அன்னை ஸ்ரீ லோபாமுத்ரா உடன் உறை பொதிகை வேந்தன் அகத்திய மகரிஷி பாதம் காப்பு
அகத்திய மஹரிஷி 7/4/2022 அன்று உரைத்த வாக்கு
எந்தை என்றும் இளவரசர் அகத்திய மஹரிஷி ஆதி ஈசன் உரையாடல்
அகத்திய மஹரிஷி :- ஈசா!!!! எத்தனையோ தேவர்கள் எத்தனையோ முனிவர்கள் சபதம் செய்து தவம் செய்து கொண்டிருக்கின்றார்களே!!!
என்னை மட்டும் ஏன்?? நீ சென்றால் அங்கு நலமாகிவிடும், இங்கு சென்றால் நலமாகும் என்றெல்லாம் அனுப்புகின்றாயே!!! வேதனைக்குரியது ஈசா!!! எனறு யானும் கேட்டுவிட்டேன்!!!
அதனால் ஈசன்!! ஒரு வார்த்தை சொன்னான்!!!
"""அகத்தியனே!! எந்தனுக்கு இவ்வுலகத்தில் சமமானவன் நீயே!!! என்று சொல்லிவிட்டான்..
கண்ணீர் மல்கியது!! எந்தனுக்கு!!!!
அதனால் தான் என்னால் அனைத்தும் முடியும் என்று சொல்லிவிட்டேன் மக்களே!!
நல்லோர்கள் !! என்னை நம்பியோர்கள் இனிமேலும் நிச்சயம் வாழ்வார்கள் என்பதை திண்ணமாக கூறுகின்றேன்.
No comments:
Post a Comment