“இறைவா !!!!! நீயே அனைத்தும்” இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்.

"இறைவா !!!!! நீயே அனைத்தும்!!!!"
"இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்"

உலகின் ஆதி குரு, மாமுனிவர், குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளிய தினசரி அனைவரும் அதிகாலையில் எடுக்க வேண்டிய உறுதிமொழி. :-


1.தர்மம் செய்வேன்
2.அனைத்திடத்திலும் பின் அன்பாக அதாவது அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன்.
3.போட்டி, பொறாமைகள் நீக்குவேன்
4.அனைத்தும் எந்தனுக்கே சொந்தம் என்று பின் உயிர்ப் பலியும் இடமாட்டேன்
5.பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன்
6.அப்படிக் கொன்றாலும், நிச்சயமாய் அதை யான் தடுப்பேன்
7.அவை மட்டும் இல்லாமல், தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும்.
8.பிறருக்கு நன்மை செய்ய வேண்டும்
9.பிறருக்காக உழைக்க வேண்டும்
10.பிற ஜீவராசிகளும் ( உயிரினங்களும் ) பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில்அனைவரும் நினைக்க வேண்டும்.
11.அப்படி நினைத்தால் அகத்தியன் வந்து அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பான் என்று சொல்மகனே

( அடியவர்களே. இந்த மகிமை புகழ் அகத்திய மாமுனிவர் அருளிய உறுதிமொழி வாக்கினை சிரம்மேல் ஒவ்வொரு நொடியும் ஏந்தி, பிரம்மாவின் முன்பு தலை நிமிர்ந்து நமக்காக விதியை மாற்றஉத்தரவிடும் வண்ணம் அனைவருக்கும் உலகில் உள்ள 700 கோடி மக்களுக்குச்சென்று அடையும்வண்ணம் எடுத்துச் சொல்லுங்கள். )

மற்றவர்களைப்பற்றி எண்ணிப்பார் அப்பனே. மற்றவர்களை எண்ணி எண்ணி, தான் கெட்டுப்போனாலும் பரவாயில்லை என்று யார் ஒருவன் நினைக்கின்றானோ அவனிடத்தில் இறைவன் பிச்சை ஏந்துவான் அப்பா. பிச்சை ஏந்துவான் அப்பனே. என் பக்தர்களுக்கு இது தெரிய நிச்சயம் வேண்டும் அப்பனே.


அகத்திய பிரம்ம ரிஷி உரைத்த முதல் தரப் புண்ணியம் பெறும் ஒரே வழி:- (1) அன்னதானம் + (2) திருவாசகம் சிவபுராணம் + (3) மக்கள் வாழ , நல் வழிகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுதல். இப்படிச் செய்தால் மட்டுமே , முதல்தரப் புண்ணியம் உண்டாகும் என்று குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி உரைத்துள்ளார்கள். இதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள் என்றும் அனைவருக்கும் கூறி உள்ளார்கள். இதுபோல் அனைவரும் செய்து முதல் தரப் புண்ணியம் பெற்றுக் கொள்ளுங்கள். இறை அருளுடன் வளமாக வாழுங்கள். வாழ்க வளமுடன்!!!!!!!!!

siththarkalatchi - Moving text


அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு :- “அப்பனே, தானங்கள் செய்க, அப்பனே, உன்னால் இயன்றவரை தானங்கள் செய்க. அனுதினமும், என் பக்தர்கள், ஒரு உயிருக்காவது உணவளியுங்கள். அது போதும். அப்பனே, அதுவே கோடி புண்ணியமாகும்.”


Tuesday, July 23, 2024

சித்தர்கள் ஆட்சி - 386 :- அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு - “அகத்திய மாமுனிவரின் பக்தன் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?”

இறைவா!!!!! நீயே அனைத்தும்



அகத்திய மாமுனிவரின் பக்தன் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?

👇👇👇👇👇👇👇


சித்தன் அருள் - 1060 - அன்புடன் அகத்தியர் - குருநாதர் வாக்கு!

25/12/2021 அன்று குருநாதர் அகத்திய மாமுனிவர் உரைத்த பொது வாக்கு !


அப்பனே என் பக்தர்கள் ஒவ்வொருவரும் நன்மைகள் செய்ய வேண்டும் என்பேன்.


அப்பனே பல மனிதர்களை இவ்வாறுதான் வாழ வேண்டும் என்பதைக்கூட பின் கற்று பின்நல்முறையாக செப்பினால் அப் புண்ணியம் சாரும் என்பேன். அப்பனே.


இதனையும் நன்கு தெரிவித்திடுக. 


யான் புண்ணிய பாதைக்கு அழைத்துச் செல்வேன்.


புண்ணியப் பாதைக்கு அழைத்துச் செல்லும் பொழுது பின் அப் புண்ணியமே உங்களைப்பார்த்துக்கொள்ளும் என்பேன்.


அதற்கும் சில வழிமுறைகள் உண்டு உண்டு உண்டு வருங்காலங்களில் செப்புகிறேன் அப்பனே. 


அதனால் கோபம் கொள்ளாதே! அப்பனே. கோபம் கொள்ளாதே என்பேன்.


அப்பனே இதனையும் என்று பிறர்பொருளை அடையாதே! அடையாதே!


பொய் கூறாதே! அப்பனே நல்லோர்கள் வாழவேண்டும் தம் போல் பிறரை எண்ண வேண்டும். எந்தனது வாக்கை நிச்சயமாய் என்னை பின்பற்றுபவர்கள் நிச்சயம் கடைபிடிக்க வேண்டும். எப்பொழுதும். நிச்சயமாய் கோபம் வருதல் அவசியம் இல்லை .


அவசியமும்  இருக்கக்கூடாது என்பேன். 


அப்பனே எங்களிடத்தில் வருபவர்களை அப்பனே புண்ணியங்கள் செய்ய வைப்போம். அவ்புண்ணியத்தின் மூலம் அப்பனே வாழ்க்கையை கடந்து கடந்து மேன்மையான  நிலைகளைபெறுவீர்கள் என்பேன்.


ஒவ்வொருவருக்கும் அப்பனே புண்ணியங்கள் மிகுந்த காணப்பட்டால் அப்பனே யானேஅழைத்துஅவன் புண்ணியங்களை யானே செப்புவேன் அப்பனே. அதுதான் உண்மையப்பா.


அப்பனே ஒன்றை சொல்கின்றேன் அகத்தியனை அப்பனே அகத்தியனைவணங்குபவர்களும்புண்ணியம் செய்திருக்க வேண்டும் அப்பனே.


அப்பனே சித்தர்களை நீங்கள் தேட அவசியமில்லை.


அப்பனே யாங்களே தேடி வருவோம் நல்லோர்களை பார்த்து அனைத்தும் செய்வோம் அப்பனே.


இவைதன் இவ்வுலகத்தில் அப்பனே நல்லதைச் செய்ய யாங்கள் காத்துக் கொண்டிருக்கின்றோம்.


அதனால் அப்பனே நீங்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதை கூட நீங்கள் யோசித்துவிட்டால்அப்பனே ஓர் மடங்கு அப்பனே நீங்கள் எடுத்து வைத்தால்,  உண்மை நிலைக்கு யாங்கள்நூறுமடங்கு அப்பனே அழைத்துச் செல்வோம். புண்ணியத்தையும் தேடி தருவோம் அப்பனே.


அன்பாக வாழ்ந்திட்டு அப்பனே நல் முறையாக நல்லோர்க்கு இன்னும் இப்படித்தான்வாழவேண்டும்அப்பனே சில சில உயிர்களை பின் கொல்லக்கூடாது.


அப்பனே நெறியை பயன்படுத்த வேண்டும் ஒழுக்கங்களோடு வாழ வேண்டும் என்றெல்லாம்அப்பனேசொல்லித்தாருங்கள் அப்பனே ஒரு கூட்டமாகவே இருந்து.


இதனால் என்னுடைய,  சித்தர்களுடைய, ஆசிகளும் கிடைக்கப் பெற்று அதனாலும்புண்ணியங்கள்ஏற்படும் என்பேன் அப்பனே.


அன்பு  அகத்திய மாமுனிவரின் அடியவர்களே, நம் குருநாதர் உரைத்தபடி

  1. அடியவர்கள் ஒவ்வொருவரும் பலப் பல நன்மைகள் செய்ய வேண்டும். 
  2. பல மனிதர்களை இவ்வாறுதான் வாழ வேண்டும் என்பதைக்கூட பின் நீங்கள் கற்று பின்நல்முறையாக அவர்களுக்கு செப்பினால் அப் புண்ணியம் உங்களைச் சாரும். அதனால்பலரையும் தர்ம , பக்தி வழிக்கு திருப்புக. 
  3. கோபம் கொள்ளாதீர்கள். இது மிக, மிக, அதி மிக முக்கியம். உடனே இன்றே கோபம் தவிர்கஆரம்பிக்கவும்.
  4. பொய் கூறாதீர்கள்
  5. நல்லோர்கள் வாழவேண்டும். அவர்களை வாழ வையுங்கள். 
  6. உங்களைப் போல் பிறரையும் நீங்கள் எண்ண வேண்டும். 
  7. நம் குருநாதர் வாக்கை நிச்சயமாய் பின்பற்றுபவர்கள் நிச்சயம் இந்த உயர் வாக்குஅறிவுரைகளைக்  கடைபிடிக்க வேண்டும். 
  8. நீங்கள் அன்பாக வாழ்ந்திடல் வேண்டும் - அனைவரிடத்திலும், அனைத்து ஜீவராசிகளிடமும். 
  9. நல் முறையாக நல்லோர்க்கு இன்னும் இப்படித்தான் வாழவேண்டும், 
  10.  சில சில உயிர்களை கொல்லக்கூடாது,
  11. நீதி நெறியை பயன்படுத்த வேண்டும் மற்றும்
  12. ஒழுக்கங்களோடு வாழ வேண்டும் என்றெல்லாம் நீங்கள் அனைவருக்கும் சொல்லித்தாருங்கள்ஒரு கூட்டமாகவே இருந்து.
  13. தாய் தந்தையரை அனுதினமும் வணங்க வேண்டும். இது மிக மிக மிக முக்கியம். அப்போதுதான் இறைவன் ஆசி கிட்டும். 


இப்படி அகத்திய மாமுனிவர் அடியவர்கள் செய்வதனால் அகத்திய மாமுனிவர் மற்றும் அனைத்துசித்தர்களுடைய, ஆசிகளும் கிடைக்கப் பெற்று அதனாலும் புண்ணியங்கள்ஏற்படும்  உங்களுக்கு. 

வாழ்க புண்ணிய பலத்துடன். 



ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!


சர்வம் சிவார்ப்பணம்!!!!!

No comments:

Post a Comment