“இறைவா !!!!! நீயே அனைத்தும்” இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்.

"இறைவா !!!!! நீயே அனைத்தும்!!!!"
"இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்"

உலகின் ஆதி குரு, மாமுனிவர், குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளிய தினசரி அனைவரும் அதிகாலையில் எடுக்க வேண்டிய உறுதிமொழி. :-


1.தர்மம் செய்வேன்
2.அனைத்திடத்திலும் பின் அன்பாக அதாவது அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன்.
3.போட்டி, பொறாமைகள் நீக்குவேன்
4.அனைத்தும் எந்தனுக்கே சொந்தம் என்று பின் உயிர்ப் பலியும் இடமாட்டேன்
5.பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன்
6.அப்படிக் கொன்றாலும், நிச்சயமாய் அதை யான் தடுப்பேன்
7.அவை மட்டும் இல்லாமல், தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும்.
8.பிறருக்கு நன்மை செய்ய வேண்டும்
9.பிறருக்காக உழைக்க வேண்டும்
10.பிற ஜீவராசிகளும் ( உயிரினங்களும் ) பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில்அனைவரும் நினைக்க வேண்டும்.
11.அப்படி நினைத்தால் அகத்தியன் வந்து அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பான் என்று சொல்மகனே

( அடியவர்களே. இந்த மகிமை புகழ் அகத்திய மாமுனிவர் அருளிய உறுதிமொழி வாக்கினை சிரம்மேல் ஒவ்வொரு நொடியும் ஏந்தி, பிரம்மாவின் முன்பு தலை நிமிர்ந்து நமக்காக விதியை மாற்றஉத்தரவிடும் வண்ணம் அனைவருக்கும் உலகில் உள்ள 700 கோடி மக்களுக்குச்சென்று அடையும்வண்ணம் எடுத்துச் சொல்லுங்கள். )

மற்றவர்களைப்பற்றி எண்ணிப்பார் அப்பனே. மற்றவர்களை எண்ணி எண்ணி, தான் கெட்டுப்போனாலும் பரவாயில்லை என்று யார் ஒருவன் நினைக்கின்றானோ அவனிடத்தில் இறைவன் பிச்சை ஏந்துவான் அப்பா. பிச்சை ஏந்துவான் அப்பனே. என் பக்தர்களுக்கு இது தெரிய நிச்சயம் வேண்டும் அப்பனே.


அகத்திய பிரம்ம ரிஷி உரைத்த முதல் தரப் புண்ணியம் பெறும் ஒரே வழி:- (1) அன்னதானம் + (2) திருவாசகம் சிவபுராணம் + (3) மக்கள் வாழ , நல் வழிகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுதல். இப்படிச் செய்தால் மட்டுமே , முதல்தரப் புண்ணியம் உண்டாகும் என்று குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி உரைத்துள்ளார்கள். இதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள் என்றும் அனைவருக்கும் கூறி உள்ளார்கள். இதுபோல் அனைவரும் செய்து முதல் தரப் புண்ணியம் பெற்றுக் கொள்ளுங்கள். இறை அருளுடன் வளமாக வாழுங்கள். வாழ்க வளமுடன்!!!!!!!!!

siththarkalatchi - Moving text


அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு :- “அப்பனே, தானங்கள் செய்க, அப்பனே, உன்னால் இயன்றவரை தானங்கள் செய்க. அனுதினமும், என் பக்தர்கள், ஒரு உயிருக்காவது உணவளியுங்கள். அது போதும். அப்பனே, அதுவே கோடி புண்ணியமாகும்.”


Monday, April 1, 2024

சித்தர்கள் ஆட்சி - 369 : அகத்திய மாமுனிவர் வாக்கு - 17/11/2021 அன்று பசுபதிநாத் ஆலயம் குறித்து குருநாதர் அகத்தியர் உரைத்த பொது வாக்கு. வாக்குரைத்த ஸ்தலம். பசுபதிநாத் ஆலயம். காத்மாண்டு நேபாள்.

 





“இறைவா!!! அனைத்தும் நீ”


உலகின் ஆதி குரு , மாமுனிவர் , குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு:- 


17/11/2021 அன்று பசுபதிநாத் ஆலயம் குறித்து குருநாதர் அகத்தியர் உரைத்த பொது வாக்கு 


வாக்குரைத்த ஸ்தலம். பசுபதிநாத் ஆலயம். காத்மாண்டு நேபாள்.


ஆதி ஈசனின் பொற்பாதத்தை தொழுது உரைக்கின்றேன் அகத்தியன்.


அப்பனே இவையன்றி கூற இவ் பசுபதி நாதனை குறித்து கூறுகின்றேன்.


பின் எதை எதனை கஷ்டங்கள் இட்டாலும் இவந்தனிடத்தில் வந்துவிட்டால் அப்பனே கஷ்டங்கள் எவ்வாறு என்பதையும் கூட மறைந்து போய்விடும்.



இவந்தனே அனுப்புவான் இங்கு சென்று வர. ஏன் உதாரணத்திற்காக சொல்கின்றேன்.


போகனே (போகர் சித்தர்) பைத்தியமாக இங்கு திரிந்து கொண்டு இருந்தான் என்பேன்.


ஆனாலும் இதனையுமன்றி  ஈசனே அனுப்பினான் பின் என் மகன் கந்தனிடத்தில் செல்லுக என்று.


ஆனாலும் அலைந்தான் திரிந்தான் கடைசியில் கந்தனிடம் சென்றுவிட்டான் ஆனால் கந்தனோ போகனை புகழ் அடைய செய்துவிட்டான்.


ஆனாலும் இதைத் தான் சொல்கின்றேன் மனவருத்தங்கள் மனக்கஷ்டங்கள் இவையெல்லாம் இருக்கும் பொழுது எதனை என்று கூற எதனை என்று பின் படுத்த இவனை(பசுபதிநாதன்) சரணடைந்து விட்டால் அனைத்தையும் நீக்கி விடுவான்.



ஆனாலும் எதை என்று கூற சில மனிதர்கள் பின் இதை என்று கூற என்னால் போக முடியாது முடியாது என்று சொல்லிக் கொண்டே இருப்பார்கள் ஆனால் அது தான் கர்மா என்பேன்.

அக் கர்மா இருக்கும் பொழுது நிச்சயம் இங்கு வரமுடியாது என்பேன்.


எத்தனை என்று கூற ஆனாலும் இதை தன் அவந்தனை இங்குதான் தரிசிக்க வேண்டுமென்று முயற்சி செய்துவிட்டால் வந்துவிட்டால் அப்பனே வழியும் காட்டி விடுவான்.


ஆனால் ஏன்? ஏன்? எதனையும் என்று கூற ஈசனின் ஆங்காங்கே விளையாட்டுக்கள் பலம் என்பேன்.


ஈசன் திருவிளையாடலும் மனிதர்களுக்கு பலம் என்பேன்.


ஏனென்றால் ஈசன் எங்கெங்கெல்லாம் இருக்கின்றான் தூர தேசங்களில் ஆனால் இதற்கெல்லாம் ஒரு வாய்ப்பு உண்டா?


உண்டா? என்பதற்கிணங்க உண்டு என்பேன்.


ஏன்? ஈசன் இங்கெல்லாம் தூரம் தூரமாய் சென்று சென்று ஸ்தலம் அமைத்து விட்டான் ? ஏனென்றால் இவனை நாடி நாடி பார்த்தால்தான் கர்மங்கள் அழியும் மோட்சமும் கிட்டும் 


ஆனாலும்  கர்மாக்கள் அழிய கர்மங்களும் அழிய விடுவதில்லை.


இது கலியுகம் கலியுகத்தின் காலம்  என்பதற்கிணங்க பக்திகள் இன்னும் குறையும் என்பேன் இதுதான் உலகம் பக்தி குறைந்து அநியாயங்கள் ஆட்டங்கள் ஆடும்.


இவ்வுலகத்தில் எவை எவை என்று கூற ஆனாலும் சொல்கின்றேன் ஈசன் அடிக்கடி பின் பலத்த திருவிளையாடல்கள் விளையாடிக் கொண்டே இருப்பான்.


கர்மாக்கள் எவை என்று கூற மனிதர்களே பிழைத்துக் கொள்ளுங்கள். எங்கெல்லாம் பக்திகள் எங்கெல்லாம் ஈசனுடைய திருத்தலங்கள் இருக்கின்றதோ பின் பின் அங்கெல்லாம் சென்று வாருங்கள் நலமாகவே. அங்கெல்லாம் சென்று தங்கி வர சில கர்மங்கள் விலகி ஓடும் இதனால் முக்தியும் கிடைக்கும் என்பேன்.


இனிமேலும் பின் மனிதன் ஒழுங்காக வாழ முடியாமல் போய்விடும் தரித்திரமும் சேரும் என்பேன்.


இத் தரித்திரத்தை சேர்த்துக் கொள்ளாதீர்கள் என்பேன். நல் விதமாகவே நல் முறைகள் ஆகவே உரைத்து உரைத்துக் கொண்டேதான் வந்து கொண்டிருக்கின்றார்கள் சித்தர்கள். ஆனாலும் மனிதன் எதை எதையோ நினைத்து இதையெல்லாம் மதிக்கலாமா? என்றெல்லாம் என்பது போல் மதிக்காமல் சென்று கொண்டிருக்கின்றான் எவை என்று கூற.


எவை என்று கூறக் கூற பணத்தின் மேலே புத்திகள் இருக்கின்றது மனிதனுக்கு ஆனாலும் புத்திகள் எப்போது பணத்தின் மீது இருக்கின்றதோ அப்பொழுதே இறைவன் விலகி விடுவான் அதை எண்ணிக் கொள்க.


ஆனாலும் இறைவன் நினைத்தால் அனைத்தும் தந்து விடுவான் இதனால் நல் முறையாக பசுபதீஸ்வரன் பலப்பல சக்திகள் இவனிடத்தில் உண்டு என்பேன்.


இங்கும் நல் விதமாகவே எவ்வாறு என்பதையும் கூட இங்கு பல சித்தர்கள் இன்னும் தங்கிக் கொண்டு தான் இருக்கின்றார்கள் சித்தன் நிலையைப் பெறுவதற்கு கர்மாக்களை அழிப்பதற்கு.


அதனால் கர்மாக்களை அழிக்கக்கூடிய சிறந்த திருத்தலங்களில் இவ்வாலயமும் ஒன்று. 


இதனையும் அறிந்து பின் கஷ்டங்கள் பட்டு பட்டு வந்து விட்டால் இவன் தரிசனம் அனுதினமாக கொடுத்து பின் எங்கு? சென்றால் இவன் தன் கர்மா அழியும் என்பதை ஈசனே காண்பித்து விடுவான் சொல்லித் தந்து விடுவான்.


அப்பனே நல் முறையாக நல் விதமாகவே இன்னும் பல கோடி வாக்குகள் உண்டு இன்னும் பல ஆசீர்வாதங்களும் உண்டு யானும் இத்திருத்தலத்தில் வந்து தங்கி உறங்கி சென்று இருக்கின்றேன்.


ஆனாலும் அப்பனே மனிதப்பிறவி எடுத்தாலே கஷ்டங்கள் உண்டு. ஈசன் தன் நாடகத்தை நடத்திக் கொண்டே தான் இருப்பான் திருந்துங்கள் மனிதர்களே திருந்துங்கள் அடுத்த வாக்கும் சொல்கிறேன் அதிவிரைவிலே!



ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய பிரம்ம ரிஷி திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!


சர்வம் சிவார்ப்பணம்!!!!!

No comments:

Post a Comment