“இறைவா !!!!! நீயே அனைத்தும்” இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்.

"இறைவா !!!!! நீயே அனைத்தும்!!!!"
"இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்"

உலகின் ஆதி குரு, மாமுனிவர், குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளிய தினசரி அனைவரும் அதிகாலையில் எடுக்க வேண்டிய உறுதிமொழி. :-


1.தர்மம் செய்வேன்
2.அனைத்திடத்திலும் பின் அன்பாக அதாவது அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன்.
3.போட்டி, பொறாமைகள் நீக்குவேன்
4.அனைத்தும் எந்தனுக்கே சொந்தம் என்று பின் உயிர்ப் பலியும் இடமாட்டேன்
5.பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன்
6.அப்படிக் கொன்றாலும், நிச்சயமாய் அதை யான் தடுப்பேன்
7.அவை மட்டும் இல்லாமல், தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும்.
8.பிறருக்கு நன்மை செய்ய வேண்டும்
9.பிறருக்காக உழைக்க வேண்டும்
10.பிற ஜீவராசிகளும் ( உயிரினங்களும் ) பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில்அனைவரும் நினைக்க வேண்டும்.
11.அப்படி நினைத்தால் அகத்தியன் வந்து அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பான் என்று சொல்மகனே

( அடியவர்களே. இந்த மகிமை புகழ் அகத்திய மாமுனிவர் அருளிய உறுதிமொழி வாக்கினை சிரம்மேல் ஒவ்வொரு நொடியும் ஏந்தி, பிரம்மாவின் முன்பு தலை நிமிர்ந்து நமக்காக விதியை மாற்றஉத்தரவிடும் வண்ணம் அனைவருக்கும் உலகில் உள்ள 700 கோடி மக்களுக்குச்சென்று அடையும்வண்ணம் எடுத்துச் சொல்லுங்கள். )

மற்றவர்களைப்பற்றி எண்ணிப்பார் அப்பனே. மற்றவர்களை எண்ணி எண்ணி, தான் கெட்டுப்போனாலும் பரவாயில்லை என்று யார் ஒருவன் நினைக்கின்றானோ அவனிடத்தில் இறைவன் பிச்சை ஏந்துவான் அப்பா. பிச்சை ஏந்துவான் அப்பனே. என் பக்தர்களுக்கு இது தெரிய நிச்சயம் வேண்டும் அப்பனே.


அகத்திய பிரம்ம ரிஷி உரைத்த முதல் தரப் புண்ணியம் பெறும் ஒரே வழி:- (1) அன்னதானம் + (2) திருவாசகம் சிவபுராணம் + (3) மக்கள் வாழ , நல் வழிகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுதல். இப்படிச் செய்தால் மட்டுமே , முதல்தரப் புண்ணியம் உண்டாகும் என்று குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி உரைத்துள்ளார்கள். இதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள் என்றும் அனைவருக்கும் கூறி உள்ளார்கள். இதுபோல் அனைவரும் செய்து முதல் தரப் புண்ணியம் பெற்றுக் கொள்ளுங்கள். இறை அருளுடன் வளமாக வாழுங்கள். வாழ்க வளமுடன்!!!!!!!!!

siththarkalatchi - Moving text


அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு :- “அப்பனே, தானங்கள் செய்க, அப்பனே, உன்னால் இயன்றவரை தானங்கள் செய்க. அனுதினமும், என் பக்தர்கள், ஒரு உயிருக்காவது உணவளியுங்கள். அது போதும். அப்பனே, அதுவே கோடி புண்ணியமாகும்.”


Monday, July 17, 2023

சித்தர்கள் ஆட்சி - 101 : அகத்தின் ஈசன் வாக்கு - இரண்டு சிதம்பர ரகசியங்கள்


 



*எந்தை அகத்தின் ஈசன் அகத்திய பிரம்ம ரிஷி வாஅழ்க*

*🌸2 சிதம்பர ரகசியம்*🌸

அப்பனே அவை மட்டுமில்லாமல் இன்னும் பல அப்பனே சூட்சுமங்கள் உள்ளது என்பேன்.

அப்பனே ஈசனே அப்பனே தில்லையில்(சிதம்பரம் நடராஜன்) அவந்தன் காலடியில் பல சுவடிகளை ஒளித்து வைத்துள்ளான் என்பேன்.

ஏனென்றால் அப்பனே பல புலவர்களும் பல வழிகளில் அரசர்களும் இதை கொடுத்தால் இவை பின் மனிதர்களை நன்றாக்குவோம்!! உருவாக்குவோம்!! என்றெல்லாம் அப்பனே பின் மனிதர்களும் எடுத்துச் செல்வார்கள் என்பதற்கிணங்க ஆனாலும் நேரங்கள் வரட்டும் தக்க சமயத்தில் மனிதர்களுக்கு இவையெல்லாம் போய் சேரும் என்பதைக் கூட அவன் காலடியில் அப்பனே அப்படியே பலகோடி சுவடிகள் புதைந்துள்ளன என்பேன் அப்பனே.

இவையன்றி கூற அதுவும் யாருக்கும் தெரியாது அப்பனே.

(சிதம்பர ரகசியம் -1 )

*ஈசன்!! கால்!!!! அப்பனே பின் அதனையும் எடுத்தால்தான் அப்பனே உண்டு என்பேன். அதனால் அப்பனே அவன் காலடியில் இதுவும் ஒரு சூட்சுமமப்பா!!! *

*சிதம்பர இரகசியத்தில் இதுவும் ஒரு சூட்சுமமப்பா.* 

( சிதம்பர ரகசியம் - 2)

இதனால்தான் தில்லை என்கின்றார்களே!!! *அப்பனே இவையன்றி கூற அனைத்தும் அவனிடத்தில் எந்தனுக்கு ஏதும் தேவையில்லை என்று கூட அவந்தனிடத்தில் சென்று விட்டால் ...*

*அவந்தன் உந்தனக்கு எவை என்று கூறும் அளவிற்கு கூட அவந்தன் இல்லை என்றே சொல்லி விட மாட்டான் என்பேன்.*

*இதுதானப்பா தில்லை.!!!*

*இல்லை என்ற வார்த்தைக்கு அர்த்தம் உண்டு என்பேன்.*

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

No comments:

Post a Comment