“இறைவா !!!!! நீயே அனைத்தும்” இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்.

"இறைவா !!!!! நீயே அனைத்தும்!!!!"
"இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்"

உலகின் ஆதி குரு, மாமுனிவர், குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளிய தினசரி அனைவரும் அதிகாலையில் எடுக்க வேண்டிய உறுதிமொழி. :-


1.தர்மம் செய்வேன்
2.அனைத்திடத்திலும் பின் அன்பாக அதாவது அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன்.
3.போட்டி, பொறாமைகள் நீக்குவேன்
4.அனைத்தும் எந்தனுக்கே சொந்தம் என்று பின் உயிர்ப் பலியும் இடமாட்டேன்
5.பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன்
6.அப்படிக் கொன்றாலும், நிச்சயமாய் அதை யான் தடுப்பேன்
7.அவை மட்டும் இல்லாமல், தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும்.
8.பிறருக்கு நன்மை செய்ய வேண்டும்
9.பிறருக்காக உழைக்க வேண்டும்
10.பிற ஜீவராசிகளும் ( உயிரினங்களும் ) பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில்அனைவரும் நினைக்க வேண்டும்.
11.அப்படி நினைத்தால் அகத்தியன் வந்து அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பான் என்று சொல்மகனே

( அடியவர்களே. இந்த மகிமை புகழ் அகத்திய மாமுனிவர் அருளிய உறுதிமொழி வாக்கினை சிரம்மேல் ஒவ்வொரு நொடியும் ஏந்தி, பிரம்மாவின் முன்பு தலை நிமிர்ந்து நமக்காக விதியை மாற்றஉத்தரவிடும் வண்ணம் அனைவருக்கும் உலகில் உள்ள 700 கோடி மக்களுக்குச்சென்று அடையும்வண்ணம் எடுத்துச் சொல்லுங்கள். )

மற்றவர்களைப்பற்றி எண்ணிப்பார் அப்பனே. மற்றவர்களை எண்ணி எண்ணி, தான் கெட்டுப்போனாலும் பரவாயில்லை என்று யார் ஒருவன் நினைக்கின்றானோ அவனிடத்தில் இறைவன் பிச்சை ஏந்துவான் அப்பா. பிச்சை ஏந்துவான் அப்பனே. என் பக்தர்களுக்கு இது தெரிய நிச்சயம் வேண்டும் அப்பனே.


அகத்திய பிரம்ம ரிஷி உரைத்த முதல் தரப் புண்ணியம் பெறும் ஒரே வழி:- (1) அன்னதானம் + (2) திருவாசகம் சிவபுராணம் + (3) மக்கள் வாழ , நல் வழிகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுதல். இப்படிச் செய்தால் மட்டுமே , முதல்தரப் புண்ணியம் உண்டாகும் என்று குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி உரைத்துள்ளார்கள். இதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள் என்றும் அனைவருக்கும் கூறி உள்ளார்கள். இதுபோல் அனைவரும் செய்து முதல் தரப் புண்ணியம் பெற்றுக் கொள்ளுங்கள். இறை அருளுடன் வளமாக வாழுங்கள். வாழ்க வளமுடன்!!!!!!!!!

siththarkalatchi - Moving text


அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு :- “அப்பனே, தானங்கள் செய்க, அப்பனே, உன்னால் இயன்றவரை தானங்கள் செய்க. அனுதினமும், என் பக்தர்கள், ஒரு உயிருக்காவது உணவளியுங்கள். அது போதும். அப்பனே, அதுவே கோடி புண்ணியமாகும்.”


Thursday, September 1, 2022

சித்தர்கள் ஆட்சி - 70 : அகத்திய மஹரிஷி வாக்கு - கலி விணை நீங்க.

 



அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடன்உறை பொதிகை வேந்தன் அகத்திய மஹரிஷி திருவடிகள் போற்றி போற்றி போற்றி!


கலி விணை நீங்க கணநாதன் திருவடி பற்றி கணநாதன் அருள் ஆசி தன்னில் அகத்தியன் செப்புகின்றேன் வாக்கினை. 


கலி காலம் என்பதை உணர வைக்கும் நிலை மனித வாழ்வில் ஏற்படும் நிலை உண்டு என்பேன். மனிதன் இன்னொரு மனிதனை அடக்கி ஆள வேண்டும் என்ற வேக்கை கலி மாயையில் ஏற்படும். அந்நிலை பல பாவ கர்மங்களை தனக்கும் தன் வம்சத்திற்கும் லாபம் என சேர்த்து பிறவி பிறவி பிறவி என கண்டு வாழும் நிலைக்கு அகப்பட்டு மேலும் உணரா நிலை கண்டு பிறவி பிணிகள் கண்டு கண்டு வாழ்வு தான். 


மனிதர்கள் வாழ்வில் இன்னல்கள் அற்ற நிலை வேண்டும் எனில் நற் கர்மங்களை நற்அகத்துடன் செய்து தானும் வாழ்ந்து பிற மனிதர்கள் வாழ்வில் நல்விணைகள் ஆற்றி இறை ஆசி பெற்று வாழ்ந்து பிறவி அகற்றி விட்டு இறையோடு கலந்து கொள்வதே நல்விணைகள் ஆகும். 


தானம் என்பது இருப்பதை கொடுப்பது. தர்மம் என்பது புரிந்து இல்லா நிலை தருவது தர்மம் ஆகும். தானத்தால் புண்ணியம் இல்லை என்பதே உண்மை. தர்மத்தால் ஆசி பெற்ற புண்ணியம் கிடைக்கும் என்பதே உண்மை ஆகும். 


தானத்திற்கும், தர்மத்திற்கும் விதையாக இருப்பது அகம் என்பதை மனிதர்கள் உணர நிலை இல்லை. தான் செய்வது அனைத்தும் மேன்மை என அக நிலை மயக்கம். இறை ஏட்டில் பதிவு என்பது உண்டு. 

தன் குடும்ப வாழ்க்கை நற்முறை கண்டால் போது என அகம் உள்ள மனிதர்கள் வாழ்வில் இன்று நல்நிலை ஆனால் அவை நிலை இல்லை. 

காலம் கலி எனினும் இறை அருள் பெற இறை தடத்தில் வியாபார வாக்கு. 

இறை அருள் அவ்வளவு கீழ் நிலையில் இருக்கிறது என மாயையில் தனது தனம் கொண்டு அதிகாரம் கொண்டு, தந்திரம் கொண்டு பெற முடியும் என நினைத்து வாழும் மனிதர்கள் காலத்திற்கு பதில் சொல்லும் நிலை இருக்கிறது என்பதே உண்மை ஆகும். 


உடலில் வேடம் மனதில் தந்திரம் மனிதர்கள் இடத்தில். இறை அறியாது சித்தர்கள் அறியாவண்ணம் என்று அகம் மனிதர்களுக்கு. கலி என வேடிக்கை பார்க்க வேண்டும் என்ற விதி இறை இடத்தில். இறைவனிடத்தில் இறை தடத்தில் நன்கு நாடகம் இந்த மனிதர்கள். மனநிலையோ தனத்தில் ஆனால் இறை தடத்தில் இறைவா இறைவா போற்றி என தந்திர துதி. துதி சுதி சேர்த்து ஓதி மனிதர்கள் நாடகம். 


உண்மை மனிதன் சிறு கற்பூரம் ஏற்றி வழிபட்டால் இறை அருள் அந்த மனிதனின் இன்னல் காணும் நிலையில் இறைவன் அருள் காத்து நிற்கும் என்பதே உண்மை ஆகும். 


குடிகள் வழியில் இறை வழிபாடு கூட தற்பெருமை. இது வழிபாடு அல்ல விளம்பர பாட்டு என்பதே உண்மை ஆகும். 

உறவுகள் என் உறவுகள் என கூறி தற்பெருமை காணும் மனிதன் ஒரு பிடி சாம்பல் எந்த உறவுகள் விரும்பும் சாம்பலை. 


தற்பெருமைக்கு அற்பணித்த மனிதர்கள் வாழ்வில் இறை அருள் எங்கு காணும்?. 

தன் தனம் உயர வேண்டும் தன் வாழ்வு உயர வேண்டும் என்று எண்ணத்தில் வாழும் மனிதர்களுக்கு இறை ஏட்டில் கர்மம் தான்.


மனிதர்கள் மிருகங்களை விட கொடிய நஞ்சு அகம் கொண்டவனாக மாறிய பின் ஏது இறை அருள்?. 

நவகிரகங்கள் மனிதர்கள் வாழ்வில் நடத்தும் செயல் யாவும் மனிதர்கள் வாழ்வில் சேர்த்த தீவிணை, நல்விணைகள் என உணர மனம் இல்லை. 

பரிகாரம் இருக்கிறது செய்து விட்டால் நவகிரகங்கள் அடிமை என நம்புகிறார்கள் இந்த மனிதர்கள். நடக்கும் நடக்கப்போகும் நாடகத்தை இறைவன் சாட்சி என்பதே உண்மை ஆகும். 

உன்னத மனிதர்கள் இன்னல்கள் கண்டாலும் இறை அருள் உண்டு என்பதே உண்மை. உன்னத மனிதர்கள் இறை அருளால் கடை தன்னில் உன்னதம் உன்னதம்.

வாக்கு முற்றே.


No comments:

Post a Comment