“இறைவா !!!!! நீயே அனைத்தும்” இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்.

"இறைவா !!!!! நீயே அனைத்தும்!!!!"
"இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்"

உலகின் ஆதி குரு, மாமுனிவர், குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளிய தினசரி அனைவரும் அதிகாலையில் எடுக்க வேண்டிய உறுதிமொழி. :-


1.தர்மம் செய்வேன்
2.அனைத்திடத்திலும் பின் அன்பாக அதாவது அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன்.
3.போட்டி, பொறாமைகள் நீக்குவேன்
4.அனைத்தும் எந்தனுக்கே சொந்தம் என்று பின் உயிர்ப் பலியும் இடமாட்டேன்
5.பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன்
6.அப்படிக் கொன்றாலும், நிச்சயமாய் அதை யான் தடுப்பேன்
7.அவை மட்டும் இல்லாமல், தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும்.
8.பிறருக்கு நன்மை செய்ய வேண்டும்
9.பிறருக்காக உழைக்க வேண்டும்
10.பிற ஜீவராசிகளும் ( உயிரினங்களும் ) பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில்அனைவரும் நினைக்க வேண்டும்.
11.அப்படி நினைத்தால் அகத்தியன் வந்து அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பான் என்று சொல்மகனே

( அடியவர்களே. இந்த மகிமை புகழ் அகத்திய மாமுனிவர் அருளிய உறுதிமொழி வாக்கினை சிரம்மேல் ஒவ்வொரு நொடியும் ஏந்தி, பிரம்மாவின் முன்பு தலை நிமிர்ந்து நமக்காக விதியை மாற்றஉத்தரவிடும் வண்ணம் அனைவருக்கும் உலகில் உள்ள 700 கோடி மக்களுக்குச்சென்று அடையும்வண்ணம் எடுத்துச் சொல்லுங்கள். )

மற்றவர்களைப்பற்றி எண்ணிப்பார் அப்பனே. மற்றவர்களை எண்ணி எண்ணி, தான் கெட்டுப்போனாலும் பரவாயில்லை என்று யார் ஒருவன் நினைக்கின்றானோ அவனிடத்தில் இறைவன் பிச்சை ஏந்துவான் அப்பா. பிச்சை ஏந்துவான் அப்பனே. என் பக்தர்களுக்கு இது தெரிய நிச்சயம் வேண்டும் அப்பனே.


அகத்திய பிரம்ம ரிஷி உரைத்த முதல் தரப் புண்ணியம் பெறும் ஒரே வழி:- (1) அன்னதானம் + (2) திருவாசகம் சிவபுராணம் + (3) மக்கள் வாழ , நல் வழிகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுதல். இப்படிச் செய்தால் மட்டுமே , முதல்தரப் புண்ணியம் உண்டாகும் என்று குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி உரைத்துள்ளார்கள். இதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள் என்றும் அனைவருக்கும் கூறி உள்ளார்கள். இதுபோல் அனைவரும் செய்து முதல் தரப் புண்ணியம் பெற்றுக் கொள்ளுங்கள். இறை அருளுடன் வளமாக வாழுங்கள். வாழ்க வளமுடன்!!!!!!!!!

siththarkalatchi - Moving text


அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு :- “அப்பனே, தானங்கள் செய்க, அப்பனே, உன்னால் இயன்றவரை தானங்கள் செய்க. அனுதினமும், என் பக்தர்கள், ஒரு உயிருக்காவது உணவளியுங்கள். அது போதும். அப்பனே, அதுவே கோடி புண்ணியமாகும்.”


Friday, March 8, 2024

சித்தர்கள் ஆட்சி - 361 : அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு - “சிதம்பர ரகசியம் - திருச்சிற்றம்பல தரிசனம் - குருநாதர் அகத்தியர் உரைத்த பொது வாக்கு-மதுரை-2021”


 “இறைவா!!! அனைத்தும் நீ”


உலகின் ஆதி குரு , மாமுனிவர் , குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு:- 


சிதம்பர ரகசியம் - திருச்சிற்றம்பல தரிசனம் - குருநாதர் அகத்தியர் உரைத்த பொது வாக்கு-மதுரை


ஆதி சித்தனை மனதில் எண்ணி வாக்குகள் உரைக்கின்றேன் அகத்தியன்


எவை என்று கூற இதிலும் சூட்சமங்கள் அடங்கியுள்ளது என்பேன் நல்ல முறையாக அமைப்பது எல்லாம் சிறிதாயினும் மூர்த்திகள் எவ்வாறு என்பதையும் கூட நினைக்கும் பொழுது அப்பனே பெரிய அளவில் வருகின்றது மாயை என்பேன் இவ்வுலகத்தில் மாயை பின் மனிதனை அழிக்க.


ஆனாலும் இதனை எல்லாம் சொல்கின்றேன் சூட்சுமங்களை எல்லாம் சொல்லி அப்பனே நல் முறையாக திருத்துங்கள் மனிதனை என்பேன் மனிதன் திருந்தாவிட்டால் அப்பனே பின் இயற்கையும் திருந்தாது என்பேன்.


அப்பனே எவை வேண்டும் என்றுகூட கேட்டாலும் அப்பனே தன் சுயநலத்திற்காக வே இறைவனை வேண்டுகிறார்கள் அதை நாங்கள் ஏற்பதில்லை மகன்களே எப்பொழுதும் கூட.

அப்பனே எல்லோருக்கும் ஒன்றை தெரிவியுங்கள் அப்பனே அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் என்று வணங்க வேண்டும் இதனை தெரிவித்து விட்டால் இறைவனுக்குத் தெரியும் அப்பனே 



இவையன்றி கூட இன்னும் பல சூட்சமங்கள் இவ்வுலகத்தில் ஒளிந்து கொண்டிருக்கின்றது என்பேன் அப்பனே.

அப்பனே இவை மட்டுமன்றி அப்பனே மீண்டும் ஈசன் திருத்தலங்கள் கூட எவ்வாறு வடிவமைக்கப்படுகிறது என்பதைக்கூட என்பதை பார்த்தால் அதுவும் ஒரு ஆச்சர்யமே என்பேன். வரும் காலங்களில்.

அப்பனே எவை என்று கூற இன்னொரு ரகசியத்தை சொல்கின்றேன் அப்பனே தற்போது நல் முறையாக நல் முறைகள் ஆகவே எவ்வாறு என்றுகூட சிதம்பர ரகசியம் என்கிறார்களே அவ் ரகசியத்தை ஓர் முறை சொல்லி விடுகின்றேன். அப்பனே ஒரு ரகசியத்தை.

அப்பனே அத்திருத்தலத்தை ஈசனே அமைத்துக் கொண்டான் என்பதுதான் உண்மை. 



அப்பனே அங்கும் வருவான் என்பேன் ஈசன் எப்பொழுது வருவான் என்பதுகூட எந்தனுக்கு தெரியும்.

அதை அங்கு அவன் வரும் பொழுது அவன் கண்ணில் பட்டாலே போதும் பாவங்கள் தொலைந்துவிடும் என்பேன்.

அவ் சூட்சுமத்தையும் ஆருத்ரா தரிசனம் என்கின்றார்களே அவ் ஏழு நாட்களையும் அப்பனே சேர்த்துப் பார்த்தால் ஒரு நாள் வரும் கடைசி நாளில் வருவான் நேரமும் சொல்கின்றேன் வரும்பொழுது உங்களுக்கு.



இவையன்றி கூற அப்பனே ஒரு நாள் தங்குவான் என்பேன் உத்தரகோசமங்கையில்.

பின் எவை என்று கூற இப்பொழுதும் கூட அதை சொல்லி விடுகின்றேன் அப்பனே மார்கழி மாதத்திற்கு முன் ஒரு மாதத்தில் சொல்கின்றேன்.

அப்பனே எவை என்று கூற நல் முறைகள் ஆகவே அப்பொழுதுதான் அவனுக்கு நல் முறையாக வருடத்தில் ஒரு நாள்  அபிஷேகங்கள் (திருவாதிரை நாள் ஆருத்ரா தரிசனம்) நடக்கும் என்பேன்.

அப்பனே அவனுக்கு பிடித்தமான தலம் உண்டு என்பேன் அங்கு கூட.

அவன் எங்கு அமர்ந்திருப்பான் என்பதைக்கூட இப்பொழுதே சொல்லிவிடுகிறேன் அப்பனே அங்கு ஒரு மரம் இருக்குமே அங்கேதான்.

ஆனாலும் அதை தெரியாத மனிதர்கள் அப்பனே அவ் அபிஷேகத்தை காண அபிஷேகத்திற்காக தான் அனைவரும் காத்திருப்பார்கள் ஆனால் ஈசனோ இங்கு மரத்தடியில் அமர்ந்து கொண்டு இருப்பான்.

அவ்விடத்தில் நீங்கள் நிச்சயம் அமருங்கள் அங்கு சென்று.



அப்பனே இன்னொரு சூட்சுமத்தை சொல்கின்றேன் இப்பொழுது அப்பனே இந்த ஊரிலேயே மீனாட்சி தாய் இருக்கின்றாளே  எப்படி என்று எவை என்று கூற நினைக்கும் பொழுது ஈசனே சிதம்பர ரகசியத்தை ஏற்படுத்தி விட்டான் அதையும் யான் சொல்லிவிட்டேன்.

ஆனாலும் பார்வதிதேவி கோபம் கொண்டு  நீ அமைத்தாயா?  யானும் அமைக்கின்றேன் என்று போட்டியில் தனக்கென திருத்தலம் அமைத்துக்கொண்டாள். இப்பொழுது கூட மீனாட்சி திருத்தலம் என்று அழைக்கப்படுகின்றது என்பேன். அத்திருத்தலமே மீனாட்சி கோயில்.



அப்பனே இவையன்றி கூற இன்னும் பல ரகசியங்கள் உண்டு என்பேன் உண்டு என்பேன் அப்பனே ஒரு ரகசியத்தை சொல்லி விட்டேன்.

இனி ரகசியங்களை ஒன்றொன்றாக சொல்கின்றேன் அப்பனே.

ஆனாலும் இவையன்றி கூற ஓர்நாள் (சிதம்பரத்தில்) அப்பனே நல் முறைகளாக உள்ளே தங்கி சென்றால் அப்பனே அங்கு எவ்வாறு என்பதையும் கூட நினைக்கும் பொழுது ஈசன் உடுக்கை யால் நல் முறைகள் ஆகவே ஓர் நிமிடம் பின் உடுக்கையை ஆட்டி பின் நல் முறைகளாக நடனம் ஆடுவான் என்பேன் .

அங்கு தங்கினால் இச் சத்தமும் கேட்கும் என்பேன் ஆனால் காலப்போக்கில் பல மனிதர்கள் பின் அங்கு சென்று அவனுடைய சத்தம் மனிதன் கேட்டால் மனிதன் பெரும் புகழும் பெரும் செல்வங்களும் பெற்று வாழ்ந்திடுவார்கள் என்று அதையும் கேடு கெட்ட மனிதர்கள் கெடுத்து விட்டனர்.

அப்பனே இப்பொழுதும் கூட அங்கே ஞானியர்கள் நல் முறைகளாக ஈசனின் உடுக்கை சத்தத்தை கேட்க வருவார்கள் என்பேன்.




ஒவ்வொரு இடத்தையும் சுற்றிப் பாருங்கள் அப்பனே உங்களுக்கே தெரியும் அவையெல்லாம் அப்பனே ஒவ்வொரு சித்தனும் வாழ்ந்த இடம் என்பேன்.

இவை அன்றும் இன்னும் பல பல உண்மைகள் உண்டு என்பேன் இவ்வுலகத்தில் ஒவ்வொன்றாக எடுத்து உரைக்கின்றேன் அப்பனே.

அப்பனே அனைவருக்கும் நல்லாசிகள் அப்பனே நலமாக நலமாக அனைத்தும் சொல்லிவிட்டேன் மறு வாக்கும் அதி விரைவிலேயே உரைக்கின்றேன் சூட்சமத்தோடு அப்பனே அனைவருக்கும் என்னுடைய ஆசிகள்.


ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய பிரம்ம ரிஷி திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!

No comments:

Post a Comment