“இறைவா !!!!! நீயே அனைத்தும்” இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்.

"இறைவா !!!!! நீயே அனைத்தும்!!!!"
"இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்"

உலகின் ஆதி குரு, மாமுனிவர், குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளிய தினசரி அனைவரும் அதிகாலையில் எடுக்க வேண்டிய உறுதிமொழி. :-


1.தர்மம் செய்வேன்
2.அனைத்திடத்திலும் பின் அன்பாக அதாவது அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன்.
3.போட்டி, பொறாமைகள் நீக்குவேன்
4.அனைத்தும் எந்தனுக்கே சொந்தம் என்று பின் உயிர்ப் பலியும் இடமாட்டேன்
5.பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன்
6.அப்படிக் கொன்றாலும், நிச்சயமாய் அதை யான் தடுப்பேன்
7.அவை மட்டும் இல்லாமல், தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும்.
8.பிறருக்கு நன்மை செய்ய வேண்டும்
9.பிறருக்காக உழைக்க வேண்டும்
10.பிற ஜீவராசிகளும் ( உயிரினங்களும் ) பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில்அனைவரும் நினைக்க வேண்டும்.
11.அப்படி நினைத்தால் அகத்தியன் வந்து அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பான் என்று சொல்மகனே

( அடியவர்களே. இந்த மகிமை புகழ் அகத்திய மாமுனிவர் அருளிய உறுதிமொழி வாக்கினை சிரம்மேல் ஒவ்வொரு நொடியும் ஏந்தி, பிரம்மாவின் முன்பு தலை நிமிர்ந்து நமக்காக விதியை மாற்றஉத்தரவிடும் வண்ணம் அனைவருக்கும் உலகில் உள்ள 700 கோடி மக்களுக்குச்சென்று அடையும்வண்ணம் எடுத்துச் சொல்லுங்கள். )

மற்றவர்களைப்பற்றி எண்ணிப்பார் அப்பனே. மற்றவர்களை எண்ணி எண்ணி, தான் கெட்டுப்போனாலும் பரவாயில்லை என்று யார் ஒருவன் நினைக்கின்றானோ அவனிடத்தில் இறைவன் பிச்சை ஏந்துவான் அப்பா. பிச்சை ஏந்துவான் அப்பனே. என் பக்தர்களுக்கு இது தெரிய நிச்சயம் வேண்டும் அப்பனே.


அகத்திய பிரம்ம ரிஷி உரைத்த முதல் தரப் புண்ணியம் பெறும் ஒரே வழி:- (1) அன்னதானம் + (2) திருவாசகம் சிவபுராணம் + (3) மக்கள் வாழ , நல் வழிகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுதல். இப்படிச் செய்தால் மட்டுமே , முதல்தரப் புண்ணியம் உண்டாகும் என்று குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி உரைத்துள்ளார்கள். இதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள் என்றும் அனைவருக்கும் கூறி உள்ளார்கள். இதுபோல் அனைவரும் செய்து முதல் தரப் புண்ணியம் பெற்றுக் கொள்ளுங்கள். இறை அருளுடன் வளமாக வாழுங்கள். வாழ்க வளமுடன்!!!!!!!!!

siththarkalatchi - Moving text


அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு :- “அப்பனே, தானங்கள் செய்க, அப்பனே, உன்னால் இயன்றவரை தானங்கள் செய்க. அனுதினமும், என் பக்தர்கள், ஒரு உயிருக்காவது உணவளியுங்கள். அது போதும். அப்பனே, அதுவே கோடி புண்ணியமாகும்.”


Saturday, September 13, 2025

சித்தர்கள் ஆட்சி - 479 :- அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளிய மதுரை சத்சங்க வாக்கு ( 22, 23 June 2025 ) - பகுதி 10

                                             இறைவா !!!!! நீயே அனைத்தும்.

இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும். 



அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளிய  மதுரை சத்சங்க வாக்கு ( 22, 23 June 2025 ) - பகுதி 10

வாக்குரைத்த ஸ்தலம் :- அருள்மிகு ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவில் வளாகம், தியாகராசர் குடியிருப்பு, பசுமலை, மதுரை- 625 004.

ஆதி சிவசங்கரியின் பொற்கமலத்தைப் பணிந்து செப்புகின்றேன் அகத்தியன். 

(இவ்தொடர் வாக்கின் முந்தைய பதிவுகள்:- 

01.சித்தர்கள் ஆட்சி - 467 - பகுதி 1
02.சித்தர்கள் ஆட்சி - 468 - பகுதி 2
03.சித்தர்கள் ஆட்சி - 469 - பகுதி 3
04.சித்தர்கள் ஆட்சி - 471 - பகுதி 4
05.சித்தர்கள் ஆட்சி - 472 - பகுதி 5
06.சித்தர்கள் ஆட்சி - 473 - பகுதி 6
07.சித்தர்கள் ஆட்சி - 474 - பகுதி 7
08.சித்தர்கள் ஆட்சி - 475 - பகுதி 8
09.சித்தர்கள் ஆட்சி - 477 - பகுதி 9
10.சித்தர்கள் ஆட்சி - 479 - பகுதி 10

)

அடியவர் :- ஐயா கால் வலி இருக்கு. நடக்க முடியல.

குருநாதர் :- தாயே அதை சரியாக்க முடியாது. இதைக் கேட்டு விடாதே. 

அடியவர் :- ( ஆசி கேட்ட போது ) 

குருநாதர் :- அப்பனே நிச்சயம் அனைவருக்குமே என்னுடைய ஆசிகள். நிச்சயம் அப்பனே எம்முடைய ஆசிகளோடு அனைத்தும் நடக்கும் அப்பா. 

அடியவர் :- திருவாசகம் பொருள் உணர்ந்து படிக்க கேள்வி கேட்டார். இவ்அடியவரை ஆறுபடை வீடுகளுக்கு சென்று வரச் சொன்னார்கள் முந்தைய வாக்கில் உரைத்தார். அதன் பின் கேள்வி கேட்ட போது. 

குருநாதர் :- அப்பனே ராமேஸ்வரம் சென்றடைந்து, கேள். 

(சில உரையாடல்கள்) 

யான் சொல்லியதை அனைவரும் கேட்க நன்று.

அடியவர் :- (திருப்பரங்குன்றம் அருகில் ஓர் ஆலயம் தொடர்பாக ஆசி கேட்ட போது..) 

குருநாதர் :- அப்பனே சித்தர்கள் யாங்கள் நிற்க, வராக தேவியும் அங்கே நிற்க அதி விரைவிலே நடைபெறும் என்பேன் அப்பனே. 

அடியவர் :- எப்போது கும்பாபிஷேகம் செய்யலாம் ஐயா? 


குருநாதர் :- அப்பனே மனம் போலே ஆகட்டும் அப்பனே. 


அடியவர் 2 :- தந்தைக்கு வணக்கம். என்னுடைய கேள்வி. அகிலாண்டேஸ்வரி , அகத்தீஸ்வரர் திருக்கோயில், மற்றும் செல்வ விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் தள்ளிக்கொண்டே போகின்றது. அதை விரைவாக சிறப்பாக முடித்திட உத்தரவு. 

குருநாதர் :- அப்பனே நிச்சயம் பிள்ளையான்பட்டி சென்று, (பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் ஆலயம்) அங்கிருக்கும் (குளத்து) நீரை எடுத்து வந்து , (கும்பாபிஷேகம் நடக்க உள்ள ஆலயம்) அங்கு வை அப்பனே. அதிவிரைவிலேயே நடைபெறும் என்பேன் அப்பனே. 

அடியவர் 3 :- (ஒரு வழக்கின் விவரங்களைக் குறிப்பிட்டு , சாதகமாக தீர்ப்பு வர ஆசி கேட்ட போது….)

குருநாதர் :- அப்பனே, இதற்கு பொறுத்தாக வேண்டும். யான் சொல்லியதெல்லாம் (நவகிரக தீபம், கூட்டுப் பிரார்த்தனை) செய்து கொண்டே வா அப்பனே. நிச்சயம் அடுத்த முறை விவரமாக விவரிக்கின்றேன் இதைப் பற்றி. 

அடியவர் 4 :- பொதுமக்களுக்கு பயன்படுகின்ற மாதிரி வகுப்புகளை எடுக்கலாமா? 

குருநாதர்:- தாயே, கால் வலி என்கின்றாய். கைவலி என்கின்றாய். எப்படி? ஏது? எவை என்றும் புரிய. 

அடியவர் :- ஐயா, அன்னை கண்ணகிக்கு மதுரையில் ஒரு கோயில் கட்டனும் என்று உணர்த்தப்பட்டிருக்கு. 

( தனது கணவன் கோவலன் நீதியின்றி கொல்லப்பட்டதால், பாண்டிய மன்னன் நெடுஞ்செழியனிடம் நீதி கேட்டு வாதாடி, அவனது குற்றத்தை நிரூபித்து, மதுரை நகரையே

தன் மகிமை புகழ் கற்பு தர்மத்தின் வலிமையால் மதுரை மாநகரை எரித்த கற்புக்கரசி கண்ணகி அம்மையாருக்கு,  மதுரையில் ஆலயம் கட்ட குருநாதரிடம் ஆசி கேட்டபோது)

குருநாதர் :- தாயே அதிக முயற்சிக்கள் எடுத்துத்தான் கட்ட வேண்டும். இதனைச் சுலபமாக செய்ய இயலாது. நிச்சயம் தன்னில் கூட ஆனாலும் யான் துனையிருப்பேன். 


அடியவர் :- (தனது குடும்பத்தினருக்கு வேலை பார்க்கும் இடங்களில் பல தொல்லைகள் நீங்க கருணைக்கடல் இறைவனிடம் கேட்ட போது) 

குருநாதர் :- தாயே, பின் இராமேஸ்வரத்தில் ஏறி நிச்சயம் பின், முன்னோர் சாபத்தை நீக்குங்கள். அவை மட்டும் இல்லாமல், இறந்தவர் இன்னும் பின், ஆன்மா முழுமை பெறவில்லை. ஏங்கிக்கொண்டே (இருக்கின்றனர்). இதனால் மனக்குழப்பங்கள் தொடர்ந்து கொண்டே (இருக்கின்றது உங்களுக்கு). இதனால் அவ்ஆன்மாவை நிச்சயம் சமநிலைப்படுத்த , நிச்சயம் அதாவது கயாவுக்கு சென்று வருவது சிறப்பு. 


உயர்  பொது நல எண்ணங்கள் உடைய ஒரு குழந்தை அடியவர் :- ( யாருமே எதிர்பார்க்காத நிலையில் ஓர் குழந்தை அடியவர், அங்கு உலகின் மிகப்பெரும் கேள்வியை கருணைக் கடல் முன் வைத்த நிகழ்வு) 

யா இப்போது விமான விபத்து நடந்தது இல்லையா? (12 June 2025 ஆம் தேதி நடந்த மிகவும் சோகமான விமான விபத்து ) இந்த மாதிரி , இது இயற்கையாக நடந்ததா? இந்த மாதிரி பாதிப்பு நடக்காமல் எப்படி நம்ம தடுக்கிறது? 

குருநாதர் :- தாயே நிச்சயம் தன்னில் கூட சொல்லிவிட்டேன். இதற்கு ஏற்றவாறே நிச்சயம் தன்னில் பின் ஏற்கனவே சொல்லி மனிதனுக்கு. ஆனாலும் மனிதன் சரியாகவே பின்பற்றவில்லை. 

சுவடி ஓதும் மைந்தன் :- ( உலக நன்மைக்காக நம் குருநாதர் நவகிரக தீபம் ஏற்றச் சொல்லியும், பலர் அதனை ஏற்றவில்லை. அது குறித்த நல் விளக்கங்கள் அளித்தார்கள் இங்கு.) 

அடியவர் :- (குழந்தை பாக்கியம்) 

குருநாதர் :- அப்பனே நிச்சயம் உண்டு. 

(பொது வாக்கு ஆரம்பம் ஆனது) 

குருநாதர் :- அப்பனே, அம்மையே அனைவருக்குமே எம்முடைய ஆசிகள். வாக்குகள் உண்டு அனைவருக்குமே.  இப்பொழுது நிச்சயம் ஏதோ ஒரு (சுய) நன்மைக்காகவே கேட்டுக்கொண்டே. இதனால் வாழ்க்கை பற்றி அனைத்தும் யான் சொல்வேன். பொறுத்திருந்தால், அதாவது உங்களுக்கு சில தீர்வுகளை ஏற்படுத்த நிச்சயம்

வாக்குகளாக ஈய்ந்துவிட்டேன். ( உலக நன்மைக்காக நவகிரக தீபம், நவகிரக தீபம் ஏற்ற பிறரைத் தூண்டுதல், சிவபுராணம் கூட்டுப் பிரார்த்தனை செய்தல்) இதை அதாவது சரியாகவே செய்திட்டு வந்தால்,  உங்கள் வாழ்க்கை பற்றி யான் சொல்வேன். உங்கள் குறைகள் அனைத்தும் யானே நீக்குவேன். ஆனால் அனைத்தும் முன்பே தெரிவித்து விட்டேன். மீண்டும் (சுயநலக் கேள்விகள்) அதைத்தான் கேட்டுக்கொண்டிருக்க, யான் என்ற சொல்ல???? 

சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா (எடுத்து) சொல்லுங்க. 

குருநாதர் வாக்கினை அழகாக எடுத்து உரைக்கும் மதுரை அடியவர் :- ( அழகாக அனைத்து வாக்குகளை சுருக்மாக எடுத்து உரைத்தார் அங்குள்ள அனைவருக்கும். சுயநலமாக கேட்க வேண்டாம் என்று உரைத்தார்) 

(இப்போது அகத்திய மாமுனிவர் அளித்த 2023ஆம் ஆண்டு மதுரை சத்சங்க வாக்கு புத்தகம் அனைவருக்கும் ஒரு அடியவர் முற்றிலும் இலவசமாக , உயர் சேவை நோக்கில் அச்சிட்டு,  100 புத்தகங்கள் எடுத்து வந்திருந்தார். அதனை அனைவருக்கும் அளிக்க ஆரம்பித்தார் அங்கு. நம் குருநாதர் ஆசியால் இவ் வாக்குகளை முதல் முதலில் புத்தக வடிவில் அருமையாக வெளியிட்டுள்ளார் அவ் அடியவர். அந்த புத்தகத்தில் நம் குருநாதர்  பெயர் தவிர எந்த ஒரு பெயரும் இடம் பெறவில்லை - பதிப்பகத்தார் பெயர் உள்பட என்று அடியவர்கள் அறியத் தருகின்றோம். தன்னை மறைத்து செய்யும் சேவைகளே உயர் புண்ணியம் பெற்றுத்தரும்) 

குருநாதர் :- அப்பனே,  நிச்சயம் தன்னில் கூட அனைவருக்குமே ஒன்றைத் தெரிவிக்கின்றேன் அப்பனே. 

இக்கலியுகத்தில் நிம்மதியாக வாழ முடியாத காலம் அப்பா. அப்பனே பின் சண்டையும் , சச்சரவுகளும், நோய்களும் அப்பனே பெருக்கெடுத்து வரும் அப்பா. அவை மட்டும் இல்லாமல் மனக்குழப்பங்கள். அப்பனே இதனால் மனிதன் தன்னைத்தானே அழித்து , இல்லத்திலே பல சண்டைகள் அப்பனே. இதனால் நிம்மதி , உறக்கங்கள் இவையெல்லாம் தொலையும் அப்பா. ஏனென்றால் வருங்காலங்கள் 5, 6 அல்லது 7 மாதங்கள் அப்பனே பெருத்த அழிவுகள் பலமாக இருக்கின்றதப்பா. 

அதனால் அனைவரையுமே யாங்கள் காத்திட வேண்டும்.  அதனால்தான் உங்களுக்குச் சொன்னேன் அப்பனே. (யான் உரைத்த நவகிரக தீபம், சிவபுராணம் கூட்டுப் பிரார்த்தனைகள் அனைத்தும் ) பொது நலமாக அப்பனே நீங்கள் செய்தால் , உங்களை நீங்களே சரிகட்டிக் கொள்ளலாம் என்பேன் அப்பனே. நிச்சயம் செய்வீர்களாக அப்பா. 

___________________

நம் அன்பு குருநாதர் அகத்திய மாமுனிவர், தூங்கா மதுரை மாநகரில் அருளும் மகத்தான இவ்ஆலயத்தின் முகவரி :- 

Google Map : https://goo.gl/maps/LurkRx2B5DbqSWqa7

—————————————-

( நம் குருநாதர், நம் அன்புத் தந்தை, கருணைக்கடல், பிரம்ம ரிஷி, அகத்திய மாமுனிவர் அருளால்  22,23 June 2025 ஆம் ஆண்டு ,  மதுரை மாநகரில், சுவடி ஓதும் அகத்திய மாமுனிவர் மைந்தன் திரு.ஜானகிராமன் அவர்கள் மூலம் ஜீவ நாடியில் உரைத்த அடியவர்கள் சத்சங்க கேள்வி, பதில் வாக்குகள் தொடரும்…... ) 

ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!


சர்வம் சிவார்ப்பணம்!!!!!

No comments:

Post a Comment