“இறைவா நீயே அனைத்தும். இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்.

"இறைவா நீயே அனைத்தும்!. இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்" ஈரேழு உலகத்தையும் காத்து அருளக்கூடிய அன்னை ஶ்ரீ உண்ணாமலை அம்மை உடனுறை தந்தை அண்ணாமலையார் பொற்கமலத்தை பணிந்து, அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளை பணிந்து இந்த தளத்தில் பதிவினை வெளியிடுகின்றோம்.

உலகின் ஆதி குரு, மாமுனிவர், குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளிய தினசரி அனைவரும் அதிகாலையில் எடுக்க வேண்டிய உறுதிமொழி. :-

1. தர்மம் செய்வேன் 2. அனைத்திடத்திலும் பின் அன்பாக அதாவது அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன் 3. போட்டி, பொறாமைகள் நீக்குவேன் 4. அனைத்தும் எந்தனுக்கே சொந்தம் என்று பின் உயிர்ப் பலியும் இடமாட்டேன் 5. பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன் 6. அப்படிக் கொன்றாலும், நிச்சயமாய் அதை யான் தடுப்பேன் 7. அவை மட்டும் இல்லாமல், தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும் 8. பிறருக்கு நன்மை செய்ய வேண்டும் 9. பிறருக்காக உழைக்க வேண்டும் 10. பிற ஜீவராசிகளும் (உயிரினங்களும்) பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில் அனைவரும் நினைக்க வேண்டும் 11. அப்படி நினைத்தால் அகத்தியன் வந்து அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பான் என்று சொல்மகனே.


அகத்திய பிரம்ம ரிஷி உரைத்த முதல் தரப் புண்ணியம் பெறும் ஒரே வழி:- (1) திருவாசகம் சிவபுராணம் + (2) மக்கள் வாழ , நல் வழிகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுதல் + அதன் பின் (3) அன்னதானம், மற்றும் இதர தான தர்மங்கள். இப்படிச் செய்தால் மட்டுமே , முதல்தரப் புண்ணியம் உண்டாகும் என்று குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி உரைத்துள்ளார்கள். இதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள் என்றும் அனைவருக்கும் கூறி உள்ளார்கள். இதுபோல் அனைவரும் செய்து முதல் தரப் புண்ணியம் பெற்றுக் கொள்ளுங்கள். இறை அருளுடன் வளமாக வாழுங்கள். வாழ்க வளமுடன்!!!!!!!!!

siththarkalatchi - Moving text


அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு :- “அப்பனே, அனுதினமும், என் பக்தர்கள், ஒரு உயிருக்காவது உணவளியுங்கள். அது போதும். அதுவே கோடி புண்ணியமாகும்.”


Wednesday, April 20, 2022

சித்தர்கள் ஆட்சி - 58 : ஆதி ஈசன் உரைத்த அகத்திய மஹரிஷியின் மகத்தான மகிமை குறித்த அருள் அமுத வாக்கு



ஆதி அம்மை அப்பன் பாதம் காப்பு 


அன்னை ஸ்ரீ லோபாமுத்ரா உடன் உறை பொதிகை வேந்தன் அகத்திய மகரிஷி பாதம் காப்பு 


அகத்திய மஹரிஷி 7/4/2022 அன்று உரைத்த வாக்கு


ஆதி ஈசன் , அகத்திய மஹரிஷியை குறித்து இராஜராஜ சோழன் தவத்தை மெச்சி அவ்மன்னனுக்கு காட்சி  கொடுத்தபோது உரைத்த அருள் அமுத வாக்கு


🙏🌸🙏🌸🙏🌸🙏🌸🙏

அகத்தியன் போல் இவ்வுலகத்தில் கருணை உள்ளவர் யாரும் இல்லை!!!

ஒருவரை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லும் அளவிற்கு தகுதிகள் படைத்தவன் அகத்தியன்.

ஆனால் அவன் மீது பற்றாத பற்று!! 

நம்பிக்கை வைத்து விட்டால் கைவிடமாட்டான் இவ்வுலகத்தில்.  அது எவரேனும் சரி!!!!

திருடனாக இருந்தாலும் சரி!! 

நல்லோர் ஆக இருந்தாலும் சரி!!!

மாற்றிவிடுவான் எளிதில் அகத்தியன்.

ஆனால் நம்பிக்கை வேண்டும் !!!

நம்பிக்கை வேண்டும் அன்பு வேண்டும்!! 

அவ் அன்பிற்கு பன்மடங்கு செய்வான் என்பது குறிக்கோளாக.!!!