“இறைவா நீயே அனைத்தும். இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்.

"இறைவா நீயே அனைத்தும்!. இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்" ஈரேழு உலகத்தையும் காத்து அருளக்கூடிய அன்னை ஶ்ரீ உண்ணாமலை அம்மை உடனுறை தந்தை அண்ணாமலையார் பொற்கமலத்தை பணிந்து, அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளை பணிந்து இந்த தளத்தில் பதிவினை வெளியிடுகின்றோம்.

உலகின் ஆதி குரு, மாமுனிவர், குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளிய தினசரி அனைவரும் அதிகாலையில் எடுக்க வேண்டிய உறுதிமொழி. :-

1. தர்மம் செய்வேன் 2. அனைத்திடத்திலும் பின் அன்பாக அதாவது அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன் 3. போட்டி, பொறாமைகள் நீக்குவேன் 4. அனைத்தும் எந்தனுக்கே சொந்தம் என்று பின் உயிர்ப் பலியும் இடமாட்டேன் 5. பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன் 6. அப்படிக் கொன்றாலும், நிச்சயமாய் அதை யான் தடுப்பேன் 7. அவை மட்டும் இல்லாமல், தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும் 8. பிறருக்கு நன்மை செய்ய வேண்டும் 9. பிறருக்காக உழைக்க வேண்டும் 10. பிற ஜீவராசிகளும் (உயிரினங்களும்) பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில் அனைவரும் நினைக்க வேண்டும் 11. அப்படி நினைத்தால் அகத்தியன் வந்து அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பான் என்று சொல்மகனே.


அகத்திய பிரம்ம ரிஷி உரைத்த முதல் தரப் புண்ணியம் பெறும் ஒரே வழி:- (1) திருவாசகம் சிவபுராணம் + (2) மக்கள் வாழ , நல் வழிகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுதல் + அதன் பின் (3) அன்னதானம், மற்றும் இதர தான தர்மங்கள். இப்படிச் செய்தால் மட்டுமே , முதல்தரப் புண்ணியம் உண்டாகும் என்று குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி உரைத்துள்ளார்கள். இதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள் என்றும் அனைவருக்கும் கூறி உள்ளார்கள். இதுபோல் அனைவரும் செய்து முதல் தரப் புண்ணியம் பெற்றுக் கொள்ளுங்கள். இறை அருளுடன் வளமாக வாழுங்கள். வாழ்க வளமுடன்!!!!!!!!!

siththarkalatchi - Moving text


அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு :- “அப்பனே, அனுதினமும், என் பக்தர்கள், ஒரு உயிருக்காவது உணவளியுங்கள். அது போதும். அதுவே கோடி புண்ணியமாகும்.”


Sunday, December 14, 2025

சித்தர்கள் ஆட்சி - 531:- அன்புடன் அகத்திய மாமுனிவர் - மதுரை சிவபுராண கூட்டு பிரார்த்தனை வாக்கு - அன்புடன் தேரையர் சித்தர் வாக்கு பகுதி 5

இறைவா நீயே அனைத்தும். இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்.





மதுரை சிவபுராண கூட்டு பிரார்த்தனை வாக்கு - பகுதி 5


உலக நன்மைக்காக மதுரையில் சிவபுராண கூட்டு பிரார்த்தனை

நாள்: 7.12.2025, ஞாயிறு இடம்: A.S திருமண மண்டபம், வில்லாபுரம், மதுரை


இறைவா நீயே அனைத்தும். இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்.


====================================

# அன்புடன் தேரையர் சித்தர் வாக்கு 

====================================


ஆதி மூத்தோனை பணிந்து, குருநாதனையும் பணிந்து, வாக்குகள் ஈகின்றேன் தேரையனே. 


(இவ் கூட்டு பிரார்த்தனையின் அனைத்து பதிவுகளையும் உங்கள் வசதிக்காக இங்கு கிழே கொடுத்துள்ளோம். லிங்க் அதனை கிளிக் செய்து வரிசையாக அனைத்து பதிவுகளையும் படிக்க மிக நன்று. 


( மதுரை சிவபுராண கூட்டு பிரார்த்தனை வாக்கு - பகுதி 5


தேரையர் சித்தர் :- இவைத்தன் சமமாக, பின் எதனை, எதை என்று கூற, உயிரற்றவைகளுக்கும் , இவைக்கு ஈர்க்கும் பொழுது, இதைத்தன் பின் ஒன்று ஒன்று அல்லது பின், இவைத்தன் சமமாக பின் எதனை எதை என்று கூற உயிரற்றவைகளுக்கும் இவை ஈர்க்கும் பொழுது இதைத்தன் பின் ஒன்று ஒன்று அல்லது பின் 10 எவை என்று, 20 ஆக சரியாக இருந்தால், நிச்சயம் பின் எவை என்று அறிய, இடிபட்டு சாகுகின்றான். 


சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம்  :- ( இந்த உலகில் எல்லா இடங்களிலும் கதிர் இயக்கங்கள் உண்டு. சில இடங்களில் கதிர் இயக்கங்கள் அதிகமாக இருக்கும்.  வண்டியில ஆக்சிடென்ட் ஆகிறது எப்படி? இப்ப ஒரு இடத்துல 20 சதவிகிதம் அளவு  இருக்கும். அங்கு மனிதர்கள் சென்றால் அந்த கேட்ட கதிர்வீச்சுகளை உள்வாங்கி இறந்துவிடுவார்கள்  ஐயா, புரியுதுங்களா? இது எப்படி என்றல் கதிர்  இயக்கம் நம்ம கையில 10 இருந்ததுன்னா,  நீங்க  ஒரு 10 கதிர்  இயக்கம் இடத்துக்கு இருக்கு இடத்திற்கு சென்றால் மரணம்.  ஐயா, புரியுதுங்களா? பர்சன்டேஜ் கணக்குல சொல்றாரு. ) 


தேரையர் சித்தர் :- இவைத்தன் பின் இவையெல்லாம் என்றால் நிச்சயம் சரிப்படுத்திக் கொள்ளும். 


சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம்  :- ( தேரையர் சித்தர் உரைத்த மூலிகைகளை நீங்கள் எடுத்துக் கொண்டே வந்தால் என்ன ஆகும்? நீங்க அந்த இடத்துக்கு போகும்போது  அப்படியே  சரிப்படுத்திக் கொள்ளும். மரணம் நிகழாது ) 


தேரையர் சித்தர் :- இவ்வாறு இல்லை என்றால், சில நேரங்களில் அவ் இயக்கம் கதிர்  இயக்கங்கள் பின் சற்று பின் பலமாக இருக்கின்ற பொழுது அங்கு சென்று வந்தேனே. கஷ்டங்கள் ஆகிவிட்டது என்று இதனால் யார் செய்த தவறு?


சுவடி ஓதும் மைந்தன், அடியவர் :- (நம்ம வாழ்க்கை முறையை தவறா வச்சுக்கிட்டு எங்க எங்கேயோ போய் சுத்திட்டு போய் நெகட்டிவ் எனர்ஜியை வாங்கிட்டு வந்துட்டு கஷ்டப்படுறேன். அதான் சொல்றாங்க. நெகட்டிவ் எனர்ஜி அப்ப இதை சாப்பிட்டோம் என்றால்  என்ன ஆகும்? பாசிட்டிவ் அதாவது உங்களுக்குள்ள இறைசக்தி அந்த பாசிட்டிவ் இறைசக்தியை நீங்க அதிகம் உள் வாங்கிக்கலாம். அப்போ எந்த நெகட்டிவ் எனர்ஜி இருக்கிற இடத்திற்கு நீங்கள் போறப்போ எதுவும் உங்களை தாக்காது.) 


========================================

# மூச்சை 40 - 60  வினாடிகள் உள் அடக்கி வெளியிடும் ரகசியங்கள் 

========================================


தேரையர் சித்தர் :- இவைத்தன் இப்படியே மூச்சு. மூச்சு எதை என்று உட்பது (சுவாசிப்பது) அறிந்தும் இவைத்தன் பின் காற்றோடு அறிந்தும் இவைத்தன் சுவாசித்தால் அதாவது பின் 40 இதைத்தன் நிச்சயம் பின் கடைசியில் பின் 50 இவ்வாறாக பின் சுவாசித்தால் பின் உணவு தேவையில்லையடா.


சுவடி ஓதும் மைந்தன், அடியவர் :- (மூச்சை ஒவ்வொரு 30-40 வினாடிக்கும் ஒரு முறை வெளியே விட்டால், உடலுக்கு தேவையான ஆற்றல் காற்றிலிருந்தே கிடைக்கும். அப்படிச் செய்தால் உணவு கூட தேவையில்லை, காற்றை மட்டுமே கொண்டு உயிர் வாழலாம்) 


தேரையர் சித்தர் :- இவைத்தன் அறிந்தும் பொருந்தும் உடம்பு பத்திரமாக இவைத்தன் கண்ணிமைக்கும்  பின் எதை என்று அறிய பின் 30 அல்லது பின் 40 உடம்பு சரி. 


சுவடி ஓதும் மைந்தன், அடியவர் :- (உடல்நிலை சரியாக உள்ளதா என்பதை மூச்சை எவ்வளவு நேரம் உள்ளே தக்க வைத்திருக்க முடிகிறது என்பதன் மூலம் தெரிந்து கொள்ளலாம். சாதாரணமாக 8–10 விநாடிகள் மட்டுமே மூச்சை தக்க வைத்திருக்க முடியும்; ஆனால் 30–40 வினாடிகள் மூச்சை உள்ளே வைத்திருக்க முடிந்தால் உடம்பு நல்ல நிலையில் இருக்கிறது. அதற்கு முடியவில்லை என்றால் உடலில் ஏதோ குறை அல்லது நோய் இருக்கலாம். இதை அடைய சுவாசப் பயிற்சி செய்ய வேண்டும், இது அனைவரும் தங்களுக்கு தாங்களே பரிசோதிக்க வேண்டிய ஒன்று. நீங்க சுவாச பயிற்சி பண்ணீங்கன்னா நோய்  வராது. ஐயா, நீங்க செக் பண்ணுங்க. )


கூட்டு பிரார்த்தனை அடியவர்கள் :- (அனைவரும் மூச்சை உள் இழுத்து அடக்கி வைத்து - எவ்வளவு நேரம் தாக்குபிடிக்க முடியும் என்று பரிசோதனை செய்தனர். அதன் பின்னர்) 


சுவடி ஓதும் மைந்தன், அடியவர் :- (  குறைந்தது 30 செகண்ட் உள்ள நிறுத்தணும். அப்ப நிறுத்த முடியாதுன்னா , நோய் வரும். பார்த்துக்கோங்க, ஐயா, புரியுதுங்களா? உள்ள எத்தனை நிமிடம் இருக்கணும்? 30 செகண்ட் மூச்சை நிறுத்தனும். அப்படி இல்லைன்னா நோய் வந்துரும். பார்த்துக்கோங்கன்றாரு. அப்ப நம்ம அதை பிராக்டிஸ் பண்ணனுங்க, ஐயா. ஒவ்வொரு தடவை விடக்கூடிய மூச்சையே வந்து 30 செகண்ட் நிறுத்தணும். இதை ஃபாலோ பண்ணி, ஐயா, இது எப்படி சொல்றாரு தெரியுங்களா? ஐயா, பழகி பார்த்து. )


========================================

# மூச்சை உள் அடக்கி வெளியிட  நோய்கள் வளராது

========================================


தேரையர் சித்தர் :-  இவைத்தன் அறிந்து இதைத்தன் நிச்சயம் ஒரு நாளைக்கு பின் நிச்சயம் இவைதன் பின் செய்ய பின் நோய்கள் பின் வளராது. 


அடியவர் :- அய்யா இது கும்பகம் தானே?


(பூரகம் என்பது மூச்சை உள்ளிழுத்தல், கும்பகம் என்பது இழுத்த மூச்சை உள்ளே நிறுத்தி வைத்தல், ரேசகம் என்பது மூச்சை வெளியே விடுதல் எனப் பிராணாயாமத்தின் மூன்று முக்கிய நிலைகளைக் குறிக்கும்) 


தேரையர் சித்தர் :-  இவைத்தன் நினைத்தாலே. 


சுவடி ஓதும் மைந்தன் :- நினைச்சுக்கோப்பா என்று சொல்லிட்டார்.

சுவடி ஓதும் மைந்தன் , அடியவர் உரையாடல் சுருக்கம்  :- (மூச்சை 30 வினாடிகள் தடுத்து நிறுத்த வேண்டும் என்ற பயிற்சி ஆரம்பத்தில் எளிதல்ல. ஆனால் தொடர்ந்து முயற்சி செய்து பழகிக் கொண்டால், அது இயல்பாகிவிடும். பழக்கமாகிவிட்டால் உடலுக்கு எந்தத் தீங்கும் இல்லை. முடியாதது காரணம் தெரியாமல்தான் என்று சொல்லலாம். பிராணாயாமம் போன்ற மூச்சுப் பயிற்சிகளை தொடர்ந்து செய்தால் 30 வினாடி முடியாவிட்டாலும், 15 -  18 வினாடி போன்ற முன்னேற்றம் கண்டிப்பாக வரும். எப்படி சாப்பிடாதவர் திடீரென சாப்பிட்டால் கஷ்டம் போல, மூச்சை தடுக்கவும் ஆரம்பத்தில் சிரமம் இருக்கும், ஆனால் பழகினால் உடலும் மனமும் அதற்கு ஒத்துழைக்கும். இதை தொடர்ந்து பயிற்சி செய்து பழகிக் கொண்டால் உடல் நோயை கட்டுப்படுத்த உதவும்)

========================================

# குருநாதனை பற்றி போற்றி பாடுக. 

========================================


தேரையர் சித்தர் :-  இவைத்தன் இன்னும் ரகசியங்கள் உரைக்கின்றேன். குருநாதனை பற்றி போற்றி பாடுக. 


(அன்புடன் அகத்திய மாமுனிவர் போற்றி பாடல்கள் பாட சொன்னார்கள். அடியவர்கள் “சித்தர் நாயகன், தமிழ் பித்தர், சேவகன், சக்தி தாயவள், பிரிய பக்த பாலகன்” என்ற பாடலை பாட ஆரம்பித்தனர். பின்வரும் பதிவில் இந்த பாடலை கேட்டு நம் குருநாதரை இந்த பாடலை  உங்கள் இல்லங்களில், குழுக்களில்  பாடுக.  )  


https://www.youtube.com/watch?v=LsrBdk6U31U&t=5h08m24s


தேரையர் சித்தர் :- தொடர்ந்து பாடு.


சுவடி ஓதும் மைந்தன் :- ( தொடர்ந்து பாட சொல்கின்றார். தொடர்ந்து  பாடுங்கள் அய்யா.)


https://www.youtube.com/watch?v=LsrBdk6U31U&t=5h13m00s


(அடியவர்கள் பாட ஆரம்பித்தனர். பாடல் பாடி முடிந்தவுடன் )


=========================

# அன்னை சரஸ்வதி தேவி மந்திரம்

=========================


தேரையர் சித்தர் :-  இவைத்தன் அறிய சிறுவர்களுக்காகவே செப்புகின்றேன். “சரஸ்வதி நமஸ்துப்யம்”  எனும் பாடலை பாடடா. 


("சரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணி வித்யாரம்பம் கரிஷ்யாமி ஸித்திர் பவதுமே ஸதா" - என்ற மந்திரத்தை மெதுவாக அனைவரும் சொன்னார்கள். )


https://www.youtube.com/watch?v=LsrBdk6U31U&t=5h17m46s


==============================

# அன்னை காயத்ரி தேவி மந்திரம்

==============================


தேரையர் சித்தர் :-  இதைத்தன் பாடிட்டு பின் காயத்ரி மந்திரம் பாடடா.. 


("ஓம் பூர்புவ: ஸ்வ: தத்ஸவிதுர்வரேண்யம்

பர்க்கோதேவஸ்ய தீமஹி 

தியோ யோ ந: ப்ரசோதயாத்”

என்ற மந்திரத்தை மெதுவாக அனைவரும் சொன்னார்கள். )


https://www.youtube.com/watch?v=LsrBdk6U31U&t=5h18m57s






=========================

# அன்னை சரஸ்வதி தேவி பாடல் + அன்னை காயத்ரி தேவி பாடல்  = அறிவு பலம் பெறும். அவசியம் குழந்தைகளுக்கு இவ் இரு மந்திரங்களையும் சேர்ந்து மிக மிக, மிக மெதுவாக, இழுத்து பாட சொல்லிக் கொடுங்கள்.  இது தான் மகத்தான அறிவு கிட்டும் அதி  ரகசிய முறை. அனைவரும் பயன்படுத்த மிக நன்று. 

=========================


தேரையர் சித்தர் :- இவைத்தன் இதைத்தன் புரிந்து. 


சுவடி ஓதும் மைந்தன் , அடியவர்  :- ( முதலில் அன்னை காயத்ரி தேவி பாடல்.  அதன் பின்னர் அன்னை காயத்ரி தேவி பாடல் இதை சேர்த்து பாடும் பொழுது அறிவுகள் பெருகும்.) 


தேரையர் சித்தர் :- (ஏன் காயத்ரி மந்திரம் வந்து உயர்வாய் இருக்கிறது)


சுவடி ஓதும் மைந்தன் :- ஏன் வந்து, காயத்ரி மந்திரம் வந்து, உயர்வாய் இருக்கின்றதுன்னு கேக்குறாரு?


===================================

# காயத்ரி மந்திரம் சொல்லும் போது இரண்டு கை விரல்களையும்   சுருக்கி [மடக்கி] பின்னர் விரித்து [நீட்ட]  வேண்டும்.

===================================


தேரையர் சித்தர் :- இவைத்தன் சரியாகவே இத்தருணத்தில் இவைத்தன் எப்படி அறிந்தும், சில ஆசனங்களை அறிந்தும் புரிந்தும், பின் விரல்களை பின் நீட்டியும் மடக்கியும், இதைத்தன் ஆரோக்கியம் மேம்படுமடா. 


( பின் வரும் பதிவில் எப்படி என்று பார்த்து அதேபோல் செய்ய நன்று)


https://www.youtube.com/watch?v=LsrBdk6U31U&t=5h20m38s


சுவடி ஓதும் மைந்தன் , அடியவர்  :- ( காயத்ரி மந்திரம் சொல்லும் போது இரண்டு கை விரல்களையும்   சுருக்கி [மடக்கி] பின்னர் விரித்து [நீட்ட]  வேண்டும். இதனால் உங்கள் ஆரோக்கியம் மேம்படும்) 


===================================

# இரண்டு பாதங்களின் கட்டை விரல் மூலம் பூமியில் நிற்கவேண்டும்.  

===================================


தேரையர் சித்தர் :- இவைத்தன் பின் அமிக்கி அறிந்தும் பாதத்தையும் தொட்டு, இவைத்தன் பின் கட்டை விரலால் கால் அதனின் நிற்க பின் நோய் தீருமடா. 


சுவடி ஓதும் மைந்தன் , அடியவர்  :- ( ஐயா, புரியுதுங்களா? எழுங்களேன், நீங்க அவங்களுக்கு சொல்லுங்களேன். ஏன்னா காயத்ரி மந்திரம் சொல்லி நல்லா அம்மா புரியுதுங்களா? நல்லா விரலை கட்டை இப்படி இப்படி அழுத்தணும். நல்லா வந்து என்னன்னா இந்த விரலை சுருக்கி இப்படி விரிக்கணும்ன்றாங்க. விரிக்கணும். ஆமா, உள்ளங்கைக்கும் மூளைக்கும் ஏதோ தொடர்பு இருக்கு. அதான் சொல்றாங்க இந்த மந்திரம் சொல்லிட்டு இப்படி பண்றப்போ ஏதோ மூளையில வந்து சில மூளை துரிதமா வேலை செய்யும்ன்றாங்க. செய்யணும் இப்படி பண்ணி இப்படி பண்ணி அப்ப கட்டை விரலால் நிக்கணும். எப்படி ஐயா? விரல் கட்டை விரலை அதிகம் அழுத்தி விரலால நிக்கணும்ன்றாரு. நில்லுங்க ஐயா, ஒரு விரலால அஞ்சு விரலால. அதாவது குதிங்காலை தூக்கி நிறுத்த சொல்றாங்க. இப்படி ஆ, இப்படி ஆமா, குதிங்காலை தூக்கி விரல்களால மட்டும் நிக்கணும். அப்போ அந்த அதாவது இந்த காயத்ரி மந்திரங்கள் சொல்லிட்டே செய்ய சொல்றாங்க.) 


===================================

#  காயத்ரி மந்திரம் சொல்லி முடித்த பின்னர், கைகளை தலைக்கு மேல் தூக்கி படார் என்று அடிக்க வேண்டும்.

===================================


தேரையர் சித்தர் :- இவைத்தன் மந்திரத்தை சொல்ல பின் இதை என்று பலமாக கையை தூக்கி அறிந்தும் பின் படார் என்று. 


சுவடி ஓதும் மைந்தன் , அடியவர்  :-  ( செய்முறை பின் வரும் பதிவில் எப்படி என்று பார்த்து அதேபோல் செய்ய நன்று )


https://www.youtube.com/watch?v=LsrBdk6U31U&t=5h22m33s


சுவடி ஓதும் மைந்தன் , அடியவர் உரையின் சுருக்கம்  :-  (காலை நேரத்தில் ஒரு பயிற்சியை செய்ய வேண்டும் என்று நான் விளக்குகிறேன்; முதலில் நிமிர்ந்து நின்று கொண்டு காயத்ரி மந்திரத்தை ஜபிக்க வேண்டும், அந்த மந்திரத்தை சொல்லிக்கொண்டே கையை உயர்த்தி பலமாக அடிக்க வேண்டும். இப்படிச் செய்யும்போது உடலின் உள்ளுறுப்புகளுக்கும், மனதுக்கும் ஒரு விசேஷமான தாக்கம் உண்டாகும். நின்றபடியே கையை ஓங்கி பலமாக அடிக்க வேண்டும், மந்திரத்தின் ஒவ்வொரு பகுதியையும் சொல்லும்போது அந்த அடியின் பலமும் கவனமும் அதிகமாக இருக்க வேண்டும். இந்த பயிற்சி ரகசியமானது, மந்திரத்தின் சக்தியையும் உடல் இயக்கத்தையும் சேர்த்து செய்யும்போது ஒரு தனித்துவமான பலன் கிடைக்கும்) 



====================================

#  காயத்திரி மந்திரம் மூலம் மருந்து செய்வது எப்படி ?

====================================


தேரையர் சித்தர் :-  இவைத்தன் இப்படி இருக்க இதைத்தன் மாற்றி ……………………………………………………….. வலது சுவாசத்தையும் இடது சுவாசத்தையும் இவ்வாறு மாறி மாறி அறிந்தும் இவைத்தன் பின் உள்ளங்கையில் நீரை வைத்து இவ் மந்திரத்தை செப்பி இதைத்தன் உட்கொள்ள நன்றாகுமடா சில. 


( பின் வரும் பதிவில் எப்படி என்று பார்த்து அதேபோல் செய்ய நன்று)


https://www.youtube.com/watch?v=LsrBdk6U31U&t=5h23m32s


சுவடி ஓதும் மைந்தன் , அடியவர் உரையின் சுருக்கம்  :- ( ஒரு காலில் நின்று, உள்ளங்கையில் தண்ணீர் வைத்து, ஓம் பூர் என மந்திரம் சொல்லிக்கொண்டே மூச்சை உள்ளிழுத்து, அந்த மூச்சை தண்ணீர் சேர்த்துப் பின்னர் வலது சுவாசத்தையும் இடது சுவாசத்தையும்  மூக்கில் இழுத்து விடும் முறையை ரகசியமாக விளக்குகிறார். இந்த முறையை சரியாகப் பயன்படுத்தினால் நோய்கள் வராமல் காக்கும் என்றும், இதை நாலு பேருக்கு சொல்லிக் கொடுத்தால் புண்ணியம் பெருகும் என்று சுவடி ஓதும் மைந்தன் கூறினார்கள். மந்திரம் சொல்லும் போது தண்ணீர் உள்ளங்கையில் நிலையாக இருக்க வேண்டும்; மூச்சு தண்ணீர் மேல் பட வேண்டும். அதாவது மந்திரம் சொல்லும்போது வரும் வாய் வழி காற்று   தண்ணீர் மேல் பட வேண்டும். அத்துடன் வலது , இடது நாசி மூச்சு பட வேண்டும். இறுதியில் அந்த தண்ணீரையே மருந்தாகக் குடிக்க வேண்டும்) 


தேரையர் சித்தர் :- இவைத்தன் 


அடியவர் 1 :- ஜானகி இது மெயினா இந்த பிராணாயாம எக்சர்சைஸ் தான். அது பிரீத்திங் எக்சர்சைஸ் கோசரம்  அன்னைக்கு டேட்ல வச்சது அது. 


======================================

# காயத்ரி மந்திரம்  மருந்தாக செயல்படுகிறது

======================================


தேரையர் சித்தர் :- புரிந்தும் இவைத்தன் எதற்கு இவைத்தன் அப்படியே உட்கொள்ள அறிந்தும் இதுவே ஒரு மருந்தடா. இதனால் பின் மந்திரமே இவைத்தன் மருந்தாக செயல்படுகின்றது. 


சுவடி ஓதும் மைந்தன் :- ( காயத்ரி மந்திரம்  மருந்தாக செயல்படுகின்றது.)


======================================

# காயத்ரி மந்திரம்  துளசியில் இருந்து வந்தது 

======================================


தேரையர் சித்தர் :-  இதைத்தன் இவை என்று துளசியிலே வந்ததடா இவ் மந்திரம்.


சுவடி ஓதும் மைந்தன் :-  துளசியிலிருந்து வந்ததடா இந்த மந்திரம்


======================================

# காயத்ரி மந்திரம்  இரண்டாவது பகுதி ரகசியங்கள் ஆரம்பம் 

======================================


தேரையர் சித்தர் :-  இரண்டாவது பகுதி 


சுவடி ஓதும் மைந்தன் :- இரண்டாவது பகுதி சொல்றாரு. முதல் பகுதி சொல்லிட்டாரு. இரண்டாவது பகுதி சொல்லப்போறாரு. 


========================================

# காயத்ரி மந்திரம்  பயன்படுத்தும்  ரகசியங்கள் 

========================================


==========================================

# வலது உள்ளங்கை ,மஞ்சள் நீர் மிளகு சீரகம், உலர்ந்த திராட்சை, துளசி - ஞானங்கள் பெருகும் ரகசியங்கள் 

==========================================


தேரையர் சித்தர் :-  இதைத்தன் பின் இப்படியே இதைத்தன் பின் மஞ்சளான நீரை அறிந்தும், இவையன் அப்படியே உள்ளங்கையில் வைத்து, இதைத்தன் பக்குவமாக மிளகு, பின் அறிந்தும் இவை என்று சில பின் சீரகமும், இவைத்தன் பின் இதில் கூட பின் சில பின் உதிர்ந்து திராட்சை இதைத்தன் பயன்படுத்த, பின் துளசியிலும் பயன்படுத்த, இவைதன் இப்படியே பின் இதைத்தன், பின் உண்டு வர ஞானங்கள் பெருகுமடா.


சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம்  :- ( மஞ்சள் நீரை உள்ளங்கையில் வைத்து , அதனுடன் மிளகு சீரகம், உலர்ந்த திராட்சை, துளசி  அந்த நீரில் இடவேண்டும். இப்படி ஊற வைத்து , காயத்திரி மந்திரங்கள் சொல்லி மேலே கூறியவாறு செயல்படுத்த , ஞானங்கள் பெருகும்.)


தேரையர் சித்தர் :- இவைத்தன் அடிவயிற்றில் போகுமடா அடி வயிற்றில் இருக்கும் அழுக்குகள் பின் அறிந்தும் வருமடா.


சுவடி ஓதும் மைந்தன்  :-  இப்படி சொல்லி இதை அப்படியே இது பண்ணோம்னா என்ன ஆகுமாம்? அந்த காயத்ரி மந்திரம் சொல்லி என்ன ஆகுமாம் உள்ள வயித்துல போகுமாம் போயிட்டு என்ன ஆகுமாம்? அழுக்குகள் நீங்கும்.


தேரையர் சித்தர் :- இதைத்தன் அழுக்குகள் இருப்பதற்கு இருப்பதற்காகவே அறிந்தும் இவைத்தன் உணர. இவைத்தன் பின் உடம்பை வலிமையாக. உடம்பை சொல்லிக் கொண்டிருக்கின்றேனே உடம்பை பின் வளர்த்தால், அனைத்தும் வளர்த்து விடலாம்.


சுவடி ஓதும் மைந்தன்  :-   நான் ஏன் உடம்புக்காக சொல்லிக்கிறேன்னா நீங்க நல்ல உடம்பை வந்து பெற்றுகிறீங்கன்னா என்ன ஆகுமாம் எல்லாமே வரும். 


தேரையர் சித்தர் :- போய்க்கொண்டிருக்கின்றானே பணத்தின் பின்னே அறிந்தும் பின் நோய் வந்துவிட்டால் யாராலும் முடியாதடா.


( அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் , அன்புடன் தேரையர் சித்தர் உரைத்த மதுரை கூட்டு பிரார்த்தனை வாக்குகள் தொடரும் …..)



ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்.  

சர்வம் சிவார்ப்பணம்.