“இறைவா !!!!! நீயே அனைத்தும்” இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்.

"இறைவா !!!!! நீயே அனைத்தும்!!!!"
"இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்"

உலகின் ஆதி குரு, மாமுனிவர், குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளிய தினசரி அனைவரும் அதிகாலையில் எடுக்க வேண்டிய உறுதிமொழி. :-


1.தர்மம் செய்வேன்
2.அனைத்திடத்திலும் பின் அன்பாக அதாவது அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன்.
3.போட்டி, பொறாமைகள் நீக்குவேன்
4.அனைத்தும் எந்தனுக்கே சொந்தம் என்று பின் உயிர்ப் பலியும் இடமாட்டேன்
5.பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன்
6.அப்படிக் கொன்றாலும், நிச்சயமாய் அதை யான் தடுப்பேன்
7.அவை மட்டும் இல்லாமல், தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும்.
8.பிறருக்கு நன்மை செய்ய வேண்டும்
9.பிறருக்காக உழைக்க வேண்டும்
10.பிற ஜீவராசிகளும் ( உயிரினங்களும் ) பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில்அனைவரும் நினைக்க வேண்டும்.
11.அப்படி நினைத்தால் அகத்தியன் வந்து அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பான் என்று சொல்மகனே

( அடியவர்களே. இந்த மகிமை புகழ் அகத்திய மாமுனிவர் அருளிய உறுதிமொழி வாக்கினை சிரம்மேல் ஒவ்வொரு நொடியும் ஏந்தி, பிரம்மாவின் முன்பு தலை நிமிர்ந்து நமக்காக விதியை மாற்றஉத்தரவிடும் வண்ணம் அனைவருக்கும் உலகில் உள்ள 700 கோடி மக்களுக்குச்சென்று அடையும்வண்ணம் எடுத்துச் சொல்லுங்கள். )

மற்றவர்களைப்பற்றி எண்ணிப்பார் அப்பனே. மற்றவர்களை எண்ணி எண்ணி, தான் கெட்டுப்போனாலும் பரவாயில்லை என்று யார் ஒருவன் நினைக்கின்றானோ அவனிடத்தில் இறைவன் பிச்சை ஏந்துவான் அப்பா. பிச்சை ஏந்துவான் அப்பனே. என் பக்தர்களுக்கு இது தெரிய நிச்சயம் வேண்டும் அப்பனே.


அகத்திய பிரம்ம ரிஷி உரைத்த முதல் தரப் புண்ணியம் பெறும் ஒரே வழி:- (1) அன்னதானம் + (2) திருவாசகம் சிவபுராணம் + (3) மக்கள் வாழ , நல் வழிகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுதல். இப்படிச் செய்தால் மட்டுமே , முதல்தரப் புண்ணியம் உண்டாகும் என்று குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி உரைத்துள்ளார்கள். இதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள் என்றும் அனைவருக்கும் கூறி உள்ளார்கள். இதுபோல் அனைவரும் செய்து முதல் தரப் புண்ணியம் பெற்றுக் கொள்ளுங்கள். இறை அருளுடன் வளமாக வாழுங்கள். வாழ்க வளமுடன்!!!!!!!!!

siththarkalatchi - Moving text


அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு :- “அப்பனே, தானங்கள் செய்க, அப்பனே, உன்னால் இயன்றவரை தானங்கள் செய்க. அனுதினமும், என் பக்தர்கள், ஒரு உயிருக்காவது உணவளியுங்கள். அது போதும். அப்பனே, அதுவே கோடி புண்ணியமாகும்.”


Saturday, August 16, 2025

சித்தர்கள் ஆட்சி - 476 :- அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு - கூட்டுப் பிரார்த்தனை ரகசியங்கள் ( 27 July 2025 )

                                            இறைவா நீயே அனைத்தும்.  

                                இறைவா நீ நன்றாக இருக்கவேண்டும்!

















அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு -  கூட்டுப் பிரார்த்தனை ரகசியங்கள்  ( 27 July 2025 )

வாக்குரைத்த ஸ்தலம் :- பாபநாசர் ஆலயம் அருகில் கூட்டு பிரார்த்தனை நடந்த மருதுபாண்டியர் மண்டபம், பாபநாசம், திருநெல்வேலி மாவட்டம்.

( இவ் தொடர் வாக்கு பல வாக்குகள் அடங்கியது. அதன் ஒரு பகுதி வாக்கு

1. சித்தன் அருள் - 1912 ) 


அகிலமெல்லாம் ஆளக்கூடிய இறைவா போற்றியே!! போற்றியே!! பணிந்து செப்புகின்றேன் அகத்தியன். 

அப்பனே அனைவருக்குமே எம்முடைய ஆசிகளப்பா. 

ஏன்? எதற்காக அப்பனே இவ் கூட்டுப் பிரார்த்தனையைச் செய்யச் சொன்னேன் என்றால் அப்பனே நிச்சயம் ஒருவர் கேட்பது வேறு. அப்பனே பல பேர் கூடிக் கேட்பது வேறப்பா. 

அப்பனே நிச்சயம் தன்னில் கூட பல பேர் கேட்டுப் பெற்றால் வரங்கள் , அப்பனே அழியாதப்பா. 

இதனால் அப்பனே ஒருவர் கேட்டால் அப்பனே வரங்கள் (இறைவன்) பின் கொடுத்துவிடுவான். ஆனாலும் இப்படியே பின் கொடுத்துக் கொடுத்து ஈசனும் ஏமாந்தானப்பா!!!

இதனால் அப்பனே ஒருவர் கேட்டால், மன்றாடினால் கொடுக்க மாட்டானப்பா ஈசன். 

“””””இதனால் அப்பனே அனைவரும் சேர்ந்து பின் கேட்டால்,  தொலையட்டும் என்று வரங்கள் கொடுத்து விடுவானப்பா. “””””

இன்னும் அப்பனே நிச்சயம் தீமைக்கு மக்கள்தான் காரணம் என்பேன் அப்பனே. அதனால்தான் உங்களை வைத்தே உங்கள் கர்மாக்களை நீங்களே நீக்குங்கள் என்று இவ் கூட்டுப் பிரார்த்தனை வரச்சொன்னோம் அப்பனே. 

இறைவன் அழகாகப் புண்ணியத்தை அப்பனே புகுத்தி , புகுத்தி அனுப்புகின்றான் அப்பனே. ஆனாலும் அப்புண்ணியத்தைப் பயன்படுத்தத் தெரியவில்லை என்பேன் அப்பனே. 

இதனால் அப்பனே, நிச்சயம் நாடி நாடி எங்கெல்லாம் சென்று வந்தாலும் அப்பனே ஒன்றும் (நடக்கப்போவது இல்லை). அப்பனே மீண்டும் பின் கவலைதான். துன்பம்தான் தொற்றுக் கொண்டு, தொற்றுக் கொண்டு. நோய்கள்தான் தொற்றுக் கொண்டு, தொற்றுக் கொண்டு. 

அப்பனே இவ்வாறாகவே இருந்தால் அப்பனே, வயதும் ஆகி, அப்பனே இறந்து, மீண்டும் வந்து, அப்பனே அவ்வவாறுத்தான் வாழப்போகின்றீர்கள் என்பேன் அப்பனே. அப்புண்ணியத்தை எப்படி நீங்கள் நிச்சயம் எடுத்துக்கொண்டு வரவேண்டும் என்பது யாருக்கும் தெரியவில்லையப்பா. 

இதனால் நிச்சயம் அப்பனே ஒருவன் சொன்னால் கேட்க மாட்டான் அப்பனே. 

****இதனால்தான் அப்பனே நிச்சயம் கூட்டுப் பிரார்த்தனை மூலம் அனைவரும் ஒன்றாக இருந்தால் பாவம் ஒழிந்துவிடும் என்பேன் அப்பனே.****

இதனால் அனைத்திற்கும் காரணம் நீங்களே என்பேன் அப்பனே. இதனால்தான் உங்களை வைத்தே அதாவது பாவப்பட்ட ஜென்மங்களப்பா !!!!!!

அவ்பாவத்தை எப்படிப் போக்குவது????

அப்பனே யாங்கள் வழிகாட்டுவோம் அப்பனே. ஏனென்றால் பாவத்தை நிச்சயம் பின் பாவத்தினால் பல வழிகளிலும் கூட துன்பங்கள் அனுபவிக்க வேண்டும் இவ்ஆன்மா  நிச்சயம் தன்னில் கூட அதாவது ஈசனுடைய கட்டளை. 

அப்பொழுது நிச்சயம் தன்னில் கூட அவ்பாவத்தை அனுபவித்தே தீரவேண்டும். எங்கு சென்றாலும் பின் ஒன்றும் அவ்பாவத்தைக் கழிக்க முடியாது நிச்சயம். ஆனாலும் நிச்சயம் எப்படிக் கழிக்க முடியும் என்பதையெல்லாம் சித்தர்கள் யாங்கள் அறிவோம். இதனால் அப்பனே பின் ஈசனே ஆயினும் சில அனுபவங்கள் தேவை என்பதை எல்லாம் உணர்ந்து , 

“””””அப்பனே இதனால்தான் அப்பனே (சித்தர்கள் யாங்கள்) நிச்சயம் ஒரு முடிவு எடுத்தோம் நிச்சயம் அப்பனே.”””””

இதனால் எங்கு சென்றாலும் ஒன்றும் நடக்கப்போவது இல்லை. எவ்வளவு மந்திரங்கள் ஜெபித்தாலும் ஒன்றும் நடக்கப்போவது இல்லை. அங்கும் இங்கும் அலைந்தாலும் ஒன்றும் நடக்கப்போவது இல்லை. ஆனால் சாவை நிச்சயம் பின் யாரும் தடுக்க முடியாது. 

** ஆனாலும் அப்பனே பாவத்தைத் தடுத்து விட்டால் நிச்சயம் பலவகையான நன்மைகள் பெறமுடியும் அப்பா கலியுகத்தில் அப்பனே.  **

இதனால் அப்பனே நிச்சயம் ஒரு பழமொழியும் உண்டு. அதாவது ,  

*தான் என்ன நிலைமையில் இருக்கின்றோமோ அதற்கு நிச்சயம் தான் தான் காரணம் *** என்று. 

இதனால் அப்பனே பாவத்தோடுதான் நீங்கள் இருக்கின்றீர்கள் என்பேன் அப்பனே.  

அப்பனே ஒருவொருவருக்குச் சக்திகள் அதிகமாக இருக்கும் அப்பா.  ஒருவருக்குச் சக்திகள் குறைவாக இருக்கும் அப்பா. இவை ஒன்று அனைவரையும் சேர்த்தால்,  அதிகம் உள்ளவர்களிடம் இருந்து அவ்சக்தி வருகின்ற பொழுது, குறைவாக இருக்கின்ற சக்தியைக் கூட அவை தாக்குகின்ற பொழுது , அப்பனே சம அளவு பெரும் அப்பா. ஆனாலும் அப்பனே (சக்தி) அதிக அளவு இருப்பவர்கள் உடனே குறைகின்ற பொழுது மீண்டும் அவ்சக்தி தெளிவடைந்துவுடும். அதிகமாகிவிடும். குறைந்து விடாது என்பேன் அப்பனே. இல்லாதவருக்கு அது நிச்சயம் அப்படியே சமமாகப் பங்கிடப்படும் என்பேன் அப்பனே.

 இப்பொழுதுதான் அப்பனே, இப்படி இருந்தால் மட்டுமே (கூட்டுப் பிரார்த்தனை செய்யும் அனைவருக்கும்) பாவத்தைத் தொலைக்க முடியும் என்பேன் அப்பனே. 


———————————-
(வணக்கம் அடியவர்களே, கூட்டுப் பிரார்த்தனை செய்யும் அனைவருக்கும் பாவங்கள் விலகும் இந்த சக்தி பரிமாற்றத்தால். இறைவன் அருளால் அனைவருக்குமே மிக எளிதாக பாவ விலக்கம் நிகழும் கூட்டுப் பிரார்த்தனையில். எனவே அடியவர்களே , இயன்றவரை முழு வேகத்தில் பலரையும் மிக அதிக அளவில் ஒருங்கிணைக்கவும் - ஒவ்வொரு  கூட்டுப் பிரார்த்தனைகள் செய்யும் பொழுது. இதுவே மாபெரும் புண்ணியச் செயல். பிறருக்குப் புரியாமல் இருந்தாலும் அவர்களை கூட்டுப் பிரார்த்தனையில் இனைத்து, இவ் வாக்குகளை எடுத்துச் சொல்லிச் செயல்பட ப‌‌‌ல நன்மைகள் உலகிற்கு உண்டாகும். மக்கள் பலரின் பாவங்கள் விலகட்டும் உங்கள் சேவையால்.) 
————————————

குருநாதர்:- அப்படி இல்லை என்றால் அப்பனே நீங்கள் அலைந்து திரிந்து, அப்பனே நிச்சயம் ஒன்று ஆகவில்லையே என்றெல்லாம். பின் நிச்சயம் அலைந்தோமே… அங்கு சென்றோமே… இங்கு சென்றோமே என்றெல்லாம் (வருத்தங்கள்) அப்பனே. 

அவை மட்டும் இல்லாமல் இவ்வாறு கூட்டுப் பிரார்த்தனை செய்தால் அப்பனே, அனைவரிடத்திலும் கூட அதாவது நீங்கள் அனைவருமே கைகளில் அப்பனே பின் பேசிக்கொண்டிருக்கின்றீர்கள் (Mobile / அலைப்பேசி) ஒன்றை வைத்து. நிச்சயம் அதில் மின்கலம் (Mobile battery) தீர்ந்துவிட்டால் ஒன்றும் செய்ய இயலாதப்பா. மீண்டும் அப்பனே எங்கேயாவது மின்சாரம் இருக்கின்றதா என்று தேடி அப்பனே மீண்டும் வலுப்படுத்துவீர்கள் (Mobile charging) என்பேன் அப்பனே. 

அப்படித்தானப்பா….

*** கூட்டுப் பிரார்த்தனை செய்தால் மட்டுமே அப்பனே உங்கள் , நிச்சயம் சக்திகள்  கூட்டப்படும் அப்பா. ***

இல்லையென்றால் அப்பனே நிச்சயம் அங்கும் இங்கும் திரிந்தாலும் , அப்பனே ஆனாலும் அப்பனே 10, 20 சதவிகிதம் மட்டுமே நிச்சயம் ஏறும் அப்பா. மீதியெல்லாம் ஏறாதப்பா. இதனால் அப்பனே நிச்சயம் பின் 100 சதவீதம் ( 100 % battery charge ) ஏறவேண்டும் அப்பனே. அப்பொழுதுதான் இறைவன் எங்கிருக்கின்றான்? இறைவனை எப்படிக் காணலாம்? இறைவனை எப்படி அழைத்தால் வருவான் என்பவையெல்லாம் நீங்கள் அறிந்து கொள்வீர்களாக!!! அப்பனே. உங்களை நீங்கள் அறிந்து கொள்ளாவிடில் அப்பனே, உங்களைச் சுலபமாக மற்றொருவன் ஏமாற்றி, அவன் கர்மாவை எல்லாம் உந்தனுக்குக் கொடுத்து, நீங்களும் அனுபவிக்க வேண்டியதுதான் என்பேன் அப்பனே. 

இதனால் அப்பனே, உண்மை தெரியாமல் இறைவனை வணங்கக் கூடாது என்பேன் அப்பனே. அதே போல் அப்பனே உண்மை தெரிந்தவனும் அப்பனே இறைவனை வணங்கப் போவதில்லை. ஏன் ? எதற்கு ? நிச்சயம் இறைவனைக் கண்டுவிட்டால் , இறைவனை ஒன்றும் கேட்கப் போவதில்லை அப்பனே. 

************

“”””” இதனால் அப்பனே கூட்டுப் பிரார்த்தனைக்கு இருக்கும் நிச்சயம் சக்தி வேறு எதற்கும் இல்லை அப்பா“””””

************

“”””””””” அதனால்தான் அப்பனே வரும் காலத்தில் இன்னும் அப்பனே இவ்வாறு பிரார்த்தனைகள் பின் நிச்சயம் கூட்டிக் கொண்டே சென்றால் அப்பனே தொல்லைகள் அகலும் அப்பா.  “””””””

அவை மட்டும் இல்லாமல் அப்பனே இவ்வாறாக அனைவரும் ஒன்று சேர்ந்து , அப்பனே நிச்சயம் உருகி, மனம் உருகி அழைத்தால் அப்பனே பிரம்மாவும் * அடடா !!!! இப்படியா*** என்றெல்லாம் அப்பனே மனம் இறங்குவானப்பா. விதியும் அப்பனே நிச்சயம் எங்களால் எளிதாக மாற்ற முடியும் அப்பா. 

நிச்சயம் ஒருவன் அதாவது எங்களுக்கு மட்டும் நன்றாக இருக்க வேண்டும், எங்கள் பிள்ளைகள் பின்  நன்றாக இருக்க வேண்டும் என்று வேண்டினால், ஒன்றும் நடக்கப்போவதில்லை என்பேன் அப்பனே. மீண்டும் மீண்டும் இதைத்தான் நீங்கள் கேட்டுக் கொண்டிருக்க வேண்டும். 

ஆனாலும் அதுவும் நடக்கும். தொல்லைகள் ஏற்பட்டுவிடும் அப்பா. 

இதனால் அப்பனே, நிச்சயம் அனைவரும் சேர்ந்து , ஒன்றாக இனைந்து பிரார்த்தனையை செய்தால், அப்பனே பிரம்மனும் பார்பானப்பா. 

சரி. நிச்சயம் அவரவர் இவ்வாறாக ஒற்றுமையாக இருக்கின்றார்களே!!! பின் நிச்சயம் விதியை மாற்றுவோம் என்று அப்பனே. ஏன் என்றால்  கலியுகத்தில் அப்பனே ஒவ்வொருவருக்கும் சண்டைகள், சச்சரவுகள், இன்னும் ஏராளமான மனக்குழப்பங்கள் , இன்னும் அப்பனே கூறிக்கொண்டே இருக்கிறேன் அப்பனே. 

அதாவது கலியுகத்தில் பிறப்பவர்கள் எல்லாம் பாவம் நிச்சயம் அதிகமாகத்தான் இருக்கின்றது என்பேன் அப்பனே.  இதனால் அப்பனே ஒன்றும் செய்ய முடியாது அப்பா. நிச்சயம் இதனால்தான் அப்பனே, ( இப்பொழுது பாபநாசம் கூட்டுப் பிரார்த்தனை நடக்கும் ) இங்கு சம அளவு (சக்திகள்) எதை என்று (நீங்கள்)  உணராமல் இருந்தாலும் , அப்பனே அதாவது சூரியன் இடத்திலிருந்து , அப்பனே அதாவது வளிமண்டலத்திலிருந்து அதற்கு மேலேயும் அப்பனே ஒரு படலம் உண்டு என்பேன் அப்பனே. அறிந்தும் கூட அவை யாருக்கும் தெரியாதப்பா. 

( இவை மனிதர்களின் விஞ்ஞான கருவிகளால் , அறிவால் என்றுமே கண்டுபிடிக்க இயலாத மண்டலங்கள்.) 

அப்பனே நிச்சயம் தன்னில் கூட (மனிதர்களின் விஞ்ஞான கண்களுக்குத் தெரியாத சூரியனின் கதிர்கள்) அவ்வாறாக நேரடியாக விழுகின்ற இடம் இவ்பாபநாசம்தானப்பா. 

அதனால் ஈசன் இருக்கின்றானே, அவந்தன் அங்கு இருக்கின்றானே அழகாகவே (பாபநாசர் ஆலயம்) , பின் ஏதோ ஒன்று நினைத்து விடாதீர்கள் அப்பனே. அவ்சக்தி அங்குதான் விழுகின்றது என்பேன் அப்பனே. 

இதனால் அப்பனே அவ்சக்தியானது வளிமண்டலத்திலிருந்தே இவ்ஆன்மா துகள்கள் பிரியும் என்பேன் அப்பனே. அதாவது நன்முறைகளாக நீங்கள் பிறக்கின்ற பொழுது நிச்சயம் அவ்வளிமண்டத்தில் உள்ள (கிரகங்களின்) துகள்கள் நிச்சயம் (மனிதர்களின்) மூளை பின் பக்கத்தில் நின்று விடும் என்பேன் அப்பனே. ஆனாலும் அவை வளர வளர , அப்பனே ஆனாலும் உடம்பும் வளரும். அவைதன் நிச்சயம் சில சில வகைகளிலும் கூட அழித்திட வேண்டும். அதாவது நிச்சயம் மீண்டும் அவைதன் வளிமண்டலத்திற்கே அனுப்பிட வேண்டும். 

அப்பனே ஈசன் இருக்கின்றானே இங்கு , அது நிச்சயம் ஒரு மணி நேரத்திற்குச் சரியாக ஓர் முறை பல கோடி வேகத்தில் , சம அளவில் திடீரென்று வரும். திடீரென்று போகும் அப்பா. 

அப்பனே அவ்வாறாக 5 மைல் தொலைவில் அவைதன் இருக்கவே , அப்பனே வளிமண்டலத்திற்கு (திரும்பி) மீண்டும் போகின்ற பொழுது , உங்களிடத்தில்  உள்ள , அதாவது மூளையின் பக்கத்தில் இருக்கின்றதே அதை மீண்டும் எடுத்துச் செல்லக் கூடும் என்பேன் அப்பனே. 

“””” இங்கு இதனால்தான் இவ்வளவு வலிமைகள் இன்னும் அப்பனே. “””””

எங்கெங்கு சில (கதிர்கள் விழுகின்றதோ) அதாவது அன்றே (அங்கெல்லாம் ஆலயம்) அமைத்தார்கள் ஞானிகள் அப்பனே. 

இவை சுற்றிப் பல வழிகளில் கூட நவகிரகங்கள்,  ஒவ்வொரு இடத்திலும்  சரியாகவே விழுந்து, மீண்டும் எழுந்து, அவ்வாறு பிரதிபலிப்பினால் நிச்சயம் பல வகை உண்டு அப்பா. 

(* பாவங்கள் நீங்கும் பாபநாச விஞ்ஞான ரகசியங்கள் *) 


இதனால் ஓடுகின்ற நதியிலே நிச்சயம் அவைதன் விழுந்து கொண்டே இருக்கின்றது என்பேன் அப்பனே. அவை விழுகின்ற பொழுது உங்கள் கண்களுக்குத் தெரியாதப்பா. பைரவர் கண்களுக்குத் தெரியும் அப்பா. அப்பனே விளக்கு போல் மிளிரும் அப்பா. அவ்வாறு அவ்விடத்தில் நிச்சயம் நீங்கள் நீராடினால் மட்டுமே பாவங்கள் தொலையும். 

ஆனாலும் அப்பனே பாவங்கள் நீங்கள் கொண்டு வரலாம் எந்நேரத்திலும் அப்பனே நிச்சயம் நீராடலாம் என்பேன் அப்பனே. ஆனால் (உங்கள் பாவங்கள்) அது நீங்காதப்பா. 

** சரியான நேரத்தில் எப்பொழுது விழுகின்றது என்பது யாங்கள் அறிவோம் அப்பா. **

அவைதன் நிச்சயம் வருங்காலத்தில்  இவ்வாறாக கூட்டுப் பிரார்த்தனையில் யாங்கள் சொல்வோம் அப்பனே. 


———————————————---------------------------------------------------------------------------
( சித்தன் அருள் - 163 - பாபநாசம்! - “இந்த இடத்தில், அவர்கள் சார்பாக, நீராடினால் 33.1/33 விழுக்காடு புண்ணியம் அவர்களுக்கு போய் சேரும்."
———————————————---------------------------------------------------------------------------


“”””” ஒவ்வொரு ரகசியம் செப்புகின்ற பொழுது நீங்களே உங்களை வெல்லலாம் என்பேன் அப்பனே. “””””

அழகாக இடைக்காடன் சென்னானே , அதைச் செய்தாலே உங்களுக்கு மாற்றம் ஏற்படும் என்பேன் அப்பனே. 

———————————————-------------------------------------------------------------------------
 (சித்தன் அருள் - 1912 - இடைக்காடர் சித்தர் அருளிய , உலகத்தில் யாரும் அறியாத,  ராகு கேது துகள்களை உங்கள் இதயத்தில் இருந்து நிரந்தரமாக அழிக்கும்  அதி ரகசிய பூசை முறை)
———————————————-------------------------------------------------------------------------

பின் எனக்கு நோய், அறிந்தும் இவ்வாறாகப் பணம் வரவில்லை, இன்னும் எதை எதையோ சண்டை சச்சரவுகள், நிச்சயம் பின்  கடனாளியாகி விட்டோமோ என்றெல்லாம் அப்பனே அனைவருக்கும் ஒவ்வொரு குறையப்பா!!!!!

** அப்பனே ஏதாவது ஒரு குறை இருந்தால்தான் இறைவனையும் நாடி வருகின்றான் மனிதன். இறைவன் குறை வைக்கவில்லை என்றால் நிச்சயம் ஒன்றும் தெரியாதப்பா. **

ஆனாலும் கலியுகத்தில் அப்பனே நிச்சயம் சொல்லிக் கொண்டே இருக்கின்றேன் அப்பனே. இது நரகம் என்பேன் அப்பனே. இவ்நரகத்தில் வாழ்வது மிகவும் கடினம்தான் அப்பா. அவ்வாறாக இல்லாமல் இன்னும் நிச்சயம் மனிதர்களுக்கு நல்லதையே சொல்ல வேண்டும் என்பேன் அப்பனே. ஏனென்றால் அனைத்தும் மாற்றும் சக்தி மனிதனிடத்தில் இருக்கின்றதப்பா. இதனால் அப்பனே யாங்களே உங்களுக்கு கொடுத்துக் கொண்டு வந்தாலே அப்பனே நீங்கள் சோம்பேறி ஆகிவிடுவீர்கள் என்பேன் அப்பனே. இதனால் அப்பனே இவ்வாறு உருவாக்கினால்,  நிச்சயம் பக்தி உள்ளவர்களைக் கூட அப்பனே மேலான பதவிகளில் யாங்கள் அமரவைத்து அனைத்தும் பக்திமயமாக்குவோம் என்போம் அப்பனே. 

ஆனாலும் நிச்சயம் அதேபோல் எனக்கு நன்றாக இருக்க வேண்டும், தன் பிள்ளைகள் நன்றாக இருக்க வேண்டும் என்றெல்லாம் எண்ணினால் நீங்கள் நிச்சயம் அப்படியே இருக்க வேண்டியதுதான் என்பேன் அப்பனே. 

(தனியாக இறை பாடல்களை ஓதும்  அனைத்து அடியார்கள் கவனத்திற்கு) 

** இதனால் நிச்சயம் பல அடியார்கள், ஈசனுடைய அடியார்கள்,  இன்னும் பல பக்தர்கள் கஷ்டத்தை அனுபவித்துக் கொண்டே இருக்கின்றார்கள் ஏன் இந்த நிலைமை என்றெல்லாம் யோசித்துக் கொண்டே இருக்கின்றார்கள் என்பேன் அப்பனே. ****

** இப்பனே இவ் நிலை மாறவேண்டும் என்றால் ஒன்றே, கூட்டுப் பிரார்த்தனை  மட்டுமே என்பேன் அப்பனே. **

**** அப்பனே எங்கெங்கு ஒளி விழுகின்றது என்பதெல்லாம் வருங்காலத்தில் யான் எடுத்துரைக்கும் பொழுது, அங்கெல்லாம் சென்றால் அப்பனே உங்கள் பாவங்கள் தொலையும் அப்பா. பல கண்டங்கள் அப்பனே நீங்கும் அப்பா. பல தோஷங்கள் நீக்கும் அப்பா. பல நோய்கள் நீங்கும் அப்பா. ****

அப்பனே ஒன்றைச் சொல்கின்றேன். இறைவன் படைக்கும் பொழுதே நீ பாதுகாத்துக் கொள் என்று நிச்சயம் தன்னில் கூட ஒரு கருவியை வைத்திருக்கின்றானப்பா முதுகின் பின்னாலே!!!!!!. 

அப்பனே முதுகின் பின்னாலே வைத்திருக்கின்றானப்பா. அவைதன் கழுத்தை வரை ஏறவேண்டும் என்பேன் அப்பனே. அப்படி ஏறினால் மட்டுமே உங்களுக்கு அனைத்தும் தெரியும் அப்பா. அப்படி ஏறாவிடில் அப்பனே நிச்சயம் தன்னில் கூட மீண்டும் மீண்டும் பிறந்து, திருத்தலங்களுக்குச் சென்று,  கஷ்டங்கள் பட்டுப் பட்டு, தானும் அழிந்து , தன்னைச் சார்ந்தோரையும்  (அழித்து) … ஒன்றும் லாபமில்லை அப்பனே. 

அக்கருவி உன் முதுகின் பின்னே நிச்சயம் உள்ளதப்பா. அவைதன் இயக்க வேண்டும். எப்படி இயக்குவீர்கள்? என்பேன் அப்பனே. அதாவது சொன்னேனே முன்னே, 

“””””” நலன்களாக  இவ்வாறு கூட்டுப் பிரார்த்தனை நிச்சயம் சொல்கின்ற பொழுது, அப்பனே அனைவரிடத்திலும் ஒவ்வொரு சக்தியும் வெளிப்படும் என்பேன் அப்பனே.  “”””””””

இவ்வாறாக அவைதன் நிச்சயம் அதாவது ஒருவன் தட்டினால் அப்பனே நிச்சயம் ஒளி ஓரிடத்தில் மட்டும் போகும் என்பேன் அப்பனே. ஆனால் அனைத்தும் சேர்ந்து தட்டினால் எங்கோ சென்றுவிடும் என்பேன் அப்பனே. 

நீங்கள் அப்பனே பாடுகின்றீர்களே… அப்பனே ஏன் பாடுகின்றீர்கள் என்று உங்களுக்குத் தெரியுமா அப்பனே ? 

“”””” நிச்சயம் சக்திகள் வாய்தான் அப்பனே….. “””””

(உங்களிடம் இருந்து வாய் வழியாக ) வருகின்ற பொழுது அப்பனே உங்களுக்குத் தெரியாதப்பா. அவைதன் அப்பனே பிம்பத்தின் மூலம் காணலாம். அவ் பிம்பம் கூட அப்படியே கண்டுபிடித்து அப்படியே வைத்திருக்கின்றார்கள் ஓரிடத்தில். அதையும் யான் தெரிவிப்பேன் அப்பனே. 

** அவைதன் நிச்சயம் இவ்வாறு ஒளி அலைகளாக மாறுகின்ற பொழுது , நன்முறைகளாகவே நிச்சயம் பின்னே இருக்கின்றதே அவ் கருவியை இயக்கப் பயன்படுகின்றது என்பேன் அப்பனே.  ** 
இவ்வாறாக அக்கருவி சிறிது சிறிதாக மேல் எழும்பும் என்பேன் அப்பனே. இதனால் அனைத்தும் உங்களுக்கே தெரியவரும் என்பேன் அப்பனே. 

அப்பனே நிச்சயம் ஒன்றைச் சொல்கின்றேன். 

உங்கள் பிள்ளைகளுக்கு இப்படி வாழுங்கள். இப்படி இருந்தால் நல்லது நடக்கும் என்று சொல்லிவிட்டால் அவர்கள் பிழைத்துக் கொள்வார்கள் என்பேன் அப்பனே. 

** அதேபோல்தான் அப்பனே, நிச்சயம் நீங்கள் எங்கள் பிள்ளைகளப்பா!!!!!   ***

** இப்படி இருந்தால் நிச்சயம் வாழ்ந்து விடுவீர்கள் என்று யாங்கள் கற்றுக் கொடுக்கின்றோம் அப்பனே.  **

ஏனென்றால் அனைத்தும் யாங்கள் செய்கின்றோம். பின் இறைவன் செய்வான் என்று நிச்சயம் நீங்கள் வந்து கொண்டே இருந்தால் பின் உங்களுக்கும் தெரியாமல் போய்விடும். உங்களுடைய வாரிசுகளுக்கும் தெரியாமல் போயிற்று , கஷ்டங்களும் பின் அள்ளி அள்ளி வருமப்பா. 

இதனால் அப்பனே கவலைகள் வேண்டாம். இன்னும் வாக்குகளில் எப்படி வாழ வேண்டும்? எப்படி இன்னும் பின் தாந்திரீகம் என்ன? பின் மாந்திரீகம் என்ன? அப்பனே உங்களிடத்திலேயே இருக்கின்றது அப்பனே!!!! அவையெல்லாம் எப்படி இயக்க வேண்டும் என்று உங்களுக்கே யாங்கள் சொல்லித்தருவோம் அப்பனே நிச்சயம் தன்னில் கூட. 

அதே போலத்தான் அப்பனே நிச்சயம் சிறு வயதிலிருந்தே ஒழுக்கமாக எப்படி வாழ்ந்தால் உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் சொல்லிக் கொடுப்பீர்கள் அல்லவா? 

அதே போலத்தான் அப்பனே. 

** யானும் சொல்லிக் கொடுப்பேன் அப்பனே. அதை யார் ஒருவன் சரியாகப் பயன்படுத்துகின்றானோ அவன் வெற்றியாளனாக இருப்பான் அப்பனே.  **

சரியாகப் பயன்படுத்தாதவன் மீண்டும் பாவத்தில் நுழைந்து பல கஷ்டங்கள் பட்டு மீண்டும் ஓடோடி வருவானப்பா. 

“”””” உலகத்தில் இறைவனைக் காண முடியாதப்பா. ஆனால் அப்பனே யான் சொல்வதைக் கேட்டால் நிச்சயம். “”””””

அப்பனே நிச்சயம் ஏன் எதற்கு உங்களை எல்லாம் பிரித்து விட்டார்கள்.  கூட்டுப் பிரார்த்தனை செய்தால் நிச்சயம் அனைவரும் பிழைத்துக் கொள்வார்கள் என்று சரியாக எழுதப்பட்டதை எல்லாம் மாற்றி அமைத்து , இவ்வாறாக (கூட்டுப் பிரார்த்தனைகள் )  செய்யக் கூடாது என்று என்றெல்லாம் சொல்லிவிட்டார்கள் என்பேன் அப்பனே. அவ்வாறாக, இவர்களும் கூட  பக்தர்கள்தான் என்பேன் அப்பனே.  இவ்வாறு செய்துவிட்டார்கள் என்பேன் அப்பனே. 

இதனால் யாங்கள் விடப்போவதில்லை என்பேன் அப்பனே. 

** ஏனென்றால் பின் சித்தர்களை நம்பி நம்பி ஓடோடி வருகின்றீர்கள் நீங்கள் அப்பனே.  இதனால் அப்பனே உங்களுக்கு யாங்கள் நன்மையே செய்வோம் அப்பனே!!!! **

(கூட்டுப் பிரார்த்தனை செய்யும் அனைத்து அடியவர்களுக்கும் பின் வரும் வாக்கு மகத்தான வரப்பிரசாதம். அந்த ஒருவர் நீங்களாக இருக்கலாம்…) 

“””””” இன்னும் அப்பனே இவ்வாறாகச் செய்து கொண்டிருந்தால் அப்பனே உங்களில் ஒருவனைத் தேர்ந்தெடுத்து,  ஓர் உயர் பதவியில் வகித்து (அளித்து) , பின் உங்கள் பிள்ளைகளுக்குத் தேவையானதை எல்லாம் அப்பனே அவன் மூலம் யாங்கள் கொடுக்க வைப்போம் அப்பனே. “”””” 

“””” இதனால் அதி விரைவிலேயே அனைத்தும் நடக்கும் அப்பா. “”””””


“””””” அப்பனே மனம் இறங்கினார்கள் பின் ஈசனும் பார்வதி தேவியும் கூட அனைவரையும் ஆசிர்வதித்தார்கள் என்பேன் அப்பனே !! “””””

இன்னும் அப்பனே அனைத்து சித்தர்களின் ஆசிர்வாதங்கள் உண்டு என்பேன் அப்பனே !!!!!! 

இன்னும் அப்பனே ஹோமங்கள் எப்படி வளர்க்க வேண்டும் என்று எல்லாம் ரிஷிகள் வந்து சொல்வார்களப்பா. அதை நீங்கள் பயன் படுத்திக்கொண்டால் வாழ்க்கையில் உங்களுக்குத் தேவையானது அனைத்தும் கிடைக்கும் அப்பா. 

அப்பனே ஓரே நேரத்தில் சொல்லிவிட்டால் அப்பனே மதிப்பிருக்காதப்பா. அப்பனே நீங்கள் அனைவருமே இப்பொழுது ஒன்றாம் வகுப்பில் தான் இருக்கின்றீர்கள் என்பேன் அப்பனே.  

இன்னும் இரண்டாம் வகுப்பு தேர்ச்சி  பெற வேண்டும். மூன்றாம் வகுப்பு தேர்ச்சி பெற வேண்டும். அதே போல் உயர் கல்வியில் எவ்வாறு தேர்ச்சி பெற வேண்டும் என்று ஒன்றும் வகுப்பிற்குச் சொல்லிக் கொடுத்தால் முடியாதப்பா. அதனால் அப்பனே தள்ளிக்கொண்டே வருகின்றேன். 

பாவத்தைத் தள்ளியே வைப்பேன் அப்பனே. 

ஆசிகள் !!!! ஆசிகள் !!!!!



ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!

சர்வம் சிவார்ப்பணம்!!!!!

Thursday, August 14, 2025

சித்தர்கள் ஆட்சி - 475 :- அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளிய மதுரை சத்சங்க வாக்கு ( 22, 23 June 2025 ) - பகுதி 8

                                                   இறைவா நீயே அனைத்தும்.  

                                இறைவா நீ நன்றாக இருக்கவேண்டும்!






















அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளிய  மதுரை சத்சங்க வாக்கு ( 22, 23 June 2025 ) - பகுதி 8


வாக்குரைத்த ஸ்தலம் :- அருள்மிகு ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவில் வளாகம், தியாகராசர் குடியிருப்பு, பசுமலை, மதுரை- 625 004.


ஆதி சிவசங்கரியின் பொற்கமலத்தைப் பணிந்து செப்புகின்றேன் அகத்தியன். 

(இவ்தொடர் வாக்கின் முந்தைய பதிவுகள்:- 


1.சித்தர்கள் ஆட்சி - 467 - பகுதி 1
2.சித்தர்கள் ஆட்சி - 468 - பகுதி 2
3.சித்தர்கள் ஆட்சி - 469 - பகுதி 3
4.சித்தர்கள் ஆட்சி - 471 - பகுதி 4
5.சித்தர்கள் ஆட்சி - 472 - பகுதி 5
6.சித்தர்கள் ஆட்சி - 473 - பகுதி 6
7.சித்தர்கள் ஆட்சி - 474 - பகுதி 7
8.சித்தர்கள் ஆட்சி - 475 - பகுதி 8
)

குருநாதர் :- இவையெல்லாம் நிச்சயம் சொல்லிக் கொடுத்துத்தான் பின்பு வாக்குகள் செப்புவேன். 


**தாயே !!! தந்தையே!!!! (உங்கள்) விதியைப் பற்றிச் சொல்வது சாதாரணமில்லை.**


**நிச்சயம் அப்புண்ணியங்கள் நீங்கள் பெற்றுவிட்டால் நிச்சயம் விதியின் ரகசியத்தை யான் சொல்வேன்.**


நிச்சயம் உலகம் எங்கு சென்று கொண்டிருக்கின்றது ?


சுவடி ஓதும் மைந்தன் :- அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது. 


அடியவர்கள் :- (வழி மொழிந்தனர்) 


குருநாதர் :- நிச்சயம் அவ்அழிவை நோக்கி அதாவது இங்கு இறைவனும் இதற்கு எதை என்று கூற நிச்சயம் தன்னில் கூட.  


**இதனால் நிச்சயம் அப்பனே நிச்சயம் அனைத்தும் உங்களுக்குச் செய்கின்றேன்.**


சுவடி ஓதும் மைந்தன் :- எல்லாத்தையும் தருகின்றார் அம்மா எல்லாருக்கும். இந்த கலியுகத்தில் உங்களுக்கு என்னென்ன தேவையோ அதைக் கொடுக்கின்றேன். கூட இருந்து வழி நடத்துகின்றேன் (என்று சொல்கின்றார்.) 


குருநாதர் :- நிச்சயம் எப்படி ? எந்த ரூபம் எடுத்து வருவேன் என்பதையெல்லாம் நிச்சயம் யான்  இங்கு இப்பொழுது சொல்வதற்கில்லை. 


அப்பனே மீண்டும் சொல்கின்றேன். 


** பொய் சொல்லக்கூடாது. **


** பிறரை ஏமாற்றக் கூடாது. ** 


** கோபம் கொள்ளக் கூடாது. ** 


** நேர்மையாக இருக்க வேண்டும். ** 


அடியவர் :- முடியமாட்டேங்குது ஐயா. கோபம் வராமல் இருக்க என்ன வழி? 


குருநாதர் :- அப்பனே சொல்லிக்கொண்டே இருக்கின்றேன் அப்பா. நிச்சயம் தந்தை சொல்வதைக் கேட்டால், நிச்சயம் பிள்ளை எதை என்று அறிய. 


சுவடி ஓதும் மைந்தன் :- சொல்லிவிட்டால் அப்படியே கேட்கவேண்டும். அவ்வளவுதான் . எப்படி கோபம் வருது , நிக்குது அதையெல்லாம் கேட்கக்கூடாது. 


குருநாதர் :- 


**அப்பனே பின் இன்னொருவன் அப்பனே உன்னை அடித்தாலும் அப்பனே நீ அமைதியாகத்தான் இருக்க வேண்டும். இதுதான் சித்தன் வழி.**


**அப்பனே உன்னை திட்டித் தீர்த்தாலும் , திட்டுங்கள் என்றுதான் சொல்ல வேண்டும். இதுதான் சித்தன் வழி.**


நிச்சயம் அடித்தாலும், திட்டினாலும், குறை சொன்னாலும் நிச்சயம் நீ என்ன சொல்ல வேண்டும்? 


அடியவர் :- புன்முறுவல்.  ( இன்முகம் காட்டி மெல்லிய சிரிப்பு ) 


(பின் வரும் வாக்கினைப் பலமுறை படித்து, புரிந்து , உணர்ந்து செயல் படுத்தவும். இறைவனுக்குப் பிடித்தவாறு வாழும், இறைவனை வணங்கும் சித்த வழி) 


குருநாதர் :- நிச்சயம் தன்னில் கூட 


**என் தந்தை இருக்கின்றான் அகத்தியன். **


**பின் நிச்சயம் (உங்கள் விருப்பம் போல்) பேசிட்டுச் செல்லுங்கள். **


**அடியுங்கள் என்றுதான் சொல்லவேண்டும். **


**இதுதான் இறைவனுக்கு நிச்சயம் பின் கொடுக்கும் மரியாதை நீங்கள். ** 


தாயே !!!! நிச்சயம் தன்னில் கூட இவ்வாறு பக்குவம் வருவதற்கே ஐம்பது வருடங்கள் ஆகின்றது. நிச்சயம் தன்னில் கூட இவையெல்லாம் முதலிலே செய்துவிட்டால், நிச்சயம் இறைவனை நேரில் தரிசிக்கலாம். நிச்சயம் இறைவன் நேரில் வந்து நிச்சயம் சில சில விதிகளைக்கூட பின் மனதார பேசி சென்றும் இருக்கின்றார்கள். அவர்களும் இங்கு வந்திருக்கின்றார்கள். 


சுவடி ஓதும் மைந்தன் :- இறைவன் இங்கு உள்ள சிலரிடம் நேரில் பேசி இருக்கின்றார். அவங்க யார் என்று தெரியவில்லை. ரகசியமாக இருக்கின்றது. 


[ **  உங்கள் கஷ்டங்களின் மூல காரணம் ** ] 


குருநாதர் :- இறைவன் உங்களுக்காகக் கொடுக்கத் தயார். ஆனாலும் நீங்கள் மற்றவர்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள். அப்பொழுதுதான் இறைவனும் சந்தோசமடைவான். உங்களுக்கே, உங்களுக்கே கேட்டுக்கொண்டிருந்தால் இறைவனும் கோபங்கள் பட்டு, பின் அதாவது இறைவன் கோபப் படலாமா என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் இறைவன் எல்லையற்றவன். பின் இறைவனின் லீலை யாருக்குத் தெரியும்? இதனால் நிச்சயம் தன்னில் கூட அட முட்டாளே!!! உந்தனுக்கு இவ்புத்தியா கொடுத்தேன் என்று இறைவன் கோபம் கொள்கின்ற பொழுதுதான் பின் உங்களுக்குக் கஷ்டங்கள் வந்து கொண்டே இருக்கின்றது. 

””””அப்பனே நிச்சயம் அனைத்தும் தாங்கும் சக்தி எவனிடத்தில் இருக்கின்றதோ, அவனை இறைவனே கட்டி நிச்சயம் அணைத்துக்கொள்வானப்பா. ஆனந்தக் கண்ணீர் விடுவானப்பா.”””””

*நிச்சயம் அழிவதும், வாழ்வதும் உங்களிடத்திலே.**

*அப்பனே இறைவன் பன்மடங்கு தருவதற்கு உங்களுக்குத் தயாராக இருக்கின்றானப்பா.*

அப்பனே மீண்டும் மீண்டும் சொல்கின்றேன் அப்பனே. வாங்குவதற்கு கைகள் இல்லையப்பா. 


சுவடி ஓதும் மைந்தன் :- சித்தர்கள் வழியில் வருபவர்களுக்கு மனம் கடல் போன்று இருக்க வேண்டும் என்று சொல்கின்றார். 


குருநாதர் :- இவ்வாறாக இருந்தாலே  கடல் போன்று , பின் நால்வர்கள் வந்து விடுவார்கள். தானாகவே நிச்சயம் அதாவது தேவாரம் திருவாசகத்தையும் தானாக உங்களுக்குள் நுழைந்து நிச்சயம் தன்னில் கூட. அவ்வாறாகக் கடல் போன்று இல்லை என்றால் திருவாசகத்தையும், தேவாரத்தையும் ஓதவும் கூட முடியாது. 


————————-

(  “நால்வர்" என்றால் தமிழில் நான்கு பேர் என்று பொருள். இது பொதுவாக, சைவ சமயத்தில் நான்கு முக்கிய குருமார்களைக் குறிக்கும், அதாவது திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் (அப்பர்), சுந்தரர், மற்றும் மாணிக்கவாசகர். அவர்களை "சமயக் குரவர் நால்வர்" என்றும் அழைப்பர்.) 

——————————


குருநாதர் :- அப்பனே இறைவன் கஷ்டத்தையும் கொடுத்து , அதை நீக்குவதற்குச் சக்திகளும் உங்களிடம் கொடுக்கின்றானப்பா. ஆனாலும் அதை நீக்குவதற்குச் சக்திகள் உங்களுக்குத் தெரியவில்லையே!!!! 

அப்பனே அதைத் தெரிவித்து விட்டால், உங்களை நீங்களே வெல்லலாம். 

அதைத் தெரிவிப்பதற்காகத்தான் அப்பனே இவ்வளவு எதை என்று புரிய. இதனால் அப்பனே அவ் சக்கரத்தை இயக்கவேண்டும். அவ்வளவுதான். 

அப்பனே அச்சக்கரம் அப்படியாக இருந்தால் மீண்டும் மீண்டும் பிறவி எடுத்து எடுத்து வந்தால்தான் அப்பனே , எப்பொழுது திரிகின்றதோ  (சுற்றுகின்றதோ) அப்பொழுது பிறவிகள் இல்லை. 

விஷ்ணு அதனால்தான் நிச்சயம் சக்கரத்தைக் கையில் வைத்துக்கொண்டு , “அடப்பாவிகளா!!!!!!!!!!!! அதை இயக்குங்கள் , இயக்குங்கள் என்று”  …. ஆனாலும் ஒரு சிலருக்கு மட்டுமே அதைப் புரியும். 

இதனால் நிச்சயம் பச்சையாக அதாவது பச்சை நிறத்தில் எதை என்று புரிய. ஆனாலும் (பச்சை நிற மனிதர்களும்) இருக்கின்றார்கள். பச்சை நிறத்திற்கு இழுத்து வந்துவிட்டால்,  மற்றவர்களுக்காக நீங்கள் நினைத்துக் கொள்வீர்கள். 

இப்பொழுது அனைவரிடத்திலும் சிவப்புத்தான் இருக்கின்றது. 

நிச்சயம் சிவப்பிலிருந்து பின் நிச்சயம் மஞ்சளுக்கு எடுத்துவர வேண்டும். நிச்சயம் இவ் மஞ்சள் வருவதற்கு ஒரு குருவானவன் தேவைப்படுகின்றான். நிச்சயம் அவ்மஞ்சளை நிச்சயம் பின் எடுத்து வந்து விட்டால் தானாகவே எவை என்று அறிய பச்சை நிறத்தில் (வந்துவிடும்). நிச்சயம் அவ்வாறாக இதை பின்பு நீல நிறமாக மாறிவிடும். அப்பா!!! பாற்கடலில் பள்ளி கொண்டானே… அவனைப் பார்த்து விடலாம். அப்பனே மோட்சமும் கிடைத்து விடும். இதனால்தான் அப்பனே சூரியனும்  கூட உங்களைச் சிவப்பிலிருந்து பின் எடுத்துக் கொள்ளாதவாறு இருக்கின்றான். (சூரிய தேவன் நம்மை சிவப்படையாமல் பாதுகாக்கின்றார்) 


இதனால்தான் அப்பனே அனுதினமும் சூரியனை அப்பனே நமஸ்கரித்து,  நிச்சயம் யாங்கள் சந்திரனுக்குச் செல்ல வேண்டும். பின் இரவில் கூட சந்திரனே , நிச்சயம் இறைவனிடத்தில் செல்ல வேண்டும் என்று நினைத்துக் கொள்ளுங்கள். இவை இரண்டும் வழிவிட்டால் மட்டுமே நீங்கள் இறைவன் பாதையை நிச்சயம் பிடிப்பீர்களாக. 


நிச்சயம் சூரிய நமஸ்காரத்தை யான் எதற்காகச் சொன்னேன்? அனைவரும் தெரிவியுங்கள்? 


அடியவர் :- சூரியன் அனைத்து ஒளி ஆதாரங்களைத் தருகின்றார். 


குருநாதர் :- நிச்சயம் சூரிய நமஸ்காரத்தை யான் செய்யச் சொன்னேன் என்றால் நிச்சயம் உடம்பில் சிலபாகங்கள் சூரியன் ஒளி வருவதால் மட்டுமே இயங்கும். (உடல் பாகங்கள்) சில சிலவற்றுக்குச் செல்லாமல் இருக்கையால் நோய்கள் வந்து விடும். 


அப்பனே நோய்கள் வருவதென்பது அனைவருக்குமே தெரியும். ஆனால் இறைவன் அதை பாதுகாப்பதற்காக வழிகளிலும் வைத்துத்தான் அனுப்புகின்றான் அப்பா. ஆனாலும் மாயையில் சென்றுவிடுவதால் (சிக்கிவிடுவதால்)  அவையெல்லாம் தெரிவதே இல்லை. பின் நோய் வந்தவுடன் ஓடோடி வருகின்றார்கள் ஐயோ ஐயோ என்று மார்பைத் தட்டி. 


ஆனால் நல்லது சொல்வதற்கு ஆளே இல்லையப்பா உலகில். நிச்சயம் அப்பனே உருவாக்குவோம் யாங்களே!!! அப்பனே உருவாக்குவதற்கும் பல அடிகள், பல அவமானங்கள் நிச்சயம் அடியோ அடியோ என்று அடித்துத்தான் தேர்ந்தெடுப்போம். 


அப்பனே நீங்கள் அனைவருமே சந்தோஷங்களை வேண்டிக்கொண்டே வந்திருக்கின்றீர்கள் அல்லவா? அப்பனே ஆனால் மற்றவர்களுக்காக உழைப்பதற்கு அடி வாங்க வேண்டும் பலமாக. யார் இருக்கின்றீர்கள் அப்பனே? 


அடியவர் :- அடிவாங்கத் தயார். 


குருநாதர் :- அப்பனே நிச்சயம் அடி வாங்கி விட்டீர்கள். இன்னும் அடியடித்தால் , அப்பனே இறந்து விடுவீர்கள் நீங்கள். 

அப்பனே ஆசிகள் இன்னும் விவரிக்கின்றேன். 

________________

நம் அன்பு குருநாதர் அகத்திய மாமுனிவர், தூங்கா மதுரை மாநகரில் அருளும் மகத்தான இவ்ஆலயத்தின் முகவரி :- 

Google Map : https://goo.gl/maps/LurkRx2B5DbqSWqa7

—————

( நம் குருநாதர், நம் அன்புத் தந்தை, கருணைக்கடல், பிரம்ம ரிஷி, அகத்திய மாமுனிவர் அருளால்  22,23 June 2025 ஆம் ஆண்டு ,  மதுரை மாநகரில், சுவடி ஓதும் அகத்திய மாமுனிவர் மைந்தன் திரு.ஜானகிராமன் அவர்கள் மூலம் ஜீவ நாடியில் உரைத்த அடியவர்கள் சத்சங்க கேள்வி, பதில் வாக்குகள் தொடரும்…... ) 

ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!

சர்வம் சிவார்ப்பணம்!!!!!

Tuesday, August 12, 2025

சித்தர்கள் ஆட்சி - 474 :- அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளிய மதுரை சத்சங்க வாக்கு ( 22, 23 June 2025 ) - பகுதி 7

                                        இறைவா நீயே அனைத்தும்.  

                                இறைவா நீ நன்றாக இருக்கவேண்டும்!










அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளிய  மதுரை சத்சங்க வாக்கு ( 22, 23 June 2025 ) - பகுதி 7

வாக்குரைத்த ஸ்தலம் :- அருள்மிகு ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவில் வளாகம், தியாகராசர் குடியிருப்பு, பசுமலை, மதுரை- 625 004.

ஆதி சிவசங்கரியின் பொற்கமலத்தைப் பணிந்து செப்புகின்றேன் அகத்தியன். 

(இவ்தொடர் வாக்கின் முந்தைய பதிவுகள்:- 

1.சித்தர்கள் ஆட்சி - 467 - பகுதி 1
2.சித்தர்கள் ஆட்சி - 468 - பகுதி 2
3.சித்தர்கள் ஆட்சி - 469 - பகுதி 3
4.சித்தர்கள் ஆட்சி - 471 - பகுதி 4
5.சித்தர்கள் ஆட்சி - 472 - பகுதி 5
6.சித்தர்கள் ஆட்சி - 473 - பகுதி 6
7.சித்தர்கள் ஆட்சி - 474 - பகுதி 7
)

குருநாதர் :- நிச்சயம் தன்னில் கூட ஒவ்வொரு வேலைக்கும் அழகாக பாடல்களைப் பாடியுள்ளார்களே!!!! அதை ஏன் உங்களுக்குத் தெரியவில்லை? 

—————————
(மனிதர்களின் ஒவ்வொரு நோய்க்கும், ஒவ்வொரு பிரச்சினைகளுக்கும் பாடல்களை பாடி வைத்துள்ளனர் நம் ஞானியர்கள். அதை இயக்கினாலே இறைவனின் சக்திகள் தானாக கிடைத்து, அனைத்தும் உங்களால் சாதிக்க இயலும். நீங்கள் விரும்பியதை அடைய இயலும்.)
—————————

குருநாதர் :- ஆனாலும் பின் நிச்சயம் ஓர் முறை இல்லை. ஈர் முறை இல்லை. நிச்சயம் இலட்சம் தடவைகள் (பதிகங்களை படிக்க வேண்டும்). அப்பொழுதுதான் சக்திகள் (உங்களுக்குள் உண்டாகி) , (கிரக மற்றும் விதியின்) அவ்சக்திகளுக்கும் - (பாடல்களை பாடி மனிதர்களின் உடம்பில் ஏறும் ) இவ்சக்திகளுக்கும் சமம் ஆகும். 

நிச்சயம் தன்னில் கூட அவ்சக்தியும் கூட புருவ மத்தியில் இருந்தால் உடனடியாக (உங்கள் பிரச்சினைகள்) சரியாகிவிடும். நிச்சயம் எங்கோ போய் ஒளிந்து கொண்டிருந்தால் சரியாகாது. நிச்சயம் புருவ மத்தியில் அவ்சக்தியை வைப்பதற்குத் தியானங்கள் அவசியமாகின்றது. நிச்சயம் அவ்தியானத்தின் மூலம் , நிச்சயம் புருவமத்தியில் அவ்சக்தியை பின் நிச்சயம் எடுத்து வைத்துவிட்டால் அனைவருக்கும் அதாவது தன்னைத் தானே வெல்வான். 

சுவடி ஓதும் மைந்தன் :- ( புருவ மத்தியில் வைத்துவிட்டால்) நீங்கள் சொல்வது நடக்கும். தன்னைத் தானே வெல்வான். 

குருநாதர் :- அப்பனே நிச்சயம் புருவ மத்தியில் அவ்சக்தியை வைத்தால், நிச்சயம் அப்பனே இறைவனே பின் வந்து அப்பனே மருத்துவத்தில் கூட அப்பனே ஏதோ ஒரு ரூபத்தில் அப்பனே ஔஷதங்களைக் கொடுத்து விடுவான். 

அப்பனே உங்களுக்குள்ளே சக்திகள் ஒளிந்திருக்கின்றதப்பா!!!! ஆனாலும் அதை எடுத்து வர ஆள் இல்லையே!!!! 

அப்பனே, அம்மையே அனைவருமே பாவங்கள் என்றுதான் சித்தர்கள் யாங்கள் வந்து வந்து வாக்குகள் பரப்பிக் கொண்டிருக்கின்றோம்!!

சுவடி ஓதும் மைந்தன் :- நீங்கள் எல்லாம் பாவமாம். என்னையும் சேர்த்துதான். நம்ப எல்லாம் பாவமாம். அதனால்தான் சித்தர்கள் எல்லோரும் இறங்கி வந்து வாக்குகள் சொல்கின்றோம் அப்பா. 

குருநாதர் :- அப்பனே அறிந்தும் இவ்வுலகத்தில் இன்னும் இன்னும் காலங்கள் செல்லச் செல்ல, நல்லதைச் சொல்ல ஆள் இருக்க மாட்டானப்பா. இதனால்தான் இப்பொழுதிலிருந்தே என் பக்தர்களை பக்குவப்படுத்தி,  மற்றவர்களுக்கு நல்லது செய்யச் சொல்லி, தூண்டிக் கொண்டே இருக்கிறேன். 

அப்பனே உங்கள் குறைகளைத் தீர்க்க என்ன செய்ய வேண்டும் அப்பா? முதலில் இருந்தே வருகின்றேன். 

சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா உங்கள் குறைகளை நிவர்த்தி செய்ய, நீங்கள் என்ன செய்ய வேண்டும்? 

அடியவர்கள் :- (மெல்லிய குரலில் அனைவரும்) எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ண வேண்டும். 

குருநாதர் :- அப்பனே வாய்கள் அதாவது வாய் வழியே பேசக்கூடாதப்பா. உள்ளத்திலிருந்து பேச வேண்டும். 

சுவடி ஓதும் மைந்தன் :- சுயநலமாக இருக்கக்கூடாது. எல்லோருக்காகவும் வேண்டி,  நீங்கள் கூட்டுப் பிரார்த்தனை செய்ய வேண்டும். 

குருநாதர் :- அப்பனே இன்னும் இன்னும் பக்குவங்கள் ஏற்படுத்துகின்றேன் அப்பனே. அனைவருமே என் செல்லக் குழந்தைகள்தானப்பா. 
அப்பனே குழந்தைகள் எப்படி கேட்பது என்று தந்தையிடம் பின் நிச்சயம் தெரியவில்லை. அப்பனே தெரியாவிடிலும் கூட தந்தைக்குத் தெரியுமப்பா, தன் பிள்ளைகள் என்ன நினைக்கின்றீர்கள் என்று. 

“”””அப்பனே இதனால் நிச்சயம் அனைவருக்குமே வாக்குகள் உண்டு. சொல்லிவிட்டேன் அப்பனே. “”””

உலகத்திற்காகவே அப்பனே உலகத்தை ஜெயித்தாக வேண்டும். 
(யாங்கள் அழியும் உலகத்தை காப்பாற்ற வேண்டும்) அப்பனே என் குழந்தைகளுக்கு நன்றாகப் பாடத்தை எடுத்துத் தெளிவு பெற்றுவிட்டால், அப்பனே பின் நீங்களே காப்பாற்றிவிடுவீர்கள் உலகத்தை. 

“”””””அதனால் ஒருவனுக்கு நன்றாக இருக்கும் என்று யான் எப்பொழுதுமே வாக்குகள் ஈயப்போவதில்லை.””””””

“””””நிச்சயம் பாவப்பட்ட ஜென்மம் என்றால் மனித ஜென்மமே.”””””

“””””” இதனால்தான் சித்தர்கள் யாங்கள் வந்து இலவசமாகவே அனைத்தும் தந்துகொண்டிருக்கின்றோம். வருங்காலத்தில் அனைத்தும் தருவோம். “””””” 

“””””” எங்களுக்கு ஏதும் தேவையில்லை. “””””” 

“””””” அன்பு மட்டுமே. “””””” 
“””””” அன்பு மட்டுமே. “””””” 
“””””” அன்பு மட்டுமே. “””””” 

“””””” நிச்சயம் தந்தையே என்று சொன்னாலே போதும். யான் மகிழ்வேன். “”””””  

“””””” இதனால் இவ்தந்தைக்கு எப்பொழுது கொடுக்கத் தெரியும் என்று தன் பிள்ளைக்கு. “””””” 

(தன் பிள்ளைகளுக்கு என்ன எப்பொழுது கொடுக்க வேண்டும் என்று தந்தைக்குத் தெரியும். யாரும் வருத்தப்படத் தேவையில்லை.) 

நிச்சயம் உலகத்தைப் பற்றித் தெரியவில்லையே தன் பிள்ளைகளுக்கு. அதனால்தான் உலகத்தைப் பற்றித் தெரிய வைத்துக்கொண்டிருக்கின்றேன். 

நிச்சயம் என் பிள்ளைகள் உலகத்தைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும். நிச்சயம் இதனால்தான் உங்களுக்கு  அனைத்தும் யான் சொல்லிவிடுகின்றேன். கவலைகள் இல்லை. 

(உங்கள் விதியை மாற்றும் சித்த ரகசியங்கள்)

நிச்சயம் பின் தாயே!!! தந்தையே!!!! எழுதப்பட்டிருப்பதுதான் இங்கு நடக்கும். பிரம்மாவின் தீர்ப்பு எப்பொழுதும் மாற்ற முடியாது. ஆனால் மற்றவர்களுக்காக நீங்கள் வேண்டிக்கொண்டால், நிச்சயம் உங்களுக்காக யான் போராடி நிச்சயம் எழுத்தையும் மாற்றுவேன். 

அறிந்தும் இவ்வாறாக மற்றவர்களுக்காக நீங்கள்  நினைத்துக்கொண்டீருந்தால், இதுவே ஒரு புண்ணியமாகிவிடும். இப்புண்ணியத்தை பிரம்மாவிடம் எடுத்துக்கூறி நிச்சயம் இவன் செய்திருக்கின்றான் மற்றவர்களுக்காக என்று சுலபமாக உங்களை (நீங்கள்) ஜெயித்து விடலாம். 

நிச்சயம் (உங்கள்) ஒவ்வொருவருக்கும் விதியில் கூட பல கஷ்டங்கள்தான் தென்படுகின்றது. மனக்குழப்பங்கள், இன்னும் சில தரித்திரங்கள், இன்னும் பீடைகள் இவையெல்லாம் வரப்போகின்றது. ஆனாலும் அதை நிச்சயம் எங்களால் மாற்ற இயலும். 

நிச்சயம் இறைவன் புரியாத புதிராகவே உள்ளான். நிச்சயம் இறைவன் அதாவது நீங்கள் எங்கெங்கோ சென்று வணங்கிக் கொண்டே , இறைவன் திருத்தலங்களை நாடிக் கொண்டே , நாடிக் கொண்டே ஆனாலும் இறைவனைப் பார்க்க வேண்டும் என்று யாராவது நினைத்துள்ளீர்களா என்றால் நிச்சயம் இல்லை. இறைவன் எங்கிருக்கின்றான் ? எப்படி எல்லாம் உலகத்தை ஏற்படுத்தினான்? ஏன் எதற்கு மக்களை ஏற்படுத்தினான் என்பதையெல்லாம் தெளிவாக. அதனால்தான் முதல் வகுப்பிலிருந்தே உங்களைக் கொண்டு செல்வதற்கென்றே. ஆனால் புண்ணியம் உள்ளவர்களே இதையும் தெரிந்து கொள்ள முடியும். இதனால் நிச்சயம் 
மீண்டும் செப்புகின்றேன். 

“”””””மற்றவர்களுக்காக உழையுங்கள். உங்களுக்காக உழைப்பதற்கு யாங்கள் இருக்கின்றோம். “”””””

நிச்சயம் உருவாக்கியதே நிச்சயம் யாங்கள்தான் உங்களை. இதனால் உங்களிடமிருந்தே நிச்சயம் பிரச்சினைகளை வாங்கிக்கொண்டு , பின் யாங்கள் அனைத்தும் அறிவோம். 

நல்முறையாகத்தான் உருவாக்கினோம். ஆனாலும் மனிதன் எதை என்று அறியாமலும் நிச்சயம் “”””பேரழிவுகள்தான் வந்த வண்ணம்”””””. 

“””””அப்பேரழிவுகளை எங்கள் பிள்ளைகளால் நிறுத்த முடியும்.””””””

“””””அப்பனே சித்தன் அருகில் வந்துவிட்டால்…. அப்பனே நிச்சயம் மற்றவர்களுக்காகவே வாழவேண்டும். சுயநலத்திற்காக வாழக்கூடாது.”””””

நிச்சயம் யாங்கள் எங்கெங்கோ காடுகளிலும், மலைகளிலும் தவங்கள் செய்துவிட்டு மனிதன் எதாவது எக்குழியில் விழட்டுமே என்று சென்றுவிடுவோம். ஆனால் நீங்கள் பாவங்களப்பா. 

சுவடி ஓதும் மைந்தன் :- ( விளக்கம் :- மனிதர்கள் பாவம். எதுவும் தெரியாமல் இறைவனை வணங்கினாலும் இறைவனும் ஒன்றும் கொடுக்க மாட்டார். கடைசியில் இறைவன் இல்லையென்று சொல்லிடூவீங்க).

குருநாதர் :- அதனால்தான் நிச்சயம் இன்னும் நல்லோர்களை எல்லாம் உருவாக்கி, அவர்கள் மூலம் நிச்சயம் பின் உங்களைத் தெளிவடையச் செய்துவிடுவோம். 

“”””””” நிச்சயம் ஒருநாள் பிறந்தால் ஒரு நாள் இறக்க வேண்டும் என்ற மந்திரம் உங்கள் மனதிலே (எப்பொழுதும்) பின் ஒலித்துக் கொண்டே இருக்க வேண்டும்.”””””””

** இவ்வாறாக நிச்சயம் நினைத்துக்கொண்டாலே போதுமானது, தானாகவே மற்றவர்கள் நினைப்பு வந்துவிடும். **

நிச்சயம் அப்பனே நினைப்புத்தான் பிழைப்புக் கெட்டது என்ற பழமொழியும் உண்டு. 

சுவடி ஓதும் மைந்தன் :- இந்த பழமொழிக்கு என்ன காரணம் என்று கேட்கின்றார். சொல்லுங்க. 

அடியவர் :- ஊரார் பிள்ளையை ஊட்ட வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும். 

குருநாதர் :- இறைவன் செய்வான் செய்வான் என்று ஒருவன் நினைத்துக் கொண்டிருந்தானாம். பின் அதாவது இறைவன் செய்வான், செய்வான் என்று. ஆனால் இறைவன் செய்துவிட்டான். கடைசியில் அழைத்துக் கொண்டான். நடுவில் ஒன்றுமே செய்யவில்லை. அதுபோல் இருந்து விடாதீர்கள். 

அப்பனே இதனால் உங்களுக்குத் தெளிவுகள் இருக்கின்றது என்பேன் அப்பனே. நிச்சயம் இவ்உடம்பு இருத்தால், இவ்உடம்பு எதற்காவது உதவிட வேண்டும் என்பேன் அப்பனே.

நிச்சயம் அப்பொழுது ஆன்மா மகிழ்வடையும். பின் நீங்கள் செய்யும் வேலை மற்றவர்களுக்காக இருத்தல் வேண்டும். நிச்சயம் அவ்வாறாகச் செய்தால் மீண்டும் மீண்டும் சொல்கின்றோம். யாங்கள் உங்களுக்காக செய்வோம். நிச்சயம் ஒருநாள் அனைத்தும் சடலமாகத்தான் போகின்றது என்று நினைத்துக் கொள்ள வேண்டும். நிச்சயம் உயிர் இருக்கும் பொழுதே நன்மையைச் செய்யுங்கள் தங்களால் முடிந்த அளவு. யாங்கள் கொடுப்போம் தைரியத்தை. 

அப்படி இல்லாமல் நிச்சயம் தன்னைப் பற்றியே எண்ணிக்கொண்டு, தன் சொந்தக்காரர்களைப் பற்றியே எண்ணிக்கொண்டு நிச்சயம் அவையெல்லாம் இறைவனிடத்தில் செல்லாது. நிச்சயம் அனைவரும் சொந்தங்கள் என்று சொல்லுங்கள். 

நிச்சயம் தன்னில் கூட அனைவரும் சகோதரர்களே. இவ்வாறாக எண்ணினால் மட்டுமே, அதாவது மனம் பரந்த மனதாக அதாவது மனம், கடல் போன்று இருக்க வேண்டும். பின் நிச்சயம் கடலில் எதை இட்டாலும், கடலுக்கு என்ன வருத்தமா ஏற்படப்போகின்றது? 

___________________

நம் அன்பு குருநாதர் அகத்திய மாமுனிவர், தூங்கா மதுரை மாநகரில் அருளும் மகத்தான இவ்ஆலயத்தின் முகவரி :- 


—————

( நம் குருநாதர், நம் அன்புத் தந்தை, கருணைக்கடல், பிரம்ம ரிஷி, அகத்திய மாமுனிவர் அருளால்  22,23 June 2025 ஆம் ஆண்டு ,  மதுரை மாநகரில், சுவடி ஓதும் அகத்திய மாமுனிவர் மைந்தன் திரு.ஜானகிராமன் அவர்கள் மூலம் ஜீவ நாடியில் உரைத்த அடியவர்கள் சத்சங்க கேள்வி, பதில் வாக்குகள் தொடரும்…... ) 

ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!

சர்வம் சிவார்ப்பணம்!!!!!