இறைவா நீயே அனைத்தும்
அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு!
Source: சித்தன் அருள் - 1662 - முன்னைநாதர் ஆலயம்!
22/7/2024 அன்று குருநாதர் அகத்தியப் பெருமான் உரைத்த பொது வாக்கு - வாக்குரைத்த ஸ்தலம்: முன்னேச்சுவரம். அருள்மிகு வடிவாம்பிகை சமேத முன்னைநாதர் ஆலயம். சிலாபம்.குருநாகல். புத்தளம் மாவட்டம். வட மேற்கு மாகாணம். ஸ்ரீ லங்கா.
ஆதிமூலனின் பொற் கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன்!!!
அப்பனே எம்முடைய ஆசீர்வாதங்களப்பா!!!
சொல்லிக் கொண்டே இருக்கின்றேன் அப்பனே
ஒரு உயிரை பின் கொன்று அப்பனே அதன் மாமிசத்தை உண்ணாதீர்கள் உண்ணாதீர்கள் என்றெல்லாம் அப்பனே
ஏன் எதற்கு அப்பனே பின் மாமிசத்தை அப்பனே பின் உண்டால் அப்பனே எதை என்று அறிய அறிய ஆனால் முன்னேறவும் முடியாதப்பா
அப்பனே முன்னேற்றம் போல் இருக்கும் என்பேன் அப்பனே ஆனால் அனைத்தையும் அழித்துவிடும் என்பேன் அப்பனே
ஆனாலும் சிலர் கேள்வி கேட்பார்களப்பா!!!
பின் அதாவது அவன் உண்ணுகின்றானே!!...... அவன் நன்றாகத்தான் இருக்கின்றான் என்று சொல்வான் அப்பனே... நன்றாகத்தான் இருக்கின்றான் என்று ஆனாலும் அப்பனே அவனுடைய விதி பின் எங்களை அதாவது யாங்கள் தான் ஆராய்ந்து அப்பனே எவை என்று கூட நகைப்போம்...
இப்படி பேசுபவர்கள் எல்லாம் அப்பனே முட்டாள்கள் என்பேன் அப்பனே
அறிந்தும் கூட பைத்தியக்காரன் என்பேன் அப்பனே..
பின் எவை என்றும் புரிய புரிய அப்பனே இதனால் அப்பனே நீதி தர்மத்தை காப்பாற்றுங்கள் என்பேன் அப்பனே.... இவையெல்லாம் காப்பாற்றினால் தான் அப்பனே நிச்சயம் அப்பனே நீடுழி வாழ முடியுமப்பா!!!
இல்லையென்றால் அப்பனே நிச்சயம் வாழ முடியாதப்பா!!!
சொல்லிவிட்டேன் அப்பனே!!
முதலில் அப்பனே என் பக்தர்கள் அப்பனே முதலில் என்ன எவை என்று அறிய அறிய... இப் புவி தன்னில் வாழ்வதற்கு அப்பனே முதலில் பின் தெரிந்து கொள்ளுங்கள் என்பேன் அப்பனே
தெரியாமல் அப்பனே எவை சொன்னாலும் எவ் மந்திரங்கள் சொன்னாலும் அப்பனே எதை என்று கூற பின் எங்கு சென்றாலும் அப்பனே ஒன்று நடக்காது என்பதெல்லாம் சொல்லிக்கொண்டே இருக்கின்றோம் அப்பனே
ஆனாலும் அப்பனே அகத்தியனிடம் அன்பாக வந்து விட்டீர்கள் அப்பனே... ஆனாலும் அப்பனே தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே எவை என்று அறிய அறிய
முதலில் அப்பனே நீதி நேர்மை நியாயத்தோடு அப்பனே தர்மத்தை கடைபிடியுங்கள் என்பேன் அப்பனே
மாமிசத்தை உண்ணாதீர்கள் என்பேன் அப்பனே
அப்பனே எவன் ஒருவன் மாமிசத்தை உண்ணுகின்றானோ அப்பனே பின் எங்களை வணங்கியும் அப்பனே பிரயோஜனம் இல்லையப்பா!!! பிரயோஜனமில்லை!!!
அப்பனே இதனால் மண்ணை தின்பது போல் என்பேன் அப்பனே!!!
ஆனாலும் அப்பனே பின் எவ்வாறு எதை என்று அறிய அகத்தியன்!!!
எவை என்று அறிய அறியப்பின் மூலன் (திருமூலர்) இன்னும் அப்பனே பின் கந்தன் பல பல வகைகளும் கூட அப்பனே எடுத்துரைக்கின்றார்கள் என்பேன் அப்பனே
ஆனாலும் அப்பனே இதை விட்டு விடுகின்றார்கள் மாமிசத்தை உண்ணக்கூடாது என்று அப்பனே!!!
ஆனால் இதுதானப்பா கர்மா அப்பனே!!!
ஆனால் காசுகள் வந்துவிட்டால் போதும் என்று எண்ணுகின்றான் மனிதன் அப்பனே அதாவது புத்திகெட்ட மனிதனப்பா....
அப்பனே மாமிசத்தை உண்டால் எதைக் கற்றுக் கொண்டாலும் அப்பனே வீணப்பா!!!
அப்பனே மாமிசத்தை உண்பவர் பின் தலைகீழாக மாறும் என்பேன் அப்பனே பல பல பின் எவை என்று அறிய அறிய அப்பனே பல பல நபர்களும் பின் எங்கெங்கே எவை என்று அறிய அப்பனே..... பார்த்தீர்களா அப்பனே பின் பல வகையில் கூட அப்பனே மாமிசத்தை உண்டு தான் வந்து கொண்டிருக்கின்றார்கள் அப்பனே...
ஆனாலும் அப்பனே அவை தன் அப்பனே... அவர்கள் முன்னேறவும் முடியாது அப்பனே அவர்களைச் சார்ந்தோரும் முன்னேற முடியாது.... அப்பனே இவ் நாட்டையும் முன்னேற்ற பாதையில் அப்பனே செலுத்திட முடியாதப்பா!!
அப்பனே பின் எவை என்று அறிய அறிய இதனால் அப்பனே முதலில் அதை நீக்கினாலே போதுமானதப்பா
அப்பனே தானாகவே அப்பனே பின் எவை என்று அறிய அறிய அப்பனே... அனைத்து உறுப்புகளும் செயல்பட்டு அப்பனே பின் புத்திகள் வரும் அப்பா....
அப்பனே இதனால் அப்பனே எப்படி பேசுவது என்பதெல்லாம் அப்பனே எவை என்று அறிய அறிய கூர்ந்து ஆராய்ந்து அப்பனே பேசிட்டு பின் வார்த்தையினாலே ஜெயித்து விடலாம் என்பேன் அப்பனே
எதை என்று அறிய அப்பனே இதனால் அப்பனே பின் எதை என்று அறிய அறிய அதாவது நீ எவை என்று ஒரு உயிரைக் கொல்கின்றாய் அல்லவா... அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே அதன் மூலமாகவே அப்பனே உந்தனுக்கும் அதே போல தான் கதி!!!
திடீரென்று எதை என்று அறிய அப்பனே எதை என்று புரிய புரிய அப்பனே
இதனால் அப்பனே வருகின்றது அப்பனே.....
அனைவரும் அப்பனே ஒன்றைச் சொல்கின்றேன்
சட்டம் இயற்றுகின்றார்கள் இவ்வுலகத்தில் அப்பனே
ஆனால் ஈசனும் சட்டம் இயற்றிக் கொண்டுதான் இருக்கின்றான் அப்பனே
ஏன்? எதற்கு? எதை பின் எவை என்று உண்ணுகின்றானோ அவந்தன் எதை என்று கூட எப்படி?? எதை என்று அறிய அறிய எப்படி வெட்டுகின்றானோ அதேபோலத்தான் அப்பனே வரும் காலங்களில் அப்பன மனிதனும் கூட அப்படித்தான் என்பேன் அப்பனே...
(வாயில்லா ஜீவராசிகளை எப்படி வெட்டுகின்றார்களோ அவர்களுக்கு அதேபோலத்தான் அவர்களும் வெட்டுப்பட்டு அனுபவிக்க வேண்டும் என்பது ஈசனுடைய சட்டம்)
இதுவும் ஈசனுடைய சட்டம்தான் என்பேன் அப்பனே !!!
பின் எதை என்று புரிய புரிய அப்பனே இதனால் அப்பனே மனிதர்களுக்கு மட்டும் தான் சட்டம்!!!
எவை என்று அறிய அறிய ஈசனும் இனிமேல் அப்பனே சட்டத்தை போடுவானப்பா அப்பனே.....
அவ் சட்டத்தை மிஞ்சினால் அவ்வளவுதான் என்பேன் அப்பனே !!
ஆபத்துக்கள் மிக மிக அதிகம் அப்பா...
அப்பனே ஏனென்றால் அப்பனே கட்டுப்பாடுகள் ஈசன்!!!!
(நேரடியாக ஈசனின் கட்டுப்பாட்டில் சட்டங்கள் இதனால் அதன் விதிகள் கடுமையாக இருக்கும்)
அப்பனே ஏனென்றால் எவை என்று கூற ஒருவனை நியமித்தாலும் அப்பனே பின் அதாவது இவ் நாட்டை எதை என்று அறிய அறிய ஆள அரசன் ஆக்கினாலும் அப்பனே அவன் பேச்சை யாரும் மதிக்கப் போவதில்லை என்பேன் அப்பனே
அதனால் ஈசனே அப்பனே கட்டளை பின் சட்டங்கள் இடுவான் என்பேன் அப்பனே
இவ்வாறு தான் அப்பனே முதலில்.... இனிமேல் சொல்கின்றேன் அப்பனே இங்கிருந்தே அப்பனே எவை என்றும் அறிய அறிய
யார் ஒருவன் மற்ற உயிரை கொன்று அப்பனே சாப்பிடுகின்றானோ... அவந்தனை அப்பனே அப்படியே மனிதன் கொல்வான் அப்பா!!!
அப்பனே இதை தெரிந்து கொள்ள வேண்டும் அப்பனே எப்படி கத்தி!!!. பின் கத்தி கதறி எவை என்று அறிய அறிய அப்பனே எவை என்று புரிய அப்பனே (ஜீவராசிகளை வெட்டி வீழ்த்துவது)
பின் ஜீவராசிகள் விழுகின்றதோ!!!!!... அதேபோலத்தான் அப்பனே பின் கைகளும் உடையுமப்பா!! கால்களும் உடையும் அப்பா
அதை உண்ணுபவர்களுக்கும் அப்பனே பின் புத்திகளும் தேயுமப்பா... அதை மட்டுமில்லாமல் அப்பனே பின் எவை என்று கூற பற்களும் இருக்காதப்பா அவை மட்டும் இல்லாமல் கண்களும் மங்கிப் போகும் அப்பா மங்கிப்போகும் அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே
இது ஈசனின் முதல் சட்டம் என்பேன் அப்பனே எவை என்று அறிய அறிய
இதனால் அப்பனே பின் பரிபூரணமாக எதை என்று கூற அப்பனே பின் அமைதியாக பின் இறைவனை வணங்குங்கள் என்பேன் அப்பனே
இறைவனே அனைத்தும் செய்வான் என்பேன் அப்பனே
திருந்துங்கள் திருந்துங்கள் அப்பனே
பின் திருந்தாவிடில் அப்பனே!!!
பின் எச்சரிக்கை!!!!!.... கடைசியாகவே!!!...... விடுவிக்கின்றேன்!!!
(Last warning கடைசி எச்சரிக்கை)
எதை என்று கூட இங்கிருந்தே எச்சரிக்கையை விடுகின்றேன் அப்பனே!!!!
ஆசிகள்!!! ஆசிகள் இன்னும் விளக்குகின்றேன் என் பக்தர்களுக்கு !!!
ஆசிகள் ஆசிகளப்பா!!! ஆசிகள்!!
ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!
சர்வம் சிவார்ப்பணம்!!!!!
No comments:
Post a Comment