அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு
24/8/2021 அன்று ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஐராவதேஸ்வரர் ஆலயம் பற்றிய குருநாதர் அகத்தியர் உரைத்த பொது வாக்கு.
வாக்குரைத்த ஸ்தலம். ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஐராவதேஸ்வரர் ஆலயம் . பள்ளசூளகரை. மல்லாபுரம், ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி.
அப்பனே பல சூட்சமங்கள் ஒளிந்திருக்கின்றது இவ்வுலகத்தில் ஒவ்வொன்றாக எடுத்துரைக்கின்றேன் .
உலகம் பின் ஆன்மீக பூமியாக மாறட்டும் இன்னும்.
ஆனாலும் ஆன்மீகம் ஆன்மீகம் என்று சொல்லுகிறார்களே ஆனாலும் பின்பற்றுவதுமில்லை.
எதனை எதனையோ ஆன்மிகம் என்றால் ஆண் எவ்வாறு என்பதையும் கூட நினைக்கும் பொழுது பின் எவன் ஒருவன் நல் முறைகளாக எதனை என்றும் கூறாமலே இறைவனிடத்தில் சரணடைந்து பின் பிரம்ம முகூர்த்தத்தில் நல் முறைகளாக நல் முறைகள் ஆகவே மனதில் இறைவனை நினைத்துக்கொண்டு நல் முறைகளாக பின் அனைத்தும் எவை எவை என்று அதிகாலையில் பல உயிரினங்களுக்கு உணவு அளித்து தானும் உணவு உண்டு பின் நல் முறைகளாக தன் சேவைகள் செய்ய பின் இரவில் உறங்கும் முன் பொழுதும் நல் முறைகளாக பல உயிரினங்களுக்கு சேவை செய்து தானும் உண்டு பின் உறங்கினால் அப்பனே புண்ணியம் சேர்த்து கொண்டே போகலாம் என்பேன்.
ஆனாலும் இதனை யாரும் செய்வதில்லை என்பேன்.
No comments:
Post a Comment