“இறைவா !!!!! நீயே அனைத்தும்” இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்.

"இறைவா !!!!! நீயே அனைத்தும்!!!!"
"இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்"

உலகின் ஆதி குரு, மாமுனிவர், குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளிய தினசரி அனைவரும் அதிகாலையில் எடுக்க வேண்டிய உறுதிமொழி. :-


1.தர்மம் செய்வேன்
2.அனைத்திடத்திலும் பின் அன்பாக அதாவது அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன்.
3.போட்டி, பொறாமைகள் நீக்குவேன்
4.அனைத்தும் எந்தனுக்கே சொந்தம் என்று பின் உயிர்ப் பலியும் இடமாட்டேன்
5.பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன்
6.அப்படிக் கொன்றாலும், நிச்சயமாய் அதை யான் தடுப்பேன்
7.அவை மட்டும் இல்லாமல், தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும்.
8.பிறருக்கு நன்மை செய்ய வேண்டும்
9.பிறருக்காக உழைக்க வேண்டும்
10.பிற ஜீவராசிகளும் ( உயிரினங்களும் ) பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில்அனைவரும் நினைக்க வேண்டும்.
11.அப்படி நினைத்தால் அகத்தியன் வந்து அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பான் என்று சொல்மகனே

( அடியவர்களே. இந்த மகிமை புகழ் அகத்திய மாமுனிவர் அருளிய உறுதிமொழி வாக்கினை சிரம்மேல் ஒவ்வொரு நொடியும் ஏந்தி, பிரம்மாவின் முன்பு தலை நிமிர்ந்து நமக்காக விதியை மாற்றஉத்தரவிடும் வண்ணம் அனைவருக்கும் உலகில் உள்ள 700 கோடி மக்களுக்குச்சென்று அடையும்வண்ணம் எடுத்துச் சொல்லுங்கள். )

மற்றவர்களைப்பற்றி எண்ணிப்பார் அப்பனே. மற்றவர்களை எண்ணி எண்ணி, தான் கெட்டுப்போனாலும் பரவாயில்லை என்று யார் ஒருவன் நினைக்கின்றானோ அவனிடத்தில் இறைவன் பிச்சை ஏந்துவான் அப்பா. பிச்சை ஏந்துவான் அப்பனே. என் பக்தர்களுக்கு இது தெரிய நிச்சயம் வேண்டும் அப்பனே.


அகத்திய பிரம்ம ரிஷி உரைத்த முதல் தரப் புண்ணியம் பெறும் ஒரே வழி:- (1) அன்னதானம் + (2) திருவாசகம் சிவபுராணம் + (3) மக்கள் வாழ , நல் வழிகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுதல். இப்படிச் செய்தால் மட்டுமே , முதல்தரப் புண்ணியம் உண்டாகும் என்று குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி உரைத்துள்ளார்கள். இதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள் என்றும் அனைவருக்கும் கூறி உள்ளார்கள். இதுபோல் அனைவரும் செய்து முதல் தரப் புண்ணியம் பெற்றுக் கொள்ளுங்கள். இறை அருளுடன் வளமாக வாழுங்கள். வாழ்க வளமுடன்!!!!!!!!!

siththarkalatchi - Moving text


அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு :- “அப்பனே, தானங்கள் செய்க, அப்பனே, உன்னால் இயன்றவரை தானங்கள் செய்க. அனுதினமும், என் பக்தர்கள், ஒரு உயிருக்காவது உணவளியுங்கள். அது போதும். அப்பனே, அதுவே கோடி புண்ணியமாகும்.”


Tuesday, August 15, 2023

சித்தர்கள் ஆட்சி - 106 : அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு - நோயற்ற வாழ்விறக்கு மிக எளிய வழி

 



இந்த நல் வாக்கு அதன் தற்ப்போதைய ஆராய்ச்சி நிலை


அந்தக் காலத்தில் வெறும் காலில் நடந்தார்கள். கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தையாக இருந்தது. அப்படி வெறும் காலில் நடந்தது அவர்களுக்கேத் தெரியாமல் அவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தியது என்று சொன்னால் நம்ப முடிகிறதா. உண்மைதான்!

நம்முடைய நரம்புகள் பாதம் மற்றும் கையில்தான் முடிவடைகிறது. எனவேதான் கை மற்றும் பாதத்தில் அழுத்தம் தருவது ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்று இயற்கை மருத்துவர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர். செருப்பு இல்லாமல் வெறும் காலில் கூழாங்கற்கள் மீது நடக்கும்போது பாதத்தில் உள்ள நரம்பு புள்ளிகள் தூண்டப்படுகின்றன. இது உடலுக்கு புத்துணர்வையும் பலத்தையும் அளிக்கிறது.

உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது. 2005ம் ஆண்டு Journal of the American Geriatrics Society வெளியிட்ட ஆய்வில், தொடர்ந்து கூழாங்கற்கள் மீது நடந்து பயிற்சி மேற்கொள்பவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம் குறைவது தெரியவந்துள்ளது. எல்லா வயதினரையும் கொண்ட குழுவினரை வாரத்துக்கு மூன்று மணி நேரம் என்ற வகையில் 16 வாரங்களுக்கு கூழாங்கற்கள் மீது நடைப்பயிற்சி செய்ய வைத்து ஆய்வு செய்துள்ளனர். இதில், அவர்களுக்கு ரத்த அழுத்தம் குறைந்திருப்பது உறுதியாகி உள்ளது.

உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் கூழாங்கல் நடைபயிற்சி உள்ளது. உடல் நலம் மட்டுமின்றி மன நலனையும் மேம்படுத்தும். பாதத்தில் தூண்டப்படும் முக்கிய உறுப்பு புள்ளிகள் காரணமாக உடல் உறுப்புகள் செயல்திறன் அதிகரிக்கிறது. மூளை, நுரையீரல், சிறுநீரகம், கண், காது உள்ளிட்ட அனைத்து உறுப்புகளும் இதனால் வலுப் பெறுகின்றன.



No comments:

Post a Comment