித்துள்ள நாட்களிலேயே நிச்சயம் அவர்களே வந்து இதனை பிரதிஷ்டை செய்வார்கள் பின் எவ்வாறு என்பதையும் கூட இதனையும் நிறுவித்து செய்வார்கள் அப்பனே இது உண்மை.

அப்பனே இதற்கும் சக்திகள் எவ்வாறு என்பதையும் கூட நினைத்துப் பார்க்கும் பொழுது அப்பனே இன்னொரு சூட்சுமத்தையும் சொல்கின்றேன் அப்பனே நன்றியோடு நல் முறைகள் ஆகவே கேட்டதை நல்ல முறையில் ஆகவே எவை எவை என்றும் கூற கூறி விளக்கும் பொழுது அதில் அதிலும் சூட்சமம் உள்ளது இல்லாதது என்றெல்லாம் இல்லை என்பேன்.

அப்பா என்று இவன் தனை மனமுருகி வணங்கி வழிபட்டால் இவனும் மனம் இரங்கி அருள் செய்வான் என்பேன்.



கருவூரானும் எவ்வாறு என்பதை நினைக்கும்பொழுது அப்பனே சித்தனும் எவ்வாறு என்பதையும் கூட நன்கு பொருந்தி நல் முறையாக வாழ்ந்திட கருவூரான் உதவி செய்வான் என்பேன்.


கருவூரான் செய்த பல பல லீலைகள் எவ்வாறு என்பதை நினைக்கும்பொழுது அப்பனே அவ் லீலைகள் அனைத்தும் பிழைப்பதற்காகவே  எழுதி இருக்கின்றான் ஆனாலும் முட்டாள் மனிதர்கள் அதனை அழித்தும் விட்டார்கள் என்பேன்.


அப்பனே கலியுகத்தில் மனிதன் இன்னும் அழிப்பதற்கே பார்ப்பான்

ஆனாலும் யாங்கள் சித்தர்கள் நிச்சயமாய் விடமாட்டோம் மாட்டோம் காப்பாற்றுவோம் இப்பூவுலகை.

அப்பனே எவ்வாறு என்பதையும் கூட கலியுகத்தில் கலி முற்றும் தருணத்தில் அப்பனே எவ்வாறு என்பதையும் கூட மனிதர்களுக்கு நோய்கள் வரும் பிரச்சினைகள் பல வரும் ஆனாலும் அப்பனே அதன் முன்னே யாங்கள் எவ்வாறு என்பதையும் கூட ஈசன் பின் திருவடிகள் ஆங்காங்கே சக்தி வாய்ந்த பல திருத்தலங்களை யாங்களே யார் மூலம் என்று எண்ணி ஈசனும் சேர்த்து உருவாக்குவோம் என்பேன்.

இதனால் அப்பனே கலியின் வேகம் குறையும் என்பேன்.

அப்பனே கடைபிடியுங்கள் நல்லவையாகவே நடக்கும் என்பேன். அப்பனே ஒன்றை தெரிவிக்கின்றேன் இதனை உரைக்கும் பொழுது கருவூரானே இங்கு அமர்ந்து கேட்டுக் கொண்டிருக்கின்றான் என்பேன்.


அப்பனே இதைபோன்று ஆசீர்வாதங்கள் எவருக்கும் இல்லை என்பேன் இங்கு அமர்ந்திருக்கும் அனைவருக்கும் ஆசிகள் கொடுத்துவிட்டான் என்பேன். அவரவர் விருப்பப்படி நல் முறைகள் ஆகவே நடக்கும் என்பேன்.


அப்பன்களே அம்மை களே அனு தினமும் ஏதாவது ஒரு ஜீவராசிகளுக்கு உணவு அளித்து விடுங்கள்.

அப்பனே நல் முறையாக இவ் ஈசனையே பிடித்துக் கொள்ளுங்கள் அனைத்தும் விரும்பியவாறே நடக்கும் என்பேன். இவன் தன் அனைத்தும் செய்வான் நல் முறைகள் ஆகவே.



அப்பன்களே அம்மை களே அனு தினமும் ஏதாவது ஒரு ஜீவராசிகளுக்கு உணவு அளித்து விடுங்கள்.

எவ்வாறு என்பது நினைத்துப் பார்க்கும் அளவிற்கு திருமணம் ஆகாதவர்களுக்கு நிச்சயம் விரும்பியவாறு நிச்சயம் அனைத்தும் கொடுக்கப்படும் என்பேன்.



இவ்வாலயத்தின் முதல் முறையாக வந்து நல் முறைகள் ஆகவே வணங்கி செல்பவர்கள் வீட்டில் சுபிட்சங்கள் சுப காரியங்கள் ஏற்படும் என்பேன். 


அப்பனே எவ்வாறு என்பதையும் கூட பல பல சித்தர்கள் வருவார்கள் அனைத்தும் செய்வார்கள் என்பேன் கவலைகள் இல்லை எவ்வாறு என்பதையும் கூட உயர்ந்து நிற்கும் இத்தலம் என்பேன்.

அப்பனே நல் முறைகளாக ஒன்றை மட்டும் தெரிவிக்கின்றேன் ஈசன் அருள் இல்லாமல் இங்கு யாரும் இத்திருத்தலத்திற்கு வரமுடியாது என்பேன்.

அலைந்து திரிந்து சிவனே கதி என்று நினைத்து இங்கு வந்துவிட்டால் அனைத்தும் மாறும் என்பேன். அனைத்தும் நல்கும் என்பேன்.


அப்பனே ஆனால் மனிதர்களோ அதை செய்தால் இவை நடக்கும் இதைச் செய்தால் அதை நடக்கும் என்று எங்கெங்கோ எவ்வாறு என்பதையும் கூட மனிதனை தேடி செல்கின்றான். ஆனால் மனிதனால் ஒன்றும் செய்ய இயலாது என்பேன். ஆனாலும் இவை தானே அதைச் செய்கிறேன் இதைச் செய்கிறேன் என்றெல்லாம் மனிதனை ஆசை காட்டி தூண்டிவிட்டு அப்பனே வேடிக்கை பார்க்கின்றவன் தான் மனிதன் என்பேன் 


ஆனாலும் இறைவன் எவ்வாறு என்பதையும் கூட பின் யாங்கள்(சித்தர்கள்) எங்களுடைய ஆட்சிகள் வரும் என்பேன்.

ஆனாலும் ஆங்காங்கே இருக்கும் தலங்களை ஏற்படுத்தி நல் முறைகளாக மக்களுக்கு யாங்களே நல்லவை செய்வோம் மனிதனை இனிமேலும் யாங்கள் நம்பப் போவது இல்லை என்பேன்.


நல் முறைகள் ஆகவே அப்பனே எவை எவை என்று கூற அப்பனே அகத்தியன் யான் இருக்கின்றேன் இத்திருத்தலத்தை முடிந்தவரையில் யானே முடித்து வைக்கின்றேன் இத்திருத்தலத்தை நல் முறைகள் ஆகவே.


நல் முறைகள் ஆகவே அப்பனே எவ்வாறு என்பதையும் கூட அப்பனே நலமாக நலமாக எண்ணியவாறு அப்பனே அனைத்தும் செய்வான் இவ் ஈசன் என்பேன். 


அப்பனே குற்றங்கள் இல்லை துன்பங்கள் இல்லை துயரங்கள் இல்லை. நல் முறைகள் ஆகவே அப்பனே அதனால்தான் சக்தி வாய்ந்த திருத்தலங்களை இன்னும் யாங்கள் நல் முறைகள் ஆகவே  மனிதர்களை பயன்படுத்தி கூட வெளிக் கொணர்ந்து ஏற்படுத்துவோம். எவ்வாறு என்பதையும் கூட

நல்லோர்கள் என்பதைக்கூட யாங்களே ஏற்படுத்துவோம் எங்களுக்கு தெரியும் யாரை பயன்படுத்த வேண்டும் என்று கூட. நல் மனிதர்களை யாங்கள் தேர்ந்தெடுத்து நடத்தி வைப்போம் நல் முறைகள் ஆகவே.

அப்பனே இதற்கு இது எவ்வாறு என்பதை கூட சொல்கின்றேன் நல் மனது இருந்தால் மட்டுமே போதுமானது.

அப்பனே நல் விதமாக அப்பனே எவ்வாறு என்பதையும் கூட முன்னேற்றங்கள் காணப் போகின்றது அப்பனே இங்குள்ள அனைவரும் நல் முறைகளாக சக்திகள் பெற்றுள்ளார்கள் என்பேன். அதனால் இங்குள்ள ஒவ்வொரு இல்லத்திலும் சக்திகள் கூடி அருள் பெருகும் என்பேன்.

அப்பனே நல் முறைகள் ஆகவே இங்கிருந்து எவ்வாறு என்பதையும் கூட பாம்புகள் ராஜ்யம் என்கின்றார்களே அவ் ராஜ்ஜியம் இத்திருத்தலமே என்பேன்.

அப்பனே நல் முறைகள் ஆகவே எங்கிருந்து எவ்வாறு என்பதையும் கூட பின் நல் முறைகள் ஆகவே அரை கிலோ மீட்டர் அளவிற்கு உள்ளே சென்றால் பல நாகராஜன்கள் தவழ்ந்து  கொண்டிருக்கின்றார்கள் என்பேன் அதனால் சக்திகள் பலம் என்பேன் இங்கு.



அப்பனே நல் முறைகள் ஆகவே ராகு கேதுக்கள் இவர்களால் ஏற்பட்ட தோஷங்களும் நிச்சயமாய் இங்கு விலகி ஓடும் என்பேன்.



அப்பனே இத்தலத்திற்கு நன்கு பல சிறப்புகள் உண்டு என்பேன் இன்னும் பல சூட்சமங்களை விவரிக்கின்றேன் நல் முறைகள் ஆகவே வரும் காலங்களில்.

அப்பனே என்னுடைய ஆசிகள் கருவூரானும் அப்பனே கேட்டு சந்தோஷம் அடைந்து விட்டான் என்பேன் மீண்டும் வந்து வாக்குகள் செப்புகிறேன் அப்பனே அனைவருக்கும் என்னுடைய நல்லாசிகள்.

Google Map

https://maps.app.goo.gl/6s85UgJqatcs4L3H7


ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய பிரம்ம ரிஷி திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!

No comments:

Post a Comment