“இறைவா !!!!! நீயே அனைத்தும்” இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்.

"இறைவா !!!!! நீயே அனைத்தும்!!!!"
"இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்"

உலகின் ஆதி குரு, மாமுனிவர், குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளிய தினசரி அனைவரும் அதிகாலையில் எடுக்க வேண்டிய உறுதிமொழி. :-


1.தர்மம் செய்வேன்
2.அனைத்திடத்திலும் பின் அன்பாக அதாவது அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன்.
3.போட்டி, பொறாமைகள் நீக்குவேன்
4.அனைத்தும் எந்தனுக்கே சொந்தம் என்று பின் உயிர்ப் பலியும் இடமாட்டேன்
5.பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன்
6.அப்படிக் கொன்றாலும், நிச்சயமாய் அதை யான் தடுப்பேன்
7.அவை மட்டும் இல்லாமல், தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும்.
8.பிறருக்கு நன்மை செய்ய வேண்டும்
9.பிறருக்காக உழைக்க வேண்டும்
10.பிற ஜீவராசிகளும் ( உயிரினங்களும் ) பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில்அனைவரும் நினைக்க வேண்டும்.
11.அப்படி நினைத்தால் அகத்தியன் வந்து அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பான் என்று சொல்மகனே

( அடியவர்களே. இந்த மகிமை புகழ் அகத்திய மாமுனிவர் அருளிய உறுதிமொழி வாக்கினை சிரம்மேல் ஒவ்வொரு நொடியும் ஏந்தி, பிரம்மாவின் முன்பு தலை நிமிர்ந்து நமக்காக விதியை மாற்றஉத்தரவிடும் வண்ணம் அனைவருக்கும் உலகில் உள்ள 700 கோடி மக்களுக்குச்சென்று அடையும்வண்ணம் எடுத்துச் சொல்லுங்கள். )

மற்றவர்களைப்பற்றி எண்ணிப்பார் அப்பனே. மற்றவர்களை எண்ணி எண்ணி, தான் கெட்டுப்போனாலும் பரவாயில்லை என்று யார் ஒருவன் நினைக்கின்றானோ அவனிடத்தில் இறைவன் பிச்சை ஏந்துவான் அப்பா. பிச்சை ஏந்துவான் அப்பனே. என் பக்தர்களுக்கு இது தெரிய நிச்சயம் வேண்டும் அப்பனே.


அகத்திய பிரம்ம ரிஷி உரைத்த முதல் தரப் புண்ணியம் பெறும் ஒரே வழி:- (1) அன்னதானம் + (2) திருவாசகம் சிவபுராணம் + (3) மக்கள் வாழ , நல் வழிகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுதல். இப்படிச் செய்தால் மட்டுமே , முதல்தரப் புண்ணியம் உண்டாகும் என்று குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி உரைத்துள்ளார்கள். இதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள் என்றும் அனைவருக்கும் கூறி உள்ளார்கள். இதுபோல் அனைவரும் செய்து முதல் தரப் புண்ணியம் பெற்றுக் கொள்ளுங்கள். இறை அருளுடன் வளமாக வாழுங்கள். வாழ்க வளமுடன்!!!!!!!!!

siththarkalatchi - Moving text


அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு :- “அப்பனே, தானங்கள் செய்க, அப்பனே, உன்னால் இயன்றவரை தானங்கள் செய்க. அனுதினமும், என் பக்தர்கள், ஒரு உயிருக்காவது உணவளியுங்கள். அது போதும். அப்பனே, அதுவே கோடி புண்ணியமாகும்.”


Monday, August 28, 2023

சித்தர்கள் ஆட்சி - 111 : அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு - சித்தர்களை நெருங்க யார் தகுதியானவர்கள்?


 

22/8/2023 அன்று குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி உரைத்த பொதுவாக்கு வாக்குரைத்த ஸ்தலம் : திருச்செந்தூர். 


சித்தர்கள் யார் என்பதை கூட ரகசியத்தை யாராலும் இவ்வுலகத்தில் கண்டுபிடிக்க முடியாதப்பா!!!!!!


அப்படி கண்டுபிடித்துவிட்டால் அவன் உடனடியாக இறந்து விடுவானப்பா!!!!!!


அதனால் ரகசியங்கள் அப்பனே எதை என்று கூட சித்தனை  மிஞ்சிய சக்தி இவ்வுலகத்தில் இல்லையப்பா!!!!!! 


எதை என்றும் அறிய அறிய அதனால் சித்தர்களை வைத்து விளையாடுவது மிகப்பெரும் தவறப்பா!!!!!! 


விளையாடிக்கொண்டு தான் இருக்கின்றார்கள் அப்பனே!!!! 


அவர்களுக்கு அடிகளும் பலமாக பட்டுத்தான் கொண்டிருக்கின்றது!!!!......... 


திருந்தவே இல்லை என்பேன் அப்பனே!!!! 


எவை என்றும் அறிய அறிய போட்டி பொறாமைகள் நிறைந்தவர்கள் எதை என்றும் அறிய அறிய சித்தனை பின் நெருங்குவதற்கு தகுதி இல்லாதவர்கள் அப்பனே!!!!!


மற்றவர்களை குறை சொல்லி பேசுபவர்கள் அப்பனே சித்தனை நெருங்குவதற்கு தகுதியற்றவர்கள் என்பேன் அப்பனே!!!!!!


இதனால் அப்பனே பின் கோபப்படுபவர்களும் கூட காமத்தை நோக்கி செல்பவர்களும் கூட ஆசைகளில் எதை என்றும் மிதந்து கொண்டிருப்பவர்களும் கூட அப்பனே சித்தனை அப்பனே எவை என்று கூட நம்புவது ஆகாதப்பா!!!!


சொல்லி விட்டேன் அப்பனே!! எதை என்றும்  அறிந்தும் அறிந்தும் கூட அப்பனே


சித்தனானவன் பெரும் கடலப்பா!!!!!! சொல்லி விட்டேன் அப்பனே!!!! 


அவ் கடலை எதை என்று கூட கடக்க எதை என்றும் புரியாமலும் கூட எவை என்றும் அறியாமல் 


விண்ணுக்கும் மண்ணுக்கும் அப்பனே தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே!!!!!


🙏

சித்தர்கள் ஆட்சி - 110 : அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு - ஆறறிவுகள் செயல்பட எப்படி இனைவனை வணங்க வேண்டும்?

 


22/8/2023 அன்று குருநாதர் அகத்தியப்பெருமான் உரைத்த பொதுவாக்கு வாக்குரைத்த ஸ்தலம் : திருச்செந்தூர் செந்தில் கோட்டம்.



ஆறறிவுகள் சரியாக பயன் படுத்த வேண்டுமென்றால் அப்பனே அறுபடைகளுக்கும் நீங்கள் செல்ல செல்ல அப்பனே சென்று கொண்டே இருக்க  அப்பனே நன்மைகளப்பா!!!!!! 


எதை என்றும் அறிய அறிய பின் என்னால் செல்ல முடியாது என்றெல்லாம் சொல்லக்கூடாது அப்பனே!!!!!


🙏

Saturday, August 26, 2023

சித்தர்கள் ஆட்சி - 109 : அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு - மிக எளிய வழியில் கரமங்களை குறைத்து மகிழ்ச்சியாக வாழ்வாங்கு வாழ

 



14/12/2021 அன்று  ஏகாதசி திதியில் குருநாதர் அகத்தியர் உரைத்த பொது வாக்கு. 


ஆதி ஈசனின் பொற்பாதம் பணிந்து செப்புகின்றேன் அகத்தியன்.


உலகம் இருளில் போய்க்கொண்டு இருக்கும் வரும் காலங்களில்.


இதனையும் மீட்க பின்பு இறை வழிபாடு மிக மிகச் சிறந்தது என்பேன்.


என்பேன். இதனையும் உணர்ந்து வள்ளல் ராமலிங்கஅடிகளின் பின் அவந்தன் பாதையை (சுத்த சன்மார்க்க ஜீவ காருண்ய வழி) பின்பற்றினால் அனைவரும் பிழைத் துக் கொள்வது உறுதி.


உறுதியாக இவைதன் உண்டு என்பேன்.


உண்டு என்பதற்கிணங்க வருத்தங்கள் இனிமேலும் குடிகொள்ளும்.


இதனையும் உணர்ந்து சொல்கின்றேன்.


சொல்கின்றேன் தீபங்கள் தீபங்கள் ஏற்ற ஏற்ற தெளிவுகள் பெருகும் என்பேன்.


ஆனாலும் மனிதனுக்கு தீபங்கள் எவ்வாறு ஏற்றுவது என்பதை கூட தெரியாமல் போய்விடுகின்றது. 


(1) பின் நவதானியங்கள் இட்டு அதன் மேலேயே தீபத்தை இடுதல் வேண்டும்.


(2) அல்லது இவை என்று கூற பின் இதற்கு மேலும் பின் இவை என்று கூற பச்சரிசி இவை இவை என்று கூறு இருக்கும் பொழுது அதனை மாவாக இட்டு அதன் மேலே தான் தீபம் ஏற்ற வேண்டும்.


இவ்வாறு ஏற்றினால் தான் பின் இவை தன்  உணர சில சில உயிரினங்கள் அதை உண்டு வர சில கர்மாக்கள் தொலையும் என்பேன்.


அவைதன் மகிழ்ச்சியும் இருக்குதப்பா அதனுள்ளே.


அவை மகிழ்ச்சியுற இவந்தனும்(தீபமேற்றும் பக்தன்) மகிழ்ச்சியாக இருப்பான்.


அதை தெரியாமல் தீபங்கள் ஏற்றிவிட்டால் மனக் குழப்பங்கள் மாறும் மாறும் என்பதெயெல்லாம் எல்லாம் பொய்யே அப்பா.


அப்பனே இதனையும் தெரிந்துகொண்டு இனிமேலும் இவ்வாறு இடுங்கள்.


இடுங்கள் என்பது மெய்யே.


அவை மட்டும் இல்லாமல் தீபங்கள் ஏற்றும் பொழுது எத்தனை தீபங்கள் ஏற்றுகின்றீர்களோ அத்தனை உயிருள்ள ஜீவராசிகளுக்கும் உணவு கொடுப்பது முக்கியம் என்பேன்.


இவ்வாறு கொடுத்தால்தான் சில நல் பல செய்திகள் இல்லம் தேடி வரும் நல்லவையும் நடக்கும் என்பேன்.


ஆனாலும் சில மனிதர்களுக்கு இவை தெரிவதே இல்லை என்பேன்.


பின் ஏதோ இதனை என்றும் தீபம் ஏற்றி விட்டால் அனைத்தும் நடக்கும் என்பது உறுதியாக பின் ஆனாலும் இவை தன் நடந்து விட்டாலும் பிற்பகுதியில் குறைவாகிவிடும்.


அதனால்தான் இவைதன் உணர்ந்து செய்ய வேண்டும் செய்ய வேண்டும் என்பேன்.

Friday, August 25, 2023

சித்தர்கள் ஆட்சி - 108 : அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு - மிக எளிய வழியில் புண்ணியம் மலை போல செய்து குவிக்க


 


அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு 


24/8/2021 அன்று ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஐராவதேஸ்வரர் ஆலயம் பற்றிய குருநாதர் அகத்தியர் உரைத்த பொது வாக்கு.


வாக்குரைத்த ஸ்தலம். ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஐராவதேஸ்வரர் ஆலயம் . பள்ளசூளகரை. மல்லாபுரம், ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி.



அப்பனே பல சூட்சமங்கள் ஒளிந்திருக்கின்றது  இவ்வுலகத்தில் ஒவ்வொன்றாக எடுத்துரைக்கின்றேன்  .


உலகம் பின் ஆன்மீக பூமியாக மாறட்டும் இன்னும்.


ஆனாலும் ஆன்மீகம் ஆன்மீகம் என்று சொல்லுகிறார்களே ஆனாலும் பின்பற்றுவதுமில்லை.


எதனை எதனையோ ஆன்மிகம் என்றால் ஆண் எவ்வாறு என்பதையும் கூட நினைக்கும் பொழுது பின் எவன் ஒருவன் நல் முறைகளாக எதனை என்றும் கூறாமலே இறைவனிடத்தில் சரணடைந்து பின் பிரம்ம முகூர்த்தத்தில் நல் முறைகளாக நல் முறைகள் ஆகவே மனதில் இறைவனை நினைத்துக்கொண்டு நல் முறைகளாக பின் அனைத்தும் எவை எவை என்று அதிகாலையில் பல உயிரினங்களுக்கு உணவு அளித்து தானும் உணவு உண்டு பின் நல் முறைகளாக தன் சேவைகள் செய்ய பின் இரவில் உறங்கும் முன் பொழுதும் நல் முறைகளாக பல உயிரினங்களுக்கு சேவை செய்து தானும் உண்டு பின் உறங்கினால் அப்பனே புண்ணியம் சேர்த்து கொண்டே போகலாம் என்பேன்.


ஆனாலும் இதனை யாரும் செய்வதில்லை என்பேன்.

சித்தர்கள் ஆட்சி - 107 : கந்தவடிவேலன் அழகன் முருகன் வாக்கு - உயர் ஞான நிலை எப்போது கிட்டும்?

 


Tuesday, August 15, 2023

சித்தர்கள் ஆட்சி - 106 : அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு - நோயற்ற வாழ்விறக்கு மிக எளிய வழி

 



இந்த நல் வாக்கு அதன் தற்ப்போதைய ஆராய்ச்சி நிலை


அந்தக் காலத்தில் வெறும் காலில் நடந்தார்கள். கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தையாக இருந்தது. அப்படி வெறும் காலில் நடந்தது அவர்களுக்கேத் தெரியாமல் அவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தியது என்று சொன்னால் நம்ப முடிகிறதா. உண்மைதான்!

நம்முடைய நரம்புகள் பாதம் மற்றும் கையில்தான் முடிவடைகிறது. எனவேதான் கை மற்றும் பாதத்தில் அழுத்தம் தருவது ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்று இயற்கை மருத்துவர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர். செருப்பு இல்லாமல் வெறும் காலில் கூழாங்கற்கள் மீது நடக்கும்போது பாதத்தில் உள்ள நரம்பு புள்ளிகள் தூண்டப்படுகின்றன. இது உடலுக்கு புத்துணர்வையும் பலத்தையும் அளிக்கிறது.

உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது. 2005ம் ஆண்டு Journal of the American Geriatrics Society வெளியிட்ட ஆய்வில், தொடர்ந்து கூழாங்கற்கள் மீது நடந்து பயிற்சி மேற்கொள்பவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம் குறைவது தெரியவந்துள்ளது. எல்லா வயதினரையும் கொண்ட குழுவினரை வாரத்துக்கு மூன்று மணி நேரம் என்ற வகையில் 16 வாரங்களுக்கு கூழாங்கற்கள் மீது நடைப்பயிற்சி செய்ய வைத்து ஆய்வு செய்துள்ளனர். இதில், அவர்களுக்கு ரத்த அழுத்தம் குறைந்திருப்பது உறுதியாகி உள்ளது.

உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் கூழாங்கல் நடைபயிற்சி உள்ளது. உடல் நலம் மட்டுமின்றி மன நலனையும் மேம்படுத்தும். பாதத்தில் தூண்டப்படும் முக்கிய உறுப்பு புள்ளிகள் காரணமாக உடல் உறுப்புகள் செயல்திறன் அதிகரிக்கிறது. மூளை, நுரையீரல், சிறுநீரகம், கண், காது உள்ளிட்ட அனைத்து உறுப்புகளும் இதனால் வலுப் பெறுகின்றன.



சித்தர்கள் ஆட்சி - 105 : அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு - தீபங்கள் எவ்வாறு ஏற்றுவது தலம் தரும்?