“இறைவா!!! அனைத்தும் நீ”
உலகின் ஆதி குரு , மாமுனிவர் , குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு:-
(சித்தன் அருள் - 1068)
வாக்குரைத்த ஸ்தலம். அகத்தியர் சன்னதி மாரியம்மன் கோயில் . பசுமலை. மதுரை.
ஆதி ஈசனின் பொற் பாதத்தை தொழுது உரைக்கின்றேன் அகத்தியன்.
நலன்களே என் அருள்களால் நலன்களே மிஞ்சும் என்பேன். மிஞ்சும் என்பேன் யான் வாரத்திற்கு ஒருமுறை இங்கு தங்கி தங்கி செல்கின்றேன் .
பின் அவ் நாளும் நல் பின் முறைகளாக உரைக்கின்றேன்.
பின் குருவாரம்(வியாழக்கிழமை) என்கிறார்களே . அவ் வாரத்தில்(கிழமையில்) யான் நல் முறைகள் ஆகவே தங்கித் தங்கி சென்றிருக்கையில் பின் அப்பொழுது கூட அனைவரும் நல் முறைகளாக வந்தார்கள் பல. பல என்பேன் அதனால் பல பல பேர்களுக்கும் நல் முறைகளாக ஆசிகள் தந்து கொண்டேதான் இருக்கின்றேன்.
மேன்மைகள் பெறும்.
ஆனாலும் சில கஷ்டங்கள் வந்து வாட்டுவதற்கும் எவ்வாறு என்ற புரிதல் நிலைக்கு ஏற்றவாறு அன்றைய தினத்தில் நல் முறைகளாக இங்கு அமர்ந்து வந்து துயிலெழுந்து சென்றுவிட்டால் ஆனாலும் சென்று விட்டு நல் முறையாய் பின் ஒரு மாதத்திற்கு இயலாதவர்களுக்கு அன்னம் அளித்து வந்தால் என்னுடைய அருளாசிகள் பலம். கர்மங்கள் அனைத்தும் விலகிப் போகும்.
ஆனாலும் இவையன்றி இப்படியே செய்ய பின் மதுரையில் நல் முறைகளாக வாழும் மீனாட்சி தாயும் பின் அதனுள்ளே(கோயில்) ஒரு மாதம் அங்கும் தங்கி இருக்க நல் முறைகள் ஆகவே திருப்பரங்குன்றம் நல் முறைகள் ஆகவே அங்கும் ஓர் மண்டலம் தரிசிக்க பின் பழமுதிர்ச் சோலையும் தரிசிக்க இவை அனைத்தும் ஒவ்வொன்றும் நீங்கி நல் முறைகளாக நினைத்ததை நிச்சயமாய் நடைபெறும் என்பேன். யான் சொல்வதை சரி முறையாக கேட்க ஒரு துன்பமும் இல்லை என்பேன். துன்பம் இல்லை என்பேன் இவ்வாலயத்தின் சிறப்பு கூட இது எவ்வாறு என்பதையும் கூட மிஞ்சி பார்க்கும் அளவிற்கு வரும் காலங்களில் யான் வந்து கொண்டேதான் இருப்பேன் இங்கு.
ஏனென்றால் நல் முறைகளாக என்னுடைய பக்தர்கள் எவ்வாறு என்பதையும் கூட என் மீது அன்பு காட்டி நல் முறைகளாகவே உருவாக்கினார்கள் என்பது மெய்.
அதனால் நல் முறைகளாக அவர்களுக்கும் என்னுடைய ஆசிகள் பல. பல பல என்பேன். சித்தர்களின் அனுக்கிரகமும் பலகோடி என்பேன்.
இதனால் நல் முறைகள் ஆகவே திருமூலனும் நல் முறைகள் ஆகவே அருணகிரியும் வந்து வந்து செல்கின்றனர் என்பேன். என்பேன் எதனால் என்பதை விட யான் இருக்கும் இடத்தில் அனைத்து சித்தர்களும் வருவார்கள் என்பது மெய்.
அதனால் யான் சொன்னேன். பின் நல் முறைகளாக அன்போடு ஏற்படுத்தியது இத் தலம் .
அவ்வாறு ஏற்படுத்தினால் நிச்சயமாக அன்போடு நல் முறைகள் ஆகவே எவை வேண்டும் என்று மனதில் எண்ணிக் கொண்டே என்னை வணங்கினால் போதும். யான் கொடுப்பேன் அனைத்தையும். இதனையன்றி அது வேண்டும் இது வேண்டும் இவை எல்லாம் சொல்லிக் கொண்டிருந்தால் நிச்சயம் அதனை யான் ஏற்க மாட்டேன் இத் தலத்தில். அதனால்தான் அன்போடு வாருங்கள் .
ஏனென்றால் என்னை அன்போடே உருவாக்கியவர்கள். நல் முறைகளாக என் பக்தர்கள் அதனால் அன்போடு தான் வணங்க வேண்டும் நல் முறைகளாகவே.
இன்னும் பல சூட்சமங்கள் உண்டு என்பேன் உண்டு என்பேன்.
நல் முறைகள் ஆகவே எவ்வாறு என்பதும் கூட இங்கு நிச்சயமாய் வரும் தைப்பூசம் அன்று வெகு சிறப்பாக நடைபெற வேண்டும் முருகன் பாடல்களை பாடி நல் முறைகளாக மூன்று தினங்களாக நல் முறைகள் ஆகவே. முருகனும் வந்து வலம் வருவான். இன்னும் இத்தலம் சிறப்பு பெறும் என்பேன்.
நல் முறையாக ஏற்றங்கள் உண்டு என்பேன் உண்டு என்பேன். நல் முறைகள் ஆகவே இவை அன்றியும் கூற இன்னும் சில சில மனிதர்களுக்கும் எவை வேண்ட வேண்டும் என்று நினைக்காமல் வந்து வணங்குகின்றனர் ஆனாலும் அவர்களுக்கும் யான் நல்லாசி கொடுத்துக்கொண்டு தான் வந்து இருக்கின்றேன்.
அனைவருக்கும் இங்கு வருபவர்களுக்கும் அனைவருக்கும் என்னுடைய ஆசிகள் நிச்சயம் கிட்டும்.
ஆனாலும் அதனை உணர்வதற்காக யான் கஷ்டங்கள் ஏற்படுத்துவேன் சில. அதையும் தாண்டி வர நல் முறையாக ஆசிகள் என்பேன்.
ஆசிகள் என்பேன் ஏனென்றால் இதனையும் சமநிலைப் படுத்த பின் ஒன்றும் தெரியாமலே வருகின்றனர் அதனால் தான் சிறிது கஷ்டங்கள். அவ் அனுபவத்தின் மூலம் இறைவனை நிலையான பொருளை நிச்சயம் அவர்கள் கண்டுபிடித்து நல் முறையாக மனமாற்றங்கள் அடைய யான் சில சில சோதனைகளை செய்வேன். அதனினும் மீண்டு நல் முறைகளாக வந்துவிட்டால் அப்பனே அற்புதங்கள் அப்பனே.
இவ்வுலகில் எதுவும் பெரிதில்லையப்பா.
இறையருளே மிகப் பெரியது.
இறையருளை பெற்று விட்டால் அனைத்தும் இறைவன் தருவான் என்பேன் அதனால் எதையும் கேட்கத் பட தேவையில்லை என்பேன் அன்பை மட்டும் செலுத்துங்கள் அன்பை மட்டும் செலுத்துங்கள் இதுவே போதுமானது
எதையும் எவை என்றும் எதனையென்றும் மனிதனால் பெறமுடியாது என்பேன் இறைவன் நினைத்தால் தான் அனைவருக்கும் அனைத்தும் நடக்கும் என்பேன்.
அதனால் தான் சொல்கின்றேன் எதுவும் பின் நல் முறைகள் ஆகவே அன்போடு அகத்தியா!!! நல்முறையாக முருகா!!! பின் ஈசா!!! என்றெல்லாம் வணங்கி வந்தாலே அவந்தனை பெயர் வைத்து அழைத்தாலே பின் ஓடோடி வந்து விடுவான்.
ஆனால் அதற்கு தகுந்தார்போல் மனிதர்கள் ஒழுக்க சீலராக வாழ வேண்டும் என்பேன்.
ஒழுக்கம் நல் முறைகள் ஆகவே பிறந்த விட்டால் அவந்தனை தேடி பின் அனைத்தும் வந்துவிடும்.
ஒழுக்கம் இல்லை என்றால் அப்பனே எது வந்தாலும் நிற்காது என்பேன்.
அப்பனே இதனால்தான் எவ்வாறு என்பதும்கூட வள்ளுவன் கூட ஒழுக்கத்தைப் பற்றி சிறப்பாக கூறி இருக்கின்றான் அப்பனே.
இக்காலத்திலும் ஒழுக்க சீலராக அப்பனே இருப்பவர்கள் கூட அழிந்து போவார்கள் எதனை என்று கூறும் அளவிற்கு கூட.
ஆனாலும் ஒழுக்கம் நல் முறைகளாக இருந்து விட்டால் அவனிடம் நற்பண்புகள் பெருகும் பெருகும் அவனிடத்தில் ஆசைகள் இருக்காது என்பேன். இதனால் அப்பனே அன்புடன் இறைவனை வணங்குவான். அனைத்தும் இறைவன் கொடுப்பான் என்பேன்.
அப்பனே தன் பிள்ளைகள் தன் இல்லங்கள் தன் சொந்த பந்தங்கள் எல்லாம் நன்றாக இருக்க வேண்டும் என்பதை எல்லாம் பின் கேட்கக் கூடாது என்பேன். அவ்வாறு கேட்டாலும் இறைவன் செய்யமாட்டான் அப்பனே.
இறைவனே நீ என்று நீ என்று கூட இறைவனே அனைத்தும் உந்தனுக்கே தெரியும் என்று பின் நல் முறைகளாக கேட்டுவிட்டால் அனைத்தும் தருவான்.
ஆனாலும் அறியாத முட்டாள்கள் எதை எதையோ கேட்டுக் கொண்டுதான் இருக்கின்றார்கள்.
இவை என்று கூற இன்னும் நல் முறைகளாக மாற்றங்கள் உண்டு என்பேன்.
நிச்சயம் நல் முறைகளாக மீனாட்சி தாயே இங்கு வருவாள் என்பேன்.
இவையன்றி கூற நல் முறைகள் ஆகவே இன்னும் பல உரைக்கின்றேன் ஆனாலும் இதையும் செய்ய மிக்க நன்று என்பேன்.
வரும் எல்லா கன்னி திங்களில்(புரட்டாசி மாதம்) நல் முறைகளாக பின் ஒவ்வொரு சனியும்(சனிக்கிழமை) நல் முறைகளாக அன்னத்தை(அன்னதானம்) மேற்கொள்ள மீண்டும் நல் முறைகளாக மாற்றங்கள் உண்டு. இதனை நிச்சயம் செய்ய வேண்டும் என்பேன்.
அம்மையே எவ்வாறு என்பதையும் கூட இதனையும் யான் சொல்லி வைத்தேன்.
நிச்சயம் சனி தோறும் இங்கு நிச்சயமாய் பெருமாள் வந்து பின் அனைவருக்கும் ஆசீர்வாதங்கள் தந்து விட்டுத்தான் செல்வான் என்பேன்.
அப்பனே எவ்வாறு என்பதை கூட நிலை நிறுத்தும் பொழுது அப்பனே நல் முறைகள் ஆகவே நல் முறைகள் ஆகவே ஒன்று சொல்கின்றேன் கேட்டதற்கு.
எவ்வாறு என்பதை உண்மை நிலை புரிய அன்னதானம் நல் முறைகளாக நடக்கும்பொழுது அவந்தனும் அனைவரிடத்தில் உட்கார்ந்து அவந்தனும் அன்னதானத்தை உண்டு செல்வான் என்பேன்.
அப்பனே நல் முறைகள் ஆகவே யான் சொல்லியும் விட்டேன் .
நிச்சயமாய் யான் சொல்லியபடி அனைத்தும் நீங்கள் நல் முறைகள் ஆகவே அன்று நல் முறைகள் ஆகவே அருளாசிகள் பெற்று அனைவருக்கும் அடுத்த வாக்கும் கூறுகின்றேன்.
அம்மையே எவ்வாறு என்பதையும் கூட நிலை நிறுத்தும் பொழுது எந்தன் அருள் இல்லாமல் எதையும் செய்ய முடியாது என்பேன்.
அதனால் அனைவருமே என்னுடைய அருள் பெற்றவர்களே.
தேர்ந்தெடுங்கள் எவ்வாறு என்பதையும் கூட நல் முறைகளாக.
இன்னொரு விஷயத்தையும் சொல்கின்றேன்.
பின் ஆடி கிருத்திகை என்கின்றார்களே அப்பொழுதும் கூட இங்கு முருகப்பெருமான் வந்துதான் சென்றான் என்பேன்.
நல் முறைகள் ஆகவே இன்னும் பல மாற்றங்கள் உண்டு என்பேன் இன்னும் பல மாற்றங்கள் உண்டு என்பதற்கிணங்க இன்னுமொரு சூட்சுமத்தையும் நல்முறைகளாக உரைக்கின்றேன்
உரைக்கின்றேன் நல் முறைகள் ஆக மாற்றத்தை யான் ஏற்படுத்தியே தீருவேன் நல் முறைகளாகவே.
சிலசில வினைகளால் மனிதர்கள் எங்கு சென்றாலும் விமோசனம் இல்லாமல் போய்க் கொண்டே தான் இருக்கின்றது.
இக்கலியுகத்தில் கூட எவை என்று எதை நம்புவது என்று கூட தெரியாமல் மக்கள் அலைந்து மோதி திரிந்து கடைசியில் ஒன்றும் தெரியாமல் மடிந்து விடுகின்றனர்.
ஆனாலும் இனிமேலும் ஒவ்வொருவரும் எவ்வாறு என்பதையும் கூட நிலை நிறுத்தும் பொழுது அம்மையே இங்கு(பசுமலை) வருபவர்கள் நல் முறைகள் ஆகவே அரை மணி நேரம் நல் முறைகள் ஆக தவத்தை மேற்கொண்டு அவரவர் விருப்பப்படி பின் நல் முறைகளாகவே தெய்வங்களை எண்ணினால் நிச்சயம் கைகொடுப்பான் என்பேன்.
அனைத்து தெய்வங்களும் இங்கு வலம் வந்து கொண்டு தான் இருக்கிறது என்பேன்.
சிறப்பின் ரகசியம் எவ்வாறு என்பதையும் கூட இனிமேலும் நல் முறைகள் ஆகவே இன்னொரு விஷயத்தையும் சொல்கின்றேன்.
நினைத்த காரியத்தை நினைத்த படியே நல் முறைகளாக சொல்கின்றேன் இப்பொழுது பக்கத்தில் உள்ள ஒரு மரம் இருக்கின்றதே அம் மரத்தை 108 முறைகள் சுற்றி நல் முறைகள் ஆகவே அன்னத்தை நல் முறைகள் ஆகவே இவையன்றி கூற பின்பு அரை(24+12=36) இதிலும் பாதிகூட்ட நல் முறைகளாக முப்பானாறு பேர்களுக்கு(36 நபர்களுக்கு) நல் முறைகளாக அன்னதானம் இவை இட்டு வந்தாலே தன் கர்மங்களும் கழியும் என்பேன்.
அப்பனே எவ்வாறு என்பதை கூட நாள் கிழமை கள் எதுவாயினும் சரி. அப்பனே எவ்வாறு என்பதை கூட அப்பனே யான் இருக்கும் பொழுது நாள் கிழமை பின் எதுவும் தேவை இல்லை அப்பனே.
அம்மையே எவ்வாறு என்பதையும் கூட அப்பனே எவ்வாறு என்பதையும் கூட ஆனாலும் நல் முறைகளாக புரிந்து கொள்ளுங்கள்
ஆனாலும் ஒரு நாள் சுற்றி விட்டு பலன்கள் நடைபெறவில்லையே என்று எண்ண கூடாது என்பேன்.
அம்மையே அப்பனே நல் முறைகளாக இன்னும் மாற்றங்கள் உண்டு என்பேன் உண்டு என்பேன் நல் முறைகள் ஆகவே சக்தி வாய்ந்த நல் முறைகளால் இத்தலம் எவ்வாறு என்பதைக் கூட இன்னும் பல கோடி மர்மங்கள் இம் மதுரையிலே ஒளிந்திருக்கிறது என்பேன்.
இவையன்றி கூற எதனை என்று கூற நினைப்பதற்கும் கூட இங்கு எவ்வாறு என்பதை கூட கோள்கள் எவ்வாறு என்பதையும் கூட கோள்களுக்கு தகுந்த மாதிரி கோவலன் எவ்வாறு என்பதையும் கூட பாண்டிய நாட்டின் அரசன் பல மர்மங்களையும் இப்புவியில் எவ்வாறு என்பதையும் கூட இவ் மதுரை மாநகரிலே புதைத்து வைத்து சென்றிருக்கின்றான்.
ஆனாலும் அதை எடுக்கும் காலம் வந்து கொண்டே இருக்கின்றது என்பேன்.
இப்புவியில் நல் முறைகளாகவே ஆனாலும் சில மனிதர்கள் எவ்வாறு என்பதையும் கூட நினைத்து பார்க்காத அளவிற்கு ஆனாலும் இவையெல்லாம் இருந்தால் மனிதர்கள் பிழைத்துக் கொள்வார்களே என்று அடியோடு அழித்துவிட்டார்கள் அதனையும் மர்மங்களாக. அவை இருந்தால் எப்பொழுதும் மனிதனுக்கு நிலையானதாக அனைத்தும் கிட்டும் என்பேன்.
ஆனாலும் இறைவன் கூட இதில் சூட்சுமமாக நடந்துதான் உள்ளான் என்பேன்.
அனைத்தும் பின் மனிதனுக்கு கிடைத்து விட்டால் இறைவனை பின் இறைவனையே கண்டுகொள்ள மாட்டான் என்பேன்.
இறைவனே நேரடியாக வந்தாலும் இறைவனா என்று கேள்விகள் கேட்பான் மனிதன்.
அதனால் தான் இதிலும் சூட்சமங்கள் உள்ளது.
பின் வாக்குகளில் அனைத்தும் சொல்கின்றேன் இதனைப் பற்றி விரிவாகவே.
நல் முறைகள் ஆகவே நல் முறைகள் ஆகவே இனிமேலும் எவ்வாறு என்பதையும் கூட நிலை நின்று பார்க்கும் பொழுது அனைத்தும் பொய் என்று தான் யான் சொல்வேன்.
நிலையானது எவை என்றால் இறைவனே!!! அதனால்தான்
இறைவனைப் பற்றிப் பற்றி பற்றிக் கொண்டே இருந்தால் நீ இறைவனைப்பற்றி பற்றற்று இருந்தால் அனைவரும் நன்றாகவே வாழ்ந்து விடுவார்கள்.
அதனை மீறி உங்கள் சுயநல விருப்பப்படி பற்று வைத்தால் ஏமாற்றம்தான் மிஞ்சும்.
நிலையானது நிலையற்றது இவ்வுலகில் எவ்வாறு என்பதையும் கூட அனைத்தும் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதமான உள்ளதென்பது நிலையானது இறைவன் அருளே!!!
மற்றவையெல்லாம் நிலையற்றது.
ஆனால் முட்டாள் மனிதன் நிலையற்றதையே தேடிக் கொண்டிருக்கிறான்.
ஆனாலும் இவை என்று கூற பின் நிலையில்லாததை பின் தேடிச் சென்றால் பின் அவ் நிலையில்லாததால் மோசம் போய் விடுவான்.
ஆனாலும் நல் முறைகளாக அனைத்தும் நீயே என்று கூறிவிடு.
அதுவும் நன் முறையாகவே நடக்கும்.
அப்பனே நல் முறைகள் ஆகவே அனைத்தும் எந்தனது இல்லை இறைவா உன்னிடத்திலேயே ஒப்படைத்து விடுகின்றேன் என்ற ஒரு நிலையில் யோசித்தால் பின் இறைவன் பார்த்துக்கொள்வான்.
ஆனாலும் ஒருவன் கூட அதை போல் நினைப்பதும் இல்லை .
இதுவரை ""யான்"" பார்த்ததும்!!! இல்லை....
நல் முறைகள் ஆகவே """பிறருக்காகவே வாழ வேண்டும்!!!என்ற கொள்கையை பிடித்தால் உந்தனுக்காக!!! இறைவன் வாழ்வான்.
அதை விட்டுவிட்டு தான் மட்டும் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணினால் ??
நிச்சயம் இது முடியாது என்பேன்.
இன்னும் மேன்மையான பலன்கள் உண்டு என்பேன்.
மேன்மையான பலன்கள் உண்டு என்பேன் அடுத்த சூட்சுமத்தையும் நல் முறைகளாக இத்தலத்திலே இன்னும் இரு மாதங்கள் கழித்து உரைக்கின்றேன் அதி சிறப்பாக அதி சிறப்பாக நல் முறைகளாகவே
இதை இயக்குபவர்களும் நல் முறைகள் ஆகவே வாழ்வார்கள் என்பேன்.
வாழ்வார்கள் என்பேன் சீரும் சிறப்புடன் என்னுடைய அருளும் பரிசுத்தமாக எங்கிருந்தாலும் அவர்களுக்கு நல் முறையில் ஆகவே யான் காட்சி தந்து கொண்டே இருப்பேன் நல் முறைகள் ஆகவே.
எதைப்பற்றியும் கவலைப்பட அவசியமில்லை எவை எவை மனதில் நினைத்துக் கொண்டிருக்கிறீர்களோ அவை எல்லாம் நிச்சயம் ஏற்படுத்தும் என்பேன்.
ஏற்படுத்தும் என்பேன் என்பதற்கிணங்க யானே முன்னின்று அனைத்தும் ஏற்படுத்துவேன் நல்முறைகள் ஆகவே.
என்மீது நல் முறைகளாக பாசம் கொண்டு பாசம் கொண்டு அவ் பாசத்திற்காக நிச்சயமாய் யானும் பல மடங்கு காண்பிப்பேன் இதனால் தொந்தரவுகள் இல்லை அனைவருக்கும் நலமே.
ஆனாலும் ஒன்றைச் சொல்கின்றேன் சிறு பிரச்சினைகள் எவ்வாறு என்பதையும் கூட விதியில் கூட ஒவ்வொருவருக்கும் இப்பொழுது கூட நல் முறைகள் ஆகவே சில வினைகள் தோன்றி தோன்றி வந்து கொண்டே இருக்கின்றது.
அதையும் யான் மாற்றுவேன்.
எதைப்பற்றியும் கவலை கொள்ளாமல் விதியையே என்னால் மாற்ற முடியும் அளவிற்கு கூட தகுதிகள் இருக்கின்றது.
அதனால் நல் முறைகள் ஆகவே அவ் விதியை ஆனால் யான் தகுதியானவர்களுக்கே வழங்குவேன் என்பேன்.
எதனால்?? அவ் தகுதி நீங்கள்தான் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
புண்ணியங்கள் பல புண்ணியங்கள் பல தர்ம காரியங்கள் செய்து வந்தால் பின் மாற்றுவேன் யான் பிரம்மனிடத்தில் முறையிட்டு கூட.
நல் முறைகளாக விளக்கங்கள் தந்து விட்டேன் அனைத்தும் நல்படியாகவே அனைவருக்கும் நிறைவேறும் என்பேன்.
மீண்டும் இரு மண்டலம் அல்லது இரு மாதம் கழித்து நிச்சயமாய்
இத்தலத்திலிருந்து சொல்கின்றேன் வாக்குகளாக.
அனைவருக்கும் என்னுடைய ஆசிகள்.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
மதுரை அகத்திய மஹரிஷி ஆலய முகவரி
அருள்மிகு சக்தி மாரியம்மன் கோவில் வளாகம்,
தியாகராசர் குடியிருப்பு, பசுமலை, மதுரை-4.
[திருப்பரங்குன்றம் செல்லும் வழியில் மன்னர் திருமலை நாயக்கர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அருகில். மதுரை திருமங்கலம் ரோட்டில் மூலக்கரை பஸ்டாப் இறங்கி பார்த்தாலே, எதிர்புறம் கோவில் தெரியும். திருப்பரங்குன்றத்திற்கு முந்தின ஸ்டாப்.]
Sri Arulmiga Sakthi Mariamman Temple,
Thiagarajar Colony,
GST Road, Moolakarai, 625004,, Pasumalai, Madurai, Tamil Nadu 625004, India
https://goo.gl/maps/LurkRx2B5DbqSWqa7
ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய பிரம்ம ரிஷி திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!
சர்வம் சிவார்ப்பணம்!!!!!
No comments:
Post a Comment