( பாவங்கள குறைவதை எப்படி உணர்வது எப்படி? என உணரத்தும் அற்ப்புத அருள் வாக்கு )
“பாவங்கள் குறைந்தாலும், அல்லது முற்றிலுமாக தீர்ந்தாலும் கூட பெருங்காயப் பேழைபோல் அதன் நறுமணம் தாக்கிக் கொண்டேதான் இருக்கும். இருந்தாலும், பாவம் கூடுமானவரை குறைந்திருகின்றது, மிக மிக சிறிய அளவுதான் இருக்கிறது என்றால், தன்முனைப்பும், அகங்காரமும் இல்லாமல் போய்விடும். "நான் யார்?, நான் எத்தன்மை வாய்ந்தவன்? எந்த அளவு கல்வி கற்றவன்? என் வலிமை என்ன? என்னுடைய செல்வம் என்ன? என் பதவி என்ன? என் செல்வாக்கு என்ன? என்னை ஏன் இவன் எதிர்க்கிறான்?" என்பது போன்ற எண்ணங்களெல்லாம், மெல்ல மெல்ல விலகிவிடும். மனம் அமைதியை விரும்பும். கூடுமானவரை தனிமை விரும்பும். புரிதல் இல்லாத மனிதர்கள் என்ன வேண்டுமானாலும் கூறிவிட்டு போகட்டும். அவன் விதி, அவன் அவ்வாறு நடந்து கொள்கிறான். அவனுக்காகவும் பிரார்த்தனை செய்து கொள்வோம், என்ற ரீதியில் தான் மனித மனம் இருக்கும். இவன் எதிரி, இவன் நண்பன் என்கிற நிலை எல்லாம் கடந்து போகுமப்பா. எனவே, பாவங்கள் குறைய, அதை அனுபவத்திலே மனம் உணரும்."
No comments:
Post a Comment