“இறைவா !!!!! நீயே அனைத்தும்” இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்.

"இறைவா !!!!! நீயே அனைத்தும்!!!!"
"இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்"

உலகின் ஆதி குரு, மாமுனிவர், குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளிய தினசரி அனைவரும் அதிகாலையில் எடுக்க வேண்டிய உறுதிமொழி. :-


1.தர்மம் செய்வேன்
2.அனைத்திடத்திலும் பின் அன்பாக அதாவது அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன்.
3.போட்டி, பொறாமைகள் நீக்குவேன்
4.அனைத்தும் எந்தனுக்கே சொந்தம் என்று பின் உயிர்ப் பலியும் இடமாட்டேன்
5.பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன்
6.அப்படிக் கொன்றாலும், நிச்சயமாய் அதை யான் தடுப்பேன்
7.அவை மட்டும் இல்லாமல், தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும்.
8.பிறருக்கு நன்மை செய்ய வேண்டும்
9.பிறருக்காக உழைக்க வேண்டும்
10.பிற ஜீவராசிகளும் ( உயிரினங்களும் ) பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில்அனைவரும் நினைக்க வேண்டும்.
11.அப்படி நினைத்தால் அகத்தியன் வந்து அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பான் என்று சொல்மகனே

( அடியவர்களே. இந்த மகிமை புகழ் அகத்திய மாமுனிவர் அருளிய உறுதிமொழி வாக்கினை சிரம்மேல் ஒவ்வொரு நொடியும் ஏந்தி, பிரம்மாவின் முன்பு தலை நிமிர்ந்து நமக்காக விதியை மாற்றஉத்தரவிடும் வண்ணம் அனைவருக்கும் உலகில் உள்ள 700 கோடி மக்களுக்குச்சென்று அடையும்வண்ணம் எடுத்துச் சொல்லுங்கள். )

மற்றவர்களைப்பற்றி எண்ணிப்பார் அப்பனே. மற்றவர்களை எண்ணி எண்ணி, தான் கெட்டுப்போனாலும் பரவாயில்லை என்று யார் ஒருவன் நினைக்கின்றானோ அவனிடத்தில் இறைவன் பிச்சை ஏந்துவான் அப்பா. பிச்சை ஏந்துவான் அப்பனே. என் பக்தர்களுக்கு இது தெரிய நிச்சயம் வேண்டும் அப்பனே.


அகத்திய பிரம்ம ரிஷி உரைத்த முதல் தரப் புண்ணியம் பெறும் ஒரே வழி:- (1) அன்னதானம் + (2) திருவாசகம் சிவபுராணம் + (3) மக்கள் வாழ , நல் வழிகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுதல். இப்படிச் செய்தால் மட்டுமே , முதல்தரப் புண்ணியம் உண்டாகும் என்று குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி உரைத்துள்ளார்கள். இதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள் என்றும் அனைவருக்கும் கூறி உள்ளார்கள். இதுபோல் அனைவரும் செய்து முதல் தரப் புண்ணியம் பெற்றுக் கொள்ளுங்கள். இறை அருளுடன் வளமாக வாழுங்கள். வாழ்க வளமுடன்!!!!!!!!!

siththarkalatchi - Moving text


அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு :- “அப்பனே, தானங்கள் செய்க, அப்பனே, உன்னால் இயன்றவரை தானங்கள் செய்க. அனுதினமும், என் பக்தர்கள், ஒரு உயிருக்காவது உணவளியுங்கள். அது போதும். அப்பனே, அதுவே கோடி புண்ணியமாகும்.”


Monday, April 4, 2022

சித்தர்கள் ஆட்சி - 56 : அகத்திய மஹரிஷி நாடி - 4/4/2022

 


அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடன் உறை அகத்திய மஹரிஷி


அகத்திய மஹரிஷி நாடி வாக்கு  -  4/4/2022 

( அடியவர் ஒருவருக்கு உரைத்த வாக்கில் வந்த பொது வாக்கு )

ஆதி மூலனின் பொற்க்கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன்.

அப்பனே என்னுடைய ஆசிகள் இருப்பதாலும் நலமே மிஞ்சும். 

இயற்க்கையான வகையிலே உண்டுகொள்ள நன்று என்பேன். 

அப்பனே நலமாக நலமாக வரும் சித்திரை திங்களில் ( சித்திரை மாதம் ) அப்பனே பலபேர்களுக்கு அப்பனே பின் குளிர்ந்த நீரை அப்பனே கொடுத்தால் அப்பனே இன்னும் பல புண்ணியங்கள் பெருகும். 

யான் இதைத்தான் அனைவருக்கும் சொல்வேன் அப்பனே. 

ஆனாலும் அப்பனே வாயில்லா ஜீவ ராசிகளுக்கும் அப்பனே நல்விதமாக ஓர் பானையில் நல்விதமாகவே அமைத்து அப்பனே கொடுத்துவா அப்பனே.

இன்னும் சித்தர்களின் ஆசியும் அனுக்கிரகமும் கிடைக்கும். அப்பனே என்னுடைய அருள் நல்விதமாக இருக்குதப்பா. 

அதனால் அப்பனே யாங்களும் சில சில நேரங்களில் அப்பனே அங்கும் இங்கும் சென்று வருவோம் அப்பனே இச்சித்திரை திங்கள் தனில் ( சித்திரை மாதம் தனில் ). அதனால் அப்பனே யான் சொல்லி விட்டேன். அதை செய்து கொண்டே வா. 

மீண்டும் கேள் அப்பனே.


——- நாடி உரை முற்றே ——-

No comments:

Post a Comment